பால்மா விவகாரம்: அர­சி­ய­லாக்க வேண்டாம்

அமைச்சர் ராஜித கோரிக்கை

0 546

இறக்­கு­மதி செய்­யப்­படும் பால்மா தொடர்பில் அர­சியல் இலாபம் கருதி செயற்­ப­ட­வேண்டாம். இது எமது எதிர்­கால சந்­த­தி­யி­னரின் போஷாக்கு தொடர்­பான பிரச்­சி­னை­யாகும்.நாட்டின் அனைத்து விட­யங்­க­ளையும் அர­சி­ய­லாக்­கு­வ­தாலே எமது நாடு  முன்­னேற முடி­யா­ம­லி­ருக்­கின்­றது என சுகா­தாரம், போஷாக்கு மற்றும் சுதேச மருத்­துவ அமைச்சர் ராஜித சேனா­ரத்ன தெரி­வித்தார்.

இறக்­கு­மதி செய்­யப்­படும் பால்மா தொடர்பில் நாட்டில் எழுந்­தி­ருக்கும் சந்­தே­கங்­களை தெளி­வு­ப­டுத்தும் செய்­தி­யாளர் சந்­திப்பு நேற்று அர­சாங்க ஊடக திணைக்­க­ளத்தில் இடம்­பெற்­றது. இதில் கலந்­து­கொண்டு கருத்து தெரி­விக்­கை­யி­லேயே இவ்­வாறு குறிப்­பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரி­விக்­கையில்,  இறக்­கு­மதி செய்யும் பால்­மாவை நிறுத்­த­வேண்­டு­மென சிலர் தெரி­விக்­கின்­றனர். இறக்­கு­மதி செய்­வதை நிறுத்­தலாம். ஆனால் அதற்கு மாற்­று­வழி என்­ன­வென்று தெரி­விக்­க­வேண்டும். சிறு­வர்­க­ளுக்கு போஷாக்­கா­கவே பால்மா கொடுக்­கப்­ப­டு­கின்­றது. நிறுத்­தினால் போஷாக்­குக்கு என்ன செய்­வது? இலங்­கையில் அனைத்து விட­யங்­க­ளையும் அர­சி­ய­லாக்­கு­கின்­றனர். இலங்­கையின் முத­லா­வது அபி­வி­ருத்தி திட்­டத்­துக்கும் அர­சியல் கார­ண­மாக எதிர்ப்பு தெரி­விக்­கப்­பட்­டது.

அதே­போன்று அர­சி­ய­ல­மைப்பின் 13ஆம் திருத்தம் மேற்­கொள்­ளப்­ப­டும்­போது அதற்கு எதிர்ப்பு தெரி­வித்து பாரிய போராட்­டங்கள் இடம்­பெற்­றன. எனக்கும் குண்­டெ­றிந்­தார்கள். ஆனால் எனக்கு குண்­டெ­றிந்­தவர் பின்னர் மாகா­ண­ச­பையில் உறுப்­பி­ன­ராக அமர்ந்­து­கொண்டார். இவ்­வா­றான மோச­மான அர­சி­யலே நாட்டில் இருக்­கின்­றது. எந்த எதிர்ப்பு வந்­த­போதும் நாங்கள் அன்று உண்மை நிலை­மையை தெரி­வித்தோம். தற்­போதும் இறக்­கு­மதி செய்­யப்­படும் பால்மா தொடர்பில் உண்­மை­யான நிலைப்­பாட்­டையே தெரி­விக்­கின்றோம்.

மேலும் எமக்கு தேர்­தலில் வாக்கு கிடைத்­தாலும் இல்­லா­விட்­டாலும் யாருக்கும் அடி­ப­ணிந்து நாங்கள் செயற்­ப­ட­மாட்டோம். அதனால் இறக்­கு­மதி செய்­யப்­படும் பால்மா தொடர்பில் யாரும் அர­சியல் இலாபம் கருதி செயற்­ப­ட­வேண்டாம். இது எமது எதிர்­கால சந்­த­தி­யி­னரின் போஷாக்கு தொடர்­பான பிரச்­சி­னை­யாகும்.

மேலும் பால்மா இறக்­கு­மதி செய்­வதா இல்­லையா என்­பது அர­சியல் ரீதியில் தீர்­மானம் எடுக்­கலாம். ஆனால் இறக்­கு­மதி செய்­யப்­படும் பால்­மாவில் உள்­ள­டங்கும் விட­யங்­களை ஆராய்ந்து பரீ­சி­லித்து எடுக்­கப்­படும் நட­வ­டிக்­கை­யா­னது விஞ்­ஞான ரீதி­யி­லான தீர்­மா­ன­மாகும். எவ­ரு­டைய தேவைக்­கா­கவும் எடுக்­கப்­படும் ஆய்­வல்ல. அத்­துடன் இறக்­கு­மதி செய்­யப்­படும் பால்மாவை நிறுத்­த­வேண்டும் என்றால், அதற்கு மாற்று நட­வ­டிக்­கையை நாங்கள் மேற்­கொள்­ள­வேண்டும். சிறு­வர்­களின் போஷாக்­குக்கு பால்மா கொடுக்­கப்­ப­டு­கின்­றது. எமது நாட்டில் திர­வப்பால் உற்­பத்­தி­செய்­யப்­ப­டு­வது 10வீத­மாகும். ஏனைய 90 வீதத்தை எப்­படி நிவர்த்­தி­செய்­வது?

அதனால் இறக்­கு­மதி செய்­யப்­படும் பால்­மாவின் தரம் தொடர்பில் நாங்கள் பொறுப்­பேற்­கின்றோம். எமது ஆய்­வு­களில் எந்தப் பால்மா தொடர்­பா­கவும் பிரச்­சினை ஏற்­ப­ட­வில்லை. அவ்­வாறு பிரச்­சினை இருந்தால் அதனை மறைக்க எங்களுக்கு எந்த தேவையும் இல்லை. அத்துடன் எமது நாட்டில் அனைத்து விடயங்களையும் அரசியலாக்க முற்படுவதால்தான் இந்தப் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக அரசியல் இலாபத்துக்காக விமர்சிப்பவர்கள் எமது எதிர்கால சந்ததியினர் தொடர்பாக சிந்தித்து செயற்படவேண்டும் என்றார்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.