உலமா சபையை பின்பற்றி ஒரே நாளில் பெருநாள் கொண்டாடுங்கள்

முஸ்லிம் சமய விவகார அமைச்சர் ஹலீம்

0 762

முஸ்­லிம்கள் எவ்­வித கொள்கை முரண்­பா­டு­க­ளு­மின்றி அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபையின் வழி­காட்­ட­லுக்­க­மைய ஒரே தினத்தில் நோன்புப் பெரு­நாளை நாடு­மு­ழு­வதும் கொண்­டாட வேண்­டு­மென அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவ­கார அமைச்சர்  எம்.எச்.ஏ. ஹலீம் வேண்­டுகோள் விடுத்­துள்ளார்.

முஸ்­லிம்­களின் ஒற்­று­மையைச் சிதைப்­ப­தற்கு நாட்டில் ஒரு சில பிரி­வி­னரால் முயற்­சிகள் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­வ­தாக முறைப்­பா­டுகள் கிடைத்­து­வ­ரு­கின்­றன. எனவே இவ்­வா­றான சூழ்­நி­லை­களில் முஸ்­லிம்கள் கொள்கை வேறு­பா­டு­களை மறந்து தூர­நோக்­குடன் செயற்­பட வேண்டும். முஸ்­லிம்கள் இன­வா­தி­களின் சூழ்ச்­சிக்கு பலி­யா­கி­வி­டக்­கூ­டாது எனவும் அவர் தெரி­வித்­துள்ளார்.

நோன்புப் பெருநாள் தொடர்பில் வெளி­யிட்­டுள்ள அறிக்­கை­யி­லேயே அவர் இவ்­வாறு கூறி­யுள்ளார். அவர் மேலும் தெரி­வித்­துள்­ள­தா­வது,

“கடந்த நோன்புப் பெருநாள் தினங்கள் நாட்டில் ஒரே தினத்தில் கொண்­டா­டப்­ப­ட­வில்லை. ஒரு­சாரார் கொள்கை ரீதியில் பிரிந்து செயற்­பட்­டார்கள். இந்­நி­லைமை இவ்­வ­ருடம் தவிர்க்­கப்­பட வேண்டும். அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபை நோன்புப் பெருநாள் தினத்தை எவ்­வாறு கொண்­டாட வேண்­டு­மென அறி­வு­றுத்­தி­யுள்­ளது. அந்த அறி­வித்­தல்கள் பேணப்­ப­ட­வேண்டும்.

கொழும்பு பெரிய பள்­ளி­வாசல் அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபை, முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களம் என்­பன இணைந்து பிர­க­ட­னப்­ப­டுத்தும் தினத்­தி­லேயே முஸ்­லிம்கள் அனை­வரும் பெரு­நாளைக் கொண்­டா­ட­வேண்டும். வர­லாற்றில் என்­று­மில்­லாத ஒரு கால­கட்­டத்­தி­லேயே நாம் பெரு­நாளைக் கொண்­டா­ட­வேண்­டி­யுள்­ளது.

உயிர்த்த ஞாயிறு தற்­கொலைக் குண்டுத் தாக்­கு­தலில் 250 க்கு மேற்­பட்டோர் பலி­யா­கி­யுள்­ளார்கள். பலர் அங்­க­வீ­னர்­க­ளா­கி­யுள்­ளார்கள். அந்த மக்­க­ளது மன­நிலை இன்னும் சீரா­க­வில்லை. குரு­ணாகல், புத்­தளம், கம்­பஹா மாவட்­டங்­களில் முஸ்லிம் களுக்கு எதி­ராக மேற்­கொள்­ளப்­பட்ட வன்­செ­யல்கள் கார­ண­மாக முஸ்­லிம்­களின் இயல்பு வாழ்க்கை பாதிக்­கப்­பட்­டுள்­ளது.

அப்­பாவி முஸ்­லிம்கள், சிறு சிறு கார­ணங்­க­ளுக்­காக கைது செய்­யப்­பட்டு விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்­ளார்கள். இதனால் பெரும் எண்­ணிக்­கை­யி­லான குடும்­பங்கள் இன்­னல்­க­ளுக்­குள்­ளா­கி­யுள்­ளன.

எனவே பெரு­நாளை ஆடம்­ப­ர­மில்­லாமல் அமை­தி­யாகக் கொண்­டா­டுங்கள். பெருநாள் தினத்தில் நாட்டின் அமை­திக்­கா­கவும் முஸ்­லிம்­களின் கண்­ணி­யத்­துக்­கா­கவும் துஆ பிரார்த்­த­னையில் ஈடு­ப­டுங்கள்.

முஸ்லிம் பெண்­களின் ஆடை தொடர்­பிலும் அரச ஊழி­யர்­களின் ஆடை தொடர்­பிலும் எமக்கு பாத­க­மான தீர்­மா­னங்கள் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­டு­வ­தற்கு முஸ்லிம் சமய விவகார அமைச்சு ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை. நோன்பு பெருநாள் தினத்திலும் முஸ்லிம் பெண்கள் புர்கா, நிகாபைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும். நாட்டின் சட்டத்துக்கு கட்டுப்பட வேண்டும். இல்லையேல் வீணான சிரமங்களுக்குள்ளாக வேண்டியேற்படும் எனத் தெரிவித்துள்ளார்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.