இஸ்­ரேல் மீதான சர்­வ­தேச அழுத்தம் வலுப்­பெ­­ற வேண்­டும்

0 197

பலஸ்­தீனின் காஸா பிராந்­தி­யத்தில் கடந்த ஒக்டோபர் 7 ஆம் திக­தி ஆரம்­பித்த மோதல் இன்­றும் நீடித்த வண்­ண­மே­யுள்­ளது. சுமார் நான்கு மாதங்கள் கடந்­துள்ள போதிலும் நிலை­மை­களில் எந்­த­வித முன்­னேற்­றத்­­­தையும் காண முடி­ய­வில்லை.

மோதல்கள் ஆரம்­பித்த கடந்த 130 நாட்­களில் 28340 பலஸ்­தீ­னர்கள் இஸ்ரே­லினால் கொல்­லப்­பட்­டுள்­ளனர். இவர்­களில் 12300 பேர் சிறு­வர்­க­ளாவர். 67984 பேர் காய­ம­­டைந்­துள்­ளனர். 1.5 மில்­லியன் பலஸ்­தீ­னர்கள் பல­வந்­த­மாக வெளி­யேற்றப்­பட்­டுள்­ளனர். 610000 சிறு­வர்கள் பட்­டி­னிக்குள் தள்­ளப்­பட்­டுள்­ளனர். 156 ஐ.நா. ஊழியர்­களும் 124 ஊட­க­வி­ய­­லா­ளர்­களும் கொல்­லப்­பட்­டுள்­ளனர். 340 சுகா­தா­ரத்­துறை ஊழி­யர்­கள் கொல்­லப்­பட்­டுள்­ள­துடன் 23 வைத்­தி­ய­சா­லைகள் முற்­றாக செய­லி­ழந்­துள்­ளன. இவை இந்த நான்கு மாத காலப்­ப­கு­­தியில் இஸ்ரேல் நடாத்­திய மிகப் பெரி­ய அட்­டூ­ழி­யத்தின் சாட்­சி­யங்­க­ளாகும். இத்­த­ர­வுகள் பலஸ்­தீன வெளி­­வி­வகார அமை­ச்­சினால் நேற்று வெளி­யி­டப்­பட்­ட­வை­யாகும்.

தற்­போது மோதலின் மையப்­புள்­ளி­யாக ரஃபா பகுதி மாறி­யுள்­ளது. இஸ்ரேல் ரஃபா நகரை முற்­றாக அழிக்கப் போவ­தாக சூளு­ரைத்­துள்­ளது. அங்கு வசிக்கும் இலட்­சக்­க­ண­க்கா­ன மக்­களை உடன் வெளி­யே­று­மாறு அறி­­­­­வு­றுத்­தி­யுள்­ளது.

காசாவின் மொத்த மக்கள் தொகையில், பெரும்­பா­லா­ன­வர்கள் போர் கார­ண­மாக தங்கள் வீடு­களை விட்டு வெளி­யேறி முகாம்­களில் தஞ்­ச­ம­டைந்­துள்­ளனர். இவர்­களில் அதி­க­மா­ன­வர்கள் தெற்கு காசாவில் உள்ள ரஃபா நக­ரத்தில் தஞ்­ச­ம­டைந்­துள்­ளனர் எனக் கூறப்­ப­டு­கி­றது.

இஸ்ரேல் இராணுவம் காசாவில் வான்­வழி மற்றும் தரை­வழித் தாக்­கு­தல்­களை தொடர்ந்து நடத்தி வரு­கி­றது. எகிப்து எல்­லையில் அமைந்­துள்ள ரஃபா நக­ரத்தில் ஹமாஸ் அமைப்­பினர் பதுங்­கி­யி­ருப்­ப­தா­கவும், அங்­குள்ள பொது­மக்கள் பாது­காப்­பான இடங்­க­ளுக்குச் செல்­லு­மாறும் இஸ்ரேல் பிர­தமர் நெதன்­யாகு தெரி­வித்­தி­ருந்தார்.

இந்த நிலையில், காசாவின் ரஃபா நக­ரத்தின் மீது இஸ்ரேல் இரா­ணுவம் நேற்று நடத்­திய வான்­வழித் தாக்­கு­தல்­களில் 10 குழந்­தைகள் உட்­பட 28 பேர் உயி­ரி­ழந்­துள்­ள­னர்.

இஸ்ரேல், ரஃபா மீது படை­யெ­டுத்­தி­ருப்­பது மனி­தா­பி­மான பேர­ழி­விற்கு வழி­வ­குக்கும் என்று சர்­வ­தேச சமூகம் கவலை தெரி­வித்­துள்­ளது. ஆனால் “நான்கு மாதங்­க­ளுக்கும் மேலாக நடக்கும் இந்தப் போரில் காசாவில் எஞ்­சி­யி­ருக்கும் கடைசி ஹமாஸின் கோட்­டையே இந்த எகிப்தின் எல்­லை­யான ரஃபாதான்” என்று இஸ்ரேல் கூறு­கி­றது.

அண்­மையில் ஹமாஸ் முன்­மொ­ழிந்த யுத்த நிறுத்த யோச­னையை இஸ்ரேல் பிர­தமர் நிரா­க­ரித்­துள்ளார். இது அவர் அமை­தியை அன்றி போரையே விரும்­பு­கிறார் என்­ப­தை உறு­திப்­ப­டுத்தி நிற்­கி­ற­து.

இஸ்ரேல் அடுத்து வரும் நாட்­களில் ரஃபாவில் பாரிய மனி­தப் பேர­ழி­வுக்கு திட்­ட­மி­டு­கி­றது என்­பதை இப்­போ­­தைக்கு உணர முடி­கி­றது. ஏற்­க­னவே காஸாவில் பல பகு­தி­க­ளி­­லு­மி­ருந்து உயிர்­தப்பி வந்து ரஃபாவில் தங்­கி­யி­ருக்­கும் மக்கள் இந்தத் தாக்­கு­தல்­களால் மீண்டும் அவ­லத்­துக்குள் தள்­ளப்­படப் போகின்­றனர். இதற்கு சர்­வ­தேச சமூகம் இட­ம­ளிக்கக் கூடாது.

அரபு நாடு­களும் பலஸ்­தீன ஆத­ரவு நாடு­களும் இஸ்­ரே­லுக்கு எதி­ரா­ன சர்­வ­தேச அழுத்­தங்­களை அதி­­க­ரிப்­ப­தற்­கான முயற்­சி­களில் ஈடு­பட வேண்டும். உல­க­ளா­விய ரீதியில் மக்கள் மத்­தியில் எழுந்­துள்ள அறச்­சீற்­றத்தை பயன்­ப­டுத்தி இஸ்­ரே­லுக்கு எதி­ரான பிர­சாரம் மேலும் வலுப்­ப­டுத்­தப்பட வேண்­டும். அத்­துடன் இஸ்ரேலை முழு­மை­யான போர் நிறுத்­தத்­திற்கு கொண்­­டு­வ­ரு­வ­தற்­கா­ன அழுத்தத்தை வழங்­க வேண்­டும் என வலி­யு­றுத்த விரும்­பு­கி­றோம்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.