‘சோஷலி­சத்­தோடு இணங்கிச் செல்­லத்­தக்க இஸ்லாம்’ சீனாவில் புதிய சட்டம்

0 644

சீனாவில் இஸ்லாம் எவ்­வாறு பின்­பற்­றப்­பட வேண்டும் என்­பதை மீள்­வ­ரைபு செய்யும் சீனாவின் தற்­போ­தைய நட­வ­டிக்­கை­யாக அடுத்த ஐந்து ஆண்­டு­களில் இஸ்­லாத்தை சீன­ம­யப்­ப­டுத்தும் புதிய சட்­டத்தை சீனா நிறை­வேற்­றி­யுள்­ளது.

அர­சாங்க அதி­கா­ரிகள் மற்றும் எட்டு இஸ்­லா­மிய நிறு­வ­னங்­களின் பிர­தி­நி­தி­க­ளுக்­கி­டையே இடம்­பெற்ற கூட்­ட­மொன்றில் சோஷலி­சத்­தோடு இணங்கிச் செல்­லத்­தக்க இஸ்லாம் மற்றும் சம­யத்தை சீன­ம­யப்­ப­டுத்­து­வ­தற்­கான வழி­வ­கை­களை நடை­மு­றைப்­ப­டுத்தல் தொடர்பில் இணக்கம் காணப்­பட்­ட­தாக சீனாவின் பிர­தான ஆங்­கிலப் பத்­தி­ரி­கை­யான குளோபல் டைம்ஸ் கடந்த சனிக்­கி­ழமை தெரி­வித்­தது.

இது தொடர்­பான மேல­திக தக­வல்­க­ளையோ, அரச கட்­ட­ளைக்கு இணக்கம் தெரி­வித்த இஸ்­லா­மிய நிறு­வ­னங்­களின் பெயர்­க­ளையோ அப்­பத்­தி­ரிகை வெளி­யி­ட­வில்லை.

மத­நம்­பிக்கை கொண்­டுள்ள பிரி­வினர் மீது சீன மயப்­ப­டுத்­து­வ­தற்­கான செயற்­பா­டுகள் மாஓ சேதுங்­கிற்கு அடுத்­த­தான சீனாவின் மிகவும் அதி­கா­ர­மிக்க ஜனா­தி­ப­தி­யான ஸீ ஜின்­பிங்கின் ஆட்­சியின் கீழ் தீவி­ர­மாக மேற்­கொள்­ளப்­பட்டு வரும் நிலையில் தமது உரி­மைகள் கடு­மை­யாக ஒடுக்­கப்­ப­டு­வதை அம் மக்கள் மிகவும் பொறு­மை­யுடன் சகித்­துக்­கொண்­டி­ருக்­கின்­றனர்.

சீனாவின் சில பகு­தி­களில் இஸ்­லாத்தை பின்­பற்­றுதல் தடை செய்­யப்­பட்­டுள்­ளது. முஸ்­லிம்கள் தொழு­கையில் ஈடு­ப­டுதல், நோன்­பி­ருத்தல், தாடி வளர்த்தல் அல்­லது ஹிஜாப் அணிதல் என்­பன கைது செய்­யப்­ப­டு­வ­தற்­கான கார­ணங்­க­ளாக அமைந்­துள்­ளன.

ஒரு மில்­லி­ய­னுக்கும் மேற்­பட்ட முஸ்­லிம்கள் இஸ்­லாத்­தி­லி­ருந்து வில­கு­வ­தற்கும் உத்­தி­யோ­க­பூர்வ நாத்­தி­க­வாத ஆளும் கமி­யூ­னிசக் கட்­சி­யுடன் இணை­வ­தற்கும் நிர்­பந்­திக்கப் படு­வ­தா­கவும் ஐக்­கிய நாடுகள் சபை தெரி­வித்­துள்­ளது.

இனச்­சுத்­தி­க­ரிப்பில் சீன அர­சாங்கம் ஈடு­பட்டு வரு­வ­தாக மனித உரிமைக் குழுக்கள் சீனா மீது குற்றம் சுமத்­தி­யுள்­ளன. முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான செயற்­பா­டு­களை உலகம் கருத்­தி­லெ­டுக்­கா­தி­ருக்க முடி­யாது என கடந்த ஆகஸ்ட் மாதம் வொசிங்டன் போஸ்ட் தனது ஆசி­ரியர் தலை­யங்­கத்தில் தெரி­வித்­தி­ருந்­தது.

இஸ்­லா­மியப் பிறை வடி­வங்கள் மற்றும் மின­ாராக்கள் பள்­ளி­வா­சல்­க­ளி­லி­ருந்து அகற்­றப்­பட்­டுள்­ளன, சமயப் பாட­சா­லை­க­ளுக்கும் அரபு மொழி வகுப்­புக்­க­ளுக்கும் தடை விதிக்­கப்­பட்­டுள்­ளது, இஸ்­லா­மிய செயற்பாடுகளில் சிறுவர்கள் பங்குபற்றுவதற்கும் சீனாவில் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அசோசியேட்டட் பிரஸ் தெரிவித்துள்ளது.

இவ்வாறான விமர்சனங்கனை மறுத்துள்ள சீனா, சமயத்தினையும் சிறுபான்மையினரின் கலாசாரங்களையும் பாதுகாப்பதாகவும் தெரிவித்துள்ளது.

எவ்வாறெனினும், கடந்த வாரத்தில் மாத்திரம், மியன்மாரை எல்லையாகக் கொண்ட சீனாவின் யுன்னான் மாகாணத்தில் அதிகாரிகளால் ஒடுக்கப்பட்ட ஹுயி முஸ்லிம் இனச் சிறுபான்மையினரால் உருவாக்கப்பட்ட மூன்று பள்ளிவாசல்கள் மூடப்பட்பட்டுள்ளன என தென் சீன மோர்ணிங் போஸ்ட் அறிக்கையிட்டுள்ளது.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.