காஸா, மேற்குக் கரையில் இஸ்ரேலிய படையினரால் 14 பலஸ்தீனர்கள் கைது

0 486

இஸ்­ரே­லிய இரா­ணு­வத்­தினர் காஸா பள்­ளத்­தாக்கு மற்றும் மேற்குக் கரையில்  14 பலஸ்­தீ­னர்­களைச் சுற்­றி­வ­ளைத்­த­தாக கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை இரா­ணுவம் தெரி­வித்­தது.

பயங்­க­ர­வாத செயற்­பா­டு­க­ளுடன் தொடர்பு பட்­டி­ருந்­தனர் என்ற சந்­தே­கத்தின் பேரில் இஸ்­ரே­லியப்படை­யினர் மேற்குக் கரையில் ஒன்­பது பேரைக் கைது செய்­த­தாக இரா­ணுவம் வெளி­யிட்­டுள்ள அறிக்­கை­யொன்றில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. ஆனால் என்­ன­வகை செயற்­பா­டுகள் என அதில் விப­ரிக்­கப்­ப­ட­வில்லை.

இஸ்­ரே­லிய படை­யி­னரின் சோதனை நட­வ­டிக்­கையின் போது பெத்­த­ல­ஹேமில் ஐந்து பேர் கைது செய்­யப்­பட்­ட­தா­கவும் ஹெப்­ரோனில் நான்­குபேர் கைது செய்­யப்­பட்­ட­தா­கவும் பிர­தே­ச­வா­சிகள் தெரி­வித்­தனர்.

தேடப்­படும் பலஸ்­தீ­னர்­களை பிடிப்­ப­தற்­காக சோத­னை­யிடல் என்ற போர்­வையில் ஆக்­கி­ர­மிக்­கப்­பட்ட மேற்­குக்­க­ரையில் இஸ்­ரே­லியப் படை­யினர் பர­வ­லான கைது நட­வ­டிக்­கை­களில் அடிக்­கடி ஈடு­பட்டு வரு­கின்­றனர்.

இத­னி­டையே, தெற்கு காஸா எல்­லைக்கு அருகில் ஐந்து பலஸ்­தீ­னர்கள் தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ள­தாக இஸ்­ரே­லிய இரா­ணுவம் தெரி­வித்­துள்­ளது.

பெயர் குறிப்­பி­டப்­ப­டாத தனி நபர்கள் விசா­ர­ணைக்­காக தடுப்புக் காவலில் வைக்­கப்­பட்­டுள்­ள­தாக இரா­ணுவம் வெளி­யிட்­டுள்ள அறிக்­கை­யொன்றில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

பலஸ்­தீனத் தரப்பு எண்­ணிக்­கையின் பிரகாரம் ஏராளமான பெண்கள் மற்றும் நூற்றுக்கணக்கான சிறுவர்கள் உள்ளடங்கலாக சுமார் 6,400 பலஸ்தீனர்கள் இஸ்ரேலிய சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.