முஸ்லிம்களல்லாத அனைவரையும் கொல்ல வேண்டும் என சஹ்ரான் வெளிப்படையாக பிரசாரம் செய்தார்

ஜனாதிபதி, பிரதமர், நீதி, பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு அமைச்சர்கள், சட்டமா அதிபரிடம் அன்றே முறையிட்டோம்; நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிவுக்குழு முன் காத்தான்குடி சூபி நிறுவன பிரதிநிதி சாட்சியம்

0 675

முஸ்­லிம்கள் அல்­லாத அனை­வ­ரையும் கொல்­ல­வேண்டும் என்ற கருத்­துக்­களை வெளிப்­ப­டை­யாக சஹ்ரான் மூன்று சந்­தர்ப்­பங்­களில் பேசினார். ஆனால் இது குறித்து எவ­ருமே எந்த நட­வ­டிக்­கையும் எடுக்­க­வில்லை. அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபை உள்­ளிட்ட அனை­வரும் இதற்கு பொறுப்­புக்­கூற வேண்டும் என சூபி முஸ்லிம் பிரி­வினைச் சேர்ந்த பிர­தி­நி­தி­யாக பாரா­ளு­மன்ற தெரி­வுக்­குழு முன்­னி­லையில் வாக்­கு­மூலம் வழங்­கிய அல்ஹாஜ் அப்துல் ஜவாத் ஆலிம் வலி­யுல்லா நம்­பிக்கைப் பொறுப்பின் செய­லாளர் மௌலவி கே.ஆர்.எம்.சஹ்லான்  தெரி­வித்தார். இன்றும் வஹா­பிச கொள்­கை­யா­ளர்கள் பலர் உள்­ளனர், இது எதிர்­கா­லத்தில் பயங்­க­ர­வா­த­மாக மாறலாம் என்ற அச்சம் உள்­ளது. அதற்கு நல்ல உதா­ரணம் சஹ்ரான் எனவும் அவர் குறிப்­பிட்டார்.

ஈஸ்டர் தாக்­குதல் குறித்து விசா­ரணை நடத்தி பாரா­ளு­மன்­றத்தில் அறிக்கை சமர்ப்­பிக்க நிய­மிக்­கப்­பட்ட பாரா­ளு­மன்ற விசேட தெரி­வுக்­குழு நேற்று சூபி முஸ்லிம் பிரி­வினைச் சேர்ந்த பிர­தி­நி­தி­யிடம் விசா­ரணை நடத்­தி­யது. இதன்­போதே அவர் இதனைக் குறிப்­பிட்டார். அவர் கூறி­ய­தா­வது,

தாருல் அதர் அத்­த­அ­வியா என்ற அடிப்­ப­டை­வாத அமைப்பை இவர்கள் உரு­வாக்­கினர். பின்னர் ஜப்­பா­னுக்குச் சென்றார். சில மாதங்கள் அங்கு தங்­கி­யி­ருந்து மீண்டும் இலங்­கைக்கு வந்தார். வந்து தாருல் அதர் அத்­த­அ­வியா அமைப்பில் இணைந்து இயங்கி பின்னர் அதில் ஏற்­பட்ட முரண்­பா­டுகள் கார­ண­மாக அதில் இருந்து வெளி­யேறி தேசிய தவ்ஹீத் ஜமாஅத் என்ற அமைப்பை உரு­வாக்­கினார். அப்­போ­தைய ஆளுநர் அலவி மௌலானா ஆயுத குழுக்கள் குறித்த எச்­ச­ரிக்கை விடுத்த செய்தி ஆங்­கிலப் பத்­தி­ரிகை ஒன்றில் வந்­தது. எவ்­வாறு இருப்­பினும் தேசிய தவ்ஹீத் ஜமாஅத் என்ற அமைப்பை சமூக சேவை குழு­வாக பதிவு செய்து சாதா­ரண குடிசை ஒன்றில் இவர்கள் ஆரம்­பித்­தனர். இன்று இது பாரிய பள்­ளி­யாக உள்­ளது.

