இஸ்லாம் சமாதானத்தை விரும்புகின்ற மார்க்கமே!

0 1,855

 மெள­லவி அப்துல் வதூத் (ஜிப்ரி)

ஒரு விட­யத்தை மக்­க­ளுக்குப் புரி­ய­வைக்க விரும்­பினால் உள்­ளத்­த­ளவில் தூய்மை இருக்க வேண்டும். இஸ்லாம் பற்றித் தெளி­வ­டைய விரும்­புவோர் ஒவ்­வொன்­றிலும் அதன் அடிப்­ப­டையை அறிந்து கொள்ள முயற்­சிக்க வேண்டும்.

அல்­குர்­ஆனில் 09:05 வச­னத்தில் “(போர் விலக்­கப்­ப­ட்ட) புனித மாதங்கள் கழிந்­து­விட்டால் இந்த இணை­வைப்­போரை நீங்கள் எங்கு கண்­டாலும் கொலை செய்­யுங்கள். அவர்­களை (சிறை) பிடி­யுங்கள். அவர்­களை முற்­று­கை­யி­டுங்கள். ஒவ்­வொரு பதுங்­கு­மி­டத்­திலும் அவர்­களைக் குறி வைத்து உட்­கார்ந்­தி­ருங்கள் என்று கூறப்­பட்­டுள்­ளது.

இவ்­வ­ச­னத்தை வாசித்­த­வுடன் முஸ்­லிம்கள் எப்­பொ­ழுதும் முஸ்­லி­மல்­லா­த­வர்­க­ளுடன் பகை­மை­யாக இருக்க வேண்டும் என்றும் கண்ட இடத்தில் அவர்­களைக் கொலை செய்ய வேண்டும் என்றும் கருத்துக் கொள்ளக் கூடாது.

இது மேற்­படி 09:05ஆவது வச­ன­மாகும். இதன் முன்பின் வச­னங்­களைத் தொடர்­பு­ப­டுத்­தாமல் இதனை வாசித்தால் அவ்­வா­றுதான் விளங்கும். முன்பின் தொடர்­பு­களை ஏற்­ப­டுத்­தினால் அவ்­வாறு தவ­றான விளக்கம் ஏற்­ப­ட­மாட்­டாது.

இவ்­வேதம் – அல்­குர்ஆன் இறு­தித்­தூதர் முஹம்மத் ஸல்­லல்­லாஹு அலைஹி வஸல்லம் அவர்­க­ளுக்கு அரு­ளப்­பட்­டது. இது மொத்­த­மாக அரு­ளப்­ப­ட­வில்லை. சந்­தர்ப்­பத்­துக்கும் தேவைக்கும் ஏற்பச் சிறுகச் சிறுக அரு­ளப்­பட்­டது. இது அரு­ளப்­பட ஆரம்­பித்த நாளி­லி­ருந்து 20 வரு­டங்­க­ளுக்குப் பின்­னால்தான் ஒன்­ப­தா­வது அத்­தி­யா­யத்தின் முதல் 16 வச­னங்கள் அரு­ளப்­பட்­டன.

மேலும், இவ்­வேதம் அரு­ளப்­பட ஆரம்­பித்த நாளி­லி­ருந்து 13 வரு­டங்கள் வரை முஸ்­லிம்கள் மக்­காவில் பல­வீ­னர்­க­ளா­கவே இருந்து வந்­தனர். எதி­ரி­க­ளிடம் அடி வாங்­கினர். சித்­தி­ர­வதை செய்­யப்­பட்­டனர். சிலர் கொல்­லப்­பட்­டனர். 13 வரு­டங்­க­ளுக்குப் பின்னால் இனி முஸ்­லிம்கள் மக்­காவில் வாழ­மு­டி­யாது என்ற ஒரு நிலை ஏற்­பட்­ட­போது அவர்கள் அங்­கி­ருந்து 480 கிலோ­மீட்­ட­ருக்கு அப்­பா­லுள்ள மதீ­னா­வுக்கு அக­தி­க­ளாக சென்று குடி­யே­றினர்.

