முழுமையான போர் நிறுத்­தத்­திற்­கு சர்­வ­தே­சம் அழுத்­தம் வழங்க வேண்­டும்

0 155

பலஸ்­தீனின் காஸா பிராந்­தி­யத்தில் கடந்த ஒக்டோபர் 7 ஆம் திக­திக்குப் பின்னர் முதன் முறை­யாக போர் நிறுத்­தத்­திற்கு இணக்­கப்­பாடு எட்­டப்­பட்­டுள்­ளது. இதற்­க­மைய நான்கு நாட்­க­­ளுக்கு இப் போர் நிறுத்தம் நீடிக்கும் என்றும் இக் காலப்­ப­கு­தியில் ஹமா­ஸினால் பணயக் கைதி­க­ளாகப் பிடிக்­கப்­பட்­டுள்ள 50 பேர் விடு­விக்­கப்­ப­டுவர் என்றும் இதற்குப் பக­ர­மாக ஏற்­க­னவே இஸ்­ரே­லிய சிறை­களில் தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள 150 பலஸ்­தீன கைதிகள் விடு­விக்­கப்­ப­டுவர் என்றும் உடன்­பாடு எட்­டப்­பட்­டுள்­ள­து.

கட்­டாரின் மத்­தி­யஸ்­தத்தில் அமெ­ரிக்கா மற்றும் எகிப்து ஆகிய நாடு­களின் பங்­க­ளிப்­பு­டன் இந்த போர் நிறுத்த உடன்­பாடு எட்­டப்­பட்­டுள்­ளது. முதலில் நான்கு நாட்­க­ளுக்கு அமுல்­ப­டுத்­தப்­படும் இப் போர் நிறுத்தம் தேவைப்­படின் மேலும் நீடிக்­கப்­படும். காஸா­வி­லி­ரு­ந்து மேலும் 10 பண­யக் கைதிகள் விடு­விக்­கப்­படும் பட்­சத்தில் போர் நிறுத்தம் மேலும் ஒரு தினத்­திற்கு நீடிக்­கப்­ப­டும்.இஸ்ரேல் தனது இரா­ணுவ வாக­னங்கள் முன்­னே­று­வதை நிறுத்­து­வ­துடன் பலஸ்­தீன பொது மக்கள் வடக்­கி­லி­ருந்து தெற்­கி­ற்கு பய­ணிக்­கவும் அனு­மதி வழங்கும். எரி­பொருள் உள்­ளிட்ட நிவா­­ரண உத­வி­கள் இக் காலப்­ப­கு­தியில் தடை­யின்றி காஸா­வுக்குள் செல்ல இஸ்ரேல் அனு­ம­திக்கும் ஆகிய நிபந்­த­னைகள் இந்த இணக்­கப்­பாட்டில் உள்­ள­டங்­கி­யுள்­ள­ன.

இன்று முதல் இந்த போர் நிறுத்தம் அமு­லுக்கு வரு­கின்ற நிலையில் நேற்றும் இஸ்ரேல் காஸா மீது மிகக் கடு­மை­யான தாக்­கு­தல்­களை நடாத்­தியது. நேற்­றைய தினம் மாத்­திரம் சுமார் 100 பலஸ்­தீ­னர்கள் கொல்­லப்­பட்­­டுள்­ளனர். அகதி முகாம்கள் மற்றும் வைத்­தி­ய­­சா­லை­களை இலக்கு வைத்து இஸ்ரேல் வான் வழி­யா­கவும் தரை வழி­யா­கவும் தாக்­குதல் நடத்­தி­யுள்­ள­து.