இவர்கள் ஆரம்­பத்தில் இருந்து சூபி முஸ்­லிம்­களை மிகவும் கீழ்த்­த­ர­மாக விமர்­சித்து பிர­சா­ரங்­களை செய்தார். சூபிக்கள் இஸ்­லா­மி­யர்கள் இல்லை என்ற பிரச்­சா­ரத்தை செய்தார். அப்­போது தவ்ஹித் என்ற மாத சஞ்­சிகை ஒன்றும் சஹ்­ரானால் வெளி­யி­டப்­பட்­டது. இந்த சஞ்­சி­கை­களில் சூபிகள் குறித்து கீழ்த்­த­ர­மான விமர்­ச­னங்­களை முன்­வைத்தார். சூபி முஸ்­லிம்கள் பொது­வாக அன்­ன­தானம் வழங்­குவோம். இது எமது வழக்கம். இதனைப் பெற்று சாப்­பி­டு­வது பன்றி இறைச்­சியை சாப்­பி­டு­வ­தற்கு சம­மா­னது என்ற கருத்­துக்­களை வெளி­யிட்டார். துண்டுப் பிர­சு­ரங்­களும் வெளி­யி­டப்­பட்­டன. இது தொடர்­பாக 2013,2014 ஆண்­டு­களில் காத்­தான்­குடி பொலிஸ் நிலை­யத்தில்  11 முறைப்­பா­டு­களை செய்தோம். இது தொடர்பில் மட்­டக்­க­ளப்பு நீதி­மன்­றத்தில் வழக்கும் பதி­வா­கி­யுள்­ளது.

இந்த வழக்கு விசா­ரிக்­கப்­பட்­ட­போதும் அவர் தனது பிர­சா­ரத்தை கைவி­ட­வில்லை. பின்னர் வழக்கும் கைவி­டப்­பட்­டது. எமது மனதை புண்­ப­டுத்தும்  செயற்­பா­டுகள் குறித்து அப்­போ­தைய கிழக்கு மாகாண  இரா­ணுவ கட்­டளைத் தள­பதி மேஜர் ஜெனரல் லால் பெரே­ரா­விடம் நாம் தெரி­வித்தோம். அவர்கள் இவர்­க­ளுக்கு எச்­ச­ரிக்கை விடுத்தார். ஆனால் இத­னைக்­கூட அவர் பொருட்­ப­டுத்­தாது மேஜர் ஜென­ர­லையே விமர்­சனம் செய்தார்.

பின்னர் தேர்தல் வந்­தது. அதன்­போது காத்­தான்­கு­டியில் சில கட்­சிகள் அவ­ருடன் உடன்­ப­டிக்கை செய்­தன. இக் காலத்தில் அவர் மஹிந்த ராஜபக் ஷவிற்கு எதி­ரான கட்­சிக்கு ஆத­ர­வாக செயற்­பட்டார். இந்த கட்­சி­க­ளுடன் அவர் செய்­து­கொண்ட உடன்­ப­டி­கையில் பல அடிப்­ப­டை­வாத கருத்­துக்கள் இருந்­தன. குறிப்­பாக சூபி சமூ­கத்­துக்கு எதி­ராக அவர் கருத்­துக்­களை முன்­வைத்தார். காத்­தான்­கு­டியில் மாத்­திரம் பத்­தா­யிரம் சூபி மக்கள் உள்­ளனர். இவர்­க­ளுக்கு எதி­ராக பல மோச­மான கருத்­துக்­களை முன்­வைத்தார்.  இந்த உடன்­ப­டிக்­கையில் ஜன­நா­யக கட்சி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ், நல்­லாட்­சிக்­கான தேசிய முன்­னணி, ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி, ஐக்­கிய தேசிய கட்சி சார்பில் அதன் பிர­தி­நி­தி­களால் கைச்­சாத்­தி­டப்­பட்­டது.

கிறிஸ்­தவ மக்­க­ளுக்கு எதி­ராக அவர் 2016 ஆம் ஆண்டு உரை­யாற்­றி­ய­துடன் மட்­டு­மல்ல அவர் எதி­ராக பேசிய கருத்­துக்­களை மட்­டக்­க­ளப்பு தேவா­ல­யங்­களில் கைய­ளித்தார். இதில் கிறிஸ்மஸ் தினம் குறித்தே அதி­க­மாக விமர்­சித்தார். பௌத்­தர்­க­ளுக்கு எதி­ராக அவர் பேசி­ய­தாக நான் அறி­ய­வில்லை. ஈஸ்டர் தாக்­கு­தலின் பின்­னர்தான் அவ­ரது பழைய இறு­வெட்­டுக்­களில் பெளத்த மதம் குறித்து பேசி­யதை நான் பார்த்தேன். அது­மட்­டு­மல்ல 2016 இல் இலங்­கைக்கு எதி­ராக, தேசப்­பற்­றுக்கு எதி­ராக அவர் உரை நிகழ்த்­தினர். மூன்று தட­வைகள் இவ்­வாறு அவர்  தேசிய எதிர்ப்பு கருத்­துக்­களை கூறினார். இதில் முஸ்லிம் அல்­லாத அனை­வ­ரையும் கொல்­ல­வேண்டும் என்று கூறி­யுள்ளார். பகி­ரங்க கூட்­டத்தில் இவற்றை அவர் கூறினார்.