அதன் பின்­னரும் அவர்­களால் மதீ­னாவில் நிம்­ம­தி­யாக இருக்க முடி­ய­வில்லை. எதி­ரிகள் முஸ்­லிம்­களைத் தேடி­வந்து போர் தொடுத்­தனர். இக்­கா­ல­கட்­டத்தில் முஸ்­லிம்கள் சற்றுப் பல­முடன் இருந்­ததால் தற்­பா­து­காப்­புக்­காகத் திருப்பித் தாக்­கு­மாறு அல்லாஹ் கட்­ட­ளை­யிட்டான். அதன் தொடரில் ஏற்­பட்ட போர்­களில் முத­லா­வது போர் பத்ர் போர் என்­ப­தாகும். இப்­போரில் முஸ்­லிம்கள் பாரிய வெற்­றியை தழு­வினர்.

இதனைத் தொடர்ந்து பல போர்கள் நடந்­தன.

முஸ்­லிம்கள் படிப்­ப­டி­யாகப் பல­ம­டைந்து வந்­ததால் தாக்­குப்­பி­டிக்க முடி­யாத எதி­ரிகள் முஸ்­லிம்­க­ளுடன் உடன்­ப­டிக்கை செய்ய முன்­வந்­தனர். இவ்­வு­டன்­ப­டிக்­கைக்கு ஹுதை­பிய்யா உடன்­ப­டிக்கை என்று கூறப்­படும்.

முஸ்­லிம்கள் இவ்­வு­டன்­ப­டிக்­கையை மதித்து நடந்­தனர். ஆனால் எதி­ரி­களோ சிறிது காலத்­துக்குப் பின் அவ்­வொப்­பந்­தத்தை மீறினர். அப்­போ­துதான் உடன் படிக்­கையை முறித்­த­வர்­க­ளுடன் எவ்­வாறு நடந்­து­கொள்ள வேண்டும் என்­பது குறித்து ஒன்­ப­தா­வது அத்­தி­யா­யத்தின் முத­லா­வது வசனம் முதல் 16 வது வசனம் வரை­யுள்ள வச­னங்­களை அல்லாஹ் தனது தூத­ருக்கு அரு­ளினான். 16 வச­னங்­களில் விளக்­க­வேண்­டிய ஒரு விஷ­யத்தை ஒரே­யொரு வச­னத்தில் புரிய வைப்­பது சரி­யா­குமா? இவை போர் புரி­வோ­ருடன் தொடர்­பான வச­னங்­க­ளே­யல்­லாமல் பொது­வான மக்­க­ளுடன் தொடர்­பான வச­னங்­க­ளல்ல. இவ்­வ­ச­னங்­க­ளி­லுள்ள உடன்­ப­டிக்கை என்ற வாக்­கி­யமே இவை போர் தொடர்­பான வச­னங்கள் என்­பதை தெளி­வு­ப­டுத்­து­வ­தா­யுள்­ளது.

இலங்­கையில் புலிகள்  அர­சுடன் உடன்­ப­டிக்கை செய்­தனர். இவ்­வு­டன்­ப­டிக்­கையை புலிகள் முறித்­த­போது இலங்கை இராணுவம் புலி­க­ளுக்­கெ­தி­ராகப் போரை தொடங்­கி­யது. இலங்கை இராணு­வத்தின் இப்­போரைத் தமிழ்ச் சமு­தா­யத்­திற்­கெ­தி­ரான போர் என்று குறிப்­பி­ட­லாமா? குர்­ஆ­னி­லுள்ள 09:05 வச­னத்தின் நிலையும் இதுதான்.

முஸ்­லிம்கள் சம்­பந்­த­மான வெறுப்பைத் தூண்­டு­வ­தற்­காக அல்­குர்­ஆ­னி­லுள்ள 09:05 வச­னத்தை மட்டும் தனி­யாக எடுத்­துக்­கூ­று­வது விஷ­மத்­த­ன­மான செய­லாக இல்­லையா ?

