தெஹி­வளை பாபக்கர் பள்­ளி­வாசல் விவ­கா­ரத்­திற்கு சுமுக தீர்வு கிட்­டுமா?

0 142

றிப்தி அலி

கொழும்பு, தெஹி­வளை மிரு­கக்­காட்சி சாலைக்கு அருகில் அமைந்­தி­ருக்­கி­றது பாபக்கர் ஜும்ஆ பள்­ளி­வாசல். இத­னுடன் இணைந்த 77 பேர்ச் காணியை அதன் நிர்­வா­கிகள் விற்­பனை செய்ய முயற்­சிப்­ப­தாக அப்­பள்­ளி­வா­சலின் ஜமா­அத்தார் தொடர்ச்­சி­யாக குற்­றச்­சாட்­டுக்­களை முன்­வைத்து வரு­கின்­றனர். இது தொடர்பில் நாம் அண்­மையில் பள்­ளி­வா­ச­லுக்கு விஜயம் செய்­த­துடன் சம்­பந்­தப்­பட்ட தரப்­பு­களின் கருத்­தையும் வின­வினோம். அத­ன­டிப்­ப­டையில் இக் கட்­டுரை எழு­தப்­ப­டு­கி­றது.

“சவூ­தியைச் சேர்ந்த தன­வந்­த­ரான பாபக்­க­ரினால் வக்பு செய்­யப்­பட்ட காணியை நிர்­வா­கிப்­ப­தற்­காக உரு­வாக்­கப்­பட்ட பாபக்கர் ட்ரஸ்ட் இன்று வரை வக்பு நியா­யா­திக்க சபையில் பதி­வு­செய்­யப்­பட்­ட­வில்லை” என பாபக்கர் ஜும்ஆப் பள்­ளி­வாசல் ஜமா­அத்தார் சங்க பேச்­சாளர் என தன்னை அடை­யா­ளப்­ப­டுத்தும் பொறி­யி­ய­லாளர் எம். சஹீம் நஸ்­ருதீன் தெரி­வித்தார்.

இந்த ட்ரஸ்­டினை வக்பு நியா­யா­திக்க சபையில் பதி­வு­செய்தால், குறித்த காணி­யினை ஒரு­போதும் விற்­பனை செய்ய முடி­யாது. இத­னா­லேயே வக்பு நியா­யா­திக்க சபையில் குறித்த பதி­வினை மேற்­கொள்­ளாமல் கடந்த எட்டு வரு­டங்­க­ளாக இழுத்­த­டிக்­கப்­பட்டு வரு­வ­தா­கவும் அவர் குறிப்­பிட்டார்.
அது மாத்­தி­ர­மல்­லாமல், இந்த காணிக்­காக எழு­தப்­பட்ட ட்ரஸ்ட் ஒப்­பந்­தத்தில் அறி­விக்­கப்­பட்­டுள்ள நம்­பிக்­கை­யா­ளர்­க­ளுக்கு இதை விற்­பனை செய்­யவோ, பகு­தி­க­ளாக விற்­பனை செய்­யவோ, அடகு வைக்­கவோ, கைமாற்றம் செய்­யவோ அல்­லது பரி­ச­ளிக்­கவோ அதி­காரம் வழங்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் அவர் குற்­றஞ்­சாட்­டினார்.

“குறித்த ட்ரஸ்ட் ஒப்­பந்­தத்தில் பாரிய முரண்­பா­டுகள் காணப்­ப­டு­கின்­றன. இதனை பயன்­ப­டுத்தி பள்­ளி­வா­ச­லுக்­காக வக்பு செய்­யப்­பட்ட காணி­யினை விற்­பனை செய்ய முயற்­சிக்­கின்­றனர். ட்ரஸ்ட் ஒப்­பந்­தத்தில் குறிப்­பி­டப்­பட்­டுள்ள பிர­காரம் பாபக்கர் ட்ரஸ்டின் வரு­டாந்த மகா­நா­டுகள் எதுவும் எமது பள்­ளி­வா­சலில் இது­வரை நடை­பெ­ற­வில்லை” என்றும் பொறி­யி­ய­லாளர் சஹீம் மேலும் தெரி­வித்தார்.

