மறக்கப்பட்டுவிட்ட வடக்கு முஸ்லிம்களின் துயரம்

0 230

1990 ஆம் ஆண்டில் வடக்­கி­லுள்ள முஸ்­லிம்கள் தமி­ழீழ விடு­த­லைப்­பு­லி­க­ளினால் பல­வந்­த­மாக வெளி­யேற்­றப்­பட்டு இந்த வாரத்துடன் சரியாக 33 வருடங்கள் பூர்த்தியாகின்றன.

வடக்­கி­லுள்ள முஸ்­லிம்கள் பல­வந்­த­மாக வெளி­யேற்­றப்­பட்ட சம்­ப­வம் ஒரு திட்­ட­மிட்ட இனச்­சுத்­தி­க­ரிப்பு என்பதை சகலரும் ஏற்றுக் கொள்கின்றனர். அக­தி­க­ளாக்­கப்­பட்­ட­வர்கள் என்றோ உள்­நாட்­டிற்குள் இடம்­பெ­யர்ந்­த­வர்கள் என்றோ அவர்­களை அடை­யா­ளப்­ப­டுத்த முடி­யாது. முஸ்­லிம்கள் தனித்­த­னி­யாக அடை­யாளம் காணப்­பட்டு திட்­ட­மிட்ட அடிப்­ப­டையில் பல­வந்­த­மாக வெளி­யேற்­றப்­பட்­டார்கள் என்­பதன் அடிப்­ப­டையில் குறித்த வர­லாற்றுத் துய­ரத்­தினை இனச்­சுத்­தி­க­ரிப்பு என்றே அடை­யா­ளப்­ப­டுத்த வேண்­டி­யுள்­ளது.

முஸ்­லிம்­களின் பல­வந்த வெளி­யேற்­றத்­திற்கு தமி­ழர்­க­ளாக உள்ள பொது­மக்கள் காரணம் என்று நினைப்­பது முட்­டாள்­த­ன­மாகும். குறித்த காலப்­ப­கு­தியில் உத்­தி­யோ­க­பூர்­வ­மா­கவோ அல்­லது முறை­யற்ற விதத்­திலோ அதி­கா­ரத்தில் இருந்­த­வர்­கள்தான் இந்த வர­லாற்றுத் துய­ரத்­திற்கு பொறுப்புக் கூற வேண்­டி­ய­வர்கள் ஆவர். 1983 தமிழ் மக்­க­ளுக்கு ஒரு கறுப்பு ஆண்டு என்­ப­தைப்­போல 1990 முஸ்­லிம்­க­ளுக்கு ஒரு கறுப்பு ஆண்­டாகும். 30 வருட கால யுத்­தத்தில் தமிழ் மக்கள் மாத்­தி­ர­மல்­லாது முஸ்­லிம்­களும் பாதிக்­கப்­பட்­டார்கள் என்­பதை சம்பந்தப்பட்ட சகலரும் உணர்ந்து கொண்டு பாதிக்கப்பட்ட சகல தரப்புகளுக்கும் பொருத்தமான ஒரு தீர்வை நோக்கிப் பயணிப்பதே காலத்தின் தேவையாகும்.

புதிய தலை­முறை அறி­யாத பல துய­ரங்­களை கடந்தே வடக்கின் முஸ்­லிம்கள் வெளி­யேற்­றப்­பட்­டார்கள். பணம், நகை என சகல சொத்­துக்­க­ளையும் சூறை­யாடி வெறுங்­கை­யோடு அனுப்­பப்­பட்­டார்கள். அர­சாங்கம் அல்­லது அரச சார்­பற்ற நிறு­வ­னங்கள் வழங்­கு­கின்ற சின்­னஞ்­சி­றிய உலர் உண­வுப்­பொ­தியில் தங்கி வாழும் நிலை­மைதான் அனை­வ­ருக்கும் இருந்­தது. பெண்கள் சிறு­வர்கள் வயோ­தி­பர்கள் என அனை­வ­ருமே வார்த்தை வடிவம் கொடுக்க முடி­யாத அள­வுக்கு சிர­மப்­பட்­டார்கள் என்­ப­வற்றை மறக்­கவே முடி­யாது. தற்போது பலஸ்தீனில் இஸ்ரேலின் கொலைவெறித் தாக்குதலிலிருந்து தப்பிப்பதற்காக பாதுகாப்பான இடங்களை நோக்கி வெளியேறும் பலஸ்தீன மக்களின் நிலையைக் காணும் போது 1990 இல் வட புல முஸ்லிம்களும் எவ்வாறு இந்த அகதி வாழ்க்கையை அனுபவித்திருப்பார்கள் என்ற காட்சிகள் மனக்கண் முன் வந்து போகின்றன.