ஆனால், அதைத் தொடர்ந்து வரும் 6 ஆவது வசனம் இவர்­க­ளது விளக்கம் பிழை­யா­னது என்­பதை உணர்த்­து­வ­தாக உள்­ளது. அவ் வசனம் பின்­வ­ரு­மாறு:

இணை வைப்­ப­வர்­களில் எவ­ரேனும் உங்­க­ளிடம் புக­லிடம் கோரினால் அவர்கள் அல்­லாஹ்வின் வார்த்­தையை (அல் குர்­ஆனை) செவி­யேற்கும் வரை அவர்­க­ளுக்குப் புக­லிடம் அளிப்­பீ­ராக. பின்னர் அவர்­க­ளுக்குப் பாது­காப்­பான இடத்தில் அவர்­களைச் சேர்த்து விடு­வீ­ராக.

இவ்­வ­சனம் நமக்குத் தரும் விளக்கம் என்­ன­வென்றால் போரென்று வந்­து­விட்டால் போரி­டுங்கள். மனி­தா­பி­மான ரீதியில் வரும்­போது மனி­தா­பி­மா­னத்­துடன் நடந்து கொள்­ளுங்கள் என்­ப­தாகும். இதுதான் அதற்­கான விளக்கம் என்­பதை மற்­றுமோர் இடத்தில் குர்ஆன் கூறு­வதைக் காணலாம்.

எவர்கள் மார்க்க விட­யத்தில் போர் புரிய வில்­லையோ அவர்­க­ளுக்கும் மேலும் உங்­களை உங்­க­ளது இல்­லங்­களை விட்டும் வெளி­யேற்­ற­வில்­லையோ அவர்­க­ளுக்கும் நீங்கள் நன்மை செய்­வ­தையும் அவர்­க­ளுடன் நீங்கள் நீத­மாக நடப்­ப­தையும் அல்லாஹ் உங்­க­ளுக்குத் தடுக்­க­வில்லை. அல்லாஹ் நீத­மாக நடப்­ப­வர்­களை நேசிக்­கிறான். 60:08

இந்த வசனம் முஸ்­லிம்கள் முஸ்­லி­மல்­லாத மக்­க­ளுடன் எவ்­வாறு உறவைப் பேணி நடக்க வேண்­டு­மென்ற நல்ல பண்பை உணர்த்­து­வ­தாக உள்­ளது. ஆனால் முஸ்­லிம்­க­ளுடன் எவர்­க­ளெல்லாம் போர் தொடுக்­கி­றார்­களோ,

இல்­லங்­களை விட்டும் வெளி­யேற்­று­கின்­றார்­களோ அவர்­க­ளுடன் நேசம் கொள்ள வேண்டாம் என்­றுதான் தொடர்ந்து வரும் அடுத்து வரும் வசனம் கூறு­வதைக் காணலாம்.

எவர்கள் மார்க்க விட­யத்தில் உங்­க­ளிடம் போரிட்டு, உங்­களை உங்­க­ளது இல்­லங்­களை விட்டும் வெளி­யேற்­றி­னார்­களோ அவர்­க­ளையும், மேலும் உங்­களை வெளி­யேற்­றிட உதவி செய்­தார்­களோ அவர்­க­ளையும் நேசத்­துக்­கு­ரி­ய­வர்­க­ளாக எடுத்துக் கொள்­வ­தையோ அல்லாஹ் உங்­க­ளுக்குத் தடுக்­கிறான். யார் அவர்­களை நேசத்­திற்­கு­ரி­ய­வர்­க­ளாக எடுத்துக் கொள்­கி­றார்­களோ அவர்கள் தாம் அநி­யாயக் காரர்கள். (60:09)

9:05 ஆவது வசனம் போர் தொடர்­பா­ன­துதான் என்­பதை அவ்­வ­ச­னத்தின் முன் பின் தொடர் தெளி­வாக குறிப்­பி­டு­வதைக் காணலாம்.