பாபக்கர் ஜும்ஆ பள்­ளி­வாசல், தெஹி­வளை மிருகக் காட்­சி­சா­லைக்கு அரு­கி­லுள்ள இல. 14, கல் விகார பிளேஸ் எனும் முக­வ­ரியில் 77 பேர்ச் காணியில் அமையப் பெற்­றுள்­ளது.

சவூதி அரே­பி­யாவின் தலை­ந­க­ரான றியா­தினைச் சேர்ந்த தன­வந்­த­ரான உமர் சாலி அப்துல் அஸீஸ் பாபக்கர் என்­ப­வரின் நிதியின் ஊடாக 1997.08.13ஆம் திகதி இக் காணி கொள்­வ­னவு செய்­யப்­பட்டு ஜம்­இய்­யதுஷ்ஷபாப் என்று அழைக்கப்­ப­டு­கின்ற Association of Muslim Youth Sailan அமைப்பின் கீழ் இக்­காணி பதி­வு­செய்­யப்­பட்­டுள்­ளது.

குறித்த காணியின் முக­வ­ரி­யி­லேயே கடந்த 1999.06.10ஆம் திகதி முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தில் இந்­நி­று­வனம் பதி­வு­செய்­யப்­பட்­டுள்­ளது. இப்­பி­ர­தே­சத்­தி­லுள்ள முஸ்லிம் சமூ­கத்தின் பாட­சாலைக் கல்வி மற்றும் மார்கக் கல்வி ஆகி­யற்­றினை சிறப்­பான முறையில் முன்­னெ­டுக்கும் நோக்­கி­லேயே குறித்த காணி அன்­ப­ளிப்புச் செய்­யப்­பட்­டுள்­ள­தாக குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

இதனைத் தொடர்ந்து கடந்த 2002.07.24ஆம் திகதி குறித்த காணியின் உரிமம் உமர் சாலி அப்துல் அஸீஸ் பாபக்­கரின் பெய­ருக்கு மாற்­றப்­ப­டு­கின்­றது. அத்­துடன் இக்­கா­ணியில் பள்­ளி­வாசல் மற்றும் முன்­பள்ளிப் பாட­சாலை ஆகி­யன செயற்­ப­டு­வ­தாக தெஹி­வளை – கல்­கிசை மாந­கர சபைக்கு அறி­விக்­கப்­பட்டு கடந்த 2003ஆம் ஆண்டு முதல் இக்­கா­ணிக்­கான மதீப்­பீட்டு வரி விலக்கும் பெறப்­பட்­டுள்­ளது.

எனினும், குறித்த காணியின் பதி­வு­செய்­யப்­பட்ட உரி­மை­யா­ள­ராக Association of Muslim Youth Sailan இன் பெயரே கடந்த 2017.04.05ஆம் திகதி வரை தெஹி­வளை – கல்­கிசை மாந­கர சபையின் ஆவ­ணங்­களில் காணப்­பட்­டுள்­ளது. எவ்­வா­றா­யினும், தற்போது இக்­கா­ணியின் பதி­வு­செய்­யப்­பட்ட உரி­மை­யா­ள­ராக உமர் சாலி அப்துல் அஸீஸ் பாபக்­கரின் பெயரே மாந­கர சபையின் ஆவ­ணங்­களில் காணப்­ப­டு­கின்­றது.

இதே­வேளை, இக்­கா­ணி­யினை நிர்­வ­கிப்­ப­தற்­கான அங்­கீ­கா­ர­ம­ளிக்­கப்­பட்ட நபர்­க­ளாக ஜம்­இய்­யதுஷ்ஷபாபின் முக்­கி­யஸ்­தர்­க­ளான மௌலவி எம்.எஸ்.எம். றசீட் மற்றும் சபர் ஸாலி ஆகியோர் விசேட அட்­டோனி தத்­து­வத்தின் ஊடாக கடந்த 2006.01.20ஆம் திகதி உமர் சாலி அப்துல் அஸீஸ் பாபக்­க­ரினால் நிய­மிக்­கப்­பட்­டுள்­ளனர்.

பின்னர், இக்­கா­ணிக்­கான பாபக்கர் ட்ரஸ்டினை உரு­வாக்­கு­வ­தற்­கான பொறுப்பு மேற்­படி இரு­வ­ருக்கும் கடந்த 2015.01.25 ஆம் திகதி விசேட மற்றும் வரை­ய­றுக்­கப்­பட்ட அட்­டோனி தத்­து­வத்தின் மூலம் பாபக்­க­ரினால் வழங்­கப்­பட்­டுள்­ளது.

