பதுளையில் மாணவி மரணம்; நடந்தது என்ன?

0 103

ஏ.ஆர்.ஏ. பரீல், வாஹிட் குத்­தூஸ்

‘நான் கன­விலும் எதிர்­பார்க்­காத இந்த சோக சம்­பவம் நடந்து விட்­டது. எனது மகள் ஆயிஷா பர்வின் எங்­களை விட்டும் போய்­விட்டார். இது எனக்கோர் படிப்­பினை. எனது அடுத்த பிள்­ளை­களே எனது உலகம். நான் வாழ்க்­கையைப் புரிந்து கொண்டுவிட்டேன்’ என்று கூறி­ கண் கலங்­கி­னார் எம்.எஸ்.எம்.ரிஸ்வான் (வயது 44).

கடந்த 29ஆம் திகதி, தனது தாயா­ரிடம் தனியார் கணித வகுப்­புக்கு செலுத்து­வ­தற்கு பணம்­கோரி வழங்­கப்­ப­டாத நிலையில் மன­மு­டைந்து தற்­கொலை செய்து கொண்­ட ஆயிஷா பர்வின் (16) என்ற மாணவியின் தந்­தையே இவ­ராவார்.

‘விடி­வெள்ளி’ ஆயி­ஷாவின் தந்­தையை தொடர்­பு­ கொண்டு சம்­பவம் தொடர்பில் வின­வி­ய­போதே அவர் இவ்­வாறு தெரி­வித்தார்.
அவர் தொடர்ந்தும் தெரி­விக்­கையில், எனக்கு நான்கு பெண் பிள்­ளைகள். நான் முன்பு அலு­மி­னியம் பொருத்தும் வேலைகள் செய்­து­கொண்­டி­ருந்தேன். தற்­போது இந்த வேலை அதி­க­மாக கிடைக்­கா­மை­யினால் பாஸ்­மா­ரிடம் கைவே­லைகள் செய்து வரு­கிறேன். வரு­மானமும் குறைவு.

சம்­ப­வ­தினம் காலை மகள் தாயா­ரிடம் கணித பாட தனியார் வகுப்­புக்கு பணம் கொடுக்­க­வுள்­ள­தா­கவும், பணம் தரு­மாறும் கோரி­யி­ருக்­கிறாள். இதனால் பணம் தொடர்பில் எனக்கும் மனை­விக்கும் இடையில் முரண்­பாடு ஏற்­பட்­டது. நான் இனிமேல் வீட்­டுக்கு வர­மாட்டேன் என்று கூறி வீட்­டி­லி­ருந்தும் கோபத்தில் வெளி­யே­றினேன்.

‘வாப்பா வீட்­டுக்கு வரா­விட்டால் பிரச்­சினை. எங்­களால் வாழ முடி­யாது என்று சிந்­தித்த எனது மகள் இந்த முடிவை எடுத்­தி­ருக்­கிறாள். மனைவி தனது சிகிச்­சைக்­கா­க உட்­கொள்ளும் மருந்து வில்­லை­களை பாத்­ரூ­முக்கு எடுத்துச் சென்று அருந்­தி­யி­ருக்­கிறாள்.

அப்­போது நான் வீட்டில் இருக்­க­வில்லை. வீட்­டிலி­ருந்து மனைவி தொலை­பேசி மூலம் நடந்­ததை தெரி­வித்தாள். அவ­ச­ர­மாக ஓடி­வ­ரும்­படி மனைவி கூறினாள். நான் அப்­போது டவுணில் இருந்தேன். பின்பு மகளை வைத்­தி­ய­சா­லைக்கு கொண்டு சென்று விட்­ட­தாக அறி­வித்­தார்கள். வைத்­தி­ய­சா­லைக்குப் போனேன். மக­ளுக்­கு அவ­சர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை வழங்­கி­னார்கள். ஆனால் மகளைக் காப்­பாற்ற முடி­யாமற் போனது. இப்­போது தான் நான் வேத­னையை உணர்­கிறேன்.

தனியார் வகுப்­புக்கு செலுத்த வேண்­டிய சிறிய தொகைப் பண விவ­காரம் எனது மகளின் உயிரையே பறித்­து­விட்­டது என்றார்.

பதுளை ஜம்­இய்­யத்துல் உலமா
‘‘உயிரை மாய்த்துக் கொண்ட மாணவி பதுளையின் பிர­பல பாட­சாலை ஒன்றில் பயின்­றவள். மிகவும் வறிய குடும்­பத்தைச் சேர்ந்­தவள். தனியார் வகுப்­புக்குச் செலுத்த வேண்­டிய கட்­ட­ணமே இந்த பரி­தாப முடி­வுக்குக் கார­ண­மாக அமைந்­துள்­ளது’’ என அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா பதுளை மாவட்டம் மற்றும் பதுளை நகர் கிளையின் செய­லாளர் என்.வை. பெளஸுல் நிஸார் விடி­வெள்­ளிக்குத் தெரி­வித்தார்.

அவர் தொடர்ந்தும் தெரி­விக்­கையில், ‘தனியார் வகுப்பு கட்­டணம் தொடர்பில் ஆரம்­பித்த பிரச்­சினை மாண­வியின் தந்தை, தாயாரை விட்டுப் போய்­வி­டுவேன் என்று கூறு­ம­ள­வுக்குப் பெரி­தாகி இறு­தியில் தற்­கொ­லையில் நிறைவு பெற்­றி­ருக்­கி­றது.

எம்.எஸ்.எம். ரிஸ்­வானின் மற்­றொ­ரு மகள் எனக்குச் சொந்­த­மான அபாயா கடையில் வேலைக்குச் சேர்ந்து ஒரு வாரம் வரையில் வேலை செய்தாள். அதன் பிறகு திடீ­ரென வேலைக்கு வர­வில்லை. அதற்­கான காரணம் தெரி­யாது.
அவர்கள் வதியும் புவக்­கொ­ட­முல்ல கிராமம் பதுளை நக­ரி­லி­ருந்தும் 2 கிலோ மீட்­டர்­க­ளுக்கு அப்­பா­லுள்­ளது. அபி­வி­ருத்தி அடை­யாத கிராமம். பெரும் எண்­ணிக்­கை­யானோர் வறி­ய­வர்­களே இங்கு இருக்­கி­றார்கள்.

பெரும்­பா­லான குடும்­பங்கள் பொரு­ளா­தார பிரச்­சி­னை­க­ளுக்குள் மூழ்­கி­யுள்­ளன. அவர்­களால் பிரச்­சி­னை­க­ளி­லி­ருந்தும் மீள முடி­ய­வில்லை என்றார்.
மாணவி ஆயிஷா பர்­வீனின் (16) ஜனாஸா பதுளை ஜும்ஆ பள்­ளி­வாசல் மையவாடியில் இஷா தொழுகையின் பின் நல்லடக்கம் செய்யப்பட்டது.
பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு முன்­னால் முரண்பட்டுக்கொள்வது தவிர்க்கப்பட வேண்டும். பிள்ளைகளின் கல்விக்கான செலவுகளை திட்டமிட்டுக் கொள்ள வேண்டும். அவர்­க­ளது உள­வி­யலைப் புரிந்து நடந்து கொள்ள வேண்டும். அப்­போ­துதான் இவ்வாறான துர­திஷ்­ட­­மான சம்­­ப­வங்கள் நிகழ்­வதை தடுத்து நிறுத்த முடி­யு­ம். – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.