அவ்­வ­சனம் கண்ட இடங்­களில் கொலை செய்­யுங்கள் என்று மட்டும் சொல்­ல­வில்லை. அவர்­களைச் சிறை பிடி­யுங்கள், முற்­றுகை இடுங்கள் என்றும் கைது செய்­வ­தற்­காக பதுங்கும் இடங்­களில் குறி வைத்து உட்­கார்­ந்தி­ருங்கள் என்றும் கூறு­கி­றது.

சிறைப் பிடித்தல், கைது செய்தல், முற்­றுகை இடுதல் போன்­றவை போர் தொடர்­பா­னவை என்­பதைச் சாதா­ரண அறி­வுள்­ள­வரும் அறிவர்.

இவ்­வ­ச­னத்தைச் சுமு­க­மான உற­வுடன் வாழ்­கின்ற பல்­லின மக்­க­ளுடன் எவ்­வாறு தொடர்­பு­ப­டுத்த முடியும் ? முஸ்லிம் அல்­லா­த­வர்­களைக் கொலை செய்­யு­மாறு முஸ்­லிம்­க­ளுக்குக் குர்ஆன் கட்­டளை இடு­கி­ற­தென்று எவ்­வாறு அர்த்தம் கொள்ள முடியும்?

சவூதி அரே­பி­யாவில் குர்­ஆ­னு­டைய ஆட்சி நடை பெறு­கின்­றது. ஒரு வரு­டத்தின் சங்­கை­யான நான்கு மாதங்கள் போக மீதி எட்டு மாதங்­க­ளிலும் முஸ்­லிம்கள் முஸ்லிம் அல்­லா­தோரைக் கொலை செய்ய வேண்டும் என 9:05 வச­னத்தை விளங்­கு­வது சரி­யானால் சவூ­தியில் உள்ள ஒரு இலட்­சத்­திற்கும் மேற்­பட்ட முஸ்­லி­மல்­லாத இலங்­கை­யர்­களை அந் நாட்டு அரசு கொலை செய்ய வேண்­டு­மல்­லவா ! அது மட்­டு­மல்ல, உலகின் பல நாடு­களைச் சேர்ந்த முஸ்­லி­மல்­லாதோர் பல இலட்சம் பேர் தொழில் புரி­கின்­றனர்.

குர்­ஆனை விஷ­மத்­த­ன­மாக விளங்­கு­கின்­ற­வர்­களின் விளக்­கத்­தின்­படி இவர்­க­ளை­யெல்லாம் அவ்­வ­ரசு கொலை செய்ய வேண்டும் அல்­லவா?

சவூதி ஆட்­சியைப் பற்றி உல­மாக்கள் நன்­க­றிவர். அந் நாட்­டுக்­குடி மக்­க­ளா­யினும் சரி அங்கு தொழில் புரி­கின்ற வெளி­நாட்­ட­வர்­க­ளா­யினும் சரி மரண தண்­ட­னைக்­­கு­ரிய ஒரு குற்­றத்தை செய்தால் மரண தண்­டனை நிறை வேற்­றப்­ப­டு­வதை நாம் பார்க்­கின்றோம். இலங்­கையர் சில­ருக்கும் அவ்­வாறு தண்­டனை நிறை­வேற்­ற­ப்பட்ட சம்­ப­வங்­களும் உண்­டல்­லவா ? குர்ஆன் கூறு­கின்ற இத்­த­கைய தண்­ட­னை­களை நிறை­வேற்­று­கின்ற சவூதி அரசு சங்­கை­யான நான்கு மாதங்கள் போக மீதி எட்டு மாதங்­க­ளிலும் முஸ்­லி­மல்­லா­த­வர்­களைக் கொலை செய்ய வேண்­டு­மென்­பது 09:05 வச­னத்தின் விளக்­க­மானால் அந் நாட்­டி­லுள்ள அனைத்து முஸ்­லி­மல்­லா­தோ­ரையும் கொலை செய்ய வேண்­டு­மல்­லவா?