இத­னை­ய­டுத்து, இக்­கா­ணி­யினை நிர்­வ­கிப்­ப­தற்­காக ஆறு பேரைக் கொண்ட பாபக்கர் ட்ரஸ்ட் கடந்த 2015.03.12ஆம் திகதி நிறு­வப்­பட்­டுள்­ளது. மௌலவி எம்.எஸ்.எம். றசீட், சபர் ஸாலி, மௌலவி எம்.எஸ்.எம். தாசீம், சட்­டத்­த­ரணி சீத்திக் ஹாஜா முஹைதீன். அக்ரம் எம். அமீர் மற்றும் எம்.எச். ஹின்ஸி முஹம்மத் ஆகி­யோரே இந்த ட்ரஸ்டின் உறுப்­பி­னர்­க­ளாவர். இதில் சபர் ஸாலி கடந்த சில வரு­டங்­க­ளுக்கு முன்னர் கால­மானார்.

கடந்த 2004ஆம் ஆண்டு காலப் பகு­தியில் இக்­கா­ணியில் சிறிய பள்­ளி­வா­ச­லொன்று நிர்­மா­ணிக்­கப்­பட்டு ஐவேளை தொழுகை ஆரம்­பிக்­கப்­பட்­டது. தற்­போது ஜும்ஆ தொழு­கையும் இங்கு நடை­பெ­று­கின்­றது.
இப்­பள்­ளி­வாசல் கட்­டிடம் ஜமா­அத்­தாரின் சுமார் ஆறு மில்­லியன் ரூபா மற்றும் ஜம்­இய்­யதுஷ்ஷபாபின் நிதிப் பங்­க­ளிப்பு ஆகி­ய­வற்றின் ஊடாக விரி­வாக்கம் செய்­யப்­பட்­டுள்­ளது.

தற்­போது இப்­பள்­ளி­வா­சலில் இரண்டு மௌல­விகள் உட்­பட மூவர் கட­மை­யாற்­று­கின்­றனர். இவர்­க­ளுக்­கான மாதாந்த சம்­பளம் ஜம்­இய்­யதுஷ் ஷபாபி­னா­லேயே வழங்­கப்­பட்டு வரு­கின்­றது.

இவ்­வா­றான நிலையில் குறித்த பள்­ளி­வா­சலை வக்பு சபையில் பதி­வு­செய்­வ­தற்­கான நட­வ­டிக்கை கடந்த 2012ஆம் ஆண்டு ஜமா­அத்­தா­ரினால் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளது. இதன்­போதே ஜமா­அத்­தி­ன­ருக்கும் ஜம்­இய்­யதுஷ் ஷபாபிற்கும் இடையில் முரண்­பாடு தோன்றி அது இன்று வரை தொடர்­கின்­றது.

“இது பள்­ளி­வாசல் அல்ல ஒரு நிலை­ய­மே­யாகும்” என்று ஜம்­இய்­யதுஷ்ஷபாப் கூறு­கின்­ற­மை­யி­னா­லேயே இந்த முரண்­பாடு ஏற்­பட்­டுள்­ளது. இதனால், இப்­பள்­ளி­வா­சலின் ஜமாத்­தினர் ஆறு பேர் இணைந்து பாபக்கர் ட்ரஸ்டின் உறுப்­பி­னர்­க­ளுக்கு எதி­ராக 2018.05.22ஆம் திகதி கல்­கிசை மாவட்ட நீதி­மன்றில் வழக்­கொன்றை தாக்கல் செய்­துள்­ளனர்.

குறித்த வழக்கில் கோரப்­பட்ட இடைக்­கால தடை உத்­த­ரவு 2019.04.22ஆம் திகதி மாவட்ட நீதி­ப­தி­யினால் நிரா­க­ரிக்­கப்­பட்­ட­துடன், இக்­கா­ணிக்கோ அல்­லது ட்ரஸ்­டிற்கோ மூன்றாம் தரப்­பினர் உரிமை கோர முடி­யாது எனவும் அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. இந்த வழக்கு விசா­ர­ணைகள் தற்­போது வரை இடம்­பெற்று வரு­கின்­றன.

