அஷ்ரபின் மரணம் குறித்த ஆணைக்குழுவின் அறிக்கையில் தூக்கிப்பிடிக்க ஒன்றுமில்லை

முன்னாள் அமைச்சர் பேரியல் அஷ்ரப்

0 678
  • ஏ.பி.எம்.அஸ்ஹர்

தலைவர் மர்ஹூம் அஷ்­ரபின் மரணம் தொடர்­பாக  நிய­மிக்­கப்­பட்ட ஆணைக்­கு­ழுவின் அறிக்­கையில் பெரி­தாகத் தூக்­கிப்­பி­டித்­துக்­கொண்­டி­ருக்க ஒன்­றுமே இருக்­க­வில்லை என முன்னாள் அமைச்சர் பேரியல் அஷ்ரப் தெரி­வித்தார்.

கடந்த வெள்­ளிக்­கி­ழமை இரவு  இடம்­பெற்ற தொலைக்­காட்சி கலந்­து­ரை­யாடல் நிகழ்ச்­சி­யொன்றில் கலந்­து­கொண்டு கருத்து வெளி­யி­டு­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் அதில் தொடந்து கருத்துத் தெரி­விக்­கையில்,  தலைவர் மர­ணித்து இன்­றுடன் 18 வரு­டங்கள் கடந்து விட்ட நிலையில் சில­ருக்குத் தேவைக்­கேற்ப தேர்தல் காலங்­களில் மட்டும் தலை­வரின் ஞாபகம் வரும். தலை­வரின் மர­ணத்தில் சந்­தேகம் உண்டு என்று கூறி ஆணைக்­குழு அமைக்க வேண்டும் என்று முதலில்  கோரிக்கை விடுத்­தது முஸ்லிம் காங்­கி­ரஸே.

அந்த ஆணைக்­கு­ழுவின் அறிக்கை எனக்கு வழங்­கப்­பட்­டது போல் அவர்­க­ளுக்கும் அது வழங்­கப்­பட்­டி­ருக்கும். அந்த அறிக்­கையை ஒரு நிபந்­த­னை­யு­டேனே எனக்கு வழங்­கி­னார்கள். அதா­வது, வழங்­கப்­பட்ட அறிக்­கையை ஊட­கங்­க­ளுக்கு வழங்­கக்­கூ­டாது என்­பதே அந்த நிபந்­த­னை­யாகும். அதனை மீறி நான் செயற்­ப­ட­வில்லை. அந்த அறிக்­கையில் தலை­வ­ருக்கு வழங்­கப்­பட்ட ஹெலி­கொப்டர் தொடர்­பாகக் குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­தது. தலைவர் பிர­யாணம் செய்­வ­தற்கு முந்­திய நாள் அந்த  ஹெலி­கொப்டர் பழுது பார்க்­கப்­பட்­டி­ருந்­த­தா­கவும் ஆனால் அந்த  ஹெலி­கொப்டர் ஓடிப் பரீட்­சித்துப் பார்க்­கப்­ப­ட­வில்லை எனவும் அவ்­வாறு பரீட்­சித்­துப் ­பார்ப்­ப­தற்­கான சந்­தர்ப்­பத்தை அஷ்ரப் வழங்­க­வில்லை எனவும் அதில் குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­தது.

எவ்­வா­றா­யினும், குறித்த தினத்­தன்று தனக்கு  ஹெலி­கொப்டர் வழங்­கப்­பட வேண்­டு­மென்ற கண்­டிப்­பான வேண்­டு­கோ­ளுக்­க­மை­வா­கவே அது அவ­ருக்கு வழங்­கப்­பட்­ட­தா­கவும் அதில் குறிப்­பி­டப்­பட்­டு­ள­ளது.

அத்­துடன் இதற்­காக யாரையும்  குற்­ற­வா­ளி­யாக ஆணைக்­குழு காண­வில்லை. கண­வனை இழந்­த­மைக்­காக எனக்கும் அமான் அஷ்­ர­புக்கும் தலை­வரின் தாய்க்கும் இழப்­பீட்­டைப்­பெற ஆணைக்­குழு சிபா­ரிசு செய்­தி­ருந்­தது. இவைதான் அந்த அறிக்­கையில் குறிப்­பி­டப்­பட்­டுள்ள விட­யங்­களின் சாராம்­ச­மாகும்.