இரண்டு வருடங்களுக்கு முன்னர் யாழ்ப்­பாணம் பல்­க­லைக்­க­ழகம் மேற்­கொண்ட ஆய்­வு­க­ளின்­படி பல­வந்த வெளி­யேற்றம் இடம்­பெற்று 31 ஆண்­டுகள் கடந்த பிறகும் வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்கள் தம்மை மீளக்கட்டியெழுப்ப முடியாத நிலையில் பிறரில் தங்கியிருக்க வேண்டிய நிலையிலேயே வாழ்கிறார்கள் என்பது கண்டறியப்பட்டுள்ளது. தற்­போது மீள்­கு­டி­யே­று­கின்ற முஸ்­லிம்கள் மிதக்கும் சமூ­க­மா­கவே வாழ்­கி­றார்கள். அதா­வது புத்­த­ளத்தில் கொஞ்ச நாள் யாழ்ப்­பா­ணத்தில் கொஞ்ச நாள் என்றே அவர்­க­ளு­டைய வாழ்க்கை நகர்­கி­றது.

மீள்­கு­டி­யே­றிய முஸ்­லிம்கள் தமது தேவை­க­ளுக்­காக அர­சாங்க அலு­வ­ல­கங்­க­ளுக்கு செல்­கின்­ற­போது அங்­குள்ள அதி­கா­ரி­க­ளினால் வெறுப்­புப்­பேச்­சு­களை சந்­திப்­பது வழ­மை­யான ஒன்­றாக ஆகி­யுள்­ளது. கடும் நிபந்தனைகளுக்கு மத்தியிலேயே தம்மை மீளவும் பதிவு செய்து அப் பகுதியில் வாழ வேண்டியுள்ளது. இவ்வாறு அனு­தி­னமும் சிர­மத்­துடன் வாழ்­கி­றார்கள் எனும்­போது மீள்­கு­டி­யேற்றம் அர்த்­த­மற்­ற­தாக மாறி­விடும்.

வீடு­களை மீளக்­கட்டி மீள்­கு­டி­யேறும் முஸ்­லிம்­க­ளுக்கு வழங்­கு­கின்ற திட்­டங்­களில் பாரிய பின்­ன­டைவு இருக்­கி­றது. நிலத்­துக்­கான ஆவ­ணங்கள் எது­வுமே கைவசம் இல்­லாத நிலையில் அர­சாங்கம் அவர்­க­ளிடம் ஆவ­ணங்­களை கோரு­வதும் திட்­டங்­களை இழுத்­த­டிப்பு செய்­வதும் வேடிக்­கை­யான ஒன்றாகும்.

மீள்­கு­டி­யே­றிய முஸ்­லிம்­க­ளுக்கு நிலம் ஒரு பாரிய பிரச்­சினையாக உருவெடுத்துள்ளது. நிலங்­க­ளுக்­கான பட்­ட­யங்கள் இல்­லா­மையால் அங்கே நீருக்­காக கிணறு தோண்­டு­தல், மின்­சார வச­தி­களை பெற்­றுக்­கொள்­ளுதல் போன்ற விட­யங்­க­ளுக்கு பாரிய சிர­மங்கள் இருக்­கின்­றன. மேலும் இரா­ணு­வ­ம­ய­மாக்­கலால் காணி­களை தமி­ழர்கள் மாத்­தி­ர­மின்றி முஸ்­லிம்­களும் இழந்­துள்­ளார்கள்.எனினும் வடக்கில் தமிழ் மக்களின் காணிப் பிரச்சினைக்கு வழங்கப்படும் முக்கியத்துவம் முஸ்லிம்களின் காணிப் பிரச்சினைக்கு வழங்கப்படுவதில்லை. இதற்கு முஸ்லிம் அரசியல் தலைமைகளின் கையாலாகத்தனமும் ஒரு காரணமாகும்.

வடக்­கி­லுள்ள முஸ்­லிம்­களின் அர­சியல் பிர­தி­நி­தித்­துவம் மற்றும் அர­சியல் பிரச்­சி­னைகள் தொடர்­பாக யாரும் கண்­டு­கொள்­வ­தில்லை. இளம் வயது திரு­ம­ணங்கள் மற்றும் இளை­ஞர்கள் போதைப்­பொ­ரு­ளுக்கு அடி­மை­யா­குதல் போன்ற விட­யங்கள் மீளக்குடியேறிய சமூகத்திலும் மலிந்து விட்­டன. சிறந்த கல்வியும் பெரும் சவாலாக மாறியுள்ளது.

எனவேதான் எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் இம்மக்களின் துயர் துடைப்பதற்கான நிரந்தர வேலைத்திட்டம் ஒன்றை நோக்கி நகர்வதற்கான அழுத்தங்களை அரசாங்கத்திற்கு வழங்க வேண்டியது முஸ்லிம் தரப்பின் கடமையாகும். இன்றேல் இன்றுபோல் என்றும் மறக்கப்பட்ட சமூகமாகவே வடக்கு முஸ்லிம் சமூகம் இருந்துவிடும்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.