உள்நாட்டுப் பொறிமுறையில் நம்பிக்கை கொள்ள வேண்டும்

அமைச்சர் ஹக்கீம்

0 617

வெளி­நாட்டு நீதி­ப­தி­களை கொண்­டு­வந்து இலங்கை விவ­கா­ரத்தை கையாள்­வது அர­சி­ய­ல­மைப்­புக்கு முர­ணா­னது. உள்­நாட்டுப் பொறி­முறை மூலம் யுத்த காலத்தில் நடந்த தவ­று­க­ளுக்கு தண்­டனை வழங்­கப்­படும் என்­பதில் அனை­வரும் நம்­பிக்கை கொள்­ள­வேண்டும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தலை­வரும் அமைச்­ச­ரு­மான ரவூப் ஹக்கீம் தெரி­வித்தார்.

ஞாயிற்­றுக்­கி­ழமை ருவன்­வெல்ல, வெந்­தல விஸ்­த­ரிக்­கப்­பட்ட குடிநீர் இணைப்பை  திறந்­து­வைத்த பின்னர் ஊட­க­வி­ய­லா­ளர்­களின் கேள்­வி­க­ளுக்கு பதி­ல­ளிக்­கும்­போதே அமைச்சர் இதனைத் தெரி­வித்தார்.

அங்கு தொடர்ந்து கருத்து தெரி­வித்த அமைச்சர் மேலும் கூறி­ய­தா­வது, ஐக்­கிய நாடுகள் சபையின் மனித உரி­மைகள் பேர­வையின் கூட்­டத்­தொடர் அண்­மையில் ஜெனீ­வாவில் நடை­பெற்­ற­போது, அங்கு பேசப்­பட்ட விட­யங்­க­ளுக்கு வெளி­நாட்டு அலு­வல்கள் அமைச்சர் திலக் மாரப்­பன, கடந்த காலங்­களில் அரசு வழங்­கிய வாக்­கு­று­தி­களை மீறாத வகையில் செயற்­ப­டு­வ­தற்­கான உறு­தியை வழங்­கி­யி­ருக்­கிறார்.

இனங்­க­ளுக்­கி­டை­யி­லான நல்­லி­ணக்­கத்­துக்­காக உள்­நாட்டில் மேற்­கொள்­ளப்­படும் தீர்­மா­னங்­களை செயற்­ப­டுத்தும் முயற்­சியில் அர­சாங்கம் ஈடு­பட்டுக் கொண்­டி­ருக்­கி­றது. இந்த சூழ்­நி­லையில் நாட்டின் அர­சி­ய­ல­மைப்­புக்கு அமை­வாக, குற்­ற­மி­ழைத்­த­வர்­களை தண்­டிப்­ப­தற்கு அர­சாங்கம் இணங்­கி­யுள்­ளது.

நாட்டின் நீதித்­து­றையில் நம்­பிக்­கை­யி­ழந்து, வெளி­நாட்டு நீதி­ப­தி­களை கொண்­டு­வந்து இந்த விட­யத்தை கையாள்­வது அர­சி­ய­ல­மைப்­புக்கு முர­ணா­னது என்­பதை வெளி­நாட்டு அலு­வல்கள் அமைச்சர் தெளி­வாக சுட்­டிக்­காட்­டி­யி­ருக்­கின்றார்.

எனவே, சர்­வ­தேச நீதி­மன்றம் அல்­லது கலப்பு நீதி­மன்­றத்தை விட, உள்­நாட்டு பொறி­முறை மூலமே இதற்கு தீர்வு காணப்படவேண்டும். யுத்த காலத்தில் நடந்த தவறுகளுக்கு உரிய தண்டனை வழங்கப்படும் விதத்தில் அரசாங்கத்தின் நடவடிக்கைகள் அமையும் என்பதில் நம்பிக்கை கொள்ளலாம் என்றார்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.