இந்த அறிக்கை கிடைத்­த­வுடன் கொழும்­பி­லுள்ள தலை­வரின் மிகவும் நெருங்­கிய நட்­புக்­கு­ரிய சிரேஷ்ட சட்­டத்­த­ரணி ஒரு­வ­ரிடம் சென்று இவ்­வ­றிக்கை சம்­பந்­த­மாக கலந்­தா­லோ­சித்தேன். அறிக்­கையைப் பெற்­றுக்­கொண்ட அவர், இரண்டு கிழ­மை­களின் பின்னர் இது தொடர்­பாக ஒரு முடிவைச் சொல்­வ­தாகக் கூறினார். பின்னர்  இரண்டு நாட்­க­ளி­லேயே என்­னுடன் தொடர்­பு­கொண்டு பேசினார். இந்த அறிக்­கையில் ஒன்­றுமே இல்லை. இதற்குப் பின்னால் நீங்கள் சென்றால் உங்­க­ளது நேரமும் காலமும் மட்­டுமே வீணாகும் என்றும் இதற்குப் பின்னால் எந்த நட­வ­டிக்­கைக்கும் நீங்கள் செல்ல வேண்­டா­மென ஆலோ­சனை வழங்­கி­ய­தற்­க­மைய நான் அந்த இடத்தில் நிறுத்திக் கொண்டேன்.

எனக்கு அறிக்கை வழங்­கப்­பட்­டுள்­ளதை அறிந்­து­கொண்ட ஊட­க­வி­ய­லாளர் லஸந்த விக்­ர­ம­துங்­கவும் என்­னோடு தொடர்பு கொண்டு அந்த அறிக்­கையின் பிர­தியைக் கோரினார். ஆனால் அவ­ருக்­குக்­கூட  நான் அதை வழங்­க­வில்லை.  தற்­போது சிலர் இந்த அறிக்­கையை  வைத்துக் கொண்­டுதான் தங்­க­ளது அர­சி­ய­லையே செய்து வரு­கின்­றனர். இது வேத­னைக்­கு­ரிய விட­ய­மாகும் .

எல்­லோ­ருக்கும் அஷ்­ரபின் புகைப்­படம் தேவைப்­ப­டு­கின்­றது. இதற்கு எதி­ராக அவ­ரது மனைவி என்ற வகையில் எந்­த­வி­த­மான நட­வ­டிக்­கையும் எடுக்க முடி­யாது. ஏனென்றால் அவர் எனது கண­வ­ராக இருந்­தாலும் அவர் முஸ்லிம் மக்­களின் பொதுச் சொத்­தாகும். சந்­தர்ப்ப அர­சி­ய­லுக்­காக தேர்தல் காலங்­களில் தலை­வரின் புகைப்­ப­டத்தை பாவிப்­பது எனக்கு மனக்­க­வ­லையைத் தந்­தாலும் சில நேரங்­களில் எனக்கு அவை சந்­தோ­ஷத்­தையும் ஏற்­ப­டுத்­தி­ய­துண்டு. நான் சிங்­கப்­பூ­ருக்­கான தூது­வ­ராகக் கட­மை­யாற்­றிய நேரம் தூது­வர்­க­ளுடன் ஒரு சுற்­றுலா வந்­தி­ருந்தேன். அப்­போது ஒலு­வி­லுக்கு வரும்­போது சுவரில் தலை­வரின் புகைப்­ப­ட­மொன்று ஒட்­டப்­பட்­டி­ருந்­தது. அதில் தலைவர் வெள்ளை தலைப்­பா­கை­யு­டனும் வெள்ளை உடுப்பும்  அணிந்­தி­ருந்தார். இத­னைப்­பார்த்த போது மிகவும் மகிழ்ச்­சி­யாக இருந்­தது. இன்று முஸ்லிம் அர­சி­யலில்  இன்­றைய தலை­வர்கள் லீடர்கள் அல்­லாது டீலர்­க­ளா­கவே செயற்­பட்டு வரு­கின்­றார்கள். நான் தற்­போது உள்ளூர் அர­சியல் தொடர்­பாக பெரி­தாக  அலட்­டிக்­கொள்­வ­தில்லை. மாறாக, தேசிய அர­சி­யலில் நடை பெறு­கின்­ற­வற்றை அவ­தா­னித்து வரு­கின்றேன். இனி நான் நேரடி அர­சி­யலில் ஈடு­ப­டப்­போ­வ­தில்லை.

