யட்டிநுவர, வெலம்பட, மாவனெல்லை பகுதிகளில் புத்தர் சிலைகள் சேதம் மாவனெல்லையில் பலத்த பாதுகாப்பு

நால்வர் பொலிஸாரால் கைது; விசாரணைகளுக்கு சி.ஐ.டி. விரைவு; பிரதேசத்தில் பலத்த பாதுகாப்பு

0 1,136

கண்டி மற்றும் மாவ­னெல்லை ஆகிய பிர­தான நக­ரங்­களை அண்­மித்த பகு­தி­களில் ஒரே இரவில்  நான்கு இடங்­களில் புத்தர் சிலைகள் சேத­மாக்­கப்­பட்­டுள்­ளன. இதனால் அப்­ப­கு­தி­களில் பதற்­ற­நிலை ஏற்­பட்­டுள்ள நிலையில், இந்த சம்­ப­வங்­களால் பிர­தே­சத்தில் இன ரீதி­யி­லான வன்­மு­றைகள் ஏற்­ப­டு­வதை தவிர்க்க  பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்­நி­லையில் புத்தர் சிலைகள் தாக்கி சேதப்­ப­டுத்­தப்­பட்ட சம்­ப­வங்கள் தொடர்பில் நேற்று அதி­காலை சந்­தேக நபர் ஒருவர் பொது­மக்­களால் பிடிக்­கப்­பட்டு மாவ­னெல்லை பொலி­ஸா­ரிடம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டுள்ள நிலையில் மேலும் மூன்று சந்­தேக நபர்­களை மாவ­னெல்லை பொலிஸார் கைது செய்­துள்­ளனர். அதன்­படி நால்வர் இது­வரை குறித்த சிலை உடைப்பு விவ­காரம் தொடர்பில் கைது செய்­யப்­பட்­டுள்­ள­தாக பொலிஸார் கூறினர்.

எவ்­வா­றா­யினும் இவ்­வா­றான புத்தர் சிலை உடைப்பு நட­வ­டிக்­கைகள் கண்டி மற்றும் மாவ­னெல்லை பகு­தியில் தொடர்ச்­சி­யாகப் பதி­வா­கி­யுள்­ளதால் அது தொடர்பில் விஷேட விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்து பின்­ன­ணியில் உள்­ளோரை கண்­ட­றி­யு­மாறு பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜய­சுந்­தர குற்றப் புல­னாய்வுப் பிரி­வுக்கு (சி.ஐ.டி.) ஆலோ­சனை வழங்­கி­ய­தாக பொலிஸ் பேச்­சாளர் பொலிஸ் அத்­தி­யட்­சகர் ருவன் குண­சே­கர கூறினார். அதன்­படி நேற்று சி.ஐ.டி.யின் சிறப்புக் குழு­வொன்று கண்டி மற்றும் மாவ­னெல்­லைக்கு விரைந்­துள்­ள­தா­கவும் பொலிஸ் அத்­தி­யட்­சகர் ருவன் குண­சே­கர கூறினார்.

ஏற்­க­னவே கடந்­த­வாரம் மாவ­னெல்லை பொலிஸ் பிரிவில்  இரண்டு பாதை­யோர புத்தர் சிலைகள் தாக்­கு­த­லுக்கு உள்­ளா­கி­யி­ருந்­தன. இது தொடர்பில் மாவ­னெல்லை பொலிஸார் விசா­ர­ணை­களை ஆரம்­பித்­தி­ருந்த நிலையில், நேற்று அதி­காலை 3.00 மணி­ய­ளவில் வெலம்­பட பொலிஸ் பிரிவின் லெயம்­க­ஹ­வல பகு­தியில் மூன்­றரை அடி உய­ர­மான புத்தர் சிலை அடை­யாளம் தெரி­யா­தோரின் தாக்­கு­தலால் சேதப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. அதனை அண்­டிய பகு­தி­யி­லி­ருந்த மேலும் மூன்று சிறு சிலை­களும் சேதப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.

