கொழும்பு குப்பை வேண்டாம்! புத்தளத்தில் தொடரும் போராட்டம்

அரசாங்கம் விரைந்து தீர்வு காணுமா?

0 1,014
  • தமிழில்: எம்.ஏ.எம். அஹ்ஸன்

அபி­வி­ருத்­தி­ய­டைந்த நாடு­களில் பல நாடுகள், சேமிக்­கின்ற கழி­வுகள் அனைத்­தையும் மீள்­சு­ழற்சி செய்து அவற்றை வளங்­க­ளாக பயன்­ப­டுத்­து­வது மாத்­தி­ர­மின்றி வரு­வா­யையும் ஈட்­டு­கின்­றன. ஆனால், எங்­க­ளு­டைய நாட்டில் நாடு முழு­வதும் கழி­வுகள் சேமிக்­கப்­பட்டு அதனை திர­ளாக்கி ஓரி­டத்தில் கொட்டி சுற்றுச் சூழல், விலங்­குகள் மற்றும் மனி­தர்­க­ளுக்கு அபா­யத்தை ஏற்­ப­டுத்தும் செயற்­பாடுகளே நடை­பெற்று வரு­கி­ன்றன. தற்­போது இந்த நட­வ­டிக்­கை­க­ளுக்கு எதி­ராக சமூக அபி­வி­ருத்­தியை நோக்­க­மாகக் கொண்ட பல்­வேறு சூழ­லி­ய­லா­ளர்கள் குரல் கொடுக்க முன்வந்­துள்­ளனர்.

கொழும்பு மாந­க­ரத்­தி­லேயே கழி­வுகள் சேரும் நிலை கூடிய வீதத்தில் காணப்­ப­டு­கி­றது. இந்த நிலை கடந்த பத்து வரு­டங்­களில் பல்­வேறு மனித உயிர்­களை காவு­கொண்­டுள்­ளன. குப்பைக் கழி­வு­களை முறை­யாக அகற்­றாத உலக நாடு­களின் பட்­டி­யலில் இலங்­கையும் ஒன்று. குப்பைக் கழி­வு­களை முறை­யாக அகற்றி சிறந்த எதிர்­காலம் ஒன்றை கட்­டி­யெ­ழுப்­பு­வதில் அர­சாங்கம் தோல்­வி­ய­டைந்­துள்­ளது.

புத்­தளம் வாழ் மக்கள், புத்­த­ளத்தின் அனல் மின் நிலையம் கட்­டப்­படும் போதும் அதற்­கெ­தி­ராக கிளர்ந்­தெ­ழுந்­தனர். ஆனாலும், மக்­க­ளு­டைய முயற்­சிகள் தோல்­வியில் முடிந்­தன. இன்று அதன் மூலம் பலர் வாழ்க்­கையை இழந்­தது மாத்­தி­ர­மின்றி குழந்­தைகள் அங்­க­வீ­ன­மாக பிறக்­கவும் வழி­வ­குக்­கப்­பட்­டுள்­ளது. அனல் மின் நிலையம் கட்­டப்­பட்­டதன் மூலம் புத்­தளம் மக்கள், இன்னும் கோர­மான அனு­ப­வங்­களை பெற்­றுக்­கொண்டு தான் இருக்­கி­றார்கள். இந்த செயற்­பாட்டின் மூலம் சுற்றுச் சூழ­லி­னதும் மனித வாழ்க்­கை­யி­னதும் அழிவு உறுதி என மெய்ப்­பித்­துக்­காட்­டப்­பட்ட இந்த நிலையில் புத்­தளம் அறுவாக்­காடு பகு­தியில் குப்பை கொட்டும் ஒரு செயற்­றிட்டம் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கி­றது. முன்­னைய திட்­டங்­களால் பாதிப்­ப­டைந்த புத்­தளம் மக்கள் இந்த செயற்­றிட்­டத்­தினால் விரக்­தியின் உச்­சத்­திற்கே சென்று விட்­டார்கள். வெந்த புண்ணின் மேல் வேல் பாய்ச்­சப்­பட்ட மக்­களின் கோபமும் ஆத்­தி­ரமும் மாவட்டம் முழு­வதும் போராட்­டங்­க­ளாக வெடித்­துள்­ளன.

