சோமாலியாவில் தானும் நபி எனத் தெரிவித்த மதகுருவின் சமயத் தலத்தின் மீது தாக்குதல்

மதகுருவும் மேலும் ஒன்பது பேரும் பலி

0 710

அல்-­–ஷபாப் துப்­பாக்­கி­தா­ரி­யொ­ரு­வரும் கார்க்­குண்டு தற்­கொலைத் தாக்­கு­தல்­தா­ரி­யொ­ரு­வரும் கடந்த திங்­கட்­கி­ழமை மத்­திய சோமா­லி­யாவின் மதத் தல­மொன்றில் மேற்­கொண்ட தாக்­கு­தலில் மத­குரு ஒரு­வரும் மேலும் ஒன்­பது பேரும் கொல்­லப்­பட்­டுள்­ள­தாக பொலிஸ் அதி­கா­ரி­யொ­ருவர் தெரி­வித்தார்.
முகா­மொன்­றினுள் இருந்த மத­குரு, பதின்ம வய­தினர் மற்றும் பெண்கள் உள்­ள­டங்­க­லாக 10 பேர் கிளர்ச்­சிக்­கா­ரர்­களால் கொல்­லப்­பட்­ட­தாக மத்­திய நக­ரான கல்­க­யோ­வி­லி­ருந்து தொலை­பேசி மூல­மாக பொலிஸ் மேஜர் அப்­துர்­ரஹ்மான் அப்­துல்­லாஹி ரொய்ட்­ட­ரிடம் தெரி­வித்தார்.

பாது­காப்புப் படை­யி­ன­ருக்கும் அல்-­ஷ­பா­புக்கும் இடையே மத்­திய நிலை­யத்தில் தொடர்ந்தும் மோதல்கள் இடம்­பெற்று வரு­வ­தா­கவும் இறந்­தோரின் எண்­ணிக்கை மேலும் அதி­க­ரிக்கும் எனவும் அவர் தெரி­வித்தார்.
இத்­தாக்­கு­த­லுக்குத் தாமே பொறுப்­பென சோமா­லிய அர­சாங்­கத்தை பதவி கவிழ்ப்­ப­தற்­காகப் போராடி வரும் இஸ்­லா­மியக் குழு­வான அல்-­–ஷபாப் தெரி­வித்­துள்­ளது.

நபிகள் நாய­கத்தை கொச்­சைப்­ப­டுத்­திய நபரின் மத்­திய நிலையத்­தினுள் குண்­டு­ட­னான கார் நுழைந்­தது. எமது போரா­ளிகள் தற்­போது உள்ளே இருக்­கின்­றார்கள், மோதல்கள் இடம்­பெற்று வரு­கின்­றன என அல்–-­ஷபாப் பேச்­சாளர் அப்துல் அஸீல் அபூ முஸாப் ரொய்ட்­ட­ரிடம் தெரி­வித்தார்.

அப்­தி­வெலி இலக்கு வைக்­கப்­பட்­ட­மைக்­கான காரணம் அவ­ரது மத்­திய நிலை­யத்தில் பெரும்­பா­லான இளம் வய­தினர் இசை மீட்டல் மற்றும் நட­ன­மாடும் செயற்­பா­டு­களில் ஈடு­ப­டு­வ­தற்கு இட­ம­ளிக்­கப்­ப­டு­கின்­ற­மை­யாகும் என கல்­கயோ பிர­தே­ச­வா­சி­களும் பிராந்­திய உத்­தி­யோ­கத்தர் ஒரு­வரும் தெரி­வித்­தனர்.

தான் ஒரு நபி என அப்­தி­வெலி தெரி­வித்­தாக அல்-­–ஷபாப் கடந்த வருடம் குற்­றம்­சாட்­டி­யது, அக்­குற்­றச்­சாட்டை அப்­போதே அப்­தி­வெலி மறுத்­தி­ருந்தார்.
உயி­ரி­ழப்­புக்­களின் எண்­ணிக்கை எத்­தனை என்­பது துல்­லி­ய­மாகத் தெரி­ய­வில்லை. அல்-­–ஷபாப் பல தட­வைகள் அவ­ருக்கு அச்­சு­றுத்தல் விடுத்­தி­ருந்­தது என முடுக் பிராந்­தி­யத்தின் ஆளு­ந­ரான அப்­துர்­ரஷீட் ஹாஷி தெரி­வித்தார்.
இஸ்­லா­மிய சட்­டத்தை கடு­மை­யாகப் பின்­பற்றும் அதன் கொள்கை அடிப்­ப­டை­யி­லான சுய ஆட்­சி­யினை உரு­வாக்­கு­வ­தற்கு அல்-­–ஷபாப் அமைப்பு போராடி வரு­கின்­றது. முடுக் பிராந்­தி­யத்தின் சிறிய பகு­தியை தனது கட்­டுப்­பாட்­டினுள் வைத்­தி­ருக்கும் அல்-­–ஷ­பாபின் கட்­டுப்­பாட்­டினுள் கல்கயோ பிராந்தியம் இல்லை. கல்கயோ பிராந்தியம் மிகவும் அமைதியான பிரதேசமாகும், எவ்வாறு ஆயுதம் தரித்த கிளர்ச்சிக்காரர்களும் தற்கொலைக் காரும் நகரத்திற்குள் கொண்டுவரப்பட்டன என்பதே இங்குள்ள கேள்வியாகும் என பொலிஸ் கெப்டன் நூர் மொஹமட் தெரிவித்தார்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.