ஐ.தே.மு. ஜனாதிபதியுடன் கூட்டமைத்த அரசு கசப்பான அனுபவங்களையே தந்தது

கலே­வ­லயில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரி­விப்பு

0 539

ஐக்­கிய தேசிய முன்­னணி ஜனா­தி­பதி மைத்­திரிபால சிறி­சே­னா­வையும் சேர்த்­துக்­கொண்டு அமைத்­தி­ருந்த அர­சாங்கம் கசப்­பான அனு­ப­வங்­க­ளையே பெற்­றுத்­தந்­துள்­ளது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தலை­வரும், நகர திட்­ட­மிடல்,நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்­ச­ரு­மான ரவூப் ஹக்கீம் தெரி­வித்தார்.

மாத்­தளை மாவட்­டத்தில், கலே­வ­லயில் நிர்­மா­ணிக்­கப்­பட்­டுள்ள   நீர் வழங்கல் வடிகால் அமைப்பு சபையின் புதிய அலு­வ­லக கட்­ட­டத்தின் திறப்­பு­விழா ஞாயிற்­றுக்­கி­ழமை இடம்­பெற்ற போது பிர­தம அதி­தி­யாக கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இவ்­வாறு கூறினார்.

அமைச்சர் ஹக்கீம் அங்கு  உரை­யாற்­று­கையில் மேலும்  கூறி­ய­தா­வது

முன்னாள் ஜனா­தி­பதி, தற்­போ­தைய ஜனா­தி­ப­தி­யுடன் இணைந்து செய்த சூழ்ச்­சியும்,சதியும் இந்த நாட்டின் பொரு­ளா­தா­ரத்தில் வீழ்ச்­சியை மட்­டு­மல்ல சர்­வ­தேச மட்­டத்தில் இந்த நாட்­டுக்கு இருந்த கீர்த்­தியை இல்­லா­ம­லாக்கி பாரிய கலங்­கத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. அத்­துடன் வெளி­நாட்டு உத­வி­களை பெறும் வாய்ப்­பையும் வெகு­வாக குறைத்து விட்­டது. பெரிய அளவில் முன்­னெ­டுக்­கப்­படும் அபி­வி­ருத்தி செயல் திட்­டங்­களும் இதனால் பாதிக்­கப்­பட்­டுள்­ளன. இது இந்த நாட்­டுக்கு இழைக்­கப்­பட்ட மிகப்­பெ­ரிய துரோ­க­மாகும்.

ஐக்­கிய தேசிய கட்சி சிறு­பான்மை கட்­சி­க­ளோடு இணைந்து இப்­போது அர­சாங்­கத்தை கொண்டு செல்­கி­றது. ஏனைய கட்­சி­க­ளுக்கு அவர்கள் விரும்­பி­னாலும் விரும்பா விட்­டாலும் எங்­க­ளுக்கு ஒத்­து­ழைப்­பதை தவிர வேறு­வ­ழி­யில்லை. வரவு செலவு திட்ட வாக்­கெ­டுப்பில் சுமார் 27 பேர் வாக்­க­ளிக்­கா­ம­லேயே  நழு­விச்­சென்று விட்­டதும் இதனை உறு­திப்­ப­டுத்­து­கி­றது. அத்­துடன் இப்­பொ­ழுது எதிர் கட்­சி­யி­ன­ருக்­குள்ளும் ஒற்­றுமை இல்­லாமல் போய்­விட்­டது. இதனை வைத்­துக்­கொண்டு மகிந்த ராஜ­பக்க்ஷ இப்­பொ­ழுது அர­சாங்­கத்தை தோற்­க­டித்­தி­ருக்­க­லாமே என்று கூறித்­தி­ரி­கின்றார்.அவ்­வாறு எங்­களை தோற்­க­டித்­து­விட முடி­யாது. தமிழ் தேசிய கூட்­ட­மைப்பு எங்­க­ளோடு இருப்­ப­துடன் பாரா­ளு­மன்­றத்தில் பெரும்­பான்­மையும் இருக்­கி­றது.

ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சி­யின­ருக்கு, மொட்டு கட்­சி­யி­ன­ரோடு கூட்­டுச்­சேர விருப்­ப­மில்­லா­தது போலவே தோன்­று­கின்­றது. தொடர்ந்தும் அவர்­க­ளுக்­கி­டையில் பேச்­சு­வார்த்­தைகள் இடம்­பெ­று­கின்­ற­னவாம்.என்­ன­வாக இருந்­தாலும் எதிர்­வரும் ஜனா­தி­பதி தேர்­தலில் அமோக வெற்­றி­யீட்­டக்­கூ­டிய வேட்­பா­ள­ருடன் கள­மி­றங்­க­வுள்ளோம்.இதை சகித்­துக்­கொள்ள முடி­யாமல் தங்­க­ளது உட்­பூ­சல்­களை தீர்த்­துக்­கொள்ள வழி­யின்றி அவர்கள் திண்­டா­டிக்­கொண்­டி­ருக்­கின்­றனர்.

நாம் ஆட்­சிக்கு வந்த 2015 ஆம் ஆண்டு தொடக்கம் இது­வரை  இந்­நாட்டு மக்­க­ளுக்கு சுத்­த­மான குடி­நீரை பெற்­றுக்­கொ­டுப்­ப­தற்கு 1150 பில்­லியன் ரூபாய் முத­லீடு செய்­யப்­பட்­டுள்­ளது. 1150 பில்­லியன் ரூபாய் என்­பது பெரிய தொகை­யாகும். இது வெறும்  பணத்தால் கணக்­கிட முடி­யாது. மாறாக  மக்­களின்  நிரந்­த­ர­மான குடிநீர்  தீர்­வுக்கு வழி­கோ­லு­கின்­றது. அவ்­வாறே நாடு­மு­ழு­வ­திலும் 1000 கிரா­மங்­க­ளுக்கு சமூக நீர்­வ­ழங்கல் திட்­டங்­களின் ஊடாக இந்த வரு­டத்தில் சுத்­த­மான குடி­நீரை வழங்­கு­வ­தற்கு நட­வ­டிக்கை எடுத்­துள்ளோம். இம்­மாதம் முதல் இவ்­வ­ரு­டத்தில் செப்­டம்பர் மாதத்­திற்குள் இந்த செயற்­திட்­டங்கள் நிறைவு செய்­யப்­ப­ட­வுள்­ளன. இந்த பிர­தேச மக்­களின் சுத்­த­மான குடிநீர் தேவையை பூர்த்தி செய்­வ­தற்­காக இப்­பங்­கட்­டுவ குளத்­தி­லி­ருந்து பெறப்­படும் நீர் நவீன தொழி­நுட்­பங்­களை பயன்­ப­டுத்தி புதி­தாக நிர்­மா­ணிக்­கப்­பட்­டுள்ள  நீர் சுத்­தி­க­ரிப்பு நிலை­யத்­தி­னூ­டாக வழங்­கப்­ப­ட­வுள்­ளது.

கலே­வல பிர­தேச செய­லாளர் பிரிவில் உள்ள 18 கிராம சேவகர் பிரி­வு­க­ளையும் உள்­ள­டக்­கி­ய­தாக 10 ஆயிரம் மில்­லியன் ரூபாய்­ செல­விட்டு இந்த செயற்­திட்டம் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றது. இவ்­வாறே நாவுலயில் இருந்து நீரை பெற்று மேலும் 15 கிராம சேவகர் பிரிவுகளில் வசிப்பவர்களுக்கு தூய குடிநீரை வழங்குவதற்கு இன்னொரு நீர் வழங்கல் திட்டத்தையும் முன்னெடுப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.

இந்த நிகழ்வில் நீர் வழங்கல் வடிகால் அமைப்பு சபையின் தலைவர் கே.ஏ.அன்சார், கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ஆர்.எம்.அன்வர், கலேவல பிரதேசபை உறுப்பினர் மௌபீக் மேலும் உயர் அதிகாரிகள் மற்றும் பொது மக்களும் கலந்து கொண்டனர்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.