ரமழானிலும் முரண்படும் பள்ளி நிர்வாகங்கள்

0 108

பள்­ளி­வா­சல்கள் அல்­லாஹ்வின் மாளி­கைகள். அதன் சேவ­கர்கள் அல்­லாஹ்வின் சேவ­கர்கள் என்­பதில் எவ்­வித மாற்றுக் கருத்தும் இல்லை. சமூகம் பள்­ளி­வா­சல்­க­ளுக்கு உத­வு­வ­திலும் நன்­கொ­டைகள் வழங்­கு­வ­திலும் ஆர்வம் கொண்­டுள்­ளது. அது புனித சேவை­யா­கவே கரு­தப்­ப­டு­கி­றது.

ஆனால் பள்­ளி­வாசல் நிர்­வா­கங்கள் தொடர்பில் பல்­வேறு முறைப்­பா­டுகள் முன்­வைக்­கப்­பட்டு வரு­கின்­றன. பள்­ளி­வாசல் நிதியில் மற்றும் வக்பு சொத்­து­களில் ஊழல்கள் இடம்­பெற்று வரு­வ­தாக வக்பு சபைக்கும் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்­துக்கும் முறைப்­பா­டுகள் கைய­ளிக்­கப்­பட்­டுள்­ளன.

பள்­ளி­வாசல் நிர்­வாக சபை தெரி­வு­களில் பண பலம், அர­சியல் செல்­வாக்கு உள்­ள­வர்­களின் ஆதிக்கம் மேலோங்­கி­யுள்­ள­மையை காணக் கூடி­ய­தாக உள்­ளது. சில பள்­ளி­வா­சல்­களில் ஒரே நிர்­வா­கிகள் தசாப்த கால­மாக ஆதிக்கம் செலுத்தி வரு­கின்­றனர். பள்­ளி­வா­சலைக் கட்டி ஆளு­கின்­றனர்.

பள்­ளி­வாசல் நிர்­வாகத் தெரி­வுகள் தொடர்­பான பிணக்­குகள் தீர்க்­கப்­ப­டாது வருடக் கணக்கில் வக்பு சபையில் தேங்கிக் கிடக்­கின்­றன. இவ்­வா­றான நிலைமை எதிர்­கா­லத்தில் உரு­வா­காமல் இருப்­ப­தற்கு ஒவ்வோர் பள்­ளி­வா­சல்­களின் ஜமா­அத்­தார்­களும் சமூ­கத்தில் நன்­ம­திப்­புள்ள மார்க்­கத்தில் பற்­றுள்ள சமூக நலன்­பு­ரி­களில் ஆர்­வ­முள்ள புத்­தி­ஜீ­வி­களை நிர்­வா­கி­க­ளாகத் தெரிவு செய்­து­கொள்ள வேண்டும்.

ஒரு சில பள்­ளி­வா­சல்­களில் குறிப்­பாக அதி­க­மான வரு­மானம், வசூல் ஈட்டும் பள்­ளி­வா­சல்­களின் நிர்­வா­கிகள் தாம் தொடர்ந்தும் பத­வியில் இருப்­ப­தற்கே விரும்­பு­கின்­றனர். அவ்­வாறு தசாப்த கால­மாக பத­வியில் இருக்கும் அவர்கள் வரு­டாந்தம் சமர்ப்­பிக்­கப்­பட வேண்­டிய கணக்­க­றிக்­கையைக் கூட சமர்ப்­பிப்­ப­தில்லை.

