இஸ்லாமோ போபியா என்னும் இஸ்லாமிய பீதி

0 1,621

கடந்த மார்ச் மாதம் 15 ஆம் நாள் வெள்­ளிக்­கி­ழமை அன்று அவுஸ்­தி­ரே­லி­யாவைச் சேர்ந்த வல­து­சாரி வெள்ளை இன­வாதி ஒருவன் நியூ­ஸி­லாந்தின் கிறைஸ்ட்சேர்ச் பகு­தி­யி­லுள்ள இரு பள்­ளி­வா­சல்­களில் நடத்­திய பயங்­க­ர­வாதத் தாக்­கு­தலில் பெண்கள் உட்­பட 50 பேர் படு­கொலை செய்­யப்­பட்டு, 20 பேர் காய­ம­டைந்த கோரச் சம்­ப­வத்தை அனை­வரும் அறிவர்.

வெள்­ளிக்­கி­ழமை தொழு­கைக்­காக பள்­ளி­வா­சலில் கூடி­யி­ருந்த முஸ்­லிம்கள் மீது இந்தத் துப்­பாக்­கிச்­சூட்டை நிகழ்த்­திய பிரெண்டன் ஹாரிசன் டாரன்ட் அதைத் தன்­னு­டைய முகநூல் பக்­கத்­திலும் நேர­லை­யாகப் பதிவு செய்­துள்ளான். வன்­மத்­து­டன்­கூ­டிய இந்தப் பயங்­க­ர­வாத செய­லுக்கு உலகம் முழு­வ­திலும் கண்­ட­னங்கள் ஒலித்­துக்­கொண்­டுள்­ளன.

துப்­பாக்­கிச்­சூடு நடத்­தப்­பட்­ட­வு­ட­னேயே இது­வொரு தீவி­ர­வாதத் தாக்­குதல் என்றும், நாட்டின் கறுப்பு தினங்­களுள் இதுவும் ஒன்று என்றும் நியூ­ஸி­லாந்தின் பிர­தமர் ஜெசிந்தா ஆர்டர்ன் கூறினார். அவுஸ்­தி­ரே­லிய பிர­த­மரும் இதை வல­து­சாரித் தீவி­ர­வாதம் (Far Right Extremism) என்று கண்­டித்­தி­ருந்தார்.

உல­கையே அதிர்­வ­டையச் செய்த இச்­செயல், அமை­தியை விரும்பும் நாடான நியூ­சி­லாந்தில் நடந்­தது அதிர்ச்­சியைத் தரும் ஒரு சம்­ப­வ­மா­கவே உலக நாடு­களால் பார்க்­கப்­ப­டு­கின்­றன. பெரும்­பா­லான உலக நாடு­களின் தலை­வர்­க­ளது இரங்கல் செய்­தி­களும் , கண்­ட­னங்­களும் வேக­மாகப் பதி­வா­கின. உலக மக்­களின் கவ­லை­ப­டிந்த எண்­ணங்­களும் சமூக வலைத்­த­ளங்­களில் பதி­வா­கின.  நியூ­சி­லாந்து அர­சாங்­கமும் பாது­காப்புப் பிரி­வி­னரும் உட­னேயே செயற்­பட்டுத் தேவை­யான துரித நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்­டதால் கொலை­யா­ளி­களை உட­னேயே கைது­செய்ய முடி­யு­மாக இருந்­தது.

3/15 தாக்­கு­தலில் தொடர்­பு­டைய டாரன்ட் உள்­ளிட்ட மூவரைக் கைது செய்து, அவர்­க­ளி­ட­மி­ருந்த பயங்­கர ஆயு­தங்­க­ளையும் கைப்­பற்­றிய நியூ­ஸி­லாந்து காவல்­துறை மறு­நாளே அவர்­களை நீதி­மன்­றத்தில் நிறுத்­தி­யது. தற்­ச­மயம் முக்­கிய குற்­ற­வா­ளி­யான டாரன்ட் கொலைக் குற்­றச்­சாட்டில் சிறை­வைக்­கப்­பட்­டுள்ளான். ஏப்ரல் 5 ஆம் திக­திக்கு வழக்கு விசா­ரணை ஒத்­தி­வைக்­கப்­பட்­டுள்­ளது.

