பாராளுமன்ற அதிகாரி நெளசாத் காலமானார்

0 124

உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலைத் தொடர்ந்து பொய்க் குற்­றச்­சாட்டின் கீழ் கைது செய்­யப்­பட்டு தடுத்து வைக்­கப்­பட்­டி­ருந்து பின்னர் விடு­விக்­கப்­பட்ட பாரா­ளு­மன்­றத்தின் சிரேஷ்ட குறி­யீட்டு அதி­காரி எம்.ஜே.எம். நௌசாத் கடந்த வாரம் தனது 46 ஆவது வயதில் கால­மானார்.

கெக்­கி­ரா­வையைப் பிறப்­பி­ட­மாகக் கொண்டு, அக்­கு­ற­ணையில் வசித்து வந்த இவர் மூன்று பிள்­ளை­களின் தந்­தை­யாவார்.

உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலின் பின்னர் கைது செய்­யப்­பட்ட ஒரு­வ­ரது தொலை­பேசி இலக்கம், இவ­ரது கைய­டக்கத் தொலை­பே­சியில் இருந்­த­தாக கூறியே அவர் கைது செய்­யப்­பட்டு பல வரு­டங்கள் தடுத்து வைக்­கப்­பட்­டி­ருந்தார். அப்­போ­தைய பாரா­ளு­மன்ற செய­லாளர் நாயகம் தம்­மிக தச­நா­யக்­கவின் அனு­ம­தி­யுடன் கைது செய்­யப்­பட்­டி­ருந்த அவர், பாரா­ளு­மன்­றத்­துக்கு படைகள் சகிதம் பாரிய குற்­ற­வாளி போன்று அழைத்து வரப்­பட்­ட­துடன் அதனை ஊட­கங்­களும் ஒளி­ப­ரப்­பி­யி­ருந்­தன. இவர் பயன்­ப­டுத்­திய கணினி உப­க­ர­ணங்­களும் பயங்­க­ர­வாத தடுப்பு பிரி­வி­னரால் விசா­ர­ணை­க­ளுக்­காக எடுத்துச் செல்­லப்­பட்­டன.

தொடர்ச்­சி­யான தடுத்து வைப்பு மற்றும் துன்­பு­றுத்­தல்கள் கார­ண­மாக இவர் கடு­மை­யாக உள­ரீ­தி­யா­கவும் உடல் ரீதி­யா­கவும் பாதிக்­கப்­பட்­டி­ருந்தார். இவர் மீதான குற்­றச்­சாட்­டுக்­களை நிரூ­பிக்க முடி­யா­ததன் கார­ண­மாக, சில வாரங்­க­ளுக்கு முன்­னரே நீதி­மன்­றினால் நிர­ப­ராதி எனத் தீர்ப்­ப­ளிக்­கப்­பட்டு விடு­தலை செய்­யப்­பட்­டி­ருந்தார். இவ­ருக்­காக ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி எம்.எம்.சுஹைர் இல­வ­ச­மாக வழக்­கு­களில் ஆஜ­ரா­னமை குறிப்­பி­டத்­தக்­க­தாகும்.

நிர­ப­ரா­தி­யென நீதி­மன்­றினால் அறி­விக்­கப்­பட்ட சில வாரங்­க­ளி­லேயே அவர் இவ்­வாறு மர­ணித்­துள்ளார்.

அன்­னாரின் ஜனாஸா கடந்த வியாழக்கிழமை அக்குறணை 9 ஆம் கட்டை பள்ளிவாசலில் தொழுகை நடாத்தப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது. நல்லடக்கத்தில் பாராளுமன்ற ஊழியர்கள் உட்பட பெருந்திரளானோர் கலந்து கொண்டனர்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.