பலஸ்தீனில் ‘நிலைமை மோசமடைகின்றது’ என ஐ.நா. முகவர் அமைப்­புகள் எச்சரிக்கை

0 75

எம்.ஐ.அப்துல் நஸார்

ஐக்­கிய நாடுகள் நிவா­ரணப் பணி­க­ளுக்­கான அமைப்பு (UNRWA) பலஸ்­தீன அக­தி­க­ளுக்கு உத­விக்­கொண்­டி­ருக்கும் நிலையில், இஸ்ரேல் அதற்கு எதி­ராக புதிய குற்­றச்­சாட்­டுக்­களை முன்­வைத்­த­போதும் அந் நிறு­வ­னத்தை ‘பதி­லீடு செய்­யவோ அல்­லது மாற்­றவோ’ முடி­யாது என காஸா உத­விக்­கான ஐ.நா.வின் ஒருங்­கி­ணைப்­பாளர் செவ்­வா­யன்று தெரி­வித்தார்.

ஐக்­கிய அமெ­ரிக்கா, பிரித்­தா­னியா, ஜெர்­மனி மற்றும் ஜப்பான் உட்­பட பல நாடுகள் UNRWA இற்­கான நிதி­யு­த­வியை நிறுத்­தி­விட்­டன. மேலும் ஐ.நா பொதுச் செய­லாளர் அன்­டோ­னியோ குட்­டெரெஸ் உதவி வழங்கும் நாடு­க­ளுடன் அவ­சர பேச்­சு­வார்த்­தை­களை நடத்தி வரு­கிறார்.

UNRWA இற்­கான நிதி­யினை நிறுத்­து­வது காஸாவில் மனி­தா­பி­மான பேர­ழி­வினை ஏற்­ப­டுத்தும் என உலக சுகா­தார நிறு­வனம், ஐக்­கிய நாடுகள் உரி­மைகள் அலு­வ­லகம், யுனிசெப் மற்றும் உலக உணவுத் திட்டம் ஆகி­ய­வற்றின் தலை­வர்கள் உட்­பட ஐ.நா.வின் உயர்­மட்ட மனி­தா­பி­மான ஒருங்­கி­ணைப்பு நிறு­வ­னங்­களின் முக­வ­ரகத் தலை­வர்கள் எச்­ச­ரித்­துள்­ளனர்.

‘UNRWA இற்­கான நிதியை நிறுத்­து­வது ஆபத்­தா­னது என்­ப­தோடு ஆக்­கி­ர­மிக்­கப்­பட்ட பாலஸ்­தீ­னிய பிர­தே­சத்­திலும் பிராந்­தியம் முழு­வ­திலும் மனி­தா­பி­மான மற்றும் மனித உரி­மை­களின் நீண்­ட­கால பாதிப்­புக்­க­ளுடன் காஸாவில் மனி­தா­பி­மான கட்­ட­மைப்பின் வீழ்ச்­சிக்கும் வழி­வ­குக்கும், என மேற்­படி ஐ,நா நிலை­யியற் குழு அமைப்­பு­களின் தலை­வர்­களின் அறிக்­கையில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

காஸாவில் உள்ள மேற்­படி முக­வ­ர­கத்தின் உள்­கட்­ட­மைப்பு வச­தி­களை ஹமாஸ் அமைப்பு தனது ராணுவ நட­வ­டிக்­கைக்கு பயன்­ப­டுத்­து­வ­தற்கு அனு­ம­திப்­ப­தாக UNRWA மீது இஸ்ரேல் குற்றம் சாட்­டி­யதை அடுத்து செவ்­வாய்க்­கி­ழமை தொடக்கம் இந்த சர்ச்சை தீவி­ர­ம­டைந்­தது.

UNRWA இன் 12 ஊழி­யர்கள் ஹமா­ஸுடன் இணைந்து தாக்­குதல் நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்­ட­தாக இஸ்ரேல் முன்­வைத்­துள்ள குற்­றச்­சாட்­டுகள் தொடர்பில் உட­ன­டி­யாக நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­ட­தா­கவும், நிதி­யினை நிறுத்­து­வது சாதா­ரண பாலஸ்­தீ­னர்­களைப் பாதிக்கும் எனவும் அவ்­வ­மைப்பு தெரி­வித்­துள்­ளது.

இந்த ஐ.நா. முக­வ­ரகம் நீண்­ட­கா­ல­மாக இஸ்­ரேலின் நுணுக்­க­மான கண்­கா­ணிப்­புக்­குட்­ப­டுத்­தப்­பட்­டது எனவும் அவ்­வ­மைப்பு திட்­ட­மிட்ட முறையில் இஸ்­ரேலின் நலன்­க­ளுக்கு எதி­ராகச் செல்­வ­தா­கவும் அந் நாடு குற்றம் சாட்­டி­யுள்­ளது.