தற்­போது குப்பை கொட்­டு­வ­தற்­கென உத்­தே­சிக்­கப்­பட்­டுள்ள பிர­தேசம் சேரக்­குளி ஏரியில் இருந்து சுமார் 200 மீற்றர் தொலைவில் உள்­ளது. இதனால் புத்­த­ளத்தை பாது­காக்கும் வேட்­கையில் புத்­தளம், வனாத்­த­வில்லு, கற்­பிட்டி மற்றும் சேரக்­குளி மக்கள் இறங்­கி­யுள்­ளனர். இந்தப் போராட்­டங்­க­ளுக்கு முஸ்லிம் பெண்­க­ளு­டைய பங்­க­ளிப்பும் பெரும்­ப­லத்தைச் சேர்த்­துள்­ளது. முஸ்லிம் பெண்­க­ளு­டைய ஈடு­பாடு போராட்­டத்தை வலுப்­ப­டுத்­தி­யுள்­ளது. மேலும் பல்­வேறு அர­சி­யல்­வா­தி­களின் பங்­க­ளிப்பும் இந்த போராட்­டத்தை மேலும் வலுப்­ப­டுத்­தியுள்ளது. ஐக்­கிய தேசிய முன்­ன­ணியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பாலித்த ரங்கே பண்­டார, சனத் நிஷாந்த பெரேரா மற்றும் பொது­ஜன பெர­மு­னவின் அருந்திக பெர்­னாண்டோ ஆகியோர் எதிர்ப்பு நட­வ­டிக்­கை­களில் பங்கேற்றனர்.

எதிர்ப்பில் ஈடு­படும் மக்கள் எவ்­வி­த­மான இன,மத வேறு­பா­டு­க­ளின்றி போரா­டு­கி­றார்கள். அவர்கள் அனை­வரும் குப்பை கொட்டும் இடத்தை மாற்­று­வ­தற்­கான கார­ணத்தைக் கோரு­கி­றார்கள். சேரக்­குளி ஏரியை முற்­றாக சிதைக்­கத்தான் இந்த முடிவு என மக்கள் குற்றம் சாட்­டு­கி­றார்கள்.

குறித்த ஏரியை வாழ்­வா­தா­ர­மாகக் கொண்ட மீன­வர்கள் அறு­வாக்­காட்டில் குப்பை கொட்டும் இந்த செயற்­திட்­டத்தை எண்ணி நிலை­கு­லைந்து போயுள்­ளனர். இருந்­தாலும் தன்­னம்­பிக்­கை­யுடன் போரா­டு­கி­றார்கள். சேரக்­குளி ஏரியை நம்பி பல மீன­வர்கள் வாழ்­கி­றார்கள். அறு­வாக்­காட்டில் குப்­பை­களை கொட்டும் பட்­சத்தில் ஏரி­யி­னு­டைய நீர் மாச­டையும் என்­பது கிட்­டத்­தட்ட உறுதி. இதனால் பல மீன­வர்கள் வாழ்­வா­தா­ரத்தை இழக்க வாய்ப்­புள்­ளது.
தொழி­லா­ளர்கள், அர­சி­யல்வா­திகள் என பல்­வேறு தரப்­பி­னரின் பங்­க­ளிப்பில் சத்­தி­யா­க்கி­ரக போராட்டம் 40 நாட்­க­ளையும் தாண்டி தொடர்­கி­றது.
உத்­தே­சிக்­கப்­பட்ட இடத்தில் மனித கழி­வு­களை அகற்­று­வ­தற்­கான ஏற்­பா­டு­களை நிறுவ 989 மில்­லியன் நிதியை ஒதுக்­கு­வ­தற்கு மெகா பொலிஸ் அமைச்சு முடி­வெ­டுத்­தி­ருந்­தது.

குப்பை கொட்டும் செயற்றிட்­டத்­துக்­காக நிதி ஒதுக்­கப்­பட்­ட­போதும், போதி­ய­ளவு உட்­கட்­ட­மைப்பு வச­தி­களை கொண்­டதா என்­பது தொடர்பில் தெளிவு வழங்­கப்­ப­ட­வில்லை. அமைச்சு முன்­வைத்­தி­ருந்த உட்­கட்­ட­மைப்பு வச­தி­களும் திட்­டங்­களும் முழு மாவட்­டத்­திற்கும் பொருந்­து­வ­தாக இருக்­க­வில்லை.
எதிர்ப்பில் ஈடு­படும் மக்­களின் இருப்­பி­டங்­க­ளுக்குச் சென்று முன்னாள் மெகா­பொலிஸ் மற்றும் மேல் மாகாண அபி­வி­ருத்தி அமைச்சர் சம்­பிக்க ரண­வக்க பேசி­யி­ருந்தார்.

