ஊட­க­வி­ய­லா­ளர்கள் அதி­க­மாக கொல்­லப்­பட்ட ஆண்டு 2018 ஆகும்

சர்­வ­தேச ஊட­க­வி­ய­லா­ளர்கள் சம்­மே­ளனம்

0 507

கட­மையில் ஈடு­பட்டுக் கொண்­டி­ருக்கும் வேளையில் ஊடகப் பணி­யா­ளர்கள் கொல்­லப்­படும் எண்­ணிக்கை மூன்­றாண்­டு­க­ளாகக் குறை­வ­டைந்து சென்று கொண்­டி­ருந்த போதிலும் 2018 ஆம் ஆண்டு அதி­க­ரித்­தி­ருந்­த­தாக சர்­வ­தேச தொழிற்­சங்­க­மொன்று தனது புதிய அறிக்­கை­யொன்றில் தெரி­வித்­துள்­ளது.

2018 இல் இலக்கு வைக்­கப்­பட்ட படு­கொ­லைகள், குண்டுத் தாக்­கு­தல்கள் மற்றும் தாக்­கு­தல்­களில் சிக்­குண்டு 94 ஊட­க­வி­ய­லா­ளர்­களும் ஊடகப் பணி­யா­ளர்­களும் உயி­ரி­ழந்­துள்­ள­தாக கடந்த திங்­கட்­கி­ழமை சர்­வ­தேச ஊட­க­வி­ய­லா­ளர்கள் சம்­மே­ளனம் வெளி­யிட்ட அறிக்­கையில் தெரி­வித்­துள்­ளது. 2017 ஆம் ஆண்டு ஒளிப்­ப­தி­வா­ளர்கள் மற்றும் தொழில்­நுட்­ப­வி­ய­லா­ளர்கள் உள்­ளிட்ட 84 ஊட­க­வி­ய­லா­ளர்­களும், சார­திகள் மற்றும் பாது­காப்பு அதி­கா­ரிகள் உள்­ளிட்ட 10 ஊடக பத­வி­யணி உறுப்­பி­னர்­களும் கொல்­லப்­பட்­டி­ருந்­தனர்.

உயி­ரி­ழந்­த­வர்­களுள் ஆறுபேர் பெண்­க­ளாவர், மேலும் மூவர் தொழில் சார்ந்த விபத்தில் சிக்­குண்டு உயி­ரி­ழந்­த­தா­கவும் பிர­சல்ஸை தள­மாகக் கொண்ட சர்­வ­தேச ஊட­க­வி­ய­லா­ளர்கள் சம்­மே­ளனம் தனது ஆண்­ட­றிக்­கையில் தெரி­வித்­துள்­ளது.

ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளுக்கு மிகவும் ஆபத்­தான நாடாக ஆப்­கா­னிஸ்தான் காணப்­பட்­டது. அங்கு 16 ஊடகப் பணி­யா­ளர்கள் உயி­ரி­ழந்­தனர். ஆப்­கா­னிஸ்தான் தலை­நகர் காபூலில் கடந்த ஏப்ரல் மாதம் இடம்­பெற்ற தற்­கொலைத் தாக்­குதல் தொடர்பில் செய்தி சேக­ரிக்கச் சென்ற ஊட­க­வி­ய­லா­ளர்­களை இலக்கு வைத்து மேற்­கொள்­ளப்­பட்ட குண்டுத் தாக்­கு­தலில் குறைந்­தது ஒன்­பது ஊட­க­வி­ய­லா­ளர்கள் கொல்­லப்­பட்­டனர்.

ஊட­க­வி­ய­லா­ளர்­களை இலக்கு வைத்து குற்றச் செயல்கள் இடம்­பெறும் மெக்­சி­கோவில் 11 ஊடகப் பணி­யா­ளர்கள் கொல்­லப்­பட்­டி­ருந்­தனர்.

