கவ­லையைத் தோற்­று­வித்­து­ள்ள மூன்று ஆளு­­மை­களின் மறை­வு­கள்

0 149

இந்த வாரம் அடுத்­த­டுத்து நிகழ்ந்த மூன்று மர­ணங்கள் முஸ்லிம் சமூ­கத்தின் பல்­வேறு துறை­க­ளிலும் பாரிய இடை­வெ­ளியை ஏற்­­ப­டுத்­து­வதாக அமைந்­துள்­ள­ன.

பதுளை காதி நீதி­வானும் பிர­பல எழுத்­தா­ள­­ரும் செயற்­பா­ட்­டா­ள­ரு­மான அஷ்ஷெய்க் ரிஸான் ஸெய்ன் கடந்த ஞாயிறன்­று­ மர­ணித்த செய்தி பல­ரையும் கவ­லையில் ஆழ்­த்­தி­யுள்­ளது. தனிப்­பட்ட வாழ்­விலும் சமூக வாழ்­விலும் சிறந்த முன்­மா­தி­ரி­யாக திகழ்ந்த அவர் தனது 6 பிள்­ளை­க­ளையும் சிறந்த ஆளுமை­க­­ளாக வளர்த்­தெ­­டுத்­துள்ளார். இதனால் அவர் முன்­மா­தி­ரி­மிக்க தந்தை என பல­ராலும் வர்­ணிக்­கப்­பட்டார். பது­ளையில் ஒக்ஸ்போர்ட் தனியார் கல்வி நிறு­வ­னத்தைத் தோற்­று­வித்து மாண­வர்­களின் கல்வி வாழ்­வில் தாக்­கத்தைச் செலுத்திய அவர் சிறந்த உள­வ­ளத்­து­ணை­யா­ள­ரா­கவும் பணி செய்து வந்­தார். ஜாமிஆ நளீ­­மி­யாவில் கல்வி கற்ற காலத்­தி­­லி­ருந்தே எழுத்துத் துறை­யில் அவர் மிகுந்த ஆர்வத்­தை வெளிப்­ப­­டுத்­தி­னார். இறுதிக் காலத்தில் காதி நீதிவான் பத­விக்கு தெரி­வான அவர் பதுளை காதி­நீ­திமன்ற எல்­லைக்­குட்­பட்ட பகு­தியில் அதி­க­ரித்துச் செல்லும் விவாக­ரத்­துகள் தொடர்பில் கவ­லை­யுற்று அது தொடர்­பான விழிப்­பு­ணர்வு நிகழ்­வு­களை பள்­ளி­வா­சல்கள் ரீதி­யாக மேற்­கொண்டு வந்தார். இந் நிலை­யி­லேயே அவர் திடீர் சுக­வீ­ன­முற்ற நிலையில் எம்மை விட்டும் பிரிந்­துள்ளார். தனது அறிவு மற்­றும் ஆளுமை­களால் சமூகத்­தின் பல்­வேறு துறை­க­ளிலும் கால்­ப­தித்து இயங்­கிய இவரின் இழப்பு எந்­த வகை­யிலும் ஈடுசெய்ய முடி­யா­த­தா­கும்.