இந்­நி­லையில்  நேற்று அதி­காலை 4.00 மனி­ய­ளவில்  மாவ­னெல்லை – திது­ரு­வத்த சந்­தியில் உள்ள புத்தர் சிலையும் தாக்கி சேதப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.  இதன்­போது அந்த சிலையை தாக்க மோட்டார் சைக்­கிளில் வந்­த­தாகக் கூறப்­படும் இரு­வரில் ஒரு­வரை பிர­தே­ச­வா­சிகள் பிடித்து மாவ­னெல்லை பொலி­சா­ரிடம் ஒப்­ப­டைத்­துள்­ளனர். இதன்­போது அந்த சந்­தேக நபரின் கையில் முறிவு ஏற்­பட்­டுள்­ளதால் அவர் மாவ­னெல்லை வைத்­தி­ய­சா­லையில் பொலிஸ் காவலில் சிகிச்­சை­க­ளுக்­காக சேர்க்­கப்­பட்­டுள்ளார். இந்­நி­லையில் அதன் பின்னர் மாவ­னெல்லை பொலிஸார் முன்­னெ­டுத்த விஷேட விசா­ர­ணை­களில் சந்­தே­கத்தின் பேரில் மேலும் மூவர் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர். இந்­நி­லையில் இவ்­வாறு கைது செய்­யப்­பட்ட நால்­வரும் மாவ­னெல்லை பகு­தி­களை அண்­மித்த முஸ்­லிம்கள் எனப் பொலிஸார் கூறினர்.

இத­னை­விட யட்­டி­நு­வர ஸ்ரீ தொடங்­வல நாக விகாரை வளா­கத்தில் உள்ள புத்தர் சிலை ஒன்றும் தாக்கி சேதப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. இச்­சம்­பவம் தொடர்பில் ஸ்தலத்­துக்கு சென்­றுள்ள கண்டி மற்றும் பேரா­தனை பொலிஸார், தாக்­கப்­பட்ட புத்தர் சிலையை தமது பொறுப்பில் எடுத்­துள்­ளனர். அத்­துடன் விகா­ரையின் சி.சி.ரி.வி. கண்­காணிப்பு கமரா பதி­வு­க­ளையும் பெற்று விஷேட விசா­ர­ணை­களை ஆரம்­பித்­துள்­ளனர்.

ஒரே இரவில் இடம்­பெற்ற இந்த நட­வ­டிக்­கை­களால் மீளவும் கண்டி பகு­தி­களில் இன வன்­மு­றைக்கு திட்­ட­மி­டப்­ப­டு­கின்­றதா என்ற சந்­தேகம் எழுந்­துள்ள நிலையில், பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜய­சுந்­தர எந்த அசம்­பா­வி­தமும் இடம்­பெ­றாமல் பாது­காப்பை உறுதி செய்­யு­மாறு பொலிஸ் உய­ர­தி­கா­ரி­க­ளுக்கு உத்­த­ர­விட்­டுள்ளார்.

அதன்­படி கண்டி மற்றும் மாவ­னெல்லை பகு­தி­களில் தேவை­யான பாது­காப்­புக்கு பொலிஸ் விஷேட அதி­ரடிப் படை­யி­னரும் உத­விக்­காக வர­வ­ழைக்­கப்­பட்­டுள்­ள­தாக பொலிஸ் தலை­மை­யக தக­வல்கள் தெரி­வித்­தன.

இத­னை­விட மத்­திய மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் எஸ்.எம். விக்­கி­ர­ம­சிங்­கவின் நேரடிக் கட்­டுப்­பாட்டில் கண்டி பிரதிப் பொலிஸ்மா அதிபர் ரண­வீ­ரவின் கீழ் விஷேட பாது­காப்பு கட்­ட­மைப்­புக்­களும் உரு­வாக்­கப்­பட்­டுள்­ளன.

இந்­நி­லை­யி­லேயே இந்த புத்தர் சிலை உடைப்பு விவ­கா­ரங்கள் தொடர்பில் பிரத்­தி­யேக விசா­ர­ணை­களை முன்­னெ­டுக்க சி.ஐ.டி.யின் பிர­தான பொலிஸ் பரி­சோ­தகர் ஒரு­வரின் கீழான சிறப்­புக்­குழு கண்டி மற்றும் மாவ­னெல்லை நோக்கி அனுப்­பப்­பட்­டுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.