டாரன்ட் துப்­பாக்­கிச்­சூடு நடத்­துமுன் ராடோவன் என்­ப­வனை நாய­க­னாகக் கொள்ளும் பாட­லொன்றைக் கேட்­ட­படி பள்­ளி­வா­ச­லினுள் நுழை­கிறான். ராடோவன் பொஸ்­னிய முஸ்­லிம்­களை இனப்­ப­டு­கொலை செய்­த­தற்­கா­கவும் பிற போர்க் குற்­றங்­க­ளுக்­கா­கவும் சிறை­வைக்­கப்­பட்­டவன். அது­மட்­டு­மல்­லாமல், இவனைப் போலவே கூட்­டுக்­கொலை புரிந்த மற்­றொரு கொடூ­ர­னான அன்டர்ஸ் ப்ரீவிக்­கிடம் ஆசி பெற்ற பிறகே தாக்க வந்­த­தாக டாரன்ட் அதிர்ச்­சி­யூட்­டு­கிறான். 2011 ஆம் ஆண்டு நோர்­வேயின் ஓஸ்­லோவில் 77 பேரைக் கொன்று குவித்த பயங்­க­ர­வா­திதான் இந்த அன்டர்ஸ் ப்ரீவிக். டாரன்ட் தொடர்­பு­ப­டுத்தும் இது­போன்ற ஆட்­களும், இதர குறி­யீ­டு­களும் அவ­னு­டைய தீய குறிக்­கோ­ளையும் முஸ்லிம் விரோத அர­சி­ய­லையும் தூல­மாகப் புலப்­ப­டுத்­து­கின்­றன.

டாரன்ட் மாபெரும் குடி­யேற்றம் எனும் தலைப்பில் இணை­ய­த­ளத்தில் வெளி­யிட்ட 74 பக்க அறிக்கை முழு­வதும் தீவிர வல­து­சாரி, வெள்­ளை­யி­ன­வாத வெறுப்­பு­ரை­களால் நிறைந்­தி­ருக்­கின்­றன. மேலும், பிற நாடு­க­ளி­லி­ருந்து மேற்­கு­ல­குக்குக் குடி­பு­குவோர் மீதான கடும் துவே­ஷத்தை (Xenophobia) அது கக்­கு­கி­றது. இந்தக் கோரத் தாக்­கு­தலை நடத்­தி­ய­தற்­கான கார­ண­மாக டாரன்ட் தனது அறிக்­கையில், “நம்­மு­டைய நிலங்கள் ஆக்­கி­ர­மிப்­பா­ளர்­க­ளு­டைய (குடி­பு­குந்­தோ­ரு­டைய) நிலங்­களாய் ஆக­மு­டி­யாது என்­பதை அவர்­க­ளுக்கு உணர்த்­து­வ­தற்­கா­கவே” என்று கூறி­யி­ருக்­கிறான். மேலும் ஆக்­கி­ர­மிப்­பா­ளர்­களை அச்­சு­றுத்­தியும் அழித்­தொ­ழிப்­பதன் வழி­யா­கவும் ஐரோப்­பிய மண்ணில் அவர்­களின் குடி­யேற்ற விகி­தத்தைக் கட்­டுப்­ப­டுத்­து­வதைத் தனது நோக்கம் என்­கிறான்.

தீவி­ர­வா­தியின் துப்­பாக்­கியில் எழு­தப்­பட்­டி­ருந்த வார்த்­தைகள், தீவி­ர­வா­தி­களின் வர­லாற்று கோபம், வக்­கிரம், பகையை வெளிப்­ப­டுத்­துக்­கின்­றது.

turkofagos

என்ற கிரேக்க மொழி வார்த்­தைக்கு “துருக்கி கொலைக்­கா­ரர்கள்” என பொருள்

Miloš_Obili

1389ஆம் ஆண்டு உது­மா­னிய சுல்தான் முராத்-1 அவர்­களை படு­கொலை செய்த செர்­பிய படை­த­ள­ப­தியின் பெயர்

John Hunyadi

கொன்ஸ்டான்டிநோபிள் வெற்­றிக்கு பின் 1456ஆம் ஆண்டு நடை­பெற்ற யுத்­தத்தில் 2 ஆம் சுல்தான் மஹ்­மூதின் படைக்கு எதி­ராகப் போராடி வெற்­றி­கொண்ட ஹங்­கே­ரியின் இரா­ணுவத் தள­பதி பெயர் Vienna 1683

உது­மா­னிய படை வியன்னா போரில் தோல்­வி­யுற்ற ஆண்டு.

இவை எல்லாம் உது­மா­னிய கிலா­பத்­திற்கு எதி­ராக கிறிஸ்­தவ உலகம் பெற்ற வெற்­றியின் குறி­யீ­டுகள். இவை­மட்­டு­மல்­லாமல், Refugees welcome to Hell என அக­தி­க­ளுக்கு எதி­ரான வெறுப்பு வாச­கங்­களும் துப்­பாக்­கி­களில் குறி­யீ­டாக எழு­தப்­பட்­டுள்­ளது.