“கொழும்­பி­லி­ருந்து கொண்டு வரப்­படும் குப்­பை­களை புத்­த­ளத்தில் கொட்­டு­வ­தற்கு புத்­தளம் மக்கள் கடும் எதிர்ப்பு தெரி­வித்து வரு­கி­றார்கள். வில்­பத்து பிர­தேசம் அழிவ­டை­யலாம் என்று அவர்கள் அஞ்சுகின்றனர் ரயில்களை குப்­பை­களை ஏற்­றிச்­செல்­வ­தற்­காக களனியிலிருந்து ஆரம்பிக்க அம்மக்கள் எதிர்ப்பு தெரி­விக்­கின்­றனர் ” என்று அவர் கூறினார்.

“ஒரு நாளில் கொழும்பில் மட்டும் 700 தொன் குப்பை சேக­ரிக்­கப்­ப­டு­கி­றது. மேலும், கல்கிசை, மொரட்­டுவ, மஹ­ர­கம மற்றும் வத்­தளை போன்ற பிர­தே­சங்­களில் சேக­ரிக்­கப்­படும் குப்­பை­க­ளையும் சேர்த்தால் அந்தத் தொகை 1500 தொன்­னாக அதி­க­ரிக்கும். இந்தக் குப்­பைகள் புளுமெண்டல் மற்றும் கர­தி­யான பகு­தி­க­ளிலே கொட்­டப்­பட்­டன” என சம்­பிக்க ரண­வக்க தெரி­வித்­தி­ருந்தார்.

குப்பை கொட்டும் பிர­தேசம் வில்­பத்­து­விற்கு அருகில் இருப்­பதால் வன­ஜீ­வ­ரா­சிகள் திணைக்­க­ளமும் எதிர்ப்பு தெரி­வித்தது. பின்னர். குப்பை கொட்டும் இடத்­தினை மாற்­று­வ­தற்­கான ஏற்பாடுகளை செய்துள்ளோம் என்றார்.
குப்பைக் கழி­வு­களைக் கொண்டு மேல் மாகா­ணத்தின் கம்­பஹா, கரதியான மற்றும் முத்­து­ரா­ஜ­வெல போன்ற இடங்­களில் ­சக்­திவள நிலையங்கள் உருவாக்கப்படவுள்ளன.இந்த சக்தி தேசிய மின் விநியோகத்துடன் இணைக்­கப்­பட்­டு 20 வரு­டங்­க­ளுக்குத் தலா 10 மெகா வாட்­ஸினை வழங்கமுடியுமாக விருக்கும் என அதிகாரிகள் கூறுகின்றனர்.சேமிக்­கப்­ப­டு­கின்ற குப்­பைகள் நேர­டி­யாக குப்பை இயந்­தி­ரத்­துக்குள் இட்டு எரிக்­கவே ஒப்­பந்தம் செய்­யப்­பட்­டுள்­ளது. மேலும், கொழும்பு உட்பட ஏனைய பிரதேசங்களில் சேமிக்கப்படும் மனித கழிவுகளும் இவ்வாறே அகற்றப்படும்.

இலங்கையில் ஒவ்வொரு நாளும் 6000 மெட்ரிக் தொன் கழிவுகள் சேமிக்கப்படுகின்றன. அவற்றுள் 3500 மெட்ரிக் தொன் கழிவுகள் மேல் மாகாணத்தில் சேமிக்கப்படுவதாகும். இலங்கையின் சனத்தொகையில் 33 சதவீதமான மக்கள் மேல் மாகாணத்தில் இருப்பதே இங்கு அதிகூடிய குப்பைகள் சேமிக்கப்படுவதற்கு காரணமாகும்.

தற்போது மேல் மாகாணத்தில் குறைந்தது 1000 மெட்ரிக் தொன் குப்பைக் கழிவுகள் சேமிக்கப்படுகிறது. இந்த நிலைமை தொடருமாக இருந்தால் 2030 ஆகும் போது 10000 மெட்ரிக் தொன் குப்பைக் கழிவுகள் சேரும் நிலை ஏற்படும் என மேல்மாகாண கழிவு முகாமைத்துவ இயக்குநர் நளின் மன்னப்பெரும தெரிவித்தார்.

நன்றி: டெய்லி மிரர்

Leave A Reply

Your email address will not be published.