இதே­வேளை, இப்­பள்­ளி­வா­சலை பதி­வு­செய்­வ­தற்­கான விண்­ணப்பம் கடந்த மே 18ஆம் திகதி முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்­திடம் மீண்டும் சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்­ளது.

எனினும், இதற்கு எந்தப் பதிலும் திணைக்­க­ளத்­தினால் வழங்­கப்­ப­டா­மை­யினால் கடந்த ஓகஸ்ட் மாதம் மேன் முறை­யீட்டு நீதி­மன்றில் ரிட் மனு­வொன்றை ஜமா­அத்­தார்கள் ஒன்­பது பேர் சேர்ந்து தாக்கல் செய்­துள்­ளனர்.
முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் பணிப்­பாளர், அதன் இரண்டு உதவிப் பணிப்­பா­ளர்கள் மற்றும் புத்­த­சா­சன, சமய விவ­கார மற்றும் கலா­சார அமைச்சர் விதுர விக்­ர­ம­நா­யக்க, அமைச்சின் செய­லாளர் மற்றும் சட்­டமா அதிபர் ஆகியோர் இந்த மனுவில் பிர­தி­வா­தி­க­ளாக குறிப்­பி­டப்­பட்­டுள்­ளனர்.

இத­னை­ய­டுத்து, குறித்த பள்­ளி­வா­சலை பதி­வு­செய்­வ­தற்குத் தேவை­யான நட­வ­டிக்­கை­களை எடுக்­கு­மாறு அமைச்சர் விதுர விக்­ர­ம­நா­யக்­க­வினால் திணைக்­களப் பணிப்­பா­ள­ருக்கு உத்­த­ர­வி­டப்­பட்­டுள்­ளது.
அத்­துடன் பள்­ளி­வா­ச­லுக்குச் சொந்­த­மான காணி­யினை விற்­பனை செய்­வ­தற்கு மேற்­கொள்ளும் முயற்சி தொடர்­பிலும் விசா­ரணை மேற்­கொள்­ளு­மாறு அமைச்சர் கடந்த செப்­டம்பர் 16ஆம் திகதி பணிப்­பா­ள­ருக்கு அறி­வு­றுத்­தி­யுள்ளார்.

இவ்­வா­றான நிலையில், மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்­றத்தில் தாக்கல் செய்­யப்­பட்ட ரிட் மனு, கடந்த ஒக்­டோபர் 27ஆம் திகதி விசா­ர­ணைக்­காக எடுத்­துக்­கொள்­ளப்­பட்­டுள்­ளது.

இதன்­போது, பாபக்கர் ட்ர்ஸ்டின் உறுப்­பி­னர்­க­ளினால் இடை­யீட்டு மனு­வொன்றும் தாக்கல் செய்­யப்­பட்­டுள்­ளது. எனினும், பள்­ளி­வா­சலை பதி­வு­செய்ய நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்ள விடயம் மன்­றுக்கு அறி­விக்­கப்­பட்­டது. இதனால், குறித்த வழக்­கினை வாபஸ் பெறாமல் முடி­வு­றுத்தல் செய்ய தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது.

இதே­வேளை, பாபக்கர் ஜும்ஆப் பள்­ளி­வாசல் எனும் கடிதத் தலைப்பில் விரி­வான கடி­த­மொன்று வக்பு சபையின் தலை­வ­ருக்கு கடந்த செப்­டம்பர் 20ஆம் திகதி குறித்த பள்­ளி­வாசல் ஜமா­அத்தார் சார்பில் பொறி­யி­ய­லாளர் எம். சஹீம் நஸ்­ருதீன் கை.ெயழுத்­திட்டு அனுப்­பி­யுள்ளார்.

இதற்கு பத­ல­ளிக்கும் வகை­யி­லான கடி­தங்கள் பாபக்கர் ட்ரஸ்­டினால் அமைச்சர் விதுர விக்­ர­ம­நா­யக்க மற்றும் வக்பு சபையின் தலைவர் ஆகி­யோ­ருக்கு கடந்த ஒக்­டோபர் 23ஆம் திகதி அனுப்­பப்­பட்­டுள்­ளன.
சட்­ட­வி­ரோ­த­மாக இப்­பள்­ளி­வா­ச­லுக்குள் மூன்றாம் தரப்­பொன்று நுழைய முயற்­சிப்­ப­தா­கவும், அவர்கள் சட்ட ரீதி­யற்ற வகையில் இதன் நிர்­வா­கி­க­ளாக வர முயற்­சிப்­ப­தா­கவும் குறித்த பாபக்கர் ட்ரஸ்ட் தனது கடி­தத்தில் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளது.

