28 ஆம் திகதிக்கு முன் பயணத்தை உறுதிப்படுத்துக

ஹஜ் குழு விண்ணப்பதாரிகளிடம் கோரிக்கை

0 474

ஹஜ் கட­மைக்­காக முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்­துக்கு விண்­ணப்­பித்­துள்ள விண்­ணப்­ப­தா­ரிகள் தமது பய­ணத்தை எதிர்­வரும் 28 ஆம் திக­திக்கு முன்பு உறு­தி­செய்­யு­மாறும் மீள­ளிக்­கப்­ப­டக்­கூ­டிய பதி­வுக்­கட்­ட­ண­மா­கிய 25 ஆயிரம் ரூபாவை முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் வங்கிக் கணக்கில்  வைப்­பி­லிட்டு பற்­றுச்­சீட்­டினை திணைக்­க­ளத்தில் கைய­ளிக்­கு­மாறும் அரச ஹஜ் குழுவின் தலைவர் கலா­நிதி எம்.ரி. சியாத் கோரிக்கை விடுத்­துள்ளார்.

ஹஜ் பய­ணத்தை உறுதி செய்­யு­மாறு கடந்த மாதம் திணைக்­களம் 3000 விண்­ணப்­ப­தா­ரி­க­ளுக்கு கடி­தங்கள் அனுப்­பி­வைத்­தி­ருந்தும் 700 க்கும் குறை­வான விண்­ணப்­ப­தா­ரி­களே தங்­க­ளது பய­ணத்தை உறு­தி­செய்­துள்­ளனர்.

அதனால் மேலும் 4000 விண்­ணப்­ப­தா­ரி­க­ளுக்கு அவர்­க­ளது கைய­டக்கத் தொலை­பே­சி­க­ளுக்கு பய­ணத்தை உறு­தி­செய்­யு­மாறு குறுந்­த­க­வல்கள் அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ளன. கடி­தங்­களும் அனுப்பி வைக்க ஏற்­பா­டுகள் செய்­யப்­பட்­டுள்­ளன.

மீளக்­கை­ய­ளிக்கப் படக்­கூ­டிய பதி­வுக்­கட்­டணம் 25 ஆயிரம் ரூபாவைச் செலுத்தி தங்கள் பய­ணங்­களை உறுதி செய்யும் விண்­ணப்­ப­தா­ரிகள் மாத்­தி­ரமே இவ்­வ­ருட ஹஜ் பய­ணத்தில் இணைத்துக் கொள்­ளப்­ப­ட­வுள்­ள­தா­கவும் கலா­நிதி எம். ரி. சியாத் தெரி­வித்தார்.

இறு­தி­நேர அசௌ­க­ரி­யங்­க­ளையும் சிர­மங்­க­ளையும் தவிர்ப்பதற்காக அரச ஹஜ் குழு முன்கூட்டியே இவ்வருடத்திற்கான ஹஜ் ஏற்பாடுகள் அனைத்தையும் பூர்த்தி செய்வதற்குத் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.