பொருளாதார மாற்றத்தை நோக்கி நாட்டை இட்டுச் செல்வதற்கு உலகத்திற்கு உகந்த வகையிலான புதிய கல்வி முறைமை அவசியம்

துறைசார் நிபுணர்களை உருவாக்கக்கூடிய கல்வி முறை எதிர்காலத்தில் உருவாக்கப்படும் என்கிறார் ஜனாதிபதி

0 143

நாட்டை பொரு­ளா­தார மாற்­றத்­திற்கு இட்டுச் செல்­வ­தற்கு, உல­கத்­திற்கு உகந்த வகை­யி­லான புதிய கல்வி முறைமை அவ­சி­ய­மா­னது எனவும், அதன் மூலம் போட்டி நிறைந்த உலகச் சந்­தைக்குத் தேவை­யான துறைசார் நிபு­ணர்­களை உரு­வாக்க முடியும் எனவும் ஜனா­தி­பதி ரணில் விக்­க­ர­ம­சிங்க சுட்­டிக்­காட்­டினார்.

பரீட்சை சுமையை குறைத்து, ஆங்­கிலம் மற்றும் தொழில்­நுட்ப பாடங்­களை கல்வி முறையில் உள்­ள­டக்கி, தொழி­லுக்கு ஏற்­ற­வ­கை­யி­லான மாண­வர்­களை உரு­வாக்க எதிர்­பார்ப்­ப­தா­கவும், புதிய தொழிற்­கல்­லூ­ரிகள் மற்றும் தொழில்­நுட்ப பல்­க­லைக்­க­ழ­கங்­களை நிறு­வு­வ­தற்கு திட்­ட­மி­டப்­பட்­டுள்­ள­தா­கவும் ஜனா­தி­பதி தெரி­வித்தார்.

கொள்­ளுப்­பிட்டி புனித அந்­தோ­னியார் பெண்கள் கல்­லூ­ரியில் நேற்­றை­ய­தினம் பாட­சாலை மாண­வர்­க­ளுக்­கான இல­வச பாட­சாலை பாடப் புத்­த­கங்கள் மற்றும் பாட­சாலை சீரு­டைகள் வழங்கும் தேசிய நிகழ்வில் கலந்து கொண்டு உரை­யாற்றும் போதே ஜனா­தி­பதி ரணில் விக்­ர­ம­சிங்க இதனைக் குறிப்­பிட்டார்.

பாட­சாலை பாடப்­புத்­த­கங்கள் மற்றும் சீரு­டைகள் வழங்கும் இந்த நிகழ்­வுடன் இணைந்­த­தாக நாட­ளா­விய ரீதியில் உள்ள 10,126 பாட­சா­லைகள் மற்றும் 822 பிரி­வெ­னாக்­களின் பிக்கு மாணவர் மற்றும் பாட­சாலை மாண­வர்கள் ஆகி­யோ­ருக்கும் பாடப்­புத்­த­கங்கள் மற்றும் சீரு­டைகள் வழங்­கப்­படும்.
இதன்­போது அடை­யா­ரீ­தி­யாக, பிக்கு மாணவர் மற்றும் பாட­சாலை மாண­வர்கள் சில­ருக்கு சீரு­டைகள் மற்றும் பாட­சாலை பாடப்­புத்­த­கங்கள் ஜனா­தி­ப­தி­யினால் வழங்கி வைக்­கப்­பட்­டன.

ஜனா­தி­பதி ரணில் விக்­ர­ம­சிங்­க­விற்கு புனித அந்­தோ­னியார் பெண்கள் கல்­லூ­ரியின் அதிபர் ஏன் கிறிஸ்டீன் நினைவுப் பரிசை வழங்கி வைத்தார்.
இங்கு உரை­யாற்­றிய ஜனா­தி­பதி ரணில் விக்­ர­ம­சிங்க மேலும் கூறி­ய­தா­வது:
எனது வீட்­டிற்கு அருகில் ஐந்து பாட­சா­லைகள் உள்­ளன. நான் கற்ற றோயல் கல்­லூரி மற்றும் தேர்ஸ்டன் கல்­லூரி, மகளிர் கல்­லூரி, மகா­நாம கல்­லூரி மற்றும் புனித அந்­தோ­னியார் பெண்கள் கல்­லூரி என்­ப­னவே அவை. அதனால் எனக்கு கல்­வித்­து­றையில் அதிக கவனம் செலுத்த முடிந்­துள்­ளது. ஜனா­தி­பதி ஜே.ஆர் ஜய­வர்­த­னவின் ஆட்சிக் காலத்தில் இப்­பா­ட­சா­லை­களின் அபி­வி­ருத்­தியில் கவனம் செலுத்­தினோம்.