யுத்­தத்தின் பின்னர் காஸா­வி­லுள்ள இம் முக­வ­ர­கத்தின் செயற்­பா­டு­களை நிறுத்­த­வுள்­ள­தாக இஸ்ரேல் உறு­தி­படத் தெரி­வித்­துள்­ளது. க­டந்த செவ்­வாய்க்கி­ழமை அர­சாங்க ஊடகப் பேச்­சா­ள­ரான எய்லோன் லெவி UNRWA ‘அடிப்­ப­டையில் ஹமா­ஸுடன் இணைந்து செயற்­ப­டு­கின்­றது’ என தெரி­வித்­ததன் பின்னர் இஸ்­ரேலின் நிலைப்­பாடு மேலும் இறுக்­க­மா­கி­யுள்­ளது.
‘பயங்­க­ர­வா­தி­களை பாரிய அளவில் பணிக்­க­மர்த்­து­வ­தா­கவும், அதன் உள்­கட்­ட­மைப்பை ஹமாஸ் இரா­ணுவ நட­வ­டிக்­கைக்கு பயன்­ப­டுத்த அனு­ம­திப்­ப­தா­கவும், காஸா பகு­தியில் உதவி விநி­யோ­கத்­திற்­காக ஹமா­ஸையே நம்­பி­யி­ருப்­ப­தா­கவும்’ அவர் குற்றம் சாட்­டினார்.

‘சிறந்த ஆற்­ற­லையும் காஸாவில் உள்ள மக்கள் பற்­றிய அறிவை கொண்ட UNRWA முக­வ­ர­கத்தின் இடத்­திற்கு வேறு ஒரு அமைப்பை ஈடு­ப­டுத்­தவோ பதி­லீடு செய்­யவோ முடி­யாது’ என ஐ.நா.வின் காஸா­வுக்­கான உதவி ஒருங்­கி­ணைப்­பாளர் சிக்ரிட் காக் தெரி­வித்தார்.

ஒக்­டோபர் மாதம் தொடக்கம் UNRWA இற்கு 131 மில்­லியன் டொலர்­களை வழங்­கிய முக­வ­ர­கத்தின் மிகப்­பெ­ரிய நன்­கொ­டை­யாளர் எனக் கூறப்­படும் வொஷிங்டன், அதன் பணியை ‘மிகவும் ஆத­ரிப்­ப­தாக’ தெரி­வித்­துள்­ளது.
‘UNRWA முக­வ­ரகம் வழங்கும் அள­விற்கு உணவு, தண்ணீர் மற்றும் மருந்­து­களை வழங்­கக்­கூ­டிய மனி­தா­பி­மான ஆற்­றல்­கொண்ட வீரர்கள் காஸாவில் வேறு யாரும் இல்லை’ என அமெ­ரிக்க வெளி­வி­வ­கார பேச்­சாளர் மெத்யூ மில்லர் தெரி­வித்தார்.

‘நாங்கள் அந்த பணி தொடர்­வதை விரும்­பு­கிறோம், அத­னால்தான் ஐக்­கிய நாடுகள் சபை இந்த சர்ச்­சைக்­கு­ரிய விட­யத்தை தீவி­ர­மாக கவ­னத்தில் எடுத்துக் கொள்­வது மிகவும் முக்­கி­ய­மா­னது, அவர்­களை விசா­ரணை செய்­வது, தவ­றான செயல்­களில் ஈடு­பட்­ட­தாகக் கண்­ட­றி­யப்­ப­டு­ப­வர்­களை பொறுப்­புக்­கூறல் செய்தல் வேண்டும்.’

வர­லாற்றில் முன்­னொ­ரு­போதும் இடம்­பெ­றாத வகையில் கடந்த வருடம் ஒக்­டோபர் மாதம் 7ஆந் திகதி ஹமாஸ் அமைப்பு மேற்­கொண்ட தாக்­கு­தலில் தெற்கு இஸ்­ரேலில் உத்­தி­யோ­க­பூர்வ புள்­ளி­வி­வ­ரங்­களின்படி சுமார் 1,140 பேர் கொல்­லப்­பட்­டனர், கொல்­லப்­பட்­ட­வர்­களுள் பெரும்­பாலும் பொது­மக்­க­ளாவர் என ஏ.எப்.பி. தெரிவித்துள்ளது.

ஹமாஸ் அமைப்பினர் 250 பேரை பணயக்கைதிகளாகப் பிடித்துச் சென்றனர். அவர்களுள் 132 பேர் காஸாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் குறைந்தது 28 பேரின் உடல்கள் இருப்பதாகவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் இடைவிடாத இராணுவத் தாக்குதல்களை காஸாவில் மேற்கொண்டது, இதனால் காஸாவில் குறைந்தது 26,751 பொதுமக்கள் கொல்லப்பட்டள்ளதாகவும், அவர்களுள் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் குழந்தைகளாவர் எனவும் காஸாவிலுள்ள சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.