அர்ஜுன் மகேந்­திரன் விவ­காரம் பாரா­ளு­மன்றில் வாக்­கு­வாதம்

0 561

மத்­திய வங்கி முன்னாள் ஆளுநர்  அர்ஜுன் மகேந்­திரன் விவ­கா­ரத்தில் சபையில் ஆளும், எதிர் கட்­சி­க­ளி­டையில் வாக்­கு­வாதம் நில­வி­யது.  அர்ஜுன் மகேந்­தி­ரனை இலங்­கைக்கு கொண்­டு­வர சிங்­கப்பூர் பிர­தமர் ஒத்­து­ழைப்பு  வழங்­க­வில்­லை­யென ஜனா­தி­பதி கூறு­கின்ற போதிலும் சிங்­கப்பூர் சட்ட விதி­மு­றை­க­ளுக்கு அமை­வாக ஆவ­ணங்கள் இலங்கை சமர்ப்­பிக்­க­வில்லை என்றே சிங்­கப்பூர் அர­சாங்கம் கூறி­யுள்­ளது. ஓர் ஆவ­ணத்­தைக்­கூட தயா­ரிக்க அர­சாங்­கத்தால் முடி­ய­வில்­லையா?, ஆகவே இது குறித்து அர­சாங்கம் பதில் கூற வேண்­டு­மென ஜே.வி.பியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் நளிந்த ஜய­திஸ்ஸ மற்றும் எதிர்க்­கட்சி உறுப்­பினர் உதய கம்­மன்­பில ஆகியோர்  சபையில் கேள்வி எழுப்­பினர்.

பாரா­ளு­மன்­றத்தில்  நேற்று வியா­ழக்­கி­ழமை ஆரம்ப கைத்­தொழில் சமூக வலு­வூட்டல் அமைச்சு, பொது வழங்கல் மற்றும் பொரு­ளா­தார மறு­சீ­ர­மைப்பு பற்­றிய அமைச்­ச­ரவை அந்­தஸ்­தற்ற அமைச்சு, விசேட பிர­தே­சங்கள் அபி­வி­ருத்தி பற்­றிய அமைச்­ச­ரவை அந்­தஸ்­தற்ற அமைச்சு ஆகி­ய­வற்றின் மீதான விவா­தத்தில் கலந்­து­கொண்டு கருத்து தெரி­விக்­கும்­போதே அவர்கள் இதனைக் குறிப்­பிட்­டனர். இதன்­போது கருத்து தெரி­வித்த ம.வி.மு. உறுப்­பினர் நளிந்த ஜய­திஸ்ஸ எம்.பி.,

மத்­திய வங்கி பிணை­முறி ஊழல் குறித்து தொடர்ச்­சி­யாகப் பேசி வரு­கின்றோம். ஜனா­தி­ப­தியும் அவ்­வப்­போது மத்­திய வங்கி பிணை­முறி ஊழல் விவ­காரம் குறித்து கருத்­துக்­களை தெரி­வித்து வரு­கின்றார். அண்­மை­யில்­கூட இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்­குழுத் தலை­வ­ரையும் வர­வ­ழைத்து ஐந்­தாண்­டு­கால ஊழல் மோச­டிகள் குறித்த கலந்­து­ரை­யாடல் ஒன்­றினை ஷங்­ரில்லா ஹோட்­டலில் நடத்­தினார். இதற்கு செல­வான நிதித்­தொகை, உணவு மற்றும் ஏனைய விட­யங்­க­ளுக்கும் செல­வான தொகை குறித்து பாரா­ளு­மன்­றத்தில் தனி­யாக ஒரு நாள் ஒதுக்கி விவாதம் நடத்த வேண்டும். ஷங்­ரில்லா ஹோட்­டலில் சுமார் 1300 பேரை வர­வ­ழைத்து மிகப்­பெ­ரிய விழா ஒன்­றினை எடுக்க யார் நிதி ஒதுக்­கி­யது என்ற விடயம் ஆரா­யப்­பட வேண்­டி­யது.