இது புத்தி நலம் இல்­லாத ஒரு பைத்­தி­யக்­காரன் நடத்­திய தாக்­குதல் அல்ல, முஸ்­லிம்­களின் மீது வர­லாற்று ரீதி­யாக பகை ஊட்­டப்­பட்ட இஸ்­லா­மிய வெறுப்பு ஆலையில் உரு­வான பாஸிஸ தீவி­ர­வா­தி­களின் திட்­ட­மிட்ட தீவி­ர­வாத தாக்­குதல் என்­பதை அறிந்து கொள்­ளலாம்.

ஆக மொத்­தத்தில், உலகம் முழு­வ­திலும் செயற்­பட்­டு­வரும் இஸ்லாம் வெறுப்­பா­ளர்­களின் (Islamophobes) வழ­மை­யான சவ­டால்­களே டாரன்­டி­டமும் வெளிப்­ப­டு­கின்­றன. அந்­நியர் குடி­யேற்றம், பிறப்பு விகிதம் அதி­க­ரிப்பு, நாட்­டுக்கு அச்­சு­றுத்தல், கலா­சாரம் அழித்­தொ­ழிக்­கப்­ப­டு­கி­றது போன்ற வல­து­சாரி பாசிஸ்­டு­களின் அடிப்­ப­டை­க­ளற்ற சதிக் கோட்­பா­டு­களே இவ­னு­டைய பேசு­பொ­ருள்­க­ளாக உள்­ளன

உண்­மையில், நியூ­ஸி­லாந்து பயங்­க­ர­வாத சம்­பவம் ஒரு தனித்த நிகழ்­வன்று. முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக மேலை நாடு­களில் உரு­வாக்­கப்­படும் இஸ்­லாமோ போபி­யாவின் எதி­ரொ­லிதான் இதுவும். கருத்துச் சுதந்­தி­ரத்தின் பெயரால் அர­சியல் தளத்­திலும் ஊட­கங்­க­ளிலும் இஸ்­லாம்-­அச்­சமும், இஸ்­லாம்-­வெ­றுப்பும் பெரு­ம­ளவில் பர­வ­லாக்­கப்­பட்­டுள்­ளன.

வெள்­ளை­யினத் தேசி­ய­வா­தி­களும், சுவி­ஷேசக் கிறிஸ்­த­வர்­களும் (Evangelical Christians), ஸியோ­னிஸ்­டு­களும் இதைப் பெரும் தொழி­லா­கவே வளர்த்­தெ­டுத்­தி­ருக்­கின்­றனர்.

இஸ்­லா­மோ­போ­பியா உரு­வாக்­கத்தின் பின்­ன­ணி­யையும் நாம் கவ­னத்தில் கொள்­ள­வேண்­டி­யுள்­ளது. இரு துரு­வங்­க­ளாக அமெ­ரிக்­காவும் சோவியத் யூனி­யனும் உலகைக் கோலோச்­சி­ய­போது அமெ­ரிக்­கா­வுக்கு கம்­யூ­னிஸ எதிரி தேவைப்­பட்­டது. பனிப்­போ­ருக்குப் பிந்­தைய உலகில் அதற்குப் பதி­லீ­டாக இஸ்லாம் எதிரி முன்­னி­றுத்­தப்­ப­டு­கி­றது. முன்பு கம்­யூ­னிஸப் பூச்­சாண்டி காட்­டி­ய­வர்கள் தற்­கா­லத்தில் இஸ்லாம் குறித்து அச்­சத்தை விதைப்­பதன் மூலம் அர­சியல் அனு­கூ­ல­ம­டை­கி­றார்கள்.

இன்று முஸ்லிம் உம்மத் உல­க­ளா­விய ரீதி­யிலும் உள்­நாட்டு மட்­டங்­க­ளிலும் நெருக்­க­டி­யா­ன­தொரு கால கட்­டத்தில் வாழ்ந்து கொண்­டி­ருக்­கி­றது. இஸ்லாம் பற்­றிய பீதியும் அச்­சமும் முஸ்­லிம்கள் குறித்த வெறுப்பும் காழ்ப்­பு­ணர்வும் உல­க­ளா­விய ரீதியில் விதைக்­கப்­பட்­டதன் விளை­வு­களை முஸ்லிம் உம்மத் கோர­மாக அனு­ப­வித்து வரு­கின்ற காலம் இது.

