உயிர்த்த ஞாயிறு வழக்கில் 23 முஸ்லிம்கள் பலிகடாக்கள் என்கிறார் கர்தினால்

0 116

ஏ.ஆர்.ஏ.பரீல்

அர­சாங்கம் உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் தொடர்­பி­லான ஜனா­தி­பதி விசா­ரணை ஆணைக்­கு­ழுவின் அறிக்­கையில் 1500 பக்­கங்­களை மறைத்து விட்­டது. எமக்கு வழங்­கிய ஆணைக்­கு­ழுவின் அறிக்­கையில் குறிப்­பிட்ட 1500 பக்­கங்­களும் காணப்­ப­ட­வில்லை. இதே­வேளை அரசு சஹ்ரான் மற்றும் சஹ்ரான் குழு­வி­ன­ருடன் தொடர்­பி­லி­ருந்­தார்கள் எனக் குற்றம் சுமத்தி 23 முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக வழக்கு தாக்கல் செய்­துள்­ளது. இந்த 23 முஸ்­லிம்­களும் இத்­தாக்­கு­தலின் பலிக்­க­டா­வாக்­கப்­பட்­டுள்­ளார்கள் என கர்­தினால் மல்கம் ரஞ்சித் தெரி­வித்­துள்ளார்.

கொழும்பு திருச்­ச­பையின் கேட்போர் கூடத்தில் நடை­பெற்ற நிகழ்­வொன்றில் கலந்து கொண்டு உரை நிகழ்த்­து­கை­யிலே அவர் இவ்­வாறு கூறினார்.

அவர் தொடர்ந்தும் உரை நிகழ்த்­து­கையில் தெரி­வித்­த­தா­வது, அர­சாங்கம் எமது கோரிக்­கைக்கு இணங்க ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுவின் அறிக்­கையை ஆறு சிடிக்­களில் எமக்கு வழங்­கி­யது. எமது சட்­டத்­த­ர­ணிகள் அந்த அறிக்­கையை கவ­ன­மாக ஆராய்ந்­தார்கள். அதில் 70 ஆயிரம் பக்­கங்கள் உள்­ளன. என்­றாலும் அறிக்­கையின் 1500 பக்­கங்­களை அரசு எமக்கு வழங்­க­வில்லை. இந்த 1500 பக்­கங்­க­ளையும் அர­சாங்கம் சூட்­சு­ம­மாக தன்­னி­டமே வைத்­துக்­கொண்­டுள்­ளது என்றும் கூறினார்.

அவர் தொடர்ந்தும் தெரி­விக்­கையில், சஹ்ரான் ஹாசிமின் மனைவி மற்றும் சாரா ஜெஸ்மின் ஆகிய முக்­கி­ய­மான சாட்­சி­களால் வழங்­கப்­பட்ட சாட்­சி­யங்­க­ளையே அர­சாங்கம் எம்­மிடம் கைய­ளிக்­க­வில்லை. இது பாரிய சந்­தே­கத்­துக்­கு­ரி­ய­தாகும். தற்­கொலை தாக்­கு­தலில் ஈடு­பட்ட சஹ்ரான் குழு­வி­ன­ருடன் நெருங்­கிய தொடர்­பி­லி­ருந்­தவர் சாரா ஜெஸ்மின் எனும் பெண்­ணாகும். அவ­ரது சாட்­சி­யங்கள் எமக்கு வழங்­கப்­ப­ட­வில்லை.

உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் விசா­ரணை ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுவின் அறிக்­கை­யினை முழு­மை­யாக எமக்கு வழங்­கும்­படி நாங்கள் பல கடி­தங்கள் எழு­திய பின்பே அறிக்கை எமக்கு வழங்­கப்­பட்­டது. இதே­வேளை முழு­மை­யான அறிக்கை எமக்கு வழங்­கப்­பட்­ட­தாக அரசு ஊட­கங்­க­ளுக்கு பொய் கூறி­யுள்­ளது.

