சூடானில் ஆர்ப்­பாட்­டங்கள் அதி­க­ரிக்கும் சாத்­தியம் முக்­கிய இடங்­களில் பொலிஸார் குவிப்பு

0 526

சூடானின் இரண்­டா­வது பெரிய நக­ரான ஒம்­டுர்­மன்னில் அமைந்­துள்ள  பாரா­ளு­மன்­றத்தை நோக்கி ஊர்­வலம் நடத்­து­வ­தற்கு திட்­ட­மி­டப்­பட்­டுள்ள நிலையில் கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்கள் மீது சூடா­னிய பொலிஸார் கண்ணீர் புகைக் குண்­டு­களைப் பயன்­ப­டுத்தி தாக்­குதல் நடத்­தினர்.

நாடு முழு­வதும் ஜனா­தி­பதி ஒமர் அல்–-­ப­ஷீரை பதவி வில­கு­மாறு கோரி போராட்­டங்கள் நடத்­தப்­ப­டு­வதால் மேலும் புதிய ஆர்ப்­பாட்­டங்கள் நிக­ழு­மென்ற அச்சம் கார­ண­மாக அதிக எண்­ணிக்­கை­யான படை­யினர் பணியில் ஈடு­ப­டுத்­தப்­பட்­டுள்­ளனர்.

இணைய தளத்தில் இது தொடர்­பான காணொ­லி­களும் வெளி­யி­டப்­பட்­டுள்­ளன.

அக் காணொ­லி­களில் படை­யினர் தமது வாக­னங்­களில் பய­ணிப்­பது பதி­வா­கி­யுள்­ளன.

இந்தப் போராட்­டங்­களில் வைத்­தி­யர்கள், சட்­டத்­த­ர­ணிகள், ஆசி­ரி­யர்கள் மற்றும் மருந்­தா­ளர்கள் என பல்­வேறு தரப்­பி­னரும் பங்­கு­பற்­று­கின்­றனர்.

சுமார் 30 ஆண்­டு­க­ளாக பதவி வகிக்கும் பஷீர் தேர்தல் மூல­மன்றி வேறு எந்த வகை­யிலும் தலை­மைத்­துவ மாற்றம் ஏற்­பட மாட்­டா­தென வலி­யு­றுத்தி வரு­கின்றார்.

உலகில் மிக நீண்­ட­காலம் பத­வியில் இருக்கும் இவர் அடுத்த பதவிக் காலத்­திற்கும் அடுத்த வருடம் இடம்­பெ­ற­வுள்ள தேர்­த­லிலும் போட்­டி­யிடத் தீர்­மா­னித்­துள்ளார்.

கடந்த மாதம் ஆரம்­ப­மான ஆர்ப்­பாட்­டத்தில் கொல்­லப்­பட்­டோரின் எண்­ணிக்கை 24 ஆக அதி­க­ரித்­துள்­ள­தாக நாட்டின் உண்­மை­களைக் கண்­ட­றியும் குழுவின் தலைவர் தெரி­வித்­துள்ளார்.

எனினும் இந்த எண்­ணிக்கை மேலும் அதி­க­ரித்­துள்­ள­தாக மனித உரிமைக் குழுக்கள் தெரி­வித்­துள்­ளன.

அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டத்தின் போது ஏற்பட்ட மோதல்கள் காரணமாக குறைந்தது 40 பேர் கொல்லப்பட்டதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.