இந்தோனேஷிய மதகுரு பஷீரை விடுவிக்கும் தீர்மானம் பரிசீலனையில்

0 560

இந்­தோ­னே­சி­யாவின் தீவி­ரப்­போக்­கு­டைய அமைப்­பொன்றை சேர்ந்த மத­கு­ரு­வான அபூ­பக்கர் பஷீரை விடு­விப்­பது தொடர்­பாக அந்­நாட்டு அர­சாங்கம் மேற்­கொண்ட தீர்­மானம் மறு­ப­ரி­சீ­ல­னைக்­குட்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

கடந்த 2002ஆம் ஆண்டில் பாலி தீவி­லுள்ள இரவு விடு­தியில் நடத்­தப்­பட்ட குண்­டுத்­தாக்­கு­தலில் 200இற்கும் மேற்­பட்டோர் உயி­ரி­ழந்­தனர். உயி­ரி­ழந்­த­வர்­களில் பெரும்­பா­லானோர் அவுஸ்­தி­ரே­லி­யர்­க­ளாவர்.

இக் குண்­டு­வெ­டிப்­பிற்கு இந்­தோ­னே­சி­யாவில் தடை­செய்­யப்­பட்ட தீவி­ர­வாத அமைப்­பான ஜமா இஸ்­லா­மியா அமைப்பு உரிமை கோரி­யது. குறித்த அமைப்பின் தலை­வ­ரான அபூ­பக்கர் பஷீர் கடந்த 2011ஆம் ஆண்டு கைது­செய்­யப்­பட்டார். இவ­ருக்கு 15 வரு­டங்கள் சிறைத்­தண்­டனை விதிக்­கப்­பட்­டது.

தற்­போது 80 வயதைத் தாண்­டி­யுள்ள பஷீரின் உடல்­நி­லையை கருத்­திற்­கொண்டு அவரை முன்­கூட்­டியே பிணையில் விடு­விக்­க­வுள்­ள­தாக அந்­நாட்டு ஜனா­தி­பதி தெரி­வித்­தி­ருந்தார். எனினும் இந்த தீர்­மா­னத்தை எதிர்ப்­ப­தாக அவுஸ்­தி­ரே­லியா தெரி­வித்­தி­ருந்­தது.

உயி­ரி­ழந்­த­வர்­களில் அவுஸ்­தி­ரே­லி­யர்கள் அதிகம் என்­பதால் இவ்­வி­ட­யத்தை மீள்­ப­ரி­சீ­லிக்­கு­மாறு அவுஸ்­தி­ரே­லியப் பிர­தமர் ஸ்கொட் மொரிசன் வேண்­டு­கோள்­வி­டுத்தார். அதனைத் தொடர்ந்தே பஷீரை விடு­விப்­ப­தாக மேற்­கொள்­ளப்­பட்ட தீர்­மா­னத்தை மீள்­ப­ரி­சீ­லிப்­ப­தாக இந்­தோ­னே­சியா அறி­வித்­துள்­ளது.

பஷீரின் வயது, உடல்நிலை என்பவற்றை கருத்திற்கொண்டு மனிதாபிமான அடிப்படையிலேயே அவரை விடுவிக்கத் தீர்மானித்ததாக இந்தோனேசிய ஜனாதிபதி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
-VIdivelli

Leave A Reply

Your email address will not be published.