தேசிய காங்கிரஸிலிருந்து விலகினார் உதுமாலெவ்வை

தலைவரின் சந்தேகப் பார்வையே விலகலுக்கு காரணம் எனத் தெரிவித்து 19 பக்கங்கள் கொண்ட கடிதத்தையும் அனுப்பினார்

0 610

(எம்.ஏ.றமீஸ், ரீ.கே.ரஹ்மதுல்லா)

தேசிய காங்கிரஸ் கட்சியின் அங்கத்துவத்திலிருந்தும், அக்கட்சியின் அனைத்துப் பொறுப்புக்களிலிருந்தும் தான் முற்று முழுதாக விலகிக் கொள்வதோடு, இக்கட்சியின் பெயரால் தான் மேற்கொண்டு வந்த அனைத்து நடவடிக்கைளை விட்டும் நீங்கிக் கொள்வதாகவும் இவ்விடயம் தொடர்பில் பத்தொன்பது பக்கங்கள் அடங்கிய கடிதமொன்றை தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம்.அதாஉல்லாவிற்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் தேசிய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் பிரதித் தலைவரும், கிழக்கு மாகாண முன்பள்ளிக் கல்விப் பணியகத்தின் தவிசாளருமான எம்.எஸ்.உதுமாலெவ்வை தெரிவித்தார்.

தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்­ச­ரு­மான ஏ.எல்.எம்.அதா­உல்­லா­வுடன் இணைந்து, அக்­கட்சி ஆரம்­பித்­தது முதல் கடந்த இரு­பது வருட கால­மாக தேசிய காங்­கிரஸ் கட்­சியின் அனைத்து நட­வ­டிக்­கை­க­ளுக்கும் பக்க பலமாக இருந்து செயற்­பட்­ட­வரும் அக்­கட்­சியின் முன்னாள் பிரதித் தலை­வ­ரு­மான எம்.எஸ்.உது­மா­லெவ்வை கடந்த 2019.02.20ஆம் திகதி முதல்  தேசிய காங்­கிரஸ் கட்­சி­யி­லி­ருந்து தான் விலகிக் கொள்­வதை தமது ஆத­ர­வா­ளர்கள் மத்­தியில் தெரி­யப்­ப­டுத்தும் முக­மாக ஏற்­பாடு செய்­யப்­பட்ட விஷேட கூட்டம் நேற்­று­முன்­தினம் (20) இரவு அட்­டா­ளைச்­சேனை றகு­மா­னி­யாபாத் பிர­தே­சத்தில் உள்ள தனது மக்கள் பணி­ம­னையில் இடம்­பெற்­றது. இந்­நி­கழ்வில் கலந்து கொண்டு உரை­யாற்­றும்­போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

பல நூற்­றுக்­க­ணக்­கான தேசிய காங்­கிரஸ் கட்சி ஆத­ர­வா­ளர்கள் கலந்து கொண்ட இந்­நி­கழ்வில் தொடர்ந்தும் அவர் உரை­யாற்­று­கையில், மறைந்த பெருந்­த­லைவர் மர்ஹும் எம்.எச்.எம்.அஷ்ரஃப் உடன் இணைந்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் கட்­சி­யினை வளர்த்­தெ­டுப்­பதில் பாரிய பங்­க­ளிப்­புக்­களைச் செய்து பய­ணித்துக் கொண்­டி­ருந்த வேளையில், அக்­கட்­சியின் தலை­வரின் மறை­வுக்குப் பின்னர் ஏற்­பட்ட சில முரண்­பா­டுகள் கார­ண­மாக அக்­கட்­சியில் இருந்து வெளி­யேறி மக்கள் நலனை மையப்­ப­டுத்­திய தேசிய காங்­கிரஸ் என்னும் கட்­சி­யினை ஆரம்­பிக்க தேசிய காங்­கிரஸ் கட்­சியின் தலைவர் அதா­உல்­லா­வுடன் இணைந்து பல்­வேறு அர்ப்­ப­ணிப்­புக்­களை மேற்­கொண்டு அவ­ருக்கு விசு­வா­ச­மாக செயற்­பட்டு வந்தேன்.

