மஹிந்த ராஜபக்ஷ, கோத்தா உள்­ளிட்டோர் குற்­ற­வா­ளிகள்

கடந்த கால அறிக்­கைகள் சுட்­டு­கின்­றன என்­கிறார் ஹந்­துன்­நெத்தி

0 601

விசா­ரணை ஆணைக்­குழு அறிக்­கை­கள் நேர­டி­யாக நீதி­மன்ற விசா­ர­ணைக்கு எடுத்­து­கொள்­ளப்­படும் என்றால் அது எதிர்­கால ஆணைக்­குழு அறிக்­கையா அல்­லது கடந்த கால அறிக்­கை­களையும் நீதி­மன்ற விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்த முடி­யுமா என ஜே.வி.பி. சபையில் கேள்வி எழுப்­பி­யது. மஹிந்த ராஜபக் ஷ, கோத்­தா­பய ராஜபக் ஷ உள்­ளிட்ட முக்­கிய நபர்கள் குற்­ற­வா­ளிகள் என கடந்­த­கால ஆணைக்­குழு அறிக்­கைகள் சுட்­டிக்­காட்­டு­கின்­றன. அவர்­களைத் தண்­டித்து முன்­னு­தா­ர­ண­மாக செயற்­பட்­டு­காட்ட வேண்டும் என ஜே.வி.பியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சுனில் ஹந்­து­நெத்தி தெரி­வித்தார்.

விசா­ரணை ஆணைக்­கு­ழுக்கள் திருத்த சட்­ட­மூலம் மீதான விவா­தத்­தின்­போது உரை­யாற்­றும்­போதே அவர் இதனைக் குறிப்­பிட்டார். அவர் இதன்­போது குறிப்­பி­டு­கையில்,

இன்று விசா­ரணை ஆணைக்­கு­ழுக்கள் மீதான இந்த விவா­தத்தில் திருத்தம் செய்­யும்­போது இது எதிர்­கால ஆணைக்­கு­ழுக்­க­ளுக்கு பொருந்­துமா அல்­லது இது­வரை நிய­மிக்­கப்­பட்ட ஆணைக்­கு­ழுக்­க­ளுக்கும் பொருந்­துமா என்­பதை அர­சாங்கம் கூற வேண்டும். இதற்கு முன்னர் பல ஆணைக்­குழு அறிக்­கைகள் உரு­வாக்­கப்­பட்­டுள்­ளன. இவற்­றுக்கு என்ன நடக்­க­போ­கின்­றன என்ற கேள்வி எம்­மத்­தியில் உள்­ளது. இந்த விட­யத்தில் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்­குழு என்ன செய்­து­விட்­டது. ஏன் நட­வ­டிக்கை எடுக்­க­வில்லை. பல­மான கரங்­க­ளினால் இவை ஏன் மூடப்­ப­டு­கின்­றன என்ற பல கேள்­விகள் எம்­மத்­தியில் உள்­ளது. கோப் குழுவில் விஜ­ய­தாச ராஜபக் ஷ தலை­வ­ராக செயற்­பட்ட காலத்தில் 15 ஆயிரம் கோடி ரூபாய் குறித்த ஊழல் குற்றம் குறித்து கண்­ட­றிந்து விசா­ர­ணைக்­குழு அறிக்கை ஒன்­றினை பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பித்தார். அந்த அறிக்கை இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்­கு­ழு­விற்கு அனுப்­பப்­பட்­டது.  அதற்கு என்ன நடந்­தது. இது­வரை  ஏன் நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­ட­வில்லை. அன்று குற்றம் சுமத்­தப்­பட்ட நபர்கள் கட்சி மாறி அமைச்­சுக்­களை பெற்­றுக்­கொண்­டனர்.