அதே­போன்றுதான் சிரேஷ்ட ஊட­க­வி­ய­லா­ளரும் விடி­வெள்­ளி பத்­தி­ரி­கை­யின் மரு­த­முனை நிரு­ப­ரு­மான பி.எம்.எம்.ஏ.காதர் அவர்­களின் மறை­வாகும். கடந்த சில மாதங்­க­ளாக சுக­வீ­­ன­முற்­றி­ருந்த நிலையில் அவர் நேற்று முன்­தினம் காலை வேளையில் எம்­மை­விட்டும் பிரிந்தார். 2008 இல் விடி­வெள்ளி ஆரம்­பிக்­கப்­பட்­டது முதல் தான் சுக­வீ­ன­முறும் வரை 15 வரு­டங்­க­ளுக்கும் மேலாக விடி­வெள்­ளி­க்­காக ஊடகப் பணி செய்த அவரின் பங்­க­ளிப்பு மெச்­சத்­தக்­கதாகும். மக்­களின் பிரச்­சி­னை­களைத் தேடிச் சென்று அறிக்­கையிட்ட அவ­ரது பணி பிராந்­திய செய்­தி­யா­ளர்­க­ளுக்கு முன்­மா­தி­ரி­யான­தாகும். இதற்­காக அவர் இரு முறை இலங்கை பத்­தி­ரிகை ஸ்தா­ப­னத்­தினால் வழங்­கப்­படும் அதி உயர் ஊடக விரு­தையும் வென்­றி­ருக்­கிறார். சுனாமி அனர்த்­தத்தின் போது கூட அக் காட்­சி­யை தனது கமெ­ரா­வுக்கு அடக்­க முயற்­சித்து மயி­ரி­ழையில் உயிர்­தப்­பினார். தனது அனைத்து உடை­மை­களையும் இழந்த போதிலும் மீண்டும் எழுந்து நின்று ஊடகப் பய­ணத்தைத் தொடர்ந்த அவ­ரது தைரியம் மெய்­சி­லிர்க்க வைப்­ப­தா­கும். அந்த வகையில் பி.எம்.எம்.ஏ. காதரின் இடை­வெ­ளியை அப் பகு­தியில் உள்ள இளம் ஊட­க­வி­ய­லா­ளர்கள் நிரப்ப வேண்­டி­யதும் அவ­ரது பாரம்­ப­ரி­யத்தை பின்­பற்றி நடக்க வேண்­டி­யதும் அவ­சி­ய­மா­­ன­தா­கும்.

நேற்­றைய தினம் புத்­தளம் இஸ்­லா­ஹிய்யா பெண்கள் அரபுக் கல்­லூ­ரியின் அதிபர் அஷ்ஷெய்க் முனீர் அவர்­களின் மரணச் செய்­தியும் அனை­வ­ரையும் அதிர்ச்­சியில் ஆழ்த்­துவ­தாக அமைந்­தது. ஆர்ப்­பாட்­ட­மின்றி மிக அமை­தியாக மார்க்கப் பணி செய்த அன்னார் இஸ்­லா­ஹியா மூலம் நூற்றுக் கணக்­கான பெண் ஆளு­மை­களை உரு­வாக்­கு­வதில் நேர­டி­யாக பங்­க­ளிப்புச் செய்­தவர். அவரது அல்­குர்­ஆன் மற்றும் மார்க்க விளக்க வகுப்­புகள் உள்­ளத்தில் ஊடு­ருவித் தாக்கம் செலுத்­து­வ­தாகவே எப்­போதும் அமைந்­தி­ருக்கும். தனது அறிவு ஆற்றல் மூல­மாக புத்­த­ளத்தில் மாத்­தி­ர­மன்றி அதற்கு வெளி­யிலும் தாக்கம் செலுத்­திய அவ­ரது இழப்பும் ஈடு­­செய்ய முடி­யா­த­தா­கும்.

மேற்­படி மூவ­ரதும் மர­ணங்கள் தொடர்பில் அர­சியல் தலை­வர்­களும் முஸ்லிம் சிவில் சமூக நிறு­வ­னங்­களும் செயற்­பா­ட்­டா­ளர்­களும் தமது ஆழ்ந்­த கவ­லையைத் தெரி­வித்­துள்­ளனர். விடி­வெள்­ளியும் இம் மூவ­ரதும் இழப்­பினால் துய­ருறும் குடும்­பங்­க­ளுக்கும் நண்­பர்­க­ளுக்­கும் தனது அனு­தா­பங்­களைத் தெரி­வித்­துக் கொள்­கி­ற­து.

எந்­த­வொரு மனி­தனும் மர­ணத்தின் பிடி­யி­லி­ருந்­து தப்­பிக்க முடி­யாது என்ற யதார்த்­தத்தை உணர்ந்­துள்ள நாம் இவ்­வா­றான நல்ல மனி­தர்­களின் மர­ணங்­க­ளி­லி­ருந்து படிப்­பி­னை பெற்று அதற்­க­மைய நமது வாழ்­வையும் அமைத்துக் கொள்ள வேண்டும் என்­பதே நாம் இந்த இடத்தில் எடுத்துக் கொள்ள வேண்­டிய செய்­தி­யாகும்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.