போர் விமா­னங்கள் சுட்டு வீழ்த்­தப்­பட்­டதால் இந்­தியா – பாக். முறுகல் தீவி­ர­ம­டை­கி­றது

இந்­திய விமானி ஒருவர் பாகிஸ்­தானில் சிறை­பி­டிப்பு; போர் வேண்டாம், பேச்­சு­வார்த்­தையே தீர்வு என்­கிறார் இம்ரான்

0 551
  • எம்.ஐ.அப்துல் நஸார்

இந்­திய விமானப் படைக்கு சொந்­த­மான இரு போர் விமா­னங்­களை  சுட்டு வீழ்த்­தி­யுள்­ள­துடன் இரு விமா­னி­க­ளையும் சிறைபி­டித்­துள்­ள­தாக பாகிஸ்தான் அறி­வித்­துள்ள நிலையில் தமது போர் விமானம் ஒன்றும் விமானி ஒரு­வரும் காணாமல் போயுள்­ள­தாக இந்­தியா அறி­வித்­துள்­ளது. இந் நிலையில் இரு நாடு­க­ளுக்­கு­மி­டை­யி­லான முரண்­பா­டுகள் மேலும் உக்­கி­ர­ம­டைந்­துள்­ளன.

பாகிஸ்தான் எல்­லை­யினுள் நுழைந்த இரண்டு இந்­திய ஜெட் விமா­னங்­களை தமது நாட்டின் விமானப் படை­யினர் சுட்டு வீழ்த்­தி­ய­தாக பாகிஸ்தான் இரா­ணுவம் நேற்று அறி­வித்­தது. கட்­டுப்­பாட்டு எல்லைக் கோட்டை மீறிய இந்­திய விமானப் படையின் இரண்டு தாக்­குதல் ஜெட் விமா­னங்கள் பாகிஸ்தான் எல்­லை­யினுள் வைத்து தமது நாட்டு விமானப் படை­யி­னரால் சுட்டு வீழ்த்­தப்­பட்­ட­தாக பாகிஸ்தான் இரா­ணுவப் பேச்­சாளர் ஆசிப் கபூர் தெரி­வித்தார்.

இந்­திய விமா­னி­யொ­ருவர் தரை­யி­லி­ருந்த படை­யி­னரால் கைது செய்­யப்­பட்­டுள்­ள­தோடு மற்றும் இருவர் குறித்த பிர­தே­சத்தில் வைத்து கைது செய்­யப்­பட்­டனர் எனவும் அவர் தெரி­வித்­துள்ளார்.

இதற்கு முன்­ன­தாக பாகிஸ்தான் வெளி­நாட்­ட­மைச்சு விடுத்­தி­ருந்த அறிக்­கை­யொன்றில் பாகிஸ்தான் வான்­ப­ரப்­பிற்­குள்­ளி­ருந்து கட்­டுப்­பாட்டு எல்லைக் கோட்­டுக்கு அப்பால் தாக்­கு­தல்­களை ஆரம்­பித்­துள்­ள­தாக தெரி­வித்­தி­ருந்­தது.

அது இந்­தியத் தாக்­கு­தல்­க­ளுக்­கான எதிர்த் தாக்­குதல் அல்ல. மனித உயிர்ச் சேதங்கள் மற்றும் இரா­ணுவச் சேதங்கள் ஏற்­ப­டாத வகையில் இரா­ணு­வத்­தோடு சம்­பந்­தப்­ப­டாத இலக்­குகள் மீதே தாக்­கு­தல்கள் மேற்­கொள்­ளப்­ப­டு­வ­தா­கவும் அந்த அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டி­ருந்­தது.

நாம் நாக்­கு­தல்­களை அதி­கப்­ப­டுத்த வேண்டும் என எதிர்­பார்க்­க­வில்லை, ஆனால் அவ்­வா­றான சந்­தர்ப்பம் ஏற்­ப­டு­மானால் அதற்கு தயார் நிலையில் நாம் எமது இரா­ணு­வத்­தினை வைத்­தி­ருக்­கின்றோம் பாகிஸ்தான் இந்தத் தாக்­கு­தல்­களை நடத்­து­வது பகல் பொழு­தி­லாகும். இது எச்­ச­ரிக்கைத் தாக்­கு­தல்கள் மாத்­தி­ர­மே­யாகும் எனவும் அதில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

இந்­தியா கடந்த சில வரு­டங்­க­ளாக போலி­யான கார­ணங்­களைக் கூறி பாகிஸ்தான் மீது தாக்­கு­தல்­களை நடத்தி வரு­கின்­றது. எந்த வித ஆதா­ரங்­க­ளு­மின்றி பயங்­க­ர­வா­தி­க­ளுக்கு அடைக்­கலம் வழங்­கு­வ­தாகக் குற்றம் சாட்­டு­கின்­றது. பாகிஸ்தான் அதற்கு எதி­ரான தாக்­கு­தல்­க­ளுக்கு பதி­ல­ளிக்கும் உரி­மை­யினைக் கொண்­டுள்­ளது எனவும் அந்த அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டி­ருந்­தது.