விசேட உயர்­மட்ட கூட்டம்

மாவ­னெல்­லையில் இனங்­க­ளுக்­கி­டையில் அசா­தா­ரண நிலை உரு­வா­கா­ம­லி­ருப்­ப­தற்­காக நேற்றுக் கேகாலை மாவட்ட அர­சாங்க அதிபர் தலை­மையில் மாவ­னெல்லை பிர­தேச செய­லாளர் அலு­வ­ல­கத்தில் கூட்டம் ஒன்று ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்­தது.  இக்­கூட்­டத்தில் அமைச்சர் கபீர் ஹாசிமும் கலந்து கொண்டார். மற்றும் உதவி பொலிஸ் அத்­தி­யட்­சகர், விசேட பொலிஸ் அத்­தி­யட்­சகர், பொலிஸ்  நிலைய பொறுப்­ப­தி­காரி, மாவ­னெல்லை பிர­தேச செய­லாளர், சர்வ மதத் தலை­வர்கள், மாவ­னெல்லை பிர­தே­சத்தின் பள்ளி வாசல்­களின் நிர்­வா­கிகள் சம்­பவம் இடம்­பெற்ற பிர­தே­சத்தின் பள்­ளி­வாசல் நிர்­வா­கிகள், பன்­ச­லையின் பௌத்த குரு­மார்கள் என்போர் கூட்­டத்தில் கலந்து கொண்­டி­ருந்­தனர்.

பிர­தே­சத்தின் சமா­தா­னத்தை நிலை நிறுத்­து­வ­தற்கும் இன முரண்­பா­டு­களைத் தோற்­று­விக்கும் இவ்­வா­றான சம்­ப­வங்­களை மேற்­கொள்­ப­வர்­களை சட்­டத்தின் முன் நிறுத்­து­வ­தற்கு உதவி புரி­யு­மாறும் பொலிஸ் அதி­கா­ரிகள் வேண்­டுகோள் விடுத்­தனர்.

மதத்­தினை நிந்­திக்கும் இவ்­வா­றான செயல்கள் தனிப்­பட்­ட­வர்­க­ளி­னாலே மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றன. இதன் பின்­ன­ணியில் எந்த அமைப்பும் இல்லை. இவ்­வா­றான சட்­ட­வி­ரோத செயல்­களில் ஈடு­ப­டு­வோரை இனங்­காண பூரண ஒத்­து­ழைப்பு வழங்­கு­வ­தாக முஸ்­லிம்கள் தரப்பில் உத்­த­ர­வா­த­ம­ளிக்­கப்­பட்­ட­தாக ஹிங்­குள பள்­ளி­வாசல் தலை­வரும் மாவ­னெல்லை பள்­ளி­வாசல் சம்­மே­ள­னத்தின் தலை­வ­ரு­மான ஹமீத் ஏ.அஸீஸ் தெரி­வித்தார்.

உலமா சபையின் அவ­சர கூட்டம்

புத்தர் சிலை உடைப்பு தொடர்­பாக அகில இலங்கை ஜம் இய்­யத்துல் உலமா சபை மேற்­கொள்ள வேண்­டிய நட­வ­டிக்­கைகள் பற்றி நேற்று ஆராய்ந்­தது, அகில இலங்கை ஜம் இய்­யத்துல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஐ.எம். ரிஸ்வி முப்தி தலைமையில் இக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்துக்கமைய உலமாசபை நேற்று ஜனாதிபதி, பிரதமர் மற்றும் பொலிஸ் மா அதிபருக்கு கடிதங்களை அனுப்பி வைத்துள்ளது.

நாட்டில் இனக் கலவரங்களை ஏற்படுத்தும் வகையில் பிரச்சினைகளை உருவாக்குபவர்களுக்கு எதிராக அரசாங்கம் உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். சகவாழ்வினை அழிவுக்குள்ளாக்கும் வகையில் செயற்படுபவர்களுக்கு எந்தப் பாகுபாடும் இல்லாமல் அவர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என உலமா சபை கோரியுள்ளது என உலமா சபையின் பிரதிச் செயலாளர் மௌலவி எம்.எஸ்.எம். தாஸிம் தெரிவித்தார்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.