போர் நிறுத்தம் அமு­லு­க்கு வந்­தாலும் ஹமாஸை அழித்­தொ­ழிக்கும் வரை இஸ்ரேல் தாக்­கு­தல்­களை நிறுத்­தாது என இஸ்­ரே­லிய பிர­தமர் நெதன்­யாஹு நேற்­றைய தின­மும் அறி­வித்­துள்ளார். போர் நிறுத்தம் தொடர்­­பான இறுதிக் கட்டப் பேச்­சுக்கள் நடந்து கொண்­டி­ருக்­கும் போது கூட இஸ்ரேல் பாரிய மனிதப் படு­கொ­லை­களை காஸாவில் அரங்­கேற்­றி­யுள்­ள­து.

போர் நிறுத்த உடன்­பாடு சற்று ஆறு­தலைத் தந்­தாலும் இது­வரை இஸ்ரேல் அரங்­கேற்­­றி­யுள்ள மனி­தா­பி­மா­னத்­துக்கு எதி­ரா­ன குற்­றங்­க­ளுக்கு சர்­வே­தச சமூகம் என்ன தண்­டனை வழங்கப் போகின்­றது என்ற கேள்­விக்­கு பதி­லில்லை. உல­க­ளா­விய ஊட­கங்கள் முன்­னி­லை­யிலும் அத்­தனை சம்­ப­வங்­களும் சமூக வலைத்­த­ளங்­களில் ஆதா­ரங்­க­ளுடன் பதி­­வி­டப்பட்ட நிலை­யிலும் இஸ்­ரே­லினால் இவ்­வா­றா­ன­தொரு கொடூ­ரத்தை எவ்­வாறு அரங்கேற்ற முடி­­கி­றது. சர்­வ­தேச மனித உரிமைப் பாது­கா­வ­ல­னாக தன்னைக் காட்டிக் கொள்ளும் அமெ­ரிக்கா இஸ்ரேலின் குற்றங்­களை மட்டும் கண்­டு­கொள்­ளாது அத­னைத் தட்டிக் கொடுப்­பது போல் நடந்து கொள்­வது எந்த வகையில் நியா­யம்?

என­வேதான் போர் நிறுத்­தத்­துடன் நின்­று­வி­டாது அரபு நாடு­களும் பலஸ்­தீன ஆத­ரவு நாடு­களும் இஸ்­ரே­லுக்கு எதி­ரா­ன சர்­வ­தேச அழுத்­தங்­களை அதி­­க­ரிப்­ப­தற்­கான முயற்­சி­களில் ஈடு­பட வேண்டும். உல­க­ளா­விய ரீதியில் மக்கள் மத்­தியில் எழுந்­துள்ள அறச்­சீற்­றத்தை பயன்­ப­டுத்தி இஸ்­ரே­லுக்கு எதி­ரான பிர­சாரம் மேலும் வலுப்­ப­டுத்­தப்பட வேண்­டும். அத்­துடன் இஸ்ரேல் போர் நிறுத்­தத்தை தற்­கா­லி­க­மாக அன்றி முழு­மை­யாக நடை­மு­றைப்­ப­டுத்­தவும் அழுத்தம் வழங்க வேண்­டும்.

அதே­­போன்று ஹமாஸ் அமைப்பும் பலஸ்­தீன மக்­களின் பாது­காப்­பை­யும் எதிர்­கால இருப்­பை­யும் கவ­னத்திற் கொண்டு தனது நகர்­வு­களை முன்­னெ­டுக்க வேண்­டும். குறிப்­பாக காஸா மக்­க­ளுக்கு உட­ன­டி­யாகத் தேவைப்­படும் மருத்­துவ மற்றும் அடிப்­படை வச­தி­களை வெளி­யி­லி­ருந்து பெற்றுக் கொடுப்­ப­தற்­கான முயற்­­சி­களை தொடர்ந்தும் முன்­னெ­டுக்க வேண்டும். நான்கு நாட்­க­ளுக்­கான யுத்த நிறுத்தம் போதாது. அதனை மேலும் நீடித்து காஸா மக்­களின் மனி­தா­­பி­மான தேவை­க­ளுக்கு முன்­னு­ரி­மை­ய­ளிக்க வேண்டும். – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.