நாம் அதே வழியில் பய­ணிக்க விரும்­ப­வில்லை. முதிர்ந்த ஜன­நா­யக தேசம் என்ற வகையில் சமா­தா­னத்­திற்­கான சந்­தர்ப்­ப­மொன்றை இந்­தியா வழங்க வேண்டும் எனவும் அதில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

விமானி கைதா­னதை உறு­திப்­ப­டுத்­தி­யது இந்­தியா

இந்­திய விமா­னப்­படை விமானி அபி­னந்தன் பாகிஸ்தான் இரா­ணுவ பிடியில் சிக்­கி­யதை வெளி­யு­றவு அமைச்­சகம் உறுதி செய்­துள்­ளது.

டெல்­லியில் செய்­தி­யா­ளர்கள் சந்­திப்பில் பேசிய வெளி­யு­றவுத் துறை செய்தி தொடர்­பாளர் ரவீஷ் குமார் இதனை உறு­திப்­ப­டுத்­தினார்.

கடந்த 14 ஆம் திகதி காஷ்மீர் மாநிலம் புல்­வா­மாவில் நடத்­தப்­பட்ட தாக்­கு­த­லுக்கு பதி­லடி கொடுக்­கும்­வி­த­மாக இந்­திய விமா­னப்­படை பாகிஸ்­தானின் பால­கோட்டில் உள்ள தீவி­ர­வாத முகாம்­களில் நேற்று முன்­தினம் தாக்­குதல் நடத்­தி­யது. இதற்கு பதி­ல­டி­யாக நேற்றுக் காலை, பாகிஸ்தான் இந்­திய எல்­லையில் தாக்­கு­தலில் ஈடு­பட்­டது.

எல்­லையில் நடந்த இந்­தியா – – பாகிஸ்தான் இடை­யே­யான மோதல் குறித்து விவ­ரித்த வெளி­யு­றவுத் துறை செய்தி தொடர்­பாளர், இந்­திய விமா­னப்­படை விமானி அபி­னந்தன் பாகிஸ்தான் இரா­ணுவ பிடியில் சிக்­கி­யதை உறுதி செய்­துள்ளார்.

செய்­தி­யா­ளர்கள் மத்­தியில் பேசிய வெளி­யு­றவு துறை செய்தி தொடர்­பாளர் ரவீஷ் குமார், “இன்று அதி­காலை இந்­திய எல்­லைக்குள் அத்­து­மீ­றிய பாகிஸ்தான் விமானம் ஒன்று சுட்டு வீழ்த்­தப்­பட்­டது. இந்­திய தரப்பில் மிக் 27 ரக விமா­னங்கள் பதில் தாக்­கு­தலில் ஈடு­ப­டுத்­தப்­பட்­டன.

இந்­திய விமா­னத்தை வீழ்த்­தி­ய­தாகக் கூறும் பாகிஸ்தான் அதி­லி­ருந்த விமானி அபி­னந்­தனை கைது செய்­துள்­ள­தாகக் கூறி­யுள்­ளது. அபி­னந்தன் இன்னும் திரும்­ப­வில்லை. உண்­மையை கண்­ட­றியும் முயற்­சியில் உள்ளோம்” என்றார்.

நேற்றுக்  காலை முதலே சமூக வலை­த்த­ளங்­களில் வேக­மாக ஒரு வீடியோ பர­வி­வ­ரு­கிது. அதில், கண்கள் கட்­டப்­பட்டு, கைகள் பின்­புறம் கட்­டப்­பட்ட நபர் ஒருவர், எனது பெயர் அபி­னந்தன். நான் இந்­திய விமா­னப்­ப­டையின் விமானி. எனது சேவை இல  27981, எனது மதம் இந்து என்று கூறு­கிறார். மேலும், சில தக­வல்­க­ளைக்­கோர இதற்கு மேல் நான் எதுவும் சொல்ல அனு­ம­தி­யில்லை என்­கிறார். நான் பாகிஸ்தான் இரா­ணு­வத்­தி­டமா இருக்­கிறேன் என்றும் விசா­ரிக்­கிறார்.

இந்த வீடியோ பரவி வரும் நிலை­யில்தான் பாகிஸ்தான் இரா­ணு­வத்­திடம் அபி­னந்தன் சிக்­கி­யதை இந்­திய தரப்பும் உறுதி செய்­துள்­ளது.