அமைச்­சர்­களும், அரச அதி­கா­ரி­களும் இத்­தாக்­குதல் தொடர்­பான 99 வீத விசா­ர­ணைகள் முடிந்­து­விட்­ட­தாக தெரி­விக்­கி­றார்கள். ஆனால் ஆணைக்­கு­ழுவின் அறிக்­கையை நாம் ஆராய்ந்த போது அதில் உண்­மை­யில்லை என்­பது உறு­தி­யா­கி­யுள்­ளது. ஏனென்றால் அர­சாங்கம் சஹ்ரான் மற்றும் அவ­ரது குழு­வி­ன­ருடன் தொடர்பில் இருந்­த­வர்கள் என்று குற்றம் சுமத்தி 23 முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக வழக்கு தாக்கல் செய்­துள்­ளது. அரச அதி­கா­ரிகள் இந்த 23 பேரையும் தற்­போது பலி­க்க­டா­வாக்கப் பார்க்­கி­றார்கள். இத்­தாக்­குதல் குறித்த அனைத்து விட­யங்­க­ளையும் விசா­ரணை செய்­வதை தவிர்த்து 23 முஸ்­லிம்கள் மீது குற்­றப்­பத்­தி­ரிகை தாக்கல் செய்­யப்­பட்­டுள்­ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் நடாத்­தப்­பட்டு அடுத்த மாதத்­துடன் ஐந்து வரு­டங்கள் பூர்த்­தி­யா­கின்­றன. நாங்­கள் புதிய சுயா­தீன விசா­ர­ணை­களைக் கோரி­வரும் நிலையில் அதி­கா­ரிகள் பொது மக்­களை தவ­றாக வழி­ந­டத்தும் திட்­டங்­க­ளையே முன் வைக்­கின்­றனர்.

இதே­வேளை இரா­ணுவ புல­னாய்வு பிரிவின் இயக்­கு­ந­ருக்கும் சஹ்ரான் குழு­வி­ன­ருக்கும் இடையில் தொடர்­பினை ஏற்­ப­டுத்­து­வதில் தான் ஈடு­பட்­டமை தொடர்பில் ஆஸாத் மெள­லானா விளக்­க­ம­ளித்­துள்ளார். உறுதி செய்­துள்ளார். இதில் பிள்­ளையான் தொடர்­பு­பட்­டி­ருந்­த­தா­கவும் கூறி­யுள்ளார். இரா­ணுவ புல­னாய்வு பிரி­வினர் வழங்­கிய நிதியை பிள்­ளையான் ஊடாக சஹ்ரான் குழு­வினர் பெற்­றுக்­கொண்­ட­தா­கவும் ஆசாத் மெள­லானா தெரி­வித்­துள்ளார்.

இரா­ணுவ புல­னாய்வு பிரிவின் தலை­வ­ராக செயற்­பட்ட சுரேஷ் சாலே­வுக்கும் சஹ்ரான் ஹாசிம் குழு­வி­ன­ருக்­கு­மி­டையில் சந்­திப்­புகள் இடம் பெற்­ற­தா­கவும் புதிய தக­வல்கள் வெளி­யா­கி­யுள்­ளன. தென்­ப­குதி அதி­வேக நெடுஞ்­சா­லையில் ஜெல­னி­க­மயில் சந்­தே­கத்­துக்­கி­ட­மான பொருட்­க­ளுடன் காணப்­பட்ட லொறி­யொன்­றினை சோதனை செய்­யாது விடு­விக்­கு­மாறு தற்போதைய பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

குறிப்பிட்ட லொறி முன்னாள் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவுக்கு நெருக்கமான அவன்ட் கார்டே பாதுகாப்புச் சேவைக்கு சொந்தமானது என தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பிட்ட லொறியின் வெடி மருந்துகள் காணப்பட்டிருக்கலாம் என ஆசாத் மெளலானா தெரிவித்துள்ளார் எனவும் கர்தினால் மெல்கம் ரஞ்சித் தெரிவித்தார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.