தீவிரவாத செயற்பாடுகள் குறித்து அறிவிக்க தொலைபேசி இலக்கம்

முஸ்லிம் அமைப்புகள் அறிமுகம்

0 551

இலங்­கையில் தீவி­ர­வா­தத்தை முற்­றாக ஒழித்து பாது­காப்­பான ஒரு சூழலை உரு­வாக்கும் நோக்கில், நாட்டில் நடக்கும் பயங்­க­ர­வாத செயற்­பா­டு­களை உட­னுக்­குடன் தெரி­யப்­ப­டுத்த இலங்கை முஸ்லிம் அமைப்­பு­களின் கூட்டு முயற்­சியில் தொடர்பு இலக்கம் ஒன்று அறி­முகம் செய்­யப்­பட்­டுள்­ளது.

அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா, ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்ஸில், தேசிய ஷுரா சபை, வை.எம்.எம்.ஏ மற்றும் கொழும்பு மாவட்ட மஸ்­ஜித்கள் சம்­மே­ளனம் ஆகிய அமைப்­புகள், வர்த்­தக சமூகம் மற்றும் ஏனைய பங்­கா­ளர்­க­ளையும் உள்­ள­டக்­கியே இந்த தொடர்பு இலக்கம் அறி­முகம் செய்­யப்­பட்­டுள்­ளது.

இலங்கை முஸ்லிம் சமூ­க­மா­னது தீவி­ர­வாத அச்­சு­றுத்­தல்­களை தோற்­க­டிக்கும் முக­மாக உறு­தி­யான ஒத்­து­ழைப்­புடன் அதி­கா­ரி­க­ளுக்கு உத­வி­யுள்­ளதன் அடிப்­ப­டையில் நாட்டில் இருந்து தீவி­ர­வா­தத்தை ஒழிக்க அனை­வரும் தொடர்ந்து உதவ வேண்டும் என கேட்டுக் கொள்­ளப்­பட்­டுள்­ளது.

சமூ­கத்தில் ஏதேனும் கடும்­போக்­கான அல்­லது தீவி­ர­மான செயற்­பா­டு­களை அவ­தா­னித்தால் அல்­லது எவ­ரேனும் ஒருவர் பள்­ளி­வா­ச­லிலோ சமூ­கத்­திலோ சந்­தே­கத்­திற்­கி­ட­மான முறையில் செயற்­பட்டால் இந்த இலக்­கத்தை தொடர்பு கொண்டு தெரி­விக்க முடியும்.

கடும்­போக்­கினை அறி­விக்கும் 011 7021477 எனும் துரித அழைப்பின் ஊடாக குறித்த விட­யங்­களை தெரி­விப்­பதன் மூலம் சம்­பந்­தப்­பட்ட அதி­கா­ரிகள் தேவை­யான நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்வர். இந்த இலக்­கத்தை தொலைபேசி அழைப்புப் பட்டியலில் சேமித்துக் கொள்வதன் மூலம் எந்த ஒரு நேரத்திலும் குறித்த தரப்பினரை தொடர்பு கொள்ள முடியும்.

vidivelli

Leave A Reply

Your email address will not be published.