கைதா­கி­யுள்ள இந்­திய விமா­னப்­படை விமானி அபி­னந்தன் சென்­னையைச் சேர்ந்­தவர் என தெரி­ய­வந்­துள்­ளது. இவர் தாம்­பரம் விமா­னப்­ப­டையில் பயிற்சி பெற்­றவர் எனத் தெரி­கி­றது. கடந்த 2004 ஆம் ஆண்டு இவர் விமானப் படையில் இணைந்­துள்ளார்.

இம்ரான் கான் உரை

இந்­தி­யாவின் தாக்­கு­த­லுக்கு பதி­லடி கொடுக்கும் வகையில் எங்­க­ளாலும் திருப்பி தாக்க முடியும் என்­பதை நிரு­பிக்­கவே நேற்று பாகிஸ்தான் விமா­னங்கள் தாக்­குதல் நடத்­தின என அந்­நாட்டு பிர­தமர் இம்ரான் கான் தெரி­வித்­துள்ளார்.

இது­கு­றித்து அவர் கூறி­ய­தா­வது: ‘‘புல்­வாமா தாக்­குதல் குறித்து ஆதா­ரங்­களை தந்தால் நட­வ­டிக்கை எடுக்­கிறோம் என கூறினோம். எங்கள் பகு­திக்குள் புகுந்து இந்­திய விமா­னப்­படை தாக்­குதல் நடத்­தி­ய­தற்­காக நாங்கள் பதில் நட­வ­டிக்­கையில் ஈடு­ப­ட­வில்லை. ஏனெனில் எங்­க­ளுக்கு பெரிய பாதிப்பு ஏற்­பட்­ட­தாக நாங்கள் எண்­ண­வில்லை. எங்கள் பகு­தியில் அதி­க­மான பாதிப்­புகள் இல்­லா­த­போது, இந்­தி­யா­விலும் பாதிப்­பு­களை ஏற்­ப­டுத்த நாங்கள் விரும்­ப­வில்லை. எங்­களால் திருப்பி தாக்க முடியும் என்­பதை நிரூ­பிக்க மட்­டுமே பாகிஸ்தான் விமா­னங்கள் இன்று தாக்­குதல் நடத்­தின.

தவ­றான கணிப்பால் தான் போர்கள் நடக்­கின்­றன. இந்­தியா, பாகிஸ்தான் இரு­நா­டு­க­ளி­டமும் தற்­போது ஆயு­தங்கள் உள்­ளன. நாங்­களும் தவ­றாக கணித்தால், நாம் போரில் ஈடு­படும் சூழல் ஏற்­படும். பிறகு நானோ, நரேந்­திர மோடியோ எதையும் கட்­டுப்­ப­டுத்த முடி­யாது. அதனால் தான் சரி­யான புரிதல் வேண்டும். தீவி­ர­வாத பிரச்­சினை குறித்து பேச்­சு­வார்த்தை நடத்த முன் வந்தால் நாங்கள் தயா­ராக உள்ளோம்’’ என நான் கூறு­கிறேன்.

பாகிஸ்தான் துணைத் தூதரை அழைத்து இந்­தியா பேச்­சு­வார்த்தை

இரு நாடு­க­ளுக்­கி­டையே போர் பதற்றம் ஏற்­பட்­டதை அடுத்து, பாகிஸ்தான் துணைத் தூதரை அழைத்து இந்­தியா நேற்று பேச்­சு­வார்த்தை நடத்­தி­யது. நேற்­றைய தினம் டெல்­லியில் இந்­திய வெளி­யு­றவுத் துறை அமைச்­சகம் பாகிஸ்தான் துணைத் தூதர் சையத் ஹைதரை அழைத்து பேச்­சு­வார்த்தை நடத்தியது.

அணு ஆயுத நிபுணர்களுடன் இம்ரான் கான் பேச்சு

பாகிஸ்தானில் தீவிரவாத முகாம்களை இந்திய விமானப்படை தகர்த்த சம்பவத்தை தொடர்ந்து எல்லையில் பதற்றம் நிலவி வரும் நிலையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், அந்நாட்டின் அணு ஆயுத நிபுணர்களுடன் நேற்று திடீர் ஆலோசனை நடத்தினார்.

பாகிஸ்தானின் அணு ஆயுதங்கள் தயாரிப்பு, உருவாக்கம், ஆராய்ச்சி, மேம்பாடு தொடர்பான விடயங்களை கவனித்து வரும் நிபுணர்களுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். அணு ஆயுத தயாரிப்பு பிரிவின் மிக முக்கிய விஞ்ஞானிகள் மற்றும் அதிகாரிகள் சிலர் மட்டுமே இந்த கூட்டத்தில் பங்கேற்றதாக தெரிகிறது. கூட்டம் பற்றி விவரங்கள் வெளியிடப்படவில்லை.
-விடிவெள்ளி

Leave A Reply

Your email address will not be published.