பயங்கரவாதத்தை அழிக்க இந்தியா உறுதிபூண்டுள்ளது

இதன்படியே பல்கொட் தாக்குதல் என்கிறது இந்தியா

0 538

பயங்­க­ர­வாதம் எனும் பீடை­யுடன் போரா­டு­வ­தற்கு இந்­திய அர­சாங்கம் உறு­தி­யா­கவும் மற்றும் தீர்­மா­ன­மிக்க வகை­யிலும் அனைத்து அவ­சி­ய­மான நட­வ­டிக்­கை­களை எடுப்­ப­தற்கு பற்­று­றுதி  கொண்­டுள்­ள­தென வெளி­யு­ற­வுத்­துறைச் செய­லாளர் வெளி­யிட்­டுள்ள அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

நேற்­றைய தினம் பல்கோட் பகு­தி­யி­லுள்ள ஜெய்ஷ்-­இ-­மொ­ஹம்மட் பயிற்சி முகாம்கள் மீது நடத்­திய வான் தாக்­குதல் தொடர்­பாக வெளி­யு­ற­வுத்­துறை செய­லா­ளரின் அறிக்­கையில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

பெப்­ரெ­வரி 14, 2019 அன்று, பாகிஸ்­தானைத் தள­மாகக் கொண்ட பயங்­க­ர­வா­தக்­குழு ஜெய்ஷ்–-­இ–-­மொ­ஹமட்  நடத்­திய ஒரு தற்­கொலைக் குண்டுத் தாக்­கு­தலில் சென்ரல் ரிசர்வ் பொலிஸ் படை­ய­ணியைச் சேர்ந்த 40 வீரர்கள் பலி­யா­கினர்.  பஹா­வல்­பூரை அதன் தலைமை அலு­வ­ல­க­மாகக் கொண்ட ஜெய்ஷ்-­இ-­மொ­ஹமட் மசூட் அசா­ரினால் தலைமை தாங்­கப்­பட்டு கடந்த இரு தசாப்­தங்­க­ளாக பாகிஸ்­தானில் செயற்­பட்டு வரு­கி­றது.

இந்த இயக்கம், ஐக்­கிய நாடு­களால் தடை செய்­யப்­பட்­ட­தென்­ப­துடன், 2001 டிசம்­பரில் இந்­தியப் பாரா­ளு­மன்றம் மற்றும் 2016 ஜன­வ­ரியில் பத்­தன்கோட் விமா­னத்­த­ளத்தின் மீதான தாக்­குதல் உட்­பட, ஒரு தொட­ரான பயங்­க­ர­வாதத் தாக்­கு­தல்­க­ளுக்குப் பொறுப்­பா­ன­தாகும்.

பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் கட்­டுப்­பாட்­டி­லுள்ள ஜம்­மு-­காஷ்மீர் பகு­தி­க­ளி­லுள்ள பயிற்சி முகாம்­களின் அமை­விடம் பற்­றிய தக­வல்கள் காலத்­திற்கு காலம் பாகிஸ்­தா­னிற்கு வழங்­கப்­பட்டு வந்­தது. என்­றாலும், பாகிஸ்தான் அப்­ப­யங்­க­ர­வாத முகாம்­களின் இருப்பை மறுத்தே வந்­துள்­ளது. பல நூற்றுக் கணக்­கான ஜிஹா­தி­களைப் பயிற்­று­விப்­ப­தற்­கான பெரும் பயிற்சி வச­திகள் பாகிஸ்தான் அதி­கா­ரி­க­ளுக்கு தெரி­யாமல் அந்­நாட்டில் செயற்­பட்­டி­ருக்க முடி­யாது.

ஜிஹா­திகள் பாகிஸ்­தா­னினுள் பயிற்­று­விக்­கப்­ப­டு­வ­தையும் ஆயுதம் பெறு­வ­தையும் தடை­செய்­வ­தற்கு ஏற்ப ஜெய்ஷ்-­–இ-–­மொ­ஹம்­மட்­டிற்கு எதி­ராக நட­வ­டிக்­கை­களை எடுப்­ப­தற்கு இந்­தியா, பாகிஸ்­தானை மீண்டும் மீண்டும் வற்­பு­றுத்தி வந்­தது. பாகிஸ்தான் அதன் மண்ணில், பயங்­க­ர­வா­தத்தின் உட்­கட்­ட­மைப்­பு­களை இல்­லா­தொ­ழிப்­ப­தற்கு எந்­த­வொரு ஆக்­க­பூர்­வ­மான நட­வ­டிக்­கை­யையும் எடுக்­க­வில்லை.