2022 இல் நாட்டில் ஏற்­பட்ட கடு­மை­யான பொரு­ளா­தார நெருக்­க­டியால், கல்வித் துறை மட்­டு­மல்ல, அனைத்துத் துறை­களும் சரிவைச் சந்­தித்­தன. பாட­சாலை பாடப்­புத்­த­கங்கள், சீரு­டைகள் வழங்க முடி­ய­வில்லை. அந்த பொரு­ளா­தார நெருக்­க­டியில் இருந்து நாட்டை மீட்க எந்த தலை­வரும் முன்­வ­ர­வில்லை. அப்­போது, சவாலை ஏற்று, நாட்டின் பொரு­ளா­தா­ரத்தை மீட்­டெ­டுக்கும் திட்­டத்தை ஆரம்­பித்தேன்.

இந்த பொரு­ளா­தார வேலைத்­திட்­டத்­தினால் இன்று நாடு ஓர­ளவு பொரு­ளா­தார ஸ்திரத்­தன்மை பெற்று வரு­கின்­றது. அதன்­படி, பாட­சாலை சீரு­டைகள் மற்றும் பாடப்­புத்­த­கங்­களை உரிய நேரத்தில் வழங்க அர­சாங்­கத்­தினால் முடிந்­துள்­ளது. அதற்­காக 14 பில்­லியன் ரூபா­வுக்கும் அதிக தொகை செல­வி­டப்­பட்­டது.
கல்வி மறு­சீ­ர­மைப்பின் ஊடாக நாட்டில் புதிய கல்வி முறை­யொன்றை உரு­வாக்க வேண்டும். உல­கிற்கு பொருத்­த­மான தொழில் படை­யினை உரு­வாக்­கு­வது குறித்து கவனம் செலுத்த வேண்டும். நாட்டில் பொரு­ளா­தார புரட்­சியை ஏற்­ப­டுத்­து­வ­தற்கு கல்வி முறையை உல­கிற்கு பொருத்­த­மான வகையில் மாற்­றி­ய­மைக்க வேண்டும். அதன் மூலம் உல­கிற்கு தேவை­யான தொழில் படை­யினை உரு­வாக்க முடியும்.

அத­னூ­டாக சர்­வ­தேச சந்­தை­யுடன் போட்­டி­யிடும் வாய்ப்பு எமக்கு கிடைக்கும். பரீட்­சை­களின் சுமை­களை குறைத்து ஆங்­கிலம் மற்றும் தொழில்­நுட்ப பாடங்­களை கல்வி முறையில் உள்­வாங்கி தொழில் முறை­க­ளுக்கு உகந்த சமூ­கத்தை உரு­வாக்க எதிர்­பார்க்­கிறோம். அதற்­காக தொழில், தொழில்­நுட்பக் கல்­லூ­ரி­களை உரு­வாக்­கவும் எதிர்­பார்க்­கிறோம்.

நாம் எவரும் 2022 இல் இருந்த நிலைக்குச் செல்­வதை விரும்­ப­வில்லை. எரி­வாயு, எரி­பொருள் உணவு வரி­சைகள் அற்ற சமூ­கமே அனை­வ­ரி­னதும் எதிர்­பார்ப்­பாகும். எனவே அவ்­வா­றான யுகத்­திற்குள் மீண்டும் நாடு செல்­லா­ம­லி­ருக்க வலு­வான பொரு­ளா­தா­ரத்தை நாம் உரு­வாக்­குவோம். வலு­வான பொரு­ளா­தாரம் கொண்ட இலங்­கையை கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்­கான வேலைத்­திட்­டத்­தினை நாம் ஆரம்­பித்­துள்ளோம். என ஜனா­தி­பதி ரணில் விக்­ர­ம­சிங்க தெரி­வித்தார்.