இறைத்­தூதர் முஹம்மத் ஸல்­லல்­லாஹு அலைஹி வஸல்லம் அவர்­களால் நிறு­வப்­பட்ட இஸ்­லா­மிய அர­சி­லி­ருந்து இன்­று­வரை பதி­னைந்து நூற்­றாண்­டு­க­ளாக சவூ­தி­யிலோ மத்­திய கிழக்கு நாடு­க­ளிலோ வேறெந்த இஸ்­லா­மிய நாடு­க­ளிலோ இப்­படி ஒரு தண்­டனை நிறை வேற்­றப்­பட்­ட ­துண்டா?

கொலை, கொள்ளை, விப­சாரம் போன்ற குற்­றங்­க­ளுக்குக் குர்ஆன் கூறும் தண்­ட­னை­களை வழங்­கு­வ­தென்­றாலும் அவை­களை அதி­கா­ர­முள்ள அர­சுதான் நிறை­வேற்ற வேண்டும்.

குர்­ஆனைப் பின்­பற்­று­கின்ற எந்த முஸ்­லி­முக்கும் தண்­டனை வழங்கும் அதி­கா­ரத்தைப் பிற­ருக்கு இஸ்லாம் வழங்­க­வில்லை. இது அதி­கா­ர­முள்ள அர­சுக்­கு­ரிய கட­மை­யாகும்.

இலங்கை போன்று சிறு­பான்­மை­யாக வாழு­கின்ற முஸ்­லிம்கள் பெரும்­பான்­மை­யான முஸ்லிம் அல்­லா­தோ­ருக்குக் குர்ஆன் கூறும் தண்­ட­னைகள் எத­னையும் வழங்­கு­வார்கள் என்று எவரும் எதிர்­பார்க்க வேண்டாம். முஸ்­லிம்கள் 100 வீத­மாக வாழ்­கின்ற சவூ­தியில் கூட ஒரு தனி மனிதன் மற்ற ஒரு­வ­ருக்குத் தண்­டனை வழங்­கு­கின்ற அதி­கா­ரத்தைப் பெற மாட்டார்.

இஸ்­லாத்தின் வழி­காட்டல் இவ்­வ­ளவு தெளி­வாக இருக்கும் போது இவ்­வா­றான விஷ­ம ­க­ருத்­துக்­களை எவரும் பிர­சாரம் செய்து அறி­யாத அப்­பாவி மக்­களைக் குழப்­பத்தில் ஆழ்த்த வேண்டாம்.

முஸ்­லி­மல்­லாதோர் குர்­ஆனை வாசிக்­கும்­போது அதில் அவர்­க­ளுக்குத் தெளி­வின்மை ஏற்­பட்டால் அந்தக் குர்­ஆனை நடை­மு­றைப்­ப­டுத்­து­கின்ற முஸ்லிம் சமு­தா­யத்­தி­லுள்ள அறி­ஞர்­க­ளிடம் அது­பற்றி கேட்டுத் தெரிந்­து­கொள்ள வேண்டும். இதுதான் நீதி­யான அணு­கு­மு­றை­யாகும்.

இவ்­வாறு குர்­ஆனை அணு­கு­வ­தற்குப் பதி­லாக ஒரு வச­னத்தின் முன் பின் தொடர்­களை அறுத்து விட்டுக் கற்­பனைக் கருத்­துக்­களைக் கூறி சமு­தா­யத்தில் குழப்­பத்தை ஏற்­ப­டுத்­து­வதை தவிர்த்­துக்­கொள்ள வேண்டும்.

முஸ்­லி­மல்­லாதோர் தூய்­மை­யான எண்­ணத்­துடன் குர்­ஆனை வாசித்தால் அதில் அவர்கள் எந்­த­வி­த­மான கோண­லையும் காண­மாட்­டார்கள். உலகில் பல அறி­ஞர்கள், விஞ்­ஞா­னிகள் அவ்­வாறு வாசித்­ததால் சுய விருப்­பத்­துடன் இஸ்­லாத்தை ஏற்ற பல சம்­ப­வங்கள் உண்டு.