இன்று இஸ்­லா­மோ­போ­பியா ஒரு தனி­யான துறை­யாக மாறி­யி­ருக்­கி­றது. இதற்­கென்று கோடிக்­க­ணக்­கான டொலர்கள் ஒதுக்­கப்­பட்டு, இதற்­கென்றே வள­வா­ளர்கள் நிய­மிக்­கப்­பட்டு சர்­வ­தேச மட்­டங்­க­ளிலும் பிராந்­திய மட்­டங்­க­ளிலும் தேசிய மட்­டங்­க­ளிலும் திட்­ட­மிட்ட அடிப்­ப­டையில் இந்தத் துறை வளர்க்­கப்­பட்டு வரு­வதை நாம் அறிவோம். அவ்­வாறே இரா­ணுவ ரீதி­யா­கவும் சிந்­தனா ரீதி­யா­கவும் திட்­ட­மிட்ட படை­யெ­டுப்­பு­க­ளுக்கு முகம்­கொ­டுத்­தி­ருக்கும் சர்­வ­தேச இஸ்­லா­மிய உம்மத் உள­வியல் ரீதி­யான படை­யெ­டுப்­புக்கும் முகம்­கொ­டுத்­தி­ருக்­கின்­றது. முஸ்­லிம்­களை உள­வியல் ரீதி­யாக பல­வீ­னப்­ப­டுத்தி தோல்வி மனப்­பான்­மையை (Defeated Mentality) உரு­வாக்கும் நோக்­குடன் உள­வியல் ரீதி­யான ஆக்­கி­ர­மிப்பு முடுக்கி விடப்­பட்­டி­ருக்­கி­றது.

இன்று இஸ்­லா­மிய உல­கிலும் மேற்­கிலும் ஏற்­பட்­டி­ருக்கும் நவீன இஸ்­லா­மிய எழுச்­சியின் வேக­மான அலைகள் உலக மக்­களை அதனை நோக்கி திரும்பிப் பார்க்க வைத்­துள்­ளன.

குறிப்­பாக மேற்­கு­லகில் மிக வேக­மாக மனித உள்­ளங்­களை வசீ­க­ரித்து வரும் மார்க்­க­மாக இஸ்லாம் மாறி­யி­ருப்­பது அங்­குள்ள கிறிஸ்­தவ தேவா­ல­யங்­க­ளையும் விரோதப் போக்­கா­ளர்­க­ளையும் ஆத்­திரம் கொள்ளச் செய்­துள்து.

இதன் விளை­வாக கிறிஸ்­தவப் பாதி­ரி­களும் மேற்­கு­லகின் சில அறி­ஞர்­களும் (?) இஸ்லாம் குறித்து போலி­யான கருத்­தி­யல்­களை முன்­வைப்­ப­தோடு முஸ்­லிம்­களை கொடூ­ர­மா­ன­வர்­க­ளா­கவும் பயங்­க­ர­வா­தி­க­ளா­கவும் காட்ட முனைந்­தனர். இவ்­வா­றான செயற்­பா­டு­க­ளினால் Islamophobia எனப்­படும் கருத்­தியல் மேற்­கு­லகால் கட்­ட­மைக்­கப்­பட்­டது. கடந்த சில ஆண்­டு­க­ளாக பர­ப­ரப்­பாக பேசப்­பட்டு வரும் இக்­க­ருத்­தியல் குறித்த போதிய விளக்கம் எமது சமூ­கத்தில் முன்­வைக்­கப்­ப­டா­மையால் அது­பற்றி சிறு விளக்­கத்தை இவ்­வாக்­கத்தின் ஊடாக முன்­வைக்க முயற்­சிக்­கிறேன்.

 

Islamophobia என்றால் என்ன?

மேற்­கு­லகில் பர­வி­வ­ரு­கின்ற அல்­லது கட்­ட­மைக்­கப்­பட்­டி­ருக்­கின்ற இஸ்­லா­மியப் பீதியின் பரி­பாஷைக் கருத்­தா­கவே இது காணப்­ப­டு­கின்­றது. Islamophobia என்ற சொல் பீதி, அச்சம், நோய், பயம் போன்ற கருத்­துக்­களைக் கொண்ட ஒரு கிரேக்க சொல்­லாகும். 2011/09/11 இரட்டைக் கோபுர தாக்­கு­த­லுக்­குப்பின் மேற்­கு­லகில் உருப்­பெற்ற கருத்­தி­ய­லா­கவும் இதனை அடை­யா­ளப்­ப­டுத்த்­தலாம்.

Islamophobia வானாது முஸ்­லிம்­களை மதத் தீவி­ர­வா­தி­க­ளா­கவும் இரக்கம், பண்­பாடு என்­ப­ன­வற்றை அறி­யாத மனித சமு­தா­யத்­திற்கு எதி­ரான சமத்­துவம், மன்­னிப்பு போன்ற மனித பண்­பு­க­ளுக்கு விரோ­த­மா­ன­வர்­க­ளா­கவும் சித்­தி­ரிப்­பதைக் குறிக்­கின்­றது.

