சிலாவத்துறை காணியை விடுவிக்கக்கோரி 4 பிரதேசசபைகளில் பிரேரணைகள் கொண்டுவந்து வலியுறுத்த திட்டம்

0 573

மன்னார் சிலா­வத்­துறை மக்­களின் பூர்­வீக காணி­யி­லி­ருந்து கடற்­ப­டை­யினர் வெளி­யேற வேண்­டு­மென்ற ஒரு பிரே­ர­ணையை கொண்­டு­வந்து அவற்றை ஐனா­தி­ப­தியின் கவ­னத்­துக்கு கொண்டு செல்­லப்­ப­டு­மென நான்கு பிர­தேச சபை தவி­சா­ளர்­களும் உறுப்­பி­னர்­களும்  கருத்­துக்கள் வெளி­யிட்­டுள்­ளனர். மன்னார் சிலா­வத்­துறை மக்­களின் நில விடு­விப்­ப­தற்­கான தொடர் போராட்டம் நேற்று  ஏழா­வது நாட்­க­ளாக சிலா­வத்­துறை கடற்­படை முகா­முக்கு முன்னால் தொடர்ந்து நடை­பெற்று வரு­கின்­றது.

இப்­போ­ராட்­டத்­தின்­போது நேற்­று முன்­தினம்  முன்னாள் வட மாகாண சபை உறுப்­பி­னர்கள் அலிகான் ஷரீப், றிப்­கான் பதி­யுதீன் மற்றும் மன்னார்,  நானாட்டான்,  மாந்தை மேற்கு மற்றும் முசலி பிர­தேச சபை­களின் தவி­சா­ளர்கள் உட்­பட பிர­தேச சபை­களின் உறுப்­பி­னர்­களும் இவர்­களின் போராட்­டத்தில் கலந்­து­கொண்டு தங்கள் ஆத­ர­வு­களை வழங்­கினர்.

இங்கு பிர­தேச சபை தவி­சா­ளர்கள் மற்றும் உறுப்­பி­னர்கள் கருத்து தெரி­விக்­கையில், எதிர்­வரும் தங்கள் பிர­தேச சபை கூட்­டங்­களில் சிலா­வத்­துறை கடற்­ப­டை­யினர் சிலா­வத்­துறை மக்­களின் பூர்­வீக காணியை விட்­டுக்­கொ­டுத்து அம்­மக்கள் அதில் மீள்­கு­டி­யேற வழி­செய்ய வேண்­டு­மென்ற பிரே­ர­ணையை கொண்­டு­வந்து அவற்றை ஐனா­தி­ப­தியின் கவ­னத்­துக்கு கொண்டு செல்­லப்­படும் என தெரி­வித்­தனர்.

1990 ஆம் ஆண்டு இப்­ப­குதி மக்கள் இடம்­பெ­யர்ந்த பின் கடற்­ப­டை­யினர் மக்கள் குடி­யி­ருந்த 36 ஏக்கர் காணியை தங்கள் வசம் வைத்துக் கொண்டு மக்­களை அவர்­களின் சொந்த இடத்தில் மீள்­கு­டி­யேற விடா­தி­ருப்­பதைத் தொடர்ந்தே இக்காணி மீட்பு தொடர் போராட்டம் ஏழாவது நாட்களாக சிலாவத்துறை முகாமுக்கு முன்னால் நடைபெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.