இஸ்­லா­மிய அடிப்­ப­டை­வா­திகள் பிற்­கா­லத்தில் தீவி­ர­வா­தி­க­ளாக மாறிய வர­லா­றுகள் நிறைய உள்­ளன. அவ்­வாறு தான் சஹ்­ரானும் மாறி­யி­ருக்க வேண்டும். இஸ்­லா­மிய ஆட்­சிக்கு எதி­ரா­னதே தேசப்­பற்று என்று கூறினார். தாய்­நாட்டை நேசிப்­பவர் முஸ்லிம் அல்ல. இலங்­கையின் தேசிய கொடியை ஏந்­தினால் இஸ்­லா­மிய ஆட்­சிக்கு பாதிப்பு, இலங்­கையில் இஸ்­லா­மிய கொடி பறக்க வேண்டும், இலங்கை நாட்டை முஸ்­லிம்கள் கைப்­பற்ற வேண்டும் என அவர்  பேசினார். அதன் பின்னர் அவ­ரது முகப்­புத்­த­கத்தில் பல வன்­முறை கருத்­துக்கள் பதி­வேற்­றப்­பட்­டன. இது குறித்த தக­வல்­களை உள்­ள­டக்கி கடி­த­மாக தயா­ரித்து ஜனா­தி­பதி காரி­யா­லயம், நீதி அமைச்சர் காரி­யா­லயம் (அப்­போ­தைய நீதி­ய­மைச்சர் விஜ­ய­தாச ராஜ­பக ஷ) பிர­தமர் காரி­யா­லயம், பாது­காப்பு இரா­ஜாங்க அமைச்சர் காரி­யா­லயம், சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்­ன­யக்­கவின் காரி­யா­ல­யத்தில் கைய­ளித்­த­துடன் பொலிஸ்மா அதி­ப­ரி­டமும் முறைப்­பாடு செய்தோம். பயங்­க­ர­வாத தடுப்பு பிரிவின் அதி­காரி நாலக டி சில்­வா­வி­டமும் ஒரு பிர­தியை வழங்­கினோம். பின்னர் பிர­தமர் அலு­வ­ல­கத்தில் இருந்து பதில் வந்­தது. இந்த விடயம் பிர­தமர் கவ­னத்­திற்கு கொண்டு வரப்­பட்­டுள்­ளது என்ற கடிதம் வந்­தது. சட்­டமா அதிபர் திணைக்­க­ளத்தில் இருந்தும் பல பதில் கடி­தங்கள் வந்­தன.