தேசிய காங்­கிரஸ் கட்சி ஆரம்­பித்­தது முதல் பல ஆண்­டுகள் நான் அக்­கட்­சியின் தலை­மைக்கு நூறு சத­வீத விசு­வா­சத்­தினை வழங்கிச் செயற்­பட்டு வந்தேன். எனது இத­ய­சுத்­தி­யு­ட­னான செயற்­பாட்டை மதித்து எமது அட்­டா­ளைச்­சேனைப் பிர­தே­சத்­திற்கு அர­சியல் அதி­கா­ர­மொன்றை வழங்­கி­யது மட்­டு­மல்­லாமல் கிழக்கு மாகாண அமைச்சர் பதவி­யினை நான் இரண்டு முறை வகிப்­ப­தற்கும் அத்­த­லைமை உறு­து­ணையாய் இருந்­ததை நான் மறந்து விட­வில்லை.

தேசிய காங்­கிரஸ் கட்­சியின் தலை­மைக்கும் எமக்­கு­மி­டை­யி­லான அதீத விசு­வா­சம்தான் இற்றைவரை பல தியா­கங்­களைப் புரிய வைத்து அக்­கட்­சி­யினை வளர்த்­தெ­டுக்கப் பக்­க­ப­லமாய் அமைந்­தது. ஆனால் இக் கட்­சியின் தலைவர் அண்மைக் கால­மாக என்­மீது சந்­தே­கப்­பார்வை கொள்­கின்றார். அவ­ரது இச்­சந்­தேகப் பார்­வையே இக்­கட்­சி­யி­லி­ருந்து நான் முற்­று­மு­ழு­தாக வில­கு­வ­தற்கு பிர­தான கார­ண­மாகும்.

இத்­தனை காலம்­வரை சுயா­தீ­ன­மாக இயங்கி வந்த அக்­கட்­சியின் தலைமை புதிதாய் கட்­சி­யோடு இணைந்து கொண்ட சுய­நலம் மிக்க கூலிப்­ப­டையின் கதை­க­ளுக்கு காது சாய்த்து என்­மீது சந்­தேகம் கொள்ள முற்­ப­டு­கின்­றது. நான் முப்­பது மில்­லியன் ரூபா பணத்­தினை அமைச்சர் ரிஷாத் பதி­யு­தீ­னி­ட­மி­ருந்து பெற்­ற­தா­கவும், நான் கட்சி மாற­வுள்­ள­தா­கவும் தேசிய காங்­கிரஸ் தலைவர் மக்கள் மத்­தியில் தெரி­வித்து வரு­கின்றார்.

தேசிய காங்­கரஸ் கட்­சியில் உள்ள சிரேஷ்­ட­மா­ன­வர்­களை தூக்கி வீசினால் தமக்கு உய­ரிய அந்­தஸ்து கிடைத்து விடும் என்ற நப்­பா­சையில் பொய்­யா­கப்­பு­னை­யப்­பட்ட கூலிப்­ப­டை­களின் கதை­களை நம்­பிக்­கொண்டு வஞ்­ச­கமில்லா என்­மீது அபாண்­ட­மான பழி­யினைச் சுமத்தி தேசிய காங்­கிரஸ் கட்சித் தலைமை என்­மீது சேறு பூச விழைகின்­றது. இத்­தனை காலமும் இருந்து வந்த நம்­பிக்கை தற்­போது அத்­த­லை­மைக்கு இல்­லாமல் போன பிறகு அக்­கட்­சியில் தொடர்ந்தும் இருப்­பதில் பய­னில்லை என்­ப­தா­லேயே அக்­கட்­சியில் இருந்து முழு­மை­யாக நான் இரா­ஜி­னாமாச் செய்­துள்ளேன்.

எனக்கு அர­சியல் அதி­காரம் வழங்கி இரண்டு முறை மாகாண அமைச்சர் பத­வி­யினை தேசிய காங்­கிரஸ் பெற்றுத் தந்­த­துபோல், அக்­கட்­சியின் தலைவர் அதா­உல்­லா­விற்கு பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பதவி கிடைப்­ப­தற்கும், மத்­திய அரசின் அமைச்சுப் பதவி அவ­ருக்கு கிடைப்­ப­தற்கும் நானும் எம்­ம­வர்­களும் காத்­தி­ர­மான பங்­க­ளிப்­புக்­களை அவ­ருக்குச் செய்­தி­ருக்­கின்றோம்.