இந்த நிகழ்வில் ஜனா­தி­பதி கூறிய கதை என்­ன­வென்றால், அர்ஜுன் மகேந்­தி­ரனை இலங்­கைக்கு கொண்­டு­வர நான் நட­வ­டிக்கை எடுத்­த­போதும்  சிங்­கப்பூர் பிர­த­ம­ருக்கு கோரிக்கை விடுத்­தும்­கூட அந்­நாட்டு பிர­தமர் அதற்கு இட­ம­ளிக்­க­வில்லை என்று  கூறினார். எமது நாட்டின் பிர­தமர் நான்  சொல்­வதை கேட்­பதும் இல்லை, சிங்­கப்பூர் பிர­தமர் நான் சொல்­வதை கேட்­பதும் இல்லை என்­பதைப் போலவே அவ­ரது கதை அன்று அமைந்­தி­ருந்­தது. ஆனால் இந்தக் கதையின் பின்னர் இரா­ஜ­தந்­திர ரீதியில் ஒரு பதில் கிடைக்­கப்­பெற்­றுள்­ளது. தற்­போது சிங்­கப்பூர் அர­சாங்கம் கூறி­யுள்­ளது என்­ன­வென்றால், அர்ஜுன் மகேந்­தி­ரனை இங்­கி­ருந்து அனுப்­பு­வ­தற்கு சிங்­கப்பூர் சட்ட முறை­மை­க­ளுக்கு அமைய உரிய ஆவ­ணங்கள் இலங்கை அர­சாங்கம் அனுப்­ப­வில்லை என அவர்கள் கூறி­யுள்­ளனர். இலங்கை அர­சாங்கம் இப்­போது என்ன கூறப்­போ­கின்­றது.

ஜனா­தி­பதி என்­பவர் சாதா­ரண ஒருவரல்ல. இந்த நாட்டின், அர­சாங்­கதின் தலைவர். அரச தலை­வ­ரது கருத்­தா­கவே ஏனைய நாடுகள் அங்­கீ­க­ரிக்கும். அவ்­வாறு இருக்­கையில் சிங்­கப்பூர் இதனை நிரா­க­ரித்­துள்­ளது. ஆகவே அர­சாங்கம் என்ன செய்­யப்­போ­கின்­றது. இது குறித்து பொறுப்­பு­மிக்க பதிலை அர­சாங்கம் பாரா­ளு­மன்­றத்தில் முன்­வைக்க வேண்டும். நீங்கள் நினைத்த நேரங்­களில் விரும்­பிய கருத்­துக்­களை முன்­வைக்க முடி­யாது என்றார்

இந்த கருத்­துக்கு பதில் கருத்து கூறிய எதிர்க்­கட்சி உறுப்­பினர் மஹிந்த அம­ர­வீர:- அர்ஜுன் மகேந்­தி­ரனை வர­வ­ழைக்க சட்ட ரீதி­யாக முன்­வைக்க வேண்­டிய கோப்­புகள் அனைத்­தையும் தயார்­ப­டுத்­தியே வைத்­துள்ளோம். ஜனா­தி­பதி தனிப்­பட்ட ரீதி­யிலும் சிங்­கப்பூர் பிர­த­ம­ருடன் பேசி­யுள்ளார். அதேபோல் அவர்­களின் சட்ட விதி­மு­றைக்கு அமைய ஆவ­ணங்­களும் முழு­மைப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. வெகு விரையில் ஜனா­தி­பதி இலங்கை மக்­க­ளுக்கும் அதேபோல் சிங்­கப்பூர் அர­சாங்­கத்­திற்கும் முழு­மை­யான கார­ணி­களை தெளி­வு­ப­டுத்­துவார் என்றார்.