இவ்­வா­றான கட்­ட­மைப்பை மேற்­கொள்­வதன் மூலம் மேற்கு மக்­களின் உள்­ளங்­களில் இஸ்லாம் பற்­றிய மோச­மான பிம்­பங்­களை கட்­ட­மைக்­கின்­றது. முஸ்­லிம்­களின் உள்­ளங்­களில் மேற்கை வெல்ல முடி­யாது, அத­னுடன் போராட முடி­யாது, அது அசைக்க முடி­யாத சக்தி போன்ற மாயையை உரு­வாக்­கு­கி­றது. இதுதான் நவீன காலப் போர் முறை­யாகும்.

 

இஸ்லாம் பற்­றிய மேற்­கு­லகின் பார்வை

மேற்கு என்­பது ஒரு பிர­தே­சத்தை பிர­தி­ப­லிப்­ப­தல்ல. மாறாக, அது ஒரு வாழ்க்கை முறை­யாகும். உலகில் எக்­கண்­டத்தில் வாழும் எவ­ரேனும் இவ்­வாழ்க்கை முறையை பின்­பற்­று­ப­வ­ராக இருக்­கலாம். அவர் மேற்­கத்­தே­ய­வாதி என்றே அழைக்­கப்­ப­டுவார்.

மேற்கு புனித அல்­குர்­ஆ­னிய வச­னங்­களை முற்­றாக மறுக்­கி­றது. அதனைப் போலி­யா­னது, படைக்­கப்­பட்­டது, ஷைத்­தா­னிய வச­னங்கள் என இழி­வு­ப­டுத்­து­கின்­றது. இறுதித் தூதர் நபி (ஸல்) அவர்­க­ளையும் அவர்­க­ளது ஆளுமைப் பண்­பு­க­ளையும் கொச்சைப் படுத்­து­வ­தோடு மிக மோச­மாக  விமர்­ச­னங்­க­ளையும் முன்­வைக்­கின்­றது.

இதன் விளை­வாக அடிக்­கடி நபி (ஸல்) பற்­றிய கேலிச் சித்­திர நிகழ்­வுகள் நடந்­தேறி வரு­கின்­றன.

குறிப்­பாக முஸ்­லிம்­க­ளையும் பொது­வாக அற­பி­க­ளையும் காட்­டு­மி­ராண்­டி­க­ளா­கவும், இரத்தம் குடிக்கும் ராட்­ச­கர்­க­ளா­கவும், பயங்­க­ர­வா­தி­க­ளா­கவும், உலக சமா­தா­னத்­தி­னதும் அமை­தி­யி­னதும் எதி­ரி­க­ளா­கவும் காட்­டு­கி­றது. மேற்­கத்­தே­ய­வா­தி­களை உலகின் கதா­நா­ய­கர்­க­ளாக சித்­தி­ரிக்­கி­றது.

 

இஸ்லாம் குறித்து மேற்­கத்­தேயம் ஏன் பயப்­ப­டு­கி­றது?

இயற்­கை­யா­கவே இறைவன் ஏற்­ப­டுத்தி வைத்­தி­ருக்கும் இஸ்­லாத்தின் இயங்­கி­ய­லா­னது இஸ்­லாத்தின் தோற்றம் முதல் இன்று வரை அது சந்­தித்து வந்த எதிர்ப்­புக்­களை தகர்த்­தெ­றிந்­துள்­ளது.

இந்த சக்தி இஸ்­லாத்­திற்கு மாத்­திரம் உரி­யது என்­ப­தனால் எதிர்­காலம் இஸ்­லாத்­திற்கே என மேற்­கு­லகு அஞ்­சு­கி­றது.

மேற்­கத்­தேயம் மனித வழி­காட்­டல்­க­ளாக முன்­வைத்த கோட்­பா­டுகள், கருத்­துக்கள், சித்­தாந்­தங்கள் ஏறத்­தாழ தோற்றுப் போய்­விட்­டன. இனிமேல் கொடுப்­ப­தற்கு அவற்­றிடம் எத­வு­மில்லை. ஒரு­வகை சித்­தாந்த வங்­கு­ரோத்து நிலை­யில்தான் அவை உள்­ளன.