முஸ்லிம் கூட்­ட­மைப்பின் தேவை பற்றி எம்­ம­வர்­களால் உண­ரப்­பட்­ட­போது அக்­க­ருத்­துக்கு நானும் உடன்­பட்டு நமது மக்­களின் நன்­மை­யினை மையப்­ப­டுத்தி இவ்­வி­டயம் பற்றி தேசிய காங்­கிரஸ் தலை­வ­ரிடம் இக்­கூட்­ட­மைப்பில் நமது கட்­சியும் இணைந்து செயற்­ப­டு­வதன் அவ­சி­யத்­தினை அவ­ரிடம் கூறு­கின்­ற­போ­தெல்லாம் அக்­க­ருத்­தினை ஏளனம் செய்­யக்­கூ­டி­ய­வ­ரா­கவும் மாற்றுக் கட்­சிக்­கா­ரர்­களை மலினம் செய்­ப­வ­ரு­மா­கவும் இருந்­த­தோடு பணத்­திற்­காக கூட்­ட­மைப்புப் பற்றி பேசு­கின்றேன் என என்­மீது அவ­தூ­று­களை மக்கள் மத்­தியில் இத்­த­லைமை பரப்­பி­யது.

கூட்­ட­மைப்பு விட­யத்­தினை நான் தொடர்ச்­சி­யாக தேசிய காங்­கிரஸ் தலை­மை­யிடம் கூறி­வ­ரும்­போது அதை எடுத்­தெ­றிந்து பேசி­யவர், கடந்த உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­த­லுக்­காக நான்கு முறை மாற்றுக் கட்­சிக்­கா­ரர்­களை தனது கிழக்கு வாச­லுக்கு அழைப்­பித்து கூட்­ட­மைப்புப் பற்றி பேசி­யி­ருக்­கின்றார். ஆனால் ஒரு­மு­றை­யேனும் எனக்கு அழைப்பு விடுக்­க­வில்லை. எனக்குத் தெரி­யா­ம­லேயே அனைத்து நட­வ­டிக்­கை­களும் இடம்­பெற்­றமை மிகுந்த வேத­னை­யினை ஏற்­ப­டுத்­தி­யது.

கடந்த உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­த­லின்­போது உயி­ரைக்­கூட துச்­ச­மென நினைத்து பல தியா­கங்கள் புரிந்து பல செல்­வாக்குக் கட்­சி­களின் கோட்­டை­க­ளுக்­குள்ளும் நாம் வெற்றி பெற்று உள்­ளு­ராட்சி மன்­றங்­களின் ஆட்சி அமைப்­ப­தற்கு நூறு சத­வீத வாய்ப்பு எமக்­கி­ருந்தும் தேசிய காங்­கிரஸ் கட்சித் தலைமை அவ்­வாய்ப்­புக்­களை வேண்­டு­மென்றே விட்­டுக்­கொ­டுத்து ஆட்சி அமைப்­பிற்­கான எமது கன­வினை கைந­ழுவ விட்­டது.

உள்­ளூ­ராட்சி மன்­றங்­களில் ஆட்சி அமைக்­கப்­பட்டால் எனது கைகள் ஓங்கி விடும் என்ற கண்­ணோக்­கி­லேயே அத்­த­லை­மைமை மாற்றுக் கட்­சி­க­ளுக்கு வேண்­டு­மென்றே ஆட்­சி­யினை அமைக்கும் சந்­தர்ப்­பத்­தினை ஏற்­ப­டுத்திக் கொடுத்­தது. அந்­த­வ­கையில் அம்­பாறை மாவட்­டத்தில் உள்ள  அட்­டா­ளைச்­சேனை, இறக்­காமம், பொத்­துவில் மற்றும் நிந்­தவூர் ஆகிய உள்­ளூ­ராட்சி மன்­றங்­களில் ஆட்சி அமைப்­பினை இத்­த­லைமை வேண்­டு­மென்றே விட்டுக் கொடுத்­தது.