கல்வி அமைச்சர் கலா­நிதி சுசில் பிரேமஜ­யந்த,
இந்த தேசிய வேலைத்­திட்­டத்­திற்கு இணை­யாக 09 மாகா­ணங்­களின் அனைத்து பாட­சாலை மாண­வர்­க­ளுக்கும் பாட­சாலை சீருடை மற்றும் பாடப்­புத்­தங்கள் இன்று (நேற்று) வழங்­கப்­ப­டு­கின்­றன. ஜனா­தி­பதி ரணில் விக்­ர­ம­சிங்க ஜனா­தி­ப­தி­யாக பத­வி­யேற்றுக் கொண்­டதன் பின்னர் கல்­வித்­து­றையின் நான்கு பிரி­வு­களை ஒரு அமைச்சின் கீழ் கொண்டு வந்து மனித வளத்தை முகா­மைத்­துவம் செய்து மாண­வர்­க­ளுக்கு முறை­யான கல்­வியை வழங்­கு­வ­தற்­கான வச­தி­களை ஏற்­ப­டுத்­தினார்.

இன்று (நேற்று) வழங்­கப்­படும் பாட­சாலை சீரு­டையில் 80% சீன அர­சாங்­கத்தின் அன்­ப­ளிப்­பாகும். எஞ்­சிய 20% சத­வீதம் இலங்கை அர­சாங்­கத்தின் செலவில் பெற்­று­கொ­டுக்­கப்­பட்­டது.

இந்­திய கடன் உத­வியில் கிடைத்த கட­தா­சியை கொண்டு பாடப் புத்­த­கங்கள் அச்­சி­டப்­பட்­டன. அதனால் உரிய தினத்தில் பாடப்­புத்­தங்­களை அர­சாங்­கத்­தினால் வழங்க முடிந்­துள்­ளது. அரச அச்­சீட்டு பணி­களில் இலாபம் ஈட்­டவும் முடிந்­துள்­ளது. அனைத்து பாட­சா­லை­க­ளி­னதும் மாண­வர்­க­ளுக்கும் சீருடை மற்றும் பாடப்­புத்­த­கங்­களை வழங்க அர­சாங்கம் 19 பில்­லி­யன்­களை செல­வி­டு­கி­றது.

கொவிட் மற்றும் பொரு­ளா­தார நெருக்­க­டியின் கார­ண­மாக தாம­த­மா­கி­வரும் சாதா­ரண தர பரீட்­சை­களை 2025 ஆம் ஆண்­டி­லி­ருந்து உரிய காலப்­ப­கு­தியில் நடத்­து­வ­தற்கு திட்­ட­மி­டப்­பட்­டுள்­ளது. அதேபோல் கல்வி மறு­சீ­ர­மைப்பு வேலைத்­திட்­டத்­திற்கு ஜனா­தி­பதி பெரும் பங்­க­ளிப்பு வழங்­கு­கிறார். உல­கிற்கு பொருத்­த­மான வகையில் கல்வி முறையை மாற்றியமைக்க அவர் அர்ப்பணிப்புடன் செயற்படுகிறார். இந்த அனைத்து வேலைத்திட்டத்துடனும் உலகை வெல்லக்கூடிய சமூகத்தை கட்டியெழுப்புவதே எமது நோக்கமாகும்.
கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்த குமார், பாராளுமன்ற உறுப்பினர் யாதாமினி குணவர்தன, மேல் மாகாண ஆளுநர் மார்ஷல் ஒப் தி எயார் ரொஷான் குணதிலக்க, கல்வி அமைச்சின் செயலாளர் வசந்தா பெரேரா, கல்வி வெளீயீட்டுத் திணைக்களத்தின் பணிப்பாளர் இஸட்.தாஜூதீன் உள்ளிட்டவர்களுடன் சென். புனித அந்தோனியார் பெண்கள் கல்லூரி அதிபர், ஆசிரியர்கள், மாணவர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர். – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.