அரபு மொழி போதனாசிரியர் குறித்து அறிக்கை கோரும் பிரதமர்

0 583

அரபு மொழி போதிப்­ப­தற்­காக இலங்­கைக்கு வருகை தந்­துள்ள வெளி­நாட்­ட­வர்கள் தொடர்பில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க உள்­நாட்­ட­லு­வல்கள் அமைச்சு மற்றும் குடி வரவு, குடி­ய­கல்வு திணைக்­க­ளத்­திடம் அறிக்­கை­யொன்­றினைக் கோரி­யுள்­ள­துடன் இவ்­வாறு வருகை தந்­துள்ள வெளி­நாட்டு ஆசி­ரி­யர்­களை திருப்­பி­ய­னுப்­பு­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­ளு­மாறும் ஆலோ­சனை வழங்­கி­யுள்ளார்.

அரபு மொழி போதிப்­ப­தற்­காக சுமார் 600 ஆசி­ரி­யர்கள் இலங்­கைக்கு வருகை தந்­துள்ளதாகத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. இவர்­களில் அநேகர் சுற்­றுலா விசாவில் வரு­கை­தந்­துள்ள தாகத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. இந்த விசாக்கள் வழங்­கப்­பட்­டுள்ள நடை­மு­றைகள் தொடர்பில் ஆரா­யு­மாறும் பிர­தமர் வேண்­டி­யுள்ளார்.
அரபுக் கல்­லூ­ரிகள் மற்றும் அரபு மத்­ர­ஸாக்­களில் அரபு மொழி போதிப்­ப­தற்­காக அரபு நாடு­க­ளி­லி­ருந்து 38 ஆசி­ரி­யர்கள் வருகை தந்­துள்­ள­தாக முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களப் பணிப்­பாளர் அஷ்ஷெய்க் எம்.ஆர்.எம்.மலிக் தெரி­வித்­துள்ளார்.

இவர்­களில் 15 பேர் எகிப்­தி­லி­ருந்து வருகை தந்­த­வர்கள். அவர்­க­ளது விசா அடுத்த மாதம் காலா­வ­தி­யா­க­வுள்­ள­தா­கவும் கூறினார். இவர்கள் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் ஏற்­பாட்டின் கீழ் வருகை தந்­த­வர்­க­ளாவர்.

அடுத்த 23 ஆசி­ரி­யர்­களும் இலங்­கையில் இயங்­கி­வரும் பல்­வேறு இஸ்­லா­மிய அமைப்­பு­களின் ஏற்­பா­டு­களின் கீழேயே வருகை தந்­துள்­ளனர். ஜோர்தான், யெமன், பாகிஸ்தான், பஹ்ரேன், மலேசியா, லிபியா, தாய்லாந்து, இந்தியா ஆகிய நாடுகளிலிருந்து இவர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர் என்றும் கூறினார்.

vidivelli

Leave A Reply

Your email address will not be published.