ஜெய்ஷ்-­–இ-­–மொ­ஹம்மட் மற்­று­மொரு தற்­கொலை பயங்­க­ர­வாதத் தாக்­கு­தலை நாட்டின் பல்­வேறு பாகங்­களில் நடத்த எத்­த­னிப்­ப­தா­கவும்  இந்த நோக்­கத்­திற்­காக பிடாயின் ஜிஹா­தி­களை பயிற்­று­விப்­ப­தா­கவும், நம்­ப­க­மான புல­னாய்வுத் தக­வல்கள் கிடைக்­கப்­பெற்­றன. அப்­ப­டி­யான தாக்­கு­தல்­க­ளுக்­கான சாத்­தி­யத்தின் பின்­ன­ணியில், ஒரு தற்­காப்பு ரீதி­யி­லான தாக்­குதல் அத்­தி­யா­வ­சி­ய­மாகத் தேவைப்­பட்­டது.

இன்று (நேற்று) அதி­காலை நேரத்தில், புல­னாய்வுத் தகவல் அடிப்­ப­டை­யி­லான ஒரு நட­வ­டிக்­கையில், இந்­தியா பாகிஸ்­தானின் பல்தொட் பகு­தி­யி­லுள்ள ஜெய்ஷ்-­–இ–-­மொ­ஹம்­மட்டின் மிகப் பெரிய பயிற்சி முகாம் மீது தாக்­கு­தலை நடாத்­தி­யது.  இந்த நட­வ­டிக்­கையில், ஜெயஷ்-­இ-­மொ­ஹம்மட் இயக்­கத்தைச் சேர்ந்த அதிக எண்­ணிக்­கை­யி­லான பயங்­க­ர­வா­திகள், பயிற்­று­விப்­பா­ளர்கள், சிரேஷ்ட கட்­டளை ஸ்தானத்­தி­லுள்­ளோர்கள் மற்றும் பயங்­க­ர­வா­தி­க­ளாகப் பயிற்­று­விக்­கப்­படும் பல ஜிஹாதி குழுக்கள் அழிக்­கப்­பட்­டன. இந்த முகாமின் பொறுப்­பாளர் ஜெய்ஷ்–-­இ–-­மொ­ஹம்­மடின் தலைவர் மசூட் அசாரின் மைத்­து­ன­ரான மௌலான யூசூப் அசார் (அல்­லது உஸ்தாத் கோரி) ஆவார்.

பயங்­க­ர­வாதம் எனும் பீடை­யுடன் போரா­டு­வ­தற்கு இந்­திய அர­சாங்கம் உறு­தி­யா­கவும் மற்றும் தீர்­மா­ன­மிக்க வகை­யிலும் அனைத்து அவ­சி­ய­மான நட­வ­டிக்­கை­களை எடுப்­ப­தற்கு பற்­று­றுதி  கொண்­டுள்­ளது. எனவே, இந்த இரா­ணுவ ரீதி­யி­லா­ன­தல்­லாத முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்கை விசே­ட­மாக ஜெய்ஷ்-­–இ–-­மொ­ஹம்மட் முகாமை இலக்­காகக் கொண்­ட­தாகும். தாக்­குதல் இலக்கு பொது­மக்கள் உயி­ரி­ழப்­பு­களைத் தடுக்கும் வகையில் தெரிவு செய்­யப்­பட்­டது. இந்த முகாம் பொது­மக்கள் இல்­லாத ஒரு மலை­மு­கட்டின் மீதாக அடர்ந்த காட்டில் அமைந்­தி­ருந்­தது. வான் தாக்­குதல், சற்று நேரத்­திற்கு முன்பு தான் நடாத்­தப்­பட்­ட­தென்­பதால், மேல­திக தக­வல்­க­ளுக்கு நாங்கள் காத்­தி­ருக்­கிறோம்.