தலை­வ­ரு­டைய காலத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் ஒரு குடும்பம் போன்று செயற்­பட்டு வந்­தது. ஏதா­வது பிரச்­சினை என்றால் நானே இடைத்­த­ர­க­ராக நின்று தலை­வ­ருக்கு அவற்றைத் தெரி­யப்­ப­டுத்தி அவற்றைத் தீர்த்­து­வைப்பேன்.  சில நேரங்­களில் நான் ஒரு ஆசி­ரி­யை­யு­டைய ஸ்தானத்­தி­லி­ருந்து செயற்­பட்­டி­ருக்­கின்றேன். இன்று கட்சி  பல கூறு­க­ளாகப் பிரிந்து சின்­னா­பின்­ன­மாகிப் போயுள்­ளது.

நான் வீட­மைப்பு அமைச்­ச­ராக இருந்­த­போது அம்­பாறை மாவட்­டத்தில் கூடு­த­லான அபி­வி­ருத்­தி­களை மேற் கொண்டேன். நான் இன, மத, மொழி பார்த்து ஒரு­போதும் சேவை செய்­த­தில்லை. முஸ்லிம், தமிழ், சிங்­கள மக்கள் என்ற வேறு­பா­டின்றி எல்­லோ­ருக்கும் சம­மான சேவை­க­ளையே வழங்­கி­யுள்ளேன். இதனை அந்­தந்தப் பிர­தே­சங்­க­ளுக்கு நேர­டி­யாகச் சென்று பார்ப்­ப­த­னூ­டாகக் கண்­டு­கொள்­ளலாம்.

சுனாமி அனர்த்­தத்­தின்­போது மிகவும் மோச­மாகப் பாதிக்­கப்­பட்ட அம்­பாறை மாவட்­டத்தில்  வீடு­களை இழந்த மக்­க­ளுக்­காக வீடு­களை அமைத்துக் கொடுக்கும் பொறுப்பும் கட­மையும் எனக்கு இருந்­தது. இருப்­பினும் இந்த நாட்­டுக்கு வந்த அத்­தனை கொடை­யா­ளி­களும் தெற்கை நோக்­கியே படை­யெ­டுத்­தனர். மிகவும் கஷ்­டத்­திற்கு மத்­தியில் சந்­தி­ரிகா அம்­மை­யாரின் உத­வி­யுடன் சில தன்­னார்வத் தொண்டு நிறு­வ­னங்­களை அம்­பா­றைக்கு அழைத்­துச்­சென்று அம்­மக்­க­ளுக்­கான வீட­மைப்புத் திட்­டங்­களை செய்து கொடுத்தேன். கல்­முனை, சாய்ந்­த­ம­ருது போன்ற இடங்­களில் வீடமைப்புத் திட்டங்கள் உட்பட பல்வேறு உதவிகளை செய்துள்ளேன்.

அம்பாறை மாவட்டத்தின் பிரதிநிதி என்ற வகையிலும் சிங்கள மக்களின் வாக்குகளை கணிசமானளவில் பெற்றவள் என்ற அடிப்படையிலும் சிங்கள மக்களுக்கும்  எனது மனச்சாட்சிக்கு விரோதமில்லாத வகையிலும் சேவை செய்துள்ளேன். வீரமுனை, திருக்கோவில் போன்ற தமிழ் கிராமங்களிலும் சில சேவைகளைச் செய்துள்ளேன். எனது மனட்சாட்சிக்கு விரோதமாக நான் ஒரு போதும் செயற்பட்டதில்லை.

சமூக நல்லிணக்கம் என்பது இன்று இந்த நாட்டிற்கு மிகவும் அத்தியாவசியமான ஒன்றாகிவிட்டது. இதற்கான பங்களிப்பை வழங்க நான் தயாராகவே உள்ளேன் எனவும் தெரிவித்தார்.

-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.