எமது தேசிய காங்­கிரஸ் கட்­சி­யி­லி­ருந்து முக்­கி­ய­மா­ன­வர்கள் எல்­லோரும் விலகிச் செல்­வ­தாலும், இக்­கட்­சியின் செல்­வாக்கு நலி­வ­டைந்து செல்­வ­தாலும் நாம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் கட்­சி­யுடன் அல்­லது அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் போன்­ற­வற்­றுடன் இணைந்து செயற்­பட்டால் நமது கட்­சியின் செல்­வாக்­கினை அதி­க­ரித்துக் கொள்ள முடியும் என்ற நிலைப்­பாட்­டினை தே.கா. தலை­மைக்கு எடுத்துக் கூறும்­போ­தெல்லாம் ஏளனம் செய்­வதில் நின்று அத்­த­லைமை விலக மறுக்­க­வில்லை.

தேசிய காங்­கிரஸ் கட்சி வீழ்ச்சிப் பாதையில் செல்ல ஆரம்­பிக்கும் போதெல்லாம் பல்­வேறு தேசிய கட்­சி­களும், முஸ்லிம் கட்­சி­களும் அக்­கட்­சி­யின்பால் என்னை ஈர்த்­தெ­டுப்­ப­தற்­காக பல்­வேறு முயற்­சி­களை மேற்­கொண்­டன. ஆனால் பணத்­திற்­கா­கவும். பத­விக்­கா­கவும் சோரம்­போ­காமல் கொள்­கை­யின்பால் உறு­தியாய் இருந்­த­தற்கு இத்­த­லைமை எனக்கு பாரிய வெகு­மா­னத்­தினைத் தந்­தி­ருக்­கின்­றது.

தேசிய காங்­கிரஸ் கட்­சியின் ஊடகப் பிரி­வினால் அண்­மைக்­கா­ல­மாக எனக்­கெ­தி­ரான செய்­தி­களை இணைத்­த­ளங்­களில் பரப்­பி­ய­போது அவற்­றுக்கு எவ்­வித எதிர்ப்­பி­னையும் தெரி­விக்­காமல் அவ­ரது ஆசி­யு­ட­னேயே அச்­செ­யற்­பாட்­டுகள் மேற்­கொள்­ளப்­பட்­டி­ருப்­பதை நான் பின்­னாட்­களில் அறி­யக்­கூ­டி­ய­தாக இருந்­தது.

தேசிய காங்­கிரஸ் கட்­சியின் தலை­மைக்­கி­ருக்கும் சில அதி­கா­ரங்­களைக் கொண்டு என் ஆத­ர­வா­ளர்­க­ளையும் குறிப்­பாக அட்­டா­ளைச்­சேனை பிர­தே­சத்­த­வர்­க­ளையும் அவர் பழி­வாங்கும் வகையில் பல்­வேறு நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்டு வரு­கின்றார்.

இக்­கட்­சியில் இருந்து நான் வில­கு­வற்கு இவ்­வா­றான பல்­வேறு விட­யங்­களை அடுக்கிக் கொண்டு போக முடியும். நான் கடந்த காலத்தில் வகித்த பத­விகள் மூலம் முழுக்க முழுக்க மக்கள் நலனை மாத்திரமே கருத்திற் கொண்டு சேவை செய்ததை நாட்டு மக்கள் அனைவரும் நன்றிவர்.

மக்களுக்காக செயற்பட்ட என்னை மக்கள் மத்தியில் அவதூறாகப் பேசுவதற்கும் பொய்யான வீண் பழியினை சுமத்துவற்கும் நாம் ஒருபோதும் இடமளிக்க முடியாது. நூறு சதவீத விசுவாசத்துடன் உழைத்த எனக்கு தேசிய காங்கிரஸ் கட்சித் தலைமை தந்த பரிசினை எண்ணிப்பார்க்கின்றபோது மிகுந்த மன வேதனையளிக்கின்றது.

சோடிக்கப்பட்ட புனை கதைகளுக்கு உயிர் கொடுத்த தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைமையின் பின்னால் இனியும் பயணிக்க முடியாது என்பதற்காகவே கடந்த செப்படம்பர் மாதம் நான் வகித்த பதவிகளிலிருந்து இராஜினாமாச் செய்தேன். தற்போது அக்கட்சியின் அனைத்து பொறுப்பிலிருந்தும் அதன் அங்கத்துவத்திலிருந்தும் அக்கட்சியின் அனைத்து செயற்பாடுகளிலிருந்தும் நான் முற்று முழுதாக விலகிக் கொள்கின்றேன் என்றார்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.