இந்­நி­லையில் அவ்­வி­டத்தை இஸ்லாம் நிரப்­பி­வி­டுமோ என்ற அச்சம் மேற்­கத்­தே­யர்­களை ஆட்­கொண்­டுள்­ளது. எனவே மேற்கில் வேக­மாக பரவும் மார்க்­க­மாக இஸ்லாம் மாறி­யி­ருப்­பதால் அதனை இழி­வு­ப­டுத்தி பல ஆய்­வு­க­ளையும் புத்­த­கங்­க­ளையும் அவர்கள் லெளி­யி­டு­கின்­றனர். உதா­ர­ண­மாக:

1.Islamic invasion, Confronting of the world’s growing religion by Robert Mores

2.Militent Islam Reaches America by Deniel Pipes

போன்ற நூல்­களை கூற­மு­டியும். இந்­தப்­புத்­த­கங்­களின் வருகை மேற்­கத்­தேயம் தோல்­வி­ய­டை­கி­றது அவ்­வி­டத்தை இஸ்லாம் நிரப்­பு­கி­றது என்­ப­தற்­கான ஆதா­ரங்­க­ளாகும். அதேபோல் மேற்­கத்­தே­ய­வா­திகள் இஸ்லாம் குறித்த போதிய விளக்­க­மின்­மையால் உரு­வாக்கிக் கொண்ட பீதியே அவர்கள் இஸ்­லாத்தின் உண்­மையை அறி­ய­வில்லை. அதனை வெறும் கோட்­பா­டாகப் பார்க்­கின்­றனர். சில நிகழ்­வு­க­ளையும் தோற்­றப்­பா­டு­க­ளையும் வைத்தே இஸ்­லாத்தை மதிப்­பி­டு­கின்­றனர். தமது உலக சித்­தாந்­தங்­களை இஸ்­லாத்­தோடு பொருத்திப் பார்க்­கின்­றனர். இவை­களே இஸ்லாம் குறித்த அச்சம் எழு­வ­தற்கு கார­ண­மாக அமை­கின்­றன.

 

Islamophobia வை உரு­வாக்­கு­வதில் மேற்­கத்­தேய ஊட­கங்கள்

இன்­றைய உலகம் ஊடகப் பயங்­க­ர­வா­தத்தின் (Media Terrorism) கோரப்­பி­டியில் சிக்­கி­யி­ருக்­கி­றது. ஊடகத் தொழில் நுட்­பத்தில் அப­ரி­மித­மான வளர்ச்சி கண்­டுள்ள மேற்­கு­லகின் தயா­ரிப்­புக்­க­ளுக்கும் விரி­வு­ப­டுத்­த­லுக்கும் முன்னால் ஏனைய ஊட­கங்­களால் தாக்­குப்­பி­டிக்க முடி­ய­வில்லை. எங்கு பார்த்­தாலும் மேற்கு ஊட­கங்­களின் ஆதிக்­கமே தொழிற்­ப­டு­கின்­றது. இதனால் மேற்­கத்­தே­யத்தின் சிந்­த­னை­களும் கருத்­துக்­களும் உல­க­ம­யப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.

2001/09/11 க்குப் பின்னர் மேற்­கு­லகின் தொலைக்­காட்­சிகள், இணை­யத்­த­ளங்கள், பத்­தி­ரி­கைகள், சஞ்­சி­கைகள் என பல்­வேறு தளங்­க­ளிலும் இஸ்­லா­மியப் பீதியை மேற்­கு­லகு உல­க­ம­யப்­ப­டுத்­தி­யது. அமெ­ரிக்­கா­விலும் ஐரோப்­பா­விலும் முன்­னணி ஊடக நிறு­வ­னங்­க­ளாக செயற்­பட்டு வரு­பவை யூத செல்­வந்­தர்­க­ளுக்கு சொந்­த­மா­னவை. உதா­ர­ண­மாக

AOL Time Waner

The World Disney Company

Viacom inc

News Cooperation Limited Seagral Company Limited

The New York Times

The Wall Street Journal

The Washington Post

Fox News, CNN, Reuturs, Google

போன்­ற­வற்றை குறிப்­பி­டலாம். இவை இஸ்­லா­மியப் பீதியை மனித உள்­ளங்­களில் கன­கச்­சி­த­மாக விதைத்து வரு­கின்­றன.

இது மட்­டு­மன்றி இஸ்­லாத்தின் எதி­ரிகள் இஸ்­லாத்தை கொச்­சைப்­ப­டுத்தி பல பத்­தி­ரிகை வெளி­யீ­டு­களை செய்தி வரு­கின்­றனர். வத்­தி­கானில் மட்டும் 200 க்கும் மேற்­பட்ட தின­ச­ரிகள் வெளி­வ­ரு­கின்­றன. இது தவிர வாராந்த, மாதாந்த இதழ்கள் வெளி­வ­ரு­கின்­றன.