இதற்கு உதா­ர­ண­மாக கொள்­ளுப்­பிட்டி ஜும்ஆ பள்­ளி­வா­சலைக் குறிப்­பி­டலாம். இப்­பள்­ளி­வா­சலில் தொட­ராகப் பதவி வகித்து வந்த நிர்­வா­கிகள் 2011 முதல் 2023 வரை 12 வருட கால­மாக முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்­துக்கு கணக்­க­றிக்­கையை சமர்ப்­பிக்­க­வில்லை. வக்பு சபை­யினால் அப்­பள்­ளி­வா­ச­லுக்கு புதி­தாக விசேட நிர்­வாக சபை­யொன்று நிய­மிக்­கப்­பட்­டதன் பின்பு 2021, 2022, 2023ஆம் ஆண்­டு­க­ளுக்­கான கணக்­க­றிக்­கை சமர்ப்­பிக்கப்­பட்­டுள்­ளது. அது கணக்­காய்­வுக்­குட்­ப­டாத அறிக்கை என வக்பு சபை தெரி­விக்­கி­றது.

அல்­லாஹ்வின் மாளி­கையை நிர்­வ­கிக்கும் இவர்கள் ஏன் கணக்­கு­களை மறந்து விடு­கி­றார்கள். இது மாத்­தி­ர­மல்ல அந்த நிர்­வாகம் முஸ்லிம் நலன்­புரி நிதியத்­துக்கு செலுத்த வேண்­டிய 6 வீத நிதி­யையும் செலுத்தத் தவ­றி­யுள்­ளது.
இதே­வேளை நோன்பு காலத்­திலும் பழைய நிர்­வாக தலைவர், புதிய நிர்­வாகத் தலைவர் என முட்டி மோதிக் கொள்­கி­றார்கள். பள்­ளி­வா­சலை நிர்­வ­கிப்­ப­வர்­களின் பதவி மோகமே இதற்குக் கார­ண­மாகும். இவ்­வா­றான ஒரு சம்­பவம் மோதரை, எகொ­ட­உ­யன பள்­ளி­வா­சலில் இடம்­பெற்­றி­ருக்­கி­றது.

பள்­ளி­வாசல் மத்­ர­ஸாவின் செயற்­பா­டு­களை முன்னாள் நிர்­வாக சபைத் தலைவர் புதிய நிர்­வா­கத்­திடம் கைய­ளிக்­கா­மையே இதற்குக் காரணம். இந்த முரண்­பாடு பள்­ளி­வா­ச­லுக்குள் சல­ச­லப்­பினை ஏற்­ப­டுத்தி இருவர் காயங்­க­ளுக்­குள்­ளா­கி­யுள்­ளார்கள்.

மூவர் விசாரணைக்காக காலை முதல் மாலை வரை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பொலிஸ் நிலையத்திலேயே அவர்கள் நோன்பும் துறந்துள்ளனர்.

ஏன் இந்த பதவி மோகம். தொடர்ந்து பள்­ளி­வாசல் தலை­வர்­க­ளாக இருக்க விரும்­பு­ப­வர்கள் பள்­ளி­வா­சல்கள் மூலம் இலா­ப­மீட்­டு­கி­றார்­களா? இவ்­வா­றான ஒரு சில நிர்­வா­கிகள் தொடர்பில் வக்பு சபை கூடிய கவனம் செலுத்த வேண்டும்.

மாவட்ட ரீதியில் பதவி வகிக்கும் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­கள கள உத்­தி­யோ­கத்­தர்கள் சிலரும் இவ்­வா­றான பதவி மோகம் கொண்­டுள்ள நிர்­வா­கி­க­ளுக்கு ஒத்­து­ழைப்பு வழங்­கு­வ­தா­கவும் குற்றம் சுமத்­தப்­ப­டு­கி­றது. இவ்வாறான உத்தியோகத்தர்களை திணைக்களம் நெறிப்படுத்த வேண்டும்.

அல்லாஹ்வின் மாளிகைகள் அனைத்து விடயங்களிலும் புனிதம் பெற வேண்டும் என்பதே எமதும் எதிர்பார்ப்பாகும்.

தற்போது அமுலிலுள்ள வக்பு சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள அமைச்சர் விதுர விக்ரமவினால் நியமிக்கப்பட்டுள்ள குழு பள்ளிவாசல்களில் இவ்வாறான பிரச்சினைகள் எழா வண்ணம் கடுமையான சட்டத் திருத்தங்களை முன்மொழிய வேண்டும்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.