இனப்பிரச்சினைக்கான தீர்வு விவகாரம்: முஸ்லிம் கட்சியினரை மாத்திரம் ஜனாதிபதி ரணில் சந்திக்கலாகாது

அனைத்து தரப்பினரையும் இணைத்தே பேச்சு நடத்த முன்வரவேண்டும் என வலியுறுத்துகிறார் ஹலீம்

0 581

(எஸ்.என்.எம்.சுஹைல்)
ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்க முஸ்லிம் தரப்பை சந்­திக்­கும்­போது, முஸ்லிம் கட்­சி­களின் பிர­தி­நி­தி­களை மாத்­திரம் சந்­தித்து பேச்சு நடத்­தாமல், அனைத்து முஸ்லிம் தரப்­பு­க­ளையும் இணைத்தே பேச்­சு­வார்த்­தை­களில் ஈடு­ப­ட­முன்­வர வேண்டும் என கண்டி மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் ஐக்­கிய மக்கள் சக்­தியின் முஸ்லிம் மத விவ­கா­ரங்­க­ளுக்கு பொறுப்­பான உறுப்­பி­ன­ரு­மான அப்துல் ஹலீம் தெரி­வித்தார்.

இலங்கை முஸ்­லிம்­களின் பிரச்­சி­னை­களை வடக்கு கிழக்­கு­டனும், முஸ்லிம் கட்­சி­க­ளு­டனும் சுருக்கிக் கொள்­ளாது தேசிய ரீதியில் அணுக வேண்டும் எனவும் அவர் வலி­யு­றுத்­தினார்.

இது தொடர்­பாக அவர் மேலும் தெரி­விக்­கையில், இந்­திய விஜ­யத்தின் பின்னர் ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்க முஸ்லிம் பிர­தி­நி­தி­க­ளுடன் பேச்சு நடத்­து­வ­தாக வாக்­கு­று­தி­ய­ளித்­தி­ருந்தார். எனினும், குறித்த பேச்­சு­வார்த்­தைகள் தொடர்ந்தும் தாம­த­மா­கி­றது.

அத்­தோடு, முஸ்லிம் கட்­சி­களின் பிர­தி­நி­தி­களை மாத்­திரம் அவர் சந்­திக்க முற்­ப­டு­வா­ரானால் அது ஒரு சார்பு நிலைக்கு கொண்டு செல்லும், குறிப்­பாக முஸ்லிம் கட்­சி­களின் பிர­தி­நி­தி­க­ளை­விட அதி­க­மான முஸ்லிம் பிர­தி­நி­தி­களை ஐக்­கிய மக்கள் சக்­தியே கொண்­டி­ருக்­கி­றது. எமக்கே, பெரு­வா­ரி­யாக முஸ்லிம் மக்கள் தமது ஆணையை வழங்­கி­யி­ருக்­கின்­றனