3500 பேர் ஹஜ் யாத்திரைக்குத் தயார்; பயணத்தை உறுதி செய்தனர்

0 100

(ஏ.ஆர்.ஏ. பரீல்)
இவ்­வ­ருட ஹஜ் யாத்­தி­ரைக்­காக சவூதி அரே­பிய ஹஜ் உம்ரா அமைச்­சினால் வழங்­கப்­பட்­டுள்ள 3500 ஹஜ் கோட்­டா­வுக்­கான யாத்­தி­ரி­கர்கள் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தில் தங்­களைப் பதிவு செய்து கொண்டு யாத்­தி­ரையை உறுதி செய்­துள்­ள­தாக முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் பணிப்­பாளர் இஸட்.ஏ.எம்.பைசல் தெரி­வித்தார்.

பய­ணத்தை உறுதி செய்து கொண்­டுள்ள யாத்­தி­ரி­கர்கள் அனை­வரும் திணைக்­க­ளத்­தினால் ஹஜ் அனு­ம­திப்­பத்­திரம் வழங்­கப்­பட்­டுள்ள ஹஜ் முகவர் நிலை­யங்­க­ளையே நேர­டி­யாக தொடர்­பு­கொள்ள வேண்­டு­மெ­னவும், 93 ஹஜ் முகவர் நிலை­யங்­க­ளுங்கு திணைக்­களம் ஹஜ் அனு­ம­திப்­பத்­திரம் வழங்­கி­யுள்­ள­தா­கவும் அவர் தெரி­வித்தார்.

அனு­ம­திப்­பத்­திரம் பெற்­றுள்ள ஹஜ் முகவர் நிலை­யங்­களை நேர­டி­யாகத் தொடர்பு கொள்­ளாது உப முக­வர்கள் ஊடாக பயண ஏற்­பா­டு­களைச் செய்­வதை தவிர்ந்து கொள்­ளு­மாறும் யாத்­தி­ரி­கர்­களை பணிப்­பாளர் அறி­வு­றுத்­தி­யுள்ளார்.

உப­மு­க­வர்கள் மூலம் பயண ஏற்பாடுகளை மேற்கொள்வதால் ஹஜ் பயண கட்டணத்தில் அதிகரிப்பு ஏற்படும் எனவும் எச்சரித்துள்ளார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.