உயி­ரி­ழந்த மாடு­களை புதைக்க நட­வ­டிக்கை

0 479

மூதூர் பிர­தேச சபைக்­குட்­பட்ட தோப்பூர், நல்லூர், சம்பூர்,பள்­ளிக்­கு­டி­யி­ருப்பு  பகு­தி­களில் அதி­க­ள­வான மாடுகள் உயி­ரி­ழந்து காணப்­ப­டு­வதால் துர்­நாற்றம் வீசு­வ­தாக பொது­மக்­க­ளி­ட­மி­ருந்து கிடைக்கப் பெற்ற முறைப்­பாட்­டுக்­க­மை­வாக நேற்றுக் காலை தோப்பூர் கரைச்சை காட்டுப் பகு­தியில்  இறந்த மாடுளை பெக்கோ இயந்­திரம் கொண்டு புதைக்கும்.

நட­வ­டிக்கை மூதூர் பிர­தேச சபையின்  தவி­சாளர் எம்.எம்.ஏ.அரூஸ் தலை­மையில் இடம்­பெற்­றது.

மூதூர் பிர­தேச சபைக்­குட்­பட்ட பகு­தி­களில் இது­வரை 600 க்கும் அதி­க­மான  மாடுகள் உயி­ரி­ழந்­துள்­ள­தோடு தொடர்ந்தும் இறந்து வரு­கின்­றன. அதே­வேளை இவ் உயி­ரி­ழப்­பு­க­ளுக்­கான கார­ணத்தை கண்­ட­றி­வ­தற்­காக மாடு­களின் இரத்த மாதி­ரிகள் பரி­சோ­த­னைக்கு அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ள­துடன் அதன் முடி­வுகள் வரும் வரையில் மூதூர் பிர­தேச சபைக்­குட்­பட்ட 14 இறைச்சிக் கடை­களும் தற்­கா­லி­க­மாக மூதூர் பிர­தேச சபை­யினால் மூடப்­பட்­டுள்­ள­மையும் குறிப்­பி­டத்­தக்­கது.

Leave A Reply

Your email address will not be published.