நேட்டோ நாடுகள் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக ஆயுதங்களை வழங்குகின்றன

அர்துகான் குற்றச்சாட்டு

0 571

ஆயி­ரக்­க­ணக்­கான லொறி­களில் ஆயு­தங்­களை வழங்கி பயங்­க­ர­வா­தி­க­ளுக்கு ஆத­ர­வாக செயற்­படும் நோட்டோ நாடுகள், துருக்கி அந்நாடு­க­ளி­லி­ருந்து ஆயு­தங்­களை கொள்­வ­னவு செய்­வ­தற்கு கோரிக்கை விடுக்கும் போது அதனைப் புறந்­தள்­ளு­வ­தாக துருக்­கிய ஜனா­தி­பதி றிசெப் தைய்யிப் அர்­துகான் குற்­றம்­சாட்­டி­யுள்ளார்.

தென்­மேற்குத் துருக்­கியின் பத்ர் பிராந்­தி­யத்தில் கடந்த திங்­கட்­கி­ழமை தேர்தல் பிர­சா­ர­மொன்றில் ஈடு­பட்­டி­ருந்த போது இது என்ன மாதி­ரி­யான நேட்டோ அமைப்பு எனக் கேள்­வி­யெ­ழுப்­பினார்.

நீங்கள் 23,000 லொறி­களில் ஈராக் ஊடாக பயங்­க­ர­வா­தி­க­ளுக்கு ஆயு­தங்­க­ளையும் உப­க­ர­ணங்­க­ளையும் வழங்­கு­கி­றீர்கள். ஆனால் நாம் ஆயு­தங்­களைக் கோரும் போது எங்­க­ளுக்கு விற்­பனை செய்ய மறுக்­கி­றீர்கள் எனவும் அவர் தெரி­வித்தார்.

எமது நாடு சிரி­யா­வுடன் 911 கிலோ­மீற்றர் நீள­மான எல்­லையைக் கொண்­டுள்­ளது. எமக்கு எந்த நேரத்­திலும் அச்­சு­றுத்தல் காணப்­ப­டு­கின்­றது எனவும் அவர் தெரி­வித்தார்.

ஈராக்­கி­னூ­டாக எந்த நாடு ஆயுத விநியோகத்தில் ஈடுபட்டது என அர்துகான் விபரமெதனையும் இதன்போது வெளியிடவில்லை.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.