மீண்டும் ஒழுங்­குப்­பி­ரச்­சினை எழுப்­பிய நளிந்த எம்.பி:- இலங்கை அர­சாங்கம் ஆவணம் அனுப்­பா­தது ஏன் என அரச தரப்­பி­டமே நான் கேள்வி எழுப்­பினேன். குறிப்­பாக சிங்­கபூர் அர­சாங்­கத்தின் அறிக்­கையை சர்­வ­தேச ஊட­கங்கள் வெளிப்­ப­டுத்­தி­யுள்­ளன அதில் தாம் கொழும்­புக்கு அறி­வித்தல் விடுத்­துள்­ள­தா­கவும் அவர்கள் உரிய ஆவ­ணங்கள் வழங்­கு­வார்கள் என எதிர்­பார்ப்­ப­தா­கவும் அவ்­வாறு ஆவ­ணங்கள் கிடைக்­கப்­பெற்றால் எமது சட்­டத்­துடன் அவை இணங்­கு­கின்­றதா என்­பது குறித்து ஆராய்ந்து பார்க்­கலாம் என கூறி­யுள்­ளது. இது குறித்து இலங்கை அர­சாங்கம் பதில் கூற­வேண்டும், ஆனால் எதிர்க்­கட்சி உறுப்­பினர் பதில் கூறு­கின்றார் என்றார்.

இதன்­போது ஒழுங்­குப்­பி­ரச்­சினை எழுப்­பிய முஜிபுர் ரஹ்மான் எம்.பி., ஜனா­தி­பதி எதிர்க்­கட்சி உறுப்­பினர் என்ற கார­ணத்­தினால் தான் எதிர்க்­கட்சி உறுப்­பி­னர்கள் பதில் கூறு­கின்­றனர் என்றார்.

இது குறித்து எதிர்க்­கட்சி உறுப்­பினர் உதய கம்­மன்­பில கருத்து தெரி­விக்­கையில், சிங்­கப்பூர் பிர­த­மரின் ஒத்­து­ழைப்பு இல்­லை­யென ஜனா­தி­பதி கூறி­ய­வுடன் உட­ன­டி­யாக சிங்­கப்பூர் அர­சாங்கம் பதில் கூறி­யுள்­ளது.

இலங்கை அர­சாங்கம் இன்­னமும் ஆவணம் அனுப்­ப­வில்லை என கூறி­யுள்­ளது. உரிய சட்ட நட­வ­டிக்­கை­களை எடுக்க வேண்­டு­மென ஜனா­தி­பதி சிங்­கப்பூர் விஜயம் முடித்­துக்­கொண்டு வந்­த­வுடன் நீதி அமைச்­ச­ருக்கு கூறினார். நீதி­மன்­றம்­கூட சர்­வ­தேச பொலி­சாரை நாட வலி­யு­றுத்­தி­யுள்­ளது. ஆகவே, அமைச்சர் தலதா அத்­து­கோ­ரள இதில் முதல் பொறுப்­புக்­கூற வேண்டும். ஏன் அவர் இந்த நட­வ­டிக்கை எடுக்­க­வில்லை. சர்­வ­தேச ஒத்­து­ழைப்பை பெற்­றுக்­கொள்­ளுங்கள் என நீதி­மன்றம் கூறியும் அதைக்­கூட சிங்­கப்பூர் அர­சாங்­கத்­திற்கு அனுப்­பா­தது ஏன். நீதி அமைச்­ச­ருக்கு அர்ஜுன் மகேந்­தி­ர­னுடன் நெருக்கம் இல்­லாமல் இருக்­கலாம் ஆனால் இந்த நாட்டில் பலர் அவ­ருடன் நெருக்­க­மான நட்பு வட்­டா­ரத்தில் உள்­ளனர். அவர்கள் மூல­மாக நீதி­ய­மைச்­ச­ருக்கு அழுத்தம் கொடுக்­கப்­பட்­டி­ருக்க முடியும். ஆகவே அவ்­வாறு செய்­வது யார், யார் அர்ஜுன் மகேந்­தி­ரணை காப்­பாற்ற முயற்­சிப்­பது என்ற கார­ணி­களை நீதி­ய­மைச்சர் சபையில் தெரி­விக்க வேண்டும். இன்று இலங்­கையில் முக்­கி­ய­மாக தேடப்­படும் நபர்­களின் முத­லா­வது நபர் அர்ஜுன் மகேந்­திரன் என்பதை மறந்துவிட வேண்டாம் என்றார்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.