மருதமுனையில் சோகம்; நடந்தது என்ன?

விசேட தேவையுடைய 29 வயது இளைஞனும் 18 வயது யுவதியும் கழுத்து வெட்டப்பட்டு ஜனாஸாவாக மீட்பு

0 71

ஏ.எல்.எம்.ஷினாஸ்
மரு­த­முனை

பெரி­ய­நீ­லா­வணை பொலிஸ் பிரி­வுக்­குட்­பட்ட மரு­த­முனை பாக்­கி­யத்து சாலிஹாத் வீதியில் வசித்து வந்த ஒரே குடும்­பத்தைச் சேர்ந்த முகம்­மது கலீல் முஹம்­மது றிகாஸ் (வயது 29) மற்றும் முஹம்­மது கலீல் பாத்­திமா பஸ்­மியா (வயது 18) ஆகிய விசேட தேவை­யு­டைய இரு பிள்­ளை­களும் கடந்த (14) வியா­ழக்­கி­ழமை காலை 9.00 மணி­ய­ளவில் தாம் வசித்­து­வந்த வீட்டில் கழுத்து வெட்­டப்­பட்ட நிலையில் ஜனா­ஸா­வாக மீட்­கப்­பட்ட சம்­பவம் குறித்த பிர­தேசம் எங்கும் பெரும் சோகத்­தையும் அதிர்ச்­சி­யையும் ஏற்­ப­டுத்­தி­யது.

நடந்­தது என்ன?
உயி­ரி­ழந்த இளைஞர் மற்றும் யுவ­தியின் தாய் கடந்த 6 மாதங்­க­ளுக்கு முன்னர் புற்­று­நோயால் பாதிக்­கப்­பட்ட நிலையில் மர­ண­மா­கி­யி­ருந்தார். ஏனைய இரு சகோ­த­ரர்கள் வெளி­நாட்டில் தொழில் புரிந்து வரு­கி­றார்கள். இந்­நி­லையில் உயி­ரி­ழந்த இளை­ஞ­ரையும் யுவ­தி­யையும் பரா­ம­ரித்து வந்த தந்­தை­யான முஹம்­மது மீர்ஸா முகம்­மது கலீல் (வயது 63) என்­பவர் தானும் தற்­கொலை செய்து கொள்­ளப்­போ­வ­தாக தனது கைய­டக்க தொலை­பேசி ஊடாக கூறி­விட்டு கழுத்தை அறுக்க முற்­பட்­டுள்ளார். இதன்­போது உற­வி­னர்­களால் காப்­பாற்­றப்­பட்டு பின்னர் கல்­முனை ஆதார வைத்­தி­ய­சா­லைக்கு பொது­மக்­களின் உத­வி­யுடன் அழைத்து செல்­லப்­பட்டார். உயி­ரி­ழந்த இளைஞர் மற்றும் யுவதியின் தந்தை தானே இந்த கொலைகளைச் செய்­த­தாக தனது வாக்­கு­மூ­லத்­திலும் பொலி­சா­ருக்கு தெரி­வித்­துள்ளார்.

குறித்த சம்­பவம் மரு­த­முனை பிர­தே­சத்தில் பெரும் அதிர்ச்­சி­யையும் சோகத்­தையும் ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. ஸ்தலத்­திற்கு வருகை தந்த பெரி­ய­நீ­லா­வணை பொலிஸார் சம்­பவம் தொடர்­பான விரி­வான விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்­தனர்.

பொலி­ஸாரின் நட­வ­டிக்கை
சம்­பவம் தொடர்பில் பெரி­ய­நீ­லா­வணை பொலிஸ் நிலையப் பொறுப்­ப­தி­காரி பொலிஸ் பரி­சோ­தகர் ஜே.எஸ்.கே.வீர­சிங்கவின் வழி­ந­டத்­தலில் பொலிசார் சம்­பவ இடத்­திற்கு சென்று விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்­தனர். சம்­பவ இடத்­திற்கு வருகை தந்த பொலிஸார் ஜனா­ஸாக்கள் காணப்­பட்ட வீட்­டிற்கு உரிய பாது­காப்­பினை வழங்­கினர். தட­ய­வியல் பொலி­ஸாரும் மோப்­பநாய் பிரி­வி­னரும் சம்­பவ இடத்­திற்கு வருகை தந்து விசா­ர­ணை­களை மேற்­கொண்­டனர். பின்னர் கல்­முனை நீதி­மன்ற நீதிவான் எம்.எஸ்.எம்.சம்­சுதீன் சம்­பவ இடத்­திற்கு வருகை தந்து விசா­ர­ணை­களை மேற்­கொண்டார். பின்னர் அன்று மாலை, பிரேத பரி­சோ­த­னைக்­காக ஜனா­சாக்கள் அம்­பாறை பொது வைத்­தி­ய­சா­லைக்கு எடுத்துச் செல்­லப்­பட்­டன. இத­னை­ய­டுத்து அன்­றி­ரவு உற­வி­னர்­க­ளிடம் இரு ஜனா­ஸாக்­களும் கைய­ளிக்­கப்­பட்­டன.