அவ்­வாறு இஸ்­லாத்தைத் தழு­வி­ய­வர்­களில் மேற்­கு­லக நாட்டைச் சேர்ந்த டாக்டர் மர்­ம­டியூக் பிக்தால் என்ற ஓர் அறிஞர் குறிப்­பி­டத்­தக்­க­வ­ராவார். அவர் இஸ்­லாத்தை ஏற்­றது மட்­டு­மல்ல அரபு மொழியை ஆழ­மாகக் கற்று அதன் பின் அல்­குர்­ஆனை ஆங்­கி­லத்தில் மொழி­யாக்­கமும் செய்தார்.

09.05 வச­னத்தின் படி முஸ்லிம் முஸ்­லி­மல்­லா­தோரை கொலை செய்ய வேண்­டு­மென்று கோண­லாக விளங்­குவோர் அல்­குர்ஆன் கூறும் மற்­று­மொரு விட­யத்தைத் தெரிந்­து­கொள்ள வேண்டும்.

மரண தண்­ட­னைக்­கு­ரிய எந்தக் குற்­றத்­தையும் புரி­யாத ஒரு­வரை ஒருவன் கொலை செய்தால் அக்­கொ­லை­யா­னது உல­கி­லுள்ள அனைத்து மனி­தர்­க­ளையும் கொலை செய்­த­தற்குச் சம­னாகும் என்று குர்ஆன் (05:32) வச­னத்தில் கூறு­கின்­றது.

இவ்­வ­ச­னத்தில் உயி­ரென்று குறிப்­பி­டும்­போது முஸ்லிம் முஸ்­லி­மல்­லா­தவர் என்ற எந்த வித்­தி­யா­சத்­தையும் காண முடி­ய­வில்லை. இங்கு பொது­வாக உயிர் என்­றுதான் கூறப்­ப­டு­கி­றது.

ஓர் உயி­ரா­யினும் கார­ண­மின்றிக் கொல்­லக்­கூ­டாது என்று குர்ஆன் கூறும்­போது சங்­கை­யான மாதங்கள் கழிந்­து­விட்டால் இணை­வைப்­போரைக் கொல்­லுங்கள் என்ற வச­னத்தை முஸ்­லி­மல்­லாத அனை­வ­ரையும் கொலை செய்­யுங்கள் என்று எவ்­வாறு விளங்க முடியும் ?

கார­ணத்­தோடு கொலை செய்ய முடியும் என்ற அடிப்­ப­டையில் உடன்­ப­டிக்­கையை முறித்து மீண்டும் போரை ஆரம்­பிப்­பார்­க­ளானால் அவர்­களை கொல்­லுங்கள், சிறைப் பிடி­யுங்கள், முற்­று­கை­யி­டுங்கள் என்­பதே 09.05ஆம் வச­னத்தின் விளக்­க­மாகும்.

ஒரு சமு­தா­யத்தின் மீது வஞ்சம் தீர்க்க வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக அவர்கள் பின்பற்றும் வேதத்தையே பிழையாகத் திரித்துக் கூற முற்படுவது மிகப்பெரிய விஷமத்தனமாகும். பல சமயத்தவர்கள் மத்தியில் சமய நடைமுறைகளில் வித்தியாசம் இருக்கட்டும். ஆனால் மனிதர்கள் என்ற அடிப்படையில் ஒருவரை ஒருவர் மதித்து வாழ்வோம். இதன் மூலம் மக்களும் முன்னேறுவார்கள். நாடும் முன்னேறும். அச்சம் நீங்கிய அமைதியான சமுதாயமொன்றைக் காணமுடியும்.
-விடிவெள்ளி

Leave A Reply

Your email address will not be published.