மக்கள் போராட்டத்தால் இதுவரை 6 அரபுலகத் தலைவர்கள் இராஜினாமா

0 488

மக்கள் போராட்டம் கார­ண­மாக 2011 ஆண்டு தொடக்கம் துனி­சியா, எகிப்து, லிபியா, யெமன், அல்­ஜீ­ரியா, சூடான் ஆகிய நாடு­களில் நீண்ட காலம் பதவி வகித்த அரபுத் தலை­வர்கள் தமது பத­வி­களை இழந்­துள்­ள­தாக செய்­திகள் தெரி­விக்­கின்­றன.

கடந்த வியா­ழக்­கி­ழமை சூடான் ஜனா­தி­பதி ஒமர் அல்-­பஷீர் பதவி நீக்கம் செய்­யப்­பட்ட சம்­ப­வத்­துடன் கடந்த 10 ஆண்­டு­க­ளுக்குள் தமது தலை­வர்கள் பதவி விலக வேண்­டு­மென்ற மக்கள் போராட்ட அழுத்தம் கார­ண­மாக பத­வி­யி­ழந்த ஆறா­வது அரபுத் தலை­வ­ராக அவர் பதி­வா­கி­யுள்ளார்.
இதே­வேளை அரபு வசந்­தத்தின் அடுத்த கட்­ட­மாக இவ்­வாண்டு அல்­ஜீ­ரிய ஜனா­தி­பதி அப்தெல் அஸீஸ் போட்­வி­லிக்கா பல வார­கால மக்கள் ஆர்ப்­பாட்­டங்­களைத் தொடர்ந்து இரா­ஜி­னாமா செய்தார்.

கடந்த 2019 பெப்­ர­வரி மாதம் அல்­ஜீ­ரி­யாவின் ஆளும் தேசிய விடு­தலை முன்­னணி 1999 ஆம் ஆண்­டி­லி­ருந்து அல்­ஜீ­ரி­யாவை ஆட்சி செய்யும் 82 வய­தான போட்­வி­லிக்­காவை ஐந்­தா­வது தட­வை­யாக பதவிக் காலத்­திற்கு பிரே­ரித்­தது.
ஐந்­தா­வது தட­வை­யாக பதவி வகிப்­ப­தற்கு மேற்­கொண்ட தீர்­மா­னத்தை அடுத்து இடம்­பெற்ற தொடர் போராட்­டங்கள் கார­ண­மாக அல்­ஜீ­ரிய ஜனா­தி­பதி அப்­தெல்­அஸீஸ் போட்­வி­லிக்கா இரா­ஜி­னாமா செய்­த­தாக அரச ஊடகம் அறி­வித்­தது.

தொடர்ச்­சி­யான மக்கள் போராட்டம் கார­ண­மாக நீண்ட காலம் ஜனா­தி­ப­தி­யாக பதவி வகித்த அப்­தெல்­அஸீஸ் போட்­வி­லிக்கா இரா­ஜி­னாமா செய்­த­தை­ய­டுத்து அப்­தெல்­காதர் பென்­சலேஹ் இடைக்­கால ஜனா­தி­ப­தி­யாக நிய­மிக்­கப்­பட்டார்.

90 நாட்­க­ளுக்கு வெளிப்­படைத் தன்­மை­யு­டை­யுதும் நியா­ய­மா­ன­து­மான தேர்­தலை நடத்­து­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்­க­வுள்­ள­தாக அல்­ஜீ­ரி­யாவின் இடைக்­கால ஜனா­தி­பதி அப்­தெல்­காதர் பென்­சலேஹ் தெரி­வித்­துள்ளார்.
பாரா­ளு­மன்­றத்தின் அமர்­வுகள் முடி­வ­டைந்­ததை அடுத்து இடைக்­கால ஜனா­தி­ப­தி­யாக நிய­மிக்­கப்­பட்ட பென்­சலேஹ்  90 நாட்­க­ளுக்கு தேர்­த­லொன்றை நடத்­து­வ­தற்கு நட­வ­டிக்கை எடுப்­பதே எனது பிர­தான பணி­யாகும் எனத் தெரி­வித்தார்.

சூடானில் ஒமர் அல்-­பஷீர் பத­வி­யி­லி­ருந்து அகற்­றப்­பட்­டுள்­ள­தா­கவும் இரு வருட நிலை­மா­று­கால அர­சாங்கம் இரா­ணு­வத்­தினால் கண்­கா­ணிக்­கப்­படும் எனவும் கடந்த வியா­ழக்­கி­ழமை சூடான் இரா­ணுவம் அறி­வித்­தது.
2005 ஆம் ஆண்டு அர­சியல் யாப்பை இடை­நி­றுத்தம் செய்­வ­தாக அறி­வித்த இரா­ணுவம் நாடு தழு­வி­ய­ரீ­தியில் மூன்று மாத கால அவ­ச­ர­கால நிலை அமுல்­ப­டுத்தப்படு­வ­தா­கவும் அறி­வித்­தது.
இது தவிர சூடா­னிய ஜனா­தி­பதி செயற்­பணி, பாரா­ளு­மன்றம் மற்றும் அமைச்சரவை ஆகியன கலைக்கப்படுவதாகவும் இராணுவம் அறிவித்துள்ளது.

1989 ஆம் ஆண்டு தொடக்கம் சூடானை ஆட்சி செய்து வரும் ஒமர் அல்-பஷீர் பதவி விலகுமாறு கோரி கடந்த டிசம்பர் மாதம் தொடக்கம் நாடு முழுவதும் மக்களால் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வந்தன.

vidivelli

Leave A Reply

Your email address will not be published.