சட்­ட­வி­ரோத குடி­யேற்­ற­வா­சிகள் ஆங்­கில கால்­வாயில் மீட்பு

0 512

பல்­வேறு கார­ணி­களால் தமது நாடு­களில் இருந்து வெளியே­றிய பல சட்­ட­வி­ரோத குடி­யேற்­ற­வா­சிகள் அபா­ய­க­ர­மான படகு பய­ணத்தை மேற்­கொண்ட நிலையில் ஆங்­கில கால்­வாயில் வைத்து அதி­கா­ரி­களால் மீட்­கப்­பட்­டுள்­ளனர்.
சிரியா, ஈரான், ஈராக், ஆப்­கா­னிஸ்தான் போன்ற நாடு­களைச் சேர்ந்­த­வர்கள் அக­தி­க­ளாக வெளி­யேறி, ஐரோப்­பிய நாடு­க­ளுக்கு செல்­கின்­றனர். அவ்­வாறு செல்­ப­வர்­களில் ஆபத்­தான கடல் பயணம் மேற்­கொள்ளும் போது பலர் உயி­ரி­ழக்­கின்­றனர்.

இந்த நிலையில், கிறிஸ்மஸ் தினத்­தன்று அக­திகள் பலர், பட­குகள் மூலம் ஆங்­கிலக் கால்­வாயைக் கடந்து பிரித்­தா­னி­யா­வுக்குள் நுழைய முயன்­றுள்­ளனர்.
ஆட்­க­டத்தல் கும்பல் மூலம் அவர்கள் சட்­ட­வி­ரோ­த­மாக அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ளனர். அவர்­களில் சிலர் பாது­காப்பு அங்கி அணி­யாமல் சாதா­ரண படகில் பயணம் செய்­துள்­ளனர். இந்­த­நி­லையில், ஒரு படகு பழு­த­டைந்­ததால் அதில் பய­ணித்­த­வர்கள் தத்­த­ளித்­துக்­கொண்­டி­ருந்­தனர்.

இதை­ய­டுத்து, கட­லோர காவல்­ப­டையின் உலங்­கு­வா­னூர்­திகள் மூல­மா­கவும், பட­கு­களில் சென்றும் அவர்­களை மீட்­டனர். இதன்­படி, ஆங்­கிலக் கால்­வாயின் 5 இடங்­களில் இருந்து 2 குழந்­தைகள் உள்­ளிட்ட 40 அக­திகள் மீட்­கப்­பட்­டனர். இதே­போன்று, கடந்த சனிக்­கி­ழ­மை­யன்று பிரித்­தா­னியா நோக்கி சென்ற 16 அக­தி­களை பிரான்ஸ் அதி­கா­ரிகள் தடுத்து நிறுத்­தி­யமை குறிப்­பி­டத்­தக்­கது.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.