சோக­ம­ய­மான மரு­த­முனை
மரு­த­மு­னையில் தந்தை ஒருவர் தனது இரு பிள்­ளை­க­ளையும் கத்­தியால் வெட்டி கொலை செய்து விட்டார் என்ற செய்தி சமூக ஊட­கங்­களில் வைர­லாக பரவ ஆரம்­பித்­ததை அடுத்து, சம்­பவம் நடை­பெற்ற வீட்டை நோக்கி அன்­றைய தினம் மக்கள் படை­யெ­டுத்­தனர். புனித ரமழான் மாதத்தில் நோன்பு நோற்­றி­ருக்கும் நிலையில் இந்தச் சம்­பவம் நடந்­தே­றி­யி­ருப்­பது பிர­தே­சத்தில் பேர­திர்ச்­சியை ஏற்­ப­டுத்­தி­யது. இதனால், மரு­த­முனை சற்று பர­ப­ரப்­ப­டைந்­தது. பிர­தே­சமே மிகவும் சோக­ம­ய­மா­னது.

ஜனாஸா நல்­ல­டக்கம்
குறித்த இந்த சம்­ப­வத்தை கேள்­வி­யுற்று வெளி­நாட்டில் பணி­பு­ரிந்த இரு சகோ­த­ரர்­களும் உட­ன­டி­யாக நாட்­டுக்கு திரும்­பி­ய­தை­ய­டுத்து, மறு­தினம் வெள்­ளிக்­கி­ழமை ஜும்ஆ தொழு­கையின் பின்னர் பாக்­கி­யாத்­துஸ்­ஸா­லிஹாத் ஜும்ஆ பள்­ளி­வா­சலில் ஜனாஸா தொழுகை நடாத்­தப்­பட்டு மரு­த­முனை அக்பர் மைய­வா­டியில் நல்­ல­டக்கம் செய்­யப்­பட்­டது. இந்த ஜனாஸா நல்­ல­டக்­கத்தில் ஆயி­ரக்­க­ணக்­கான பொது­மக்கள் கலந்து கொண்­டனர்.

நல்­ல­டக்­கத்தின் பின்னர் கூடி­யி­ருந்த மக்கள் மத்­தியில் கலா­நிதி அஷ்ஷெய்க் எம்.எல்.முபாறக் (மதனி) ஜனாஸா உரையை நிகழ்த்­தினார். ‘நடக்­கக்­கூ­டாத சம்­பவம் இந்த மண்ணில் நடந்­தே­றி­யி­ருப்­பது எல்­லோ­ருக்கும் கவலை தரு­கி­றது. இச்­சம்­ப­வ­மா­னது புரி­யாத புதி­ராக உள்ள நிலையில், சமூ­கத்தின் பல தரப்­பினர் பக்­கமும் விரல் நீட்­டு­வதை தவிர்த்து பாவங்கள் மன்­னிக்­கப்­பட்ட உள­நலம் குன்­றிய பிள்­ளை­க­ளுக்­காக பிராத்­திப்போம். இறை­யச்சம், இஸ்­லா­மிய செல் நெறிகள் மீறப்­படும் போது உள்­ளங்கள் எவ்வாறு துருப்பிடிக்கும் என்பதற்கு இந்த சம்­பவம் ஓர் எடுத்­து­க்­காட்­டாகும். சமூக ஊடகங்களிலும் சில இணையத்தளங்களிலும் ஜனாஸாக்களின் புகைப்படங்கள் கொடூரமான வகையில் பிரசுரிக்கப்பட்டமை மிகவும் கவ­லைக்­கு­ரி­ய­தாகும். எனவே எதிர்­கா­லத்தில் இவ்­வா­றான செயற்­பா­டு­களை இதனை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன்’ என்றார். – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.