இன்னும் 154 ஒளி­ப­ரப்பு நிலை­யங்கள் இஸ்­லாத்தை பற்றி பிழை­யான கருத்­துக்­களை முன்­வைப்­ப­தற்­காக அங்கு செயற்­பட்­டு­வ­ரு­கின்­றன என்­பது குறிப்­பி­டத்­தக்­க­தாகும்.

 

இஸ்­லா­மியப் பீதியை ஏற்­று­மதி

செய்­வதில் Hollywood

திரைப்­ப­டங்­களின் பங்கு

 

ஹொலிவூட் திரைப்­ப­டங்கள் உல­க­ளவில் பாரிய கவ­ன­யீர்ப்பைப் பெற்ற பல ரசி­கர்­களை வசீ­க­ரித்து வைத்­தி­ருக்கும் மேற்­கத்­தேய சினிமா முறை­யாகும். இது 1 ஆம் உலக மகா யுத்­தத்தின் பின்னர் அமெ­ரிக்­காவை நோக்கி குடி­பெ­யர்ந்த யூதர்­க­ளினால் உரு­வாக்­கப்­பட்­டது. ஹொலிவூட் சினி­மாவின் திரைப்­படத் தயா­ரிப்பு நிறு­வ­னங்­களில் பெரும்­பான்­மை­யா­னவை யூதர்­க­ளுக்கு சொந்­த­மா­னவை. உதா­ர­ண­மாக Colombia Coldwyn Myer-Metro Warner Brothers Peramount Universal போன்­ற­வற்றைக் குறிப்­பிட முடியும். ஹொலிவூட் சினி­மாக்கள் முஸ்­லிம்­களை வில்­லன்­க­ளா­கவும் பண்­பா­டற்ற, நாக­ரிகம் தெரி­யாத, மனித இரத்­தத்தை குடிக்கும் சமூ­க­மா­கவே அவர்­களை சித்­தி­ரிக்­கின்­றன. 2001/09/01 இரட்டைக் கோபுர தாக்­கு­த­லுக்குப் பின் இந்த நிலைமை அதி­க­ரித்­துள்­ளது. இவ்­வா­றான ஹொலிவூட் திரைப்­ப­டங்­களில் 70% க்கும் மேற்­பட்­டவை முஸ்­லிம்­களை தீவி­ர­வா­தி­க­ளா­கவும் பயங்­க­ர­வா­தி­க­ளா­கவும் பெண்­களை துன்­பு­றுத்­து­ப­வர்­க­ளா­கவும் காட்­சிப்­ப­டுத்­து­கின்­றன.

அரபு, – இஸ்ரேல் சமூ­கங்­க­ளுக்­கி­டையில் போராட்­டத்தை தூண்டும் வகை­யிலும் தமது போராட்­டத்தை நியா­யப்­ப­டுத்தும் வகை­யிலும் அவர்கள் திரைப்­ப­டத்தை தயா­ரித்து வெளி­யிட்­டனர்.

Network (1976)

Exodus (1960)

Black of Sunday (1977)

The Delta Force (1986)

போன்ற திரைப்­ப­டங்கள் இவ்­வா­றான கருத்­துக்­களை பிர­தி­ப­லிப்­ப­தாக வெளி­யி­டப்­பட்ட திரைப்­ப­டங்­க­ளகும்.

இது­வரை வெளி­யான முஸ்­லிம்­களை மோச­மாக சித்­தி­ரிக்கும் திரைப்­ப­டங்­க­ளுக்கு உதா­ர­ணங்­க­ளாக Erodus, Black Sunday, Delta Force, Iron Eagle, Ruls Of Engagment, Hidalco, The Mummy Returns போன்­ற­வற்றைக் குறிப்­பி­டலாம்.

 

எதிர்­காலம் இஸ்­லாத்­திற்கே!

கிறைஸ்ட்­சேர்ச்சில் நடந்த இப்­ப­யங்­க­ர­வாதத் தாக்­குதல் உலக மக்­களை இஸ்­லாத்தின் பக்கம் மீண்டும் திரும்பிப் பார்க்க வைத்­துள்­ளது. அமெ­ரிக்­காவில் நடந்த இரட்டைக் கோபுரத் தாக்­கு­தலின் போது உலகில் அதி­க­மாகப் பேசப்­பட்ட மதம் இஸ்லாம் என்­றாலும் அத்­தாக்­கு­தலில்  மறைக்­கப்­பட்ட உண்­மை­களும், சதி­களும் பின்னர் மெது­வாக அம்­ப­ல­மா­கின. அதன்பின் அமெ­ரிக்­கர்கள் மட்­டு­மன்றி ஏனைய மேற்­கத்தேய ஐரோப்­பிய நாடு­களில் வாழும் மக்­களும் இஸ்­லாத்தை பற்றி ஆராய ஆரம்­பித்­தனர்.