இதே­வேளை, குறித்த பள்­ளி­வா­சலை பதி­வு­செய்­வ­தற்­காக சமர்ப்­பிக்­கப்­பட்ட விண்­ணப்பம் திணைக்­க­ளத்தின் பணிப்­பா­ள­ரினால் கடந்த மூன்று வாரங்­க­ளுக்கு முன்னர் வக்பு சபைக்கு சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்­ள­தாக திணைக்­க­ளத்தின் உயர் அதி­கா­ரி­யொ­ருவர் தெரி­வித்தார்.

வக்பு சபை கடந்த ஓரிரு மாதங்­க­ளாக கூடா­மை­யினால் இப்­பள்­ளி­வா­சலின் பதிவு தொடர்பில் எந்­த­வித தீர்­மா­னமும் இது­வரை மேற்­கொள்­ளப்­ப­ட­வில்லை எனவும் அவர் குறிப்­பிட்டார்.

இவ்­வா­றான நிலையில் பாபக்கர் ட்ரஸ்டின் கீழுள்ள குறித்த காணி­யினை விற்­பனை செய்­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டு­வ­தாக தம்­மீது சுமத்­தப்­படும் குற்­றச்­சாட்­டுக்­களை முற்­றாக மறுப்­ப­தாக குறித்த ட்ரட்ஸின் உறுப்­பி­னரும் அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உல­மாவின் உப செய­லா­ள­ரு­மான எம்.எஸ்.எம். தாசீம் மௌலவி தெரி­வித்தார்.

ஜம்­இய்­யதுஷ்ஷபாபின் ஊடாக நாட­ளா­விய ரீதியில் பல பள்­ளி­வா­சல்­களை கட்­டிய நாம், எதற்கு இந்த சென்­ட­ரி­லுள்ள பள்­ளி­வா­சலை மூட வேண்டும் எனவும் அவர் கேள்வி எழுப்­பினார்.

“இந்த சென்­டரை வக்பு சபையில் பதி­வு­செய்ய கடந்த சில வரு­டங்­க­ளுக்கு முன்னர் நாங்கள் நட­வ­டிக்கை எடுத்­தி­ருந்தோம். எனினும், காணி­யினை வேறா­கவும், சென்டரை வேறாகவும் பதிவு செய்ய வேண்டும் என எமக்கு அறிவுறுத்தப்பட்டது. இதற்கு காணியினை வக்பு செய்தவரிடமிருந்து அனுமதி கிடைக்கவில்லை” என தாசீம் மௌலவி குறிப்பிட்டார்.

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் தலையீட்டினை அடுத்து எமது ட்ரஸ்டினை வக்பு நியாயாதிக்க சபையில் பதிவு செய்வதற்கான நடவடிக்கையினை தற்போது முன்னெடுத்துள்ளோம்.

“எவ்வாறாயினும், குறித்த காணியில் அடுத்த தலைமுறையினருக்கு பயனளிக்கக்கூடிய வகையில் பள்ளிவாசல் உட்பட ஐந்து மாடிகளைக் கொண்ட நிலையமொன்றினை நிர்மாணிக்க திட்டமிட்டிருந்தோம். இதற்கு தேவையான அனுமதிகளை பெறுவது மிகவும் சிரமமாகவுள்ளது. இதனாலேயே குறித்த கட்டிட நிர்மாணத்தில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.

“குறித்த அனுமதி கிடைக்கப் பெற்றால், நன்கொடையாளர்களின் பங்களிப்புடன் புதிய கட்டிட நிர்மாணத்திற்கான பணிகளை உடனடியாக ஆரம்பித்துவிடுவோம்” என்றும் தாசீம் மௌலவி மேலும் தெரிவித்தார்.
இப் பள்ளிவாசல் விவகாரம் மென்மேலும் இழுத்தடிக்கப்பட்டு முரண்பாடுகளை வளர்க்காது, சுமுக தீர்வை எட்ட சம்பந்தப்பட்ட தரப்புகள் முயற்சிக்க வேண்டியது காலத்தின் தேவையாகும்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.