எனது தலை­மை­யிலும் கோப் குழுவின் மூலம்  மத்­திய வங்கி பிணை­முறி குறித்த ஊழல் அறிக்கை ஒன்­றினை நாம் முன்­வைத்தோம். பாரா­ளு­மன்­றத்தில் அறிக்­கையை சமர்ப்­பித்தோம். இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்­கு­ழு­விற்கும் அனுப்­பப்­பட்டு அவர்கள் நட­வ­டிக்கை எடுக்க வேண்டும் என்ற பணிப்பும் விடுக்­கப்­பட்­டது. இன்­று­வரை அறிக்கை குறித்து  எந்த நட­வ­டிக்­கையும் எடுக்­க­வில்லை. மாறாக அப்­போ­தைய இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்­குழு தலை­வரை மாற்­றி­யதை மட்­டுமே செய்­தனர். இலஞ்ச ஊழல் ஆணைக்­கு­ழுவை இலக்கு வைத்து கொண்­டு­வரும் இந்த திருத்­தங்கள் எதிர்­கால ஆணைக்­கு­ழு­விற்கு என்றால் இது­வரை செயற்­பட்ட ஆணைக்­குழு விசா­ர­ணை­க­ளுக்கு என்ன நடக்கும். பாரிய நிதி மோசடி குறித்து ஜனா­தி­பதி விசேட ஆணைக்­குழு நிய­மிக்­கப்­பட்டு அந்த அறிக்­கையும் உள்­ளது. இது தான் இறுதி அறிக்கை. இந்த அறிக்­கையில் முக்­கிய நபர்கள் பெயர்கள் சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது.

இந்த விசா­ரணை அறிக்­கையை சட்ட விசா­ர­ணைக்கு கொண்­டு­செல்ல முடி­யுமா? இந்த அறிக்­கையில் மஹிந்த ராஜபக் ஷ, கெஹ­லிய ரம்­புக்­வெல உள்­ளிட்ட பல­ரது பெயர்கள் உள்­ளன. இவர்கள் குறித்து என்ன செய்ய தீர்­மா­னித்­துள்­ளீர்கள். அவன்கார்ட் ஊழலில் கோத்­தா­பய ராஜபக் ஷவின் பெயரும் ஜனா­தி­ப­தியின் பிரத்­தி­யேக செய­லாளர் பெயர்­களும் உள்­ளன. ஆகவே இந்த அறிக்­கை­களும் உள்­வாங்­கப்­பட வேண்டும். மத்­திய வங்கி ஊழல் குறித்தும் நட­வ­டிக்கை எடுக்­கப்­பட வேண்டும்.

மஹிந்த ராஜபக்ஷ மீது பல குற்­றங்கள் ஆணைக்­குழு அறிக்­கையில் சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளன. அவை குறித்து நட­வ­டிக்கை எடுக்க வேண்டும். ஓய்­வு­பெற்ற நீதி­ப­திகள், ஆணைக்­குழு தலை­வர்கள் பெயர்கள் எல்லாம் உள்­ளன. அதேபோல் பலரின் பெயர்கள் சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளன. இவை குறித்து நட­வ­டிக்கை எடுக்­கப்­பட வேண்டும். இது­வரை கையா­ளப்­பட்ட அறிக்­கையில் பல­ரது பெயர்கள் உள்­ளன, இவற்­றுக்கு யார் நட­வ­டிக்கை எடுப்­பது. ஆணைக்­குழு அறிக்­கையை நேர­டி­யாக நீதி­மன்ற விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்த முடியும் என்றால் அது ஜனா­தி­பதி ஆணைக்­குழு அறிக்கை, பிணை­முறி ஆணைக்­குழு அறிக்கை, நிதி மோசடி குறித்த ஜனாதிபதி விசேட ஆணைக்குழு அறிக்கை அனைத்துமே நீதிமன்ற விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட வேண்டும். எதிர்கால ஆணைக்குழு அறிக்கையை மட்டுமே இலக்கு வைத்து இந்த திருத்தங்கள் செய்துகொள்ளப்படும் என்றால் கடந்தகால குற்றவாளிகள் குறித்து என்ன செய்வது. இவற்றை கையாண்டு ஒரு முன்னுதாரணத்தை வெளிப்படுத்த வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.