அதன் விளைவு இஸ்­லா­மிய மார்க்­கத்தின் உண்மைத் தன்­மை­யுடன் ஒரிறைக் கொள்­கையின் பால் ஈர்க்­கப்­பட்ட ஆயி­ரக்­க­ணக்­கா­ன­வர்கள் அப்­போது புனித இஸ்­லா­மிய மார்க்­கத்தை ஏற்றுக் கொண்­டது மட்­டு­மன்றி, தொடர்ச்­சி­யாக இஸ்­லாத்தை ஏற்றுக் கொள்­ப­வர்கள் அதி­க­மாகி இஸ்­லா­மிய மார்க்­கத்தை ஏற்றுக் கொண்­டது மட்­டு­மன்றி, தொடர்ச்­சி­யாக இஸ்­லாத்தை ஏற்றுக் கொள்­ப­வர்கள் அதி­க­மாகிக் கொண்டே போவதால், உலகில்  இஸ்லாத்தின் வளர்ச்­சியின் வேகம் துரிதமாகிக் கொண்டே போவ­தாக ஆய்­வுகள் கூறு­கின்­றன.

இன்று உலகில்  மிகவும் வேக­மாகப் பரவும் மத­மாக இஸ்லாம் மாறி­விட்­டது. அதே போன்றுதான் கிறைஸ்ட்சேர்ச் தாக்­கு­தலின் பின்­னரும் நியூ­சி­லாந்தில் இஸ்­லாத்தின் பால் ஈர்க்­கப்­பட்டு ஓரிறைக் கொள்­கையை ஏற்றுக் கொள்ளும் மக்கள் அதி­க­ரித்­தி­ருப்­ப­தாக ஊடக செய்­தி­களில் காண முடி­கி­றது.

இன்னும் ஏரா­ள­மான நாடு­களில் வாழும் மக்கள் இஸ்­லாத்தின் கொள்­கை­களை ஆராய ஆரம்­பித்­தி­ருப்­பது இஸ்­லா­மிய எதிர்ப்பாளர்ளுக்கு பேரிடி தரும் செய்­தி­யாக இருக்கும் என்­பதில் எந்த ஐய­மு­மில்லை.

இஸ்லாத்தை அழிப்பதற்கு அதன் எதிரிகள் என்னதான் முயற்சித்தாலும் அதன் வளர்ச்சியையும் எழுச்சியையும் எந்த சக்தியாலும் அழித்துவிட முடியாது. இது ஏக இறைவனின் வாக்காகவும் உள்ளது.

மோசி ஸாபிச் என்ற இராஜதந்திரி தனது ஆய்வில் வளரும் பிறையும் நாகரிகத்தின் வீழ்ச்சியும் எனும் தலைப்பின் கீழ் தனது Europe and Islam எனும் நூலில் கூறும் பொழுது 21 ஆம் நுற்றாண்டின் அரை இறுதிப் பகுதிக்குள் இஸ்லாம் ஐரோப்பாவின் தீர்மானிக்கும் சக்தியாக மாறும் சாத்தியம் உள்ளது என்கிறார்.

உலகளாவிய ரீதியில் ஏற்பட்டிருக்கும் இஸ்லாமிய எழுச்சி அலைகளினால் மேற்குலகம் நடுநடுங்கிப் போயுள்ளது. இதனால்தான் இஸ்லாம் குறித்த மாயைகனை அவர்கள் கட்டமைக்க முயற்சிக்கின்றனர்.

ஆனால் மேற்குலக மக்கள் இஸ்லாத்தை தெரிந்து கொள்வதில் பெரிதும் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதுதான் இன்றைய ஐரோப்பாவினதும் அமெரிக்காவினதும் நிலை. மேற்கத்தேயவாதிகள் ஏற்படுத்திவிட்ட இஸ்லாம் பற்றிய பீதி அங்குள்ள மக்களை இஸ்லாம் பற்றி தேடவும் அறியவும் வழிசமைத்துள்ளது.

அவர்களும் சூழ்ச்சி செய்து கொண்டிருந்தனர் (அவர்களுக்கு எதிராக) அல்லாஹ்வும் சூழ்ச்சி செய்து கொண்டிருந்தான். இன்னும் சூழ்ச்சி செய்வோரில் அல்லாஹ் மிக்க மேலானவன். (08-30)
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.