முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் இயக்கங்கள், தொண்டு நிறுவனங்களின் பதிவுகளை 2019 இல் இரத்து செய்தது ஏன்?

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் வினவப்பட்டதையடுத்து தகவல் வெளியானது ; இரத்தான பதிவின் இலக்கங்களை தொடர்ந்து பயன்படுத்த முடியாது எனவும் சுட்டிக்காட்டு

0 614

எஸ்.என்.எம்.சுஹைல்

முஸ்லிம் சமய திணைக்­க­ளத்தில் பதிவு செய்­யப்­பட்ட நலன்­புரிச் சங்­க­மொன்றின் சொத்­துக்கள் சம்­பந்­த­மாக திரு­கோ­ண­மலை மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்றம் வழங்­கிய தீர்ப்­பை­ய­டுத்தே முஸ்லிம் சமய திணைக்­க­ளத்தில் பதிவு செய்­யப்­பட்­டி­ருந்த முஸ்லிம் இயக்கங்கள், தன்­னார்வ தொண்டு நிறு­வ­னங்­களின் பதி­வு­களை இரத்துச் செய்­வ­தற்கு காரணம் என தெரி­ய­வந்­துள்­ளது.

இதன்­படி, திணைக்­க­ளத்தில் பதிவு செய்­யப்­பட்­டி­ருந்த 435 இயக்­கங்கள் மற்றும் தன்­னார்வ தொண்டு நிறு­வ­னங்­களின் பதி­வுகள் அனைத்தும் 2019 ஆம் ஆண்டு செப்­டெம்பர் 23 ஆம் திக­தி­முதல் நிறுத்­தப்­பட்­டுள்­ள­தா­கவும் முன்­ன­தாக திணைக்­க­ளத்தால் வழங்­கப்­பட்ட பதிவு இலக்­கங்­களை பயன்­ப­டுத்த முடி­யாது என்றும்  திணைக்­களம் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளது.

இது தொடர்­பாக முஸ்லிம் சமய, பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்­திடம் தக­வ­ல­றியும் உரிமைச் சட்­டத்தின் கீழ் தகவல் கோரி­ய­தற்­க­மைய திணைக்­க­ளத்­தினால் அளிக்­கப்­பட்ட பதி­லி­லேயே இந்த தக­வல்கள் வெளி­யா­கின.
மேற் குறிப்­பிட்ட விடயம் சம்­பந்­த­மாக திணைக்­க­ளத்தின் உதவிப் பணிப்­பாளர் எம்.எஸ். அலா அஹ­மட் ­வ­ழங்­கிய பதிலில் மேலும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ள­தா­வது,

முஸ்லிம் நலன்­புரி அமைப்­புக்கள்/சங்­கங்கள் மற்றும் தன்­னார்வ நிறு­வ­னங்கள் என்­ப­வற்றின் முதல் பதிவு 1987.02.16 ஆம் திகதி பதிவு செய்­யப்­பட்­டுள்­ளது. எனவே, அத்­தி­னத்­தி­லி­ருந்தே பதி­வுகள் ஆரம்­பிக்­கப்­பட்­டி­ருக்­கலாம்.

முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ள­மா­னது முஸ்­லிம்­க­ளுக்­கு­ரிய தனி­யான திணைக்­களம் என்­ப­த­னா­லேயே முஸ்லிம் இயக்­கங்கள் மற்றும் தன்­னார்வ நிறு­வ­னங்­களின் பதி­வுகள் இடம்­பெற்­றன.

முஸ்லிம் நலன்­புரி அமைப்­புக்கள்/சங்­கங்கள் மற்றும் தன்­னார்­வ நிறு­வ­னங்கள் என்­ப­வற்றின் பதிவு செய்யும் நட­வ­டிக்­கைகள் 2019.09.23 ஆம் திகதி முதல் நிறுத்­தப்­பட்­டுள்­ளது.

இது தொடர்­பான கடி­தங்கள் 2019.09.23 திக­தி­யன்று திணைக்­க­ளத்தின் அப்­போ­தைய பணிப்­பாளர்  எம்.ஆர்.எம். மாலிக்­கினால் அமைப்­பு­களின் தலைவர் மற்றும் செய­லா­ளர்­க­ளுக்கு கடிதம் மூலம் அறி­விக்­கப்­பட்­டுள்­ளன.

