மத்ரசா மாணவர்களை வெயிலில் முழந்தாளிடச் செய்து தண்டனை

0 73

அம்­பாறை மாவட்­டத்தின் மரு­த­முனை பிர­தே­சத்தில் அமைந்­துள்ள அரபுக் கல்­லூரி ஒன்றில் கல்வி பயிலும் மாண­வர்­களை சுட்­டெ­ரிக்கும் வெயிலில் முழந்­தா­ளிடச் செய்த சம்­பவம் பெரும் கண்­ட­னத்தை தோற்­று­வித்­துள்­ளது.

இச் சம்­ப­வத்தை கண்­ணுற்ற பிர­தே­ச­வா­சி­யொ­ருவர் அதனை வீடி­யோ­வாகப் பதிவு செய்து சமூக வலைத்­த­ளங்­களில் வெளி­யிட்­டுள்ளார். அதில் சுமார் எட்டு மாண­வர்கள் வெயிலில் முழந்­தா­ளிடச் செய்­யப்­பட்­டுள்­ளமை தெளி­வாகத் தெரி­கி­றது. அத்­துடன் இம்­மா­ண­வர்­க­ளுக்கு தண்­டனை வழங்­கிய ஆசி­ரி­யர்கள் இருவர் கல்­லூ­ரியின் மேல் மாடியில் நிற்­பதும் பகலில் தூங்க வேண்­டிய நேரத்தில் தூங்­காது விளை­யாடிக் கொண்­டி­ருந்­த­மைக்­கா­கவே இத்­தண்­டனை வழங்­கப்­ப­டு­வ­தாக ஆசி­ரியர் ஒருவர் கூறு­வதும் தெளி­வாகக் கேட்­கி­றது.

குறித்த வீடி­யோவைப் பதிவு செய் நபர் மாண­வர்­க­ளுக்கு இவ்­வாறு நோன்­புடன் தண்­டனை வழங்­கு­வதை அனு­ம­திக்க முடி­யாது என எதிர்ப்பு வெளி­யிட்­டதைத் தொடர்ந்து குறித்த மாண­வர்கள் மீண்டும் அரபுக் கல்­லூரி கட்­டி­டத்­திற்குள் செல்­வதும் இக் காணொ­ளியில் பதி­வா­கி­யுள்­ளது.

அண்­மையில் சாய்ந்­த­ம­ருது பிர­தே­சத்தில் மத்­ரசா ஒன்றில் மாணவர் ஒருவர் தாக்­கப்­பட்டு உயி­ரி­ழந்த சம்­பவம் பதி­வா­கி­யி­ருந்த நிலை­யி­லேயே, தற்­போது மரு­த­முனை பிர­தே­சத்தில் மாண­வர்­க­ளுக்கு தண்­டனை வழங்­கிய சம்­பவம் இடம்­பெற்று பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

தற்­போது நாட்டின் பல்­வேறு பகு­தி­க­ளிலும் வெப்­ப­நிலை உயர்ந்­துள்ள நிலையில், வெளியில் நட­மா­டு­வதைத் தவிர்த்துக் கொள்­ளு­மாறு மக்கள் அறி­வு­றுத்­தப்­பட்­டுள்ள நிலையில் அரபுக் கல்­லூரி ஒன்றில் இவ்­வாறு மாண­வர்கள் மனி­தா­பி­மா­ன­மற்ற வகையில் தண்­டிக்­கப்­பட்­டுள்­ளமை விச­னத்தைத் தோற்­று­வித்­துள்­ளது.

இச் சம்­பவம் தொடர்பில் பொலிஸ் நிலை­யத்தில் முறைப்­பாடு செய்­யு­மாறும் சட்­ட­ந­ட­வ­டிக்கை எடுக்­கு­மாறும் சமூக வலைத்தளங்களில் பலரும் வலியுறுத்தியுள்ளனர். இது தொடர்பில் சம்பந்தப்பட்ட அரபுக் கல்லூரி நிர்வாகமும் பிரதேச ஜம்இய்யதுல் உலமாவும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் தெரிய வருகிறது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.