பின்னர் காத்­தான்­குடி அலியார் சந்­தியில் ஒரு பிர­சார கூட்­டத்தை சஹ்ரான் நடத்­தினார். தேசிய தவ்ஹீத் ஜமாஅத் இந்த கூட்­டத்தை நடத்­தி­யது. இதில் சூபி முஸ்­லிம்­களை முஸ்­லிம்கள் அல்ல என நாம் ஏன் கூறு­கின்றோம் என்­பதே இந்த கூட்­டத்தின் தலைப்­பாக இருந்­தது. இதன்­போது அந்த இடத்தில் குழப்பம் ஏற்­பட்­டது. இதன்­போது சூபி முஸ்லிம் ஒரு­வரை தவ்ஹீத் ஜமாஅத் நபர் ஒருவர் வாளால் வெட்­டினார். இன்­னொ­ரு­வரும் தாக்­கப்­பட்டார். இது குறித்த பொலிஸ் முறைப்­பா­டுகள் பதி­யப்­பட்­டன. இதில் ஒன்­பது தவ்ஹீத் அமைப்­பி­னரும் சூபியை சேர்ந்த நால்­வரும் கைது­செய்­யப்­பட்­டனர். இந்த சம்­ப­வத்தின் பின்னர் இவர் காத்­தான்­கு­டியில் இருக்­க­வில்லை. நாம் இந்த சம்­பவம் குறித்து காத்­தான்­கு­டியில் முறைப்­பாடு செய்தோம். அதன் பின்னர் சஹ்­ரானை காண­வில்லை. சஹ்ரான் மட்டும் அல்ல இவ­ரது அமைப்பின் பலர் இருந்­தனர். நியாஸ் என்ற நபர் தொடர்ச்­சி­யாக இவற்றை பரப்பி வந்தார். சூபிகள் இஸ்­லா­மி­யர்கள் அல்ல என ஜம்­இய்­யத்துல் உலமா தீர்ப்பு வழங்­கி­யுள்­ளது என்ற கருத்­துக்­களை முன்­வைத்தார். சூபிக்கள் முஸ்­லிம்கள் இல்லை என ஜம்­இ­ய்யத்துல் உலமா ஒரு தீர்ப்பை நாற்­பது  ஆண்­டு­க­ளுக்கு முன்னர்  வெளி­யி­டப்­பட்­டது. அதில் சூபிக்கள் கொல்­லப்­பட வேண்டும் என்று கூறி­யுள்­ளது. அது­மட்­டு­மல்ல காத்­தான்­குடி ஜம்­இய்­யத்துல் உலமா சபை பல அடிப்­ப­டை­வாத செயற்­பா­டு­களை செய்­தது. நாம் முஸ்­லிம்கள், எம்­மையே கொலை செய்ய வேண்டும் என ஜம்­இய்யத்துல் உல­மாக கூறு­வது எம்மால் ஒரு­போதும் ஏற்­று­கொள்ள முடி­யாது. (இந்தக் கருத்தை கூறிய போது அவர் அழுதார்) தொடர்ச்­சி­யாக காத்­தான்­குடி ஜம்­இய்யத்துல் உல­மாவும் சூபி­க­ளுக்கு எதி­ராக கருத்­துக்­களை முன்­வைத்­தனர். சூபிக்கள் முஸ்லிம் அல்­லா­த­வர்கள், இவர்­க­ளுடன் தொடர்­புகள் இருக்கக் கூடாது, இவர்­களை ஒதுக்­கி­வைக்க வேண்டும் என்ற கருத்­துக்­களை முன்­வைத்­தனர். இதனை எதிர்த்து மனித உரி­மைகள் ஆணைக்­கு­ழுவில் முறை­யிட்டோம். தவ்ஹீத் ஜமாஅத் அமைப்­பிற்கும் ஜம்­இய்­யத்துல் உலமா அமைப்­பிற்கும் இடையில் எந்த நிறு­வன ரீதி­யான தொடர்பும் இருந்­த­தாக தெரி­ய­வில்லை. ஆனால் இவர்கள் இணைந்து ஒரு அமைப்பை உரு­வாக்­கினர். இவர்கள் அனைரும் இணைந்து சூபி முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான தீர்­மா­னத்தை வெளி­யிட்­டனர். இன்றும் இந்த அமைப்­பினர் காத்­தான்­கு­டியில் உள்­ளனர்.

அடிப்­ப­டை­வாதம் இருந்தால் தீவிரவாதம் வரும். இன்று நாட்டில் இவ்வாறு  ஒரு விடயம் உருவாக நீண்டகாலமாக இவர்கள் மத்தியில் அடிப்படைவாதம் இருந்தது. இது வஹாபிசம். இந்த வஹாபிசத்தை பின்பற்றும் இருபது பள்ளிவாசல்கள் காத்தான்குடியில் உள்ளன. இலங்கை முழுவதும் வஹாபிசம் உள்ளது, இவர்களில் பலர் இறுக்கமான கொள்கை கொண்டவர்கள். ஆனால் மிக தீவிரமாக வன்முறையை தூண்டும் கருத்துக்களை பற்றி சஹ்ரான் வெளிப்படையாக பேசினார். சஹ்ரானின் கூட்டங்களுக்கு ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் செல்வார்கள்.  இன்றும் வஹாபிசம் உள்ளது. சஹ்ரானும் ஆரம்பத்தில் வஹாபிசவாதியாகவே இருந்தார். இறுதியாக அது பயங்கரவாதமாக மாறியது.இன்றும் வஹாபிசம் என்று கூறிக்கொண்டு பலர் இயங்கி வருகின்றனர். இது எதிர்காலத்தில் அச்சுறுதலாக அமையலாம் என்றார்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.