இந்­தி­யா­விற்கு எதி­ரான பயங்­க­ர­வா­தத்­திற்­காக அதன் கட்­டுப்­பாட்­டி­லுள்ள மண்ணை உப­யோ­கிப்­ப­தில்லை என பாக்­கிஸ்­தா­னிய அர­சாங்கம் 2004 இல் உறு­தி­யான பற்­று­றுதி அளித்­தி­ருந்­தது. பாகிஸ்தான் பகி­ரங்­க­மாக மேற்­கொண்ட அதன் பற்­று­று­திக்கு அமை­வாக நடப்­ப­தற்கும் மற்றும் ஜெய்ஷ்–-­இ-­–மொ­ஹம்மட் மற்றும் ஏனைய பயங்­க­ர­வாதக் குழுக்­களின் முகாம்­களை கலைப்­ப­தற்கு நட­வ­டிக்­கை­களை எடுக்கும் என்றும் பயங்­க­ர­வா­தி­களை அவர்­க­ளது நட­வ­டிக்­கை­க­ளுக்­காக பொறுப்புக் கூற வைக்­கு­மெ­னவும் நாம் எதிர்­பார்க்­கிறோம்.

பாகிஸ்­தா­னிய பிர­தமர் இம்ரான் கான் தலை­மையில் நேற்­றைய தினம் இடம்­பெற்ற விசேட சந்­திப்­பிலே பாகிஸ்­தா­னிய வெளி­யு­றவு அமைச்சர், பாது­காப்பு அமைச்சர், நிதி­ய­மைச்சர், கூட்டுப் படை­களின் பிர­தானி, இரா­ணுவத் தள­பதி, இரா­ணுவ அதி­கா­ரிகள் மற்றும் ஏனைய சிவில் அதி­கா­ரிகள் கலந்து கொண்­டனர்.

மேலும், பாகிஸ்­தா­னிய பிர­தமர் தலை­மையில் தேசிய கட்­டளை ஆணை­யத்­து­ட­னான சந்­திப்பு நாளை இடம்­பெ­ற­வுள்­ளது.

ஆயுதப் படைகள் மற்றும் மக்கள் உட்­பட அனைத்து தேசிய சக்­தி­க­ளையும் நிக­ழக்­கூ­டிய எவ்­வி­த­மான சம்­ப­வத்­திற்கும் தயா­ரா­க­வி­ருக்­கு­மாறு பாகிஸ்­தா­னிய பிர­தமர் இதன்­பொ­ழுது அறி­வு­றுத்­தி­யுள்ளார்.

பாகிஸ்தான் பிர­த­மரின் உத்­தி­யோ­க­பூர்வ வாசஸ்­த­லத்­தி­லி­ருந்து வெளி­யா­கிய அறிக்­கை­யா­னது இந்­திய இரா­ணுவம் பால்கொட் பிர­தே­சத்தில் நடாத்­தி­ய­தாக கூறப்­படும் தாக்­கு­த­லினை  வலு­வாக நிரா­க­ரித்­தது.

இந்­திய இரா­ணுவம்  மீண்­டு­மொ­ரு­முறை பொறுப்­பற்ற மற்றும் கற்­ப­னை­யான தாக்­கு­த­லிற்கு உரி­மை­கோ­ரி­யுள்­ளது. இந்­ந­ட­வ­டிக்­கை­யா­னது பிராந்­திய அமைதி மற்றும் ஸ்திரத்­தன்­மை­க்கு ஆபத்­தினை சேர்க்கும் தேர்தல் காலத்­திற்­கான நட­வ­டிக்­கை­யென அவ்­வ­றிக்­கையில் ­கை­யா­னது பிராந்­திய அமைதி மற்றும் ஸ்திரத்­தன்­மை­க்கு ஆபத்­தினை சேர்க்கும் தேர்தல் காலத்­திற்­கான நட­வ­டிக்­கை­யென அவ்­வ­றிக்­கையில் கூறப்­பட்­டுள்­ளது.

இந்­திய இரா­ணு­வத்­தினால் தாக்­குதல் நடாத்­தப்­பட்­ட­தாக கூறப்­படும் பிர­தே­சங்­களை எவ்­வித தடங்­க­லு­மின்றி அனை­வரும் பார்­வை­யி­டலாம் எனவும் உள்­நாட்டு மற்றும் சர்­வ­தேச ஊட­கங்கள் உண்­மை­யினை நேரிலே கண்­ட­றிய அப்­பி­ர­தே­சத்­திற்கு அழைத்து செல்­லப்­ப­டுவர் எனவும் தேசிய பாதுகாப்புக்குழு தெரிவித்தது.

இந்தியப் படைகளின் முயற்சியினை தகுந்த நேரத்தில் எவ்வித உயிர் மற்றும் உடைமை அழிவில்லாமல் திசைதிருப்பிய பாகிஸ்தான் விமானப்படையினரை இதன்போது பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்  பாராட்டினார்.

Leave A Reply

Your email address will not be published.