யெமனில் ஒன்­பது பேரும், சிரி­யாவில் எட்டுப் பேரும், இந்­தி­யாவில் ஏழு பேரும், சோமா­லி­யாவில் ஆறு பேரும், பாகிஸ்தான் மற்றும் ஐக்­கிய அமெ­ரிக்­காவில் தலா ஐந்து பேரும் கொல்­லப்­பட்­டனர். பிலிப்பைன்ஸ், ஈக்­கு­வடோர், பிரேஸில் ஆகிய நாடு­களில் தலா மூன்று பேரும், கொளத்­த­மா­லாவில் இரண்டு பேரும் கொல்­லப்­பட்­டனர். ஆக்­கி­ர­மிக்­கப்­பட்ட பலஸ்­தீன ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளான அஹமட் அபூ ஹுஸைன் மற்றும் யாஸிர் முர்­தஜா ஆகியோர் கடந்த ஏப்ரல் மாதம் இஸ்­ரே­லிய எல்லை வேலிக்கு அருகில் பல மாதங்­க­ளாக இடம்­பெற்­று­வரும் பொது­மக்கள் ஆர்ப்­பாட்­டத்தில் செய்தி சேக­ரித்துக் கொண்­டி­ருந்த போது கொல்­லப்­பட்­டனர்.

சவூதி அரே­பிய ஊட­க­வி­ய­லா­ளரும் வொஷிங்டன் போஸ்ட் பத்­தி­ரி­கையின் பத்தி எழுத்­தா­ள­ரு­மான ஜமால் கஷோக்ஜி கொடூரக் கொலை ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளுக்­கான பாது­காப்பு எந்­த­ள­வுக்கு அச்­சு­றுத்­த­லாக இருக்­கி­றது என்­பதைப் படம்­பி­டித்துக் காட்­டு­வ­தா­கவும் சர்­வ­தேச ஊட­க­வி­ய­லா­ளர்கள் சம்­மே­ளனம் தனது அறிக்­கையில் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளது.

கஷோக்ஜி கடந்த ஒக்­டோபர் மாதம் 02 ஆம் திகதி இஸ்­தான்­பூ­லி­லுள்ள சவூதி அரே­பிய துணைத் தூத­ர­கத்தில் வைத்துக் கொலை செய்­யப்­பட்டார். எனினும் அவ­ரது உடல் இது­வரை கிடைக்­க­வில்லை.

கஷோக்ஜி சவூதி அரே­பி­யாவை கடு­மை­யாக விமர்­சித்து எழுதி வந்தார். இக் கொலையில் சவூதி அரே­பி­யாவின் பட்­டத்­திற்­கு­ரிய இள­வ­ரசர் மொஹமட் பின் சல்மான் சம்­பந்­தப்­பட்­டி­ருப்­ப­தாக பர­வ­லாகக் குற்­றச்­சாட்­டுக்கள் முன்­வைக்­கப்­பட்­டுள்­ளன.

”ஜமால் கஷோக்ஜி சிறந்த நபர். உங்­க­ளுக்குத் தெரியும் மிகப் பெரும் அதிர்ச்சி தரு­கின்ற விடயம் என்­ன­வென்றால், ஊட­க­வி­ய­லா­ளரைக் கொன்ற 10 பேருள் ஒன்­பது பேர் இந்த உலகில் தண்­டிக்­கப்­ப­டா­ம­லேயே இருக்­கின்­றனர்” என சர்வதேச ஊடகவியலாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் பிலிப்பே லேருத் தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகள் சபையின் அங்கத்துவ நாடுகள் ஊடகவியலாளர்களின் பாதுகாப்பு தொடர்பில் பிரகடனமொன்றை அங்கீகரிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளதை அடுத்து சர்வதேச ஊடகவியலாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் பிலிப்பே லேருத் கடந்த ஒக்டேபர் மாதம் நியூயோர்க்கிலுள்ள ஐ.நா. அலுவலகத்தில் அதனைச் சமர்ப்பித்ததிருந்தார்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.