அனுப்­பப்­பட்ட கடி­தங்­களில், “…… (அமைப்பின் பெயர்) பதிவு முஸ்லிம் சமய கலா­சார அலு­வல்கள் திணைக்­க­ளத்தின் கீழ் நலன்­புரிச் சங்­க­மாக பதிவு செய்­யப்­பட்டு MRCA/.. /../ பதிவு இலக்­
கத்­துடன் ஒதுக்­கப்­பட்­டி­ருந்­தது. திணைக்­க­ளத்தின் முடி­வின்­படி 24.09.2019 முதல் இரத்து செய்­யப்­ப­டு­கி­றது.
எனவே, 1962 ஆம் ஆண்டு சட்டம் எண் 21 மற்றும் 1982 ஆம் ஆண்டின் 33 ஆம் சட்­டத்தால் திருத்­தப்­பட்ட 1956 ஆம் ஆண்டின் வக்ஃப்கள் சட்டம் எண். 51 இன் கீழ் அதே சங்­கத்தை அறக்­கட்­ட­ளை­யாக பதிவு செய்ய தேவை­யான நட­வ­டிக்­கை­களை எடுக்­கு­மாறு இதன்­ மூலம் நீங்கள் அறி­வு­றுத்­தப்­ப­டு­கி­றீர்கள்”

எமது திணைக்­க­ளத்தில் பதிவு செய்­யப்­பட்ட நலன்­புரி சங்­க­மொன்றின் சொத்­துக்கள் சம்­பந்­த­மாக திரு­கோ­ண­மலை மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்றம் EP/HCCA/TRN/FA/215/17 ஆம் இலக்க வழக்­குடன் தொடர்­பு­டைய 2018.09.27 ஆம் திக­தி­யு­டைய தீர்ப்பில் முஸ்லிம் நலன்­புரி அமைப்­புக்கள்/சங்­கங்கள் மற்றும் தன்­னார்வு நிறு­வ­னங்கள் என்­ப­வற்றின் பதி­வுகள் சமூக சேவை நலன்­புரி அமைப்­புக்கள்/சங்­கங்கள் பதிவு செய்யும் அமைப்­புகள் சட்ட யாப்பில் அல்­லது சமூக சேவைகள் திணைக்­க­ளத்தில் அல்­லது கம்­பனிச் சட்­டத்தில் பதிவு செய்ய முடியும் என அறி­விக்­கப்­பட்­டதால், இத்­தி­ணைக்­க­ளத்தில் பதிவு செய்­யப்­பட்ட முஸ்லிம் நலன்­புரி அமைப்­புக்கள்/சங்­கங்கள் மற்றும் தன்­னார்வ நிறு­வ­னங்கள் என்­ப­வற்றின் பதி­வுகள் இரத்துச் செய்­யப்­பட்­டன.

இதன்­படி, திணைக்­க­ளத்தில் 435 முஸ்லிம் நலன்­புரி அமைப்­புக்கள்/சங்­கங்கள் மற்றும் தன்­னார்வ நிறு­வ­னங்கள் பதிவு செய்­யப்­பட்­டி­ருந்­தன.

இவ்­வாறு மாவட்ட அடிப்­ப­டையில் பதிவு செய்­ய­ப்பட்­டிருந்த நிறு­வ­னங்­களின் எண்­ணிக்கை  அட்டவணையில்..
பதிவு செய்­யப்­பட்­டி­ருந்த அனைத்து நலன்­புரி அமைப்­புக்கள்/சங்­கங்­க­ளது பதி­வு­களும் இரத்துச் செய்­யப்­பட்­டன என தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

அத்­துடன்,  மேற்­படி நிறு­வ­னங்­களின் பதி­வுகள் இரத்துச் செய்­யப்­பட்ட பின்­னரும் சில அமைப்­புக்கள் தொடர்ச்­சி­யாக தங்கள் திணைக்­க­ளத்தின் பதி­வி­லக்­கத்­தினை பயன்­ப­டுத்­து­வ­தாக தெரி­விக்­கப்­ப­டு­வ­தாக தெரி­ய­வ­ரு­கி­றது. அவ்­வாறு பயன்­ப­டுத்த முடி­யுமா என கேட்­கப்­பட்ட வினவுக்கு, முடியாது என திணைக்களத்தினால் பதிலளிக்கப்பட்டது.

அத்துடன், மேற்படி நலன்புரி அமைப்புக்கள்/சங்கங்களின் பதிவுகள் இரத்துச் செய்யப்பட்டதைத் தொடர்ந்து எமது திணைக்களத்தின் பதிவு இலக்கத்தினை பயன்படுத்த முடியாது என அந்நிறுவனங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை எந்த நலன்புரி அமைப்புக்கள்/சங்கங்களும் அப்பதிவிலக்கத்தினை பயன்படுத்தியதாக முறைப்பாடுகள்  கிடைக்கப்பெறவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.