அரச தலைவர்களிடம் புரிந்துணர்வு அவசியம்

0 837

2018 ஒக்­டோபர் 26 ஆம் திகதி ஜனா­தி­ப­தியால் தோற்­று­விக்­கப்­பட்ட அர­சியல் நெருக்­கடி நிலைமை ஒரு­வாறு கடந்த 16 ஆம் திக­தி­யுடன் முடி­வுக்கு வந்­துள்­ளது. பாரா­ளு­மன்­றத்தைக் கலைத்த ஜனா­தி­ப­தியின் செயற்­பாடு அர­சி­ய­ல­மைப்­புக்கு முர­ணா­னது என உயர் நீதி­மன்றம் வழங்­கிய வர­லாற்­றுப்­பு­கழ்­மிக்க தீர்ப்பைத் தொடர்ந்தே, ஜனா­தி­பதி மீண்டும் ரணில் விக்­ர­ம­சிங்­கவை பிர­த­ம­ராக நிய­மிக்கும் தீர்­மா­னத்­துக்கு வந்தார். இந் நிலையில் நேற்­றைய தினம் 28 பேர் அமைச்­ச­ரவை அமைச்­சர்­க­ளாக பதவிப் பிர­மாணம் செய்து கொண்­டுள்­ளனர்.

கடந்த நல்­லாட்சி அர­சாங்­கத்தில் 45 பேர் அமைச்­ச­ரவை அமைச்­சர்­க­ளா­கவும் 30 பேர் இரா­ஜாங்க மற்றும் பிர­தி­ய­மைச்­சர்­க­ளா­கவும் பதவி வகித்­தனர். ஐக்­கிய தேசிய முன்­னணி, ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி இணைந்த தேசிய அர­சாங்கம் என்­ப­தா­லேயே அமைச்­சர்­களின் எண்­ணிக்கை அதி­க­ரித்­தது. எனினும் தற்­போது ஐக்­கிய தேசிய முன்­னணி தனித்து அர­சாங்கம் அமைத்­துள்­ளதால் அமைச்­ச­ரவை அமைச்­சர்­களின் எண்­ணிக்கை 30க்குள் மட்­டுப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கி­ர­ஸுடன் இணைந்து தேசிய அர­சாங்கம் அமைப்­பது குறித்து பரி­சீ­லிக்­கப்­பட்ட போதிலும், பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க அமைச்­சர்­களின் எண்­ணிக்­கையை அதி­க­ரிக்க விரும்­ப­வில்லை. நாட்டின் பொரு­ளா­தார நிலை­மையில் அமைச்­சர்­களின் எண்­ணிக்­கையை அதி­க­ரிப்­பது ஆரோக்­கி­ய­மா­ன­தல்ல. அந்த வகையில் பிர­த­மரின் நிலைப்­பாடு வர­வேற்­கத்­தக்­க­தாகும்.

கடந்த 51 நாட்­க­ளாக நீடித்த அர­சியல் நெருக்­கடி நிலை முடி­வுக்கு வந்து, மீண்டும் ரணில் பிர­த­ம­ராக நிய­மிக்­கப்­பட்­டுள்ள போதிலும் ஜனா­தி­ப­திக்கும் பிர­த­ம­ருக்­கு­மி­டை­யி­லான பனிப் போர் தொட­ரவே செய்­கி­றது. அமைச்­சர்­களை நிய­மிக்கும் விட­யத்தில் ஜனா­தி­பதி தனது விருப்­பங்­க­ளையே முன்­னி­லைப்­ப­டுத்­தி­யுள்ளார். கடந்த காலங்­களில் தன்னை கடு­மை­யாக விமர்­சித்­த­வர்­க­ளுக்கும் தனது கட்­சி­யி­லி­ருந்து சென்­ற­வர்­க­ளுக்கும் அமைச்சப் பதவி வழங்­க­மாட்டேன் என்­பதில் ஜனா­தி­பதி உறு­தி­யா­க­வுள்ளார்.

அது­மாத்­தி­ர­மன்றி, பிர­த­ம­ராக ரணில் பத­வி­யேற்ற பின்னர்,  ஐக்­கிய தேசிய முன்­னணி எம்.பி.க்கள் மத்­தியில் ஜனா­தி­பதி ஆற்­றிய உரையும் கார­சா­ர­மா­ன­தாகும். அவர் எந்­த­ளவு தூரம் பிர­த­ம­ரு­டனும் ஏனைய ஐ.தே.முன்­னணி உறுப்­பி­னர்­க­ளு­டனும் முரண்­பா­டு­களைக் கொண்­டுள்ளார் என்­பதை அந்த உரை வெளிப்­ப­டுத்­தி­யது.

இந் நிலை­யில்தான் அடுத்த ஒன்­றரை வருட காலத்­திற்கு பொதுத் தேர்­த­லுக்குச் செல்ல முடி­யா­துள்ள நிலையில், அது­வரை இந்த அர­சாங்­கத்தின் செயற்­பா­டு­களும் இழு­பறி நிலை­யி­லேயே தொடரும் அபாயம் தெரி­கி­றது. நல்­லாட்சி அர­சாங்­கத்தில் தனது செயற்­பா­டு­க­ளுக்கு பிர­தமர் ரணில் தடை­யாக இருந்­த­தாக ஜனா­தி­பதி குற்­றம்­சாட்­டி­ய­து­போல, இனி வரும் காலங்­களில் தனது செயற்­பா­டு­க­ளுக்கு ஜனா­தி­பதி தடை­யாக உள்­ள­தாக பிர­தமர் குற்­றம்­சாட்டும் நிலை வரும். அதற்­கான சாத்­தி­யங்கள் இப்­போதே தெரிய ஆரம்­பித்­துள்­ளன.

அர­சியல் நெருக்­கடி நீடித்த 51 நாட்­களில் நாட்டின் அரச இயந்­திரம் பாரிய பின்­ன­டைவைச் சந்­தித்­தி­ருந்­தது. பொரு­ளா­தா­ரமும் சுற்­றுலாத் துறையும் ஏனைய வர்த்­தக நட­வ­டிக்­கை­களும் பாதிக்­கப்­பட்­டி­ருந்­தன. நாட்டின் நற்­பெ­ய­ருக்கும் சர்­வ­தே­சத்தில் களங்கம் ஏற்­பட்­டது. அந்த வகையில் இவற்றைச் சீர்­செய்ய வேண்­டிய பொறுப்பு ஜனா­தி­ப­திக்கும் பிர­த­ம­ருக்கும் உள்­ளது. மேலும் அடுத்த ஆண்­டுக்­கான வரவு செலவுத் திட்­டமும் நாட்டின் முன்­னேற்­றத்தை மையப்­ப­டுத்­தி­ய­தாக தூர நோக்­குடன் சமர்ப்­பிக்­கப்­பட வேண்­டி­யுள்­ளது. இவற்றைச் செய்ய வேண்­டு­மாயின் இவ்­விரு தரப்­பு­க­ளுக்­கு­மி­டையில் பரஸ்­பர புரிந்­து­ணர்வு அவ­சி­ய­மாகும்.

மறு­புறம், மஹிந்த ராஜ­பக்ச தலை­மை­யி­லான அணி­யினர் அர­சாங்­கத்தின் செயற்­பா­டு­களை முடக்­கு­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்கக் கூடும். பாரா­ளு­மன்ற அமர்­வு­களைப் பகிஷ்­க­ரிக்கும் கலா­சா­ரத்தை அவர்கள் கைக்­கொண்­டுள்­ளனர். இது பாரா­ளு­மன்றம் மீதான நம்­பிக்­கையை கேள்­விக்­குட்­ப­டுத்­து­வ­தாக உள்­ளது. என­வேதான் மஹிந்த அணி­யினர்  நாட்டின் அர­சாங்க இயந்­தி­ரத்தை சுமு­க­மாக நடாத்திச் செல்­வ­தற்கு ஒத்­து­ழைப்பு நல்க வேண்டும்.

இறு­தி­யாக,  தமிழ் – முஸ்லிம் கட்­சிகள் ஜன­நா­ய­கத்தை பாது­காப்­ப­தற்­கான போராட்­டத்தில் முழு­மை­யாக தம்மை அர்ப்பணித்துச் செயற்பட்டன. இது வரலாற்றில் பதியப்பட வேண்டியதாகும்.  ஜனநாயகத்தை மீறிய தரப்பினரிடம் பணத்துக்காக, பதவிக்காக சோரம்போகாது நாட்டைப் பாதுகாக்க  சிறுபான்மையினர் வழங்கிய  உதவிக்கு பிரதமர் நன்றிக் கடன்பட்டுள்ளார். அந்த வகையில் தமிழ் முஸ்லிம் சிறுபான்மை மக்கள் சமகாலத்தில் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்க வும் குறிப்பாக இனிவரும் காலங்களில் இன, மத ரீதியிலான அசாதாரண சூழ்நிலைகள் ஏற்படாத வகையில் பாதுகாப்பு வழங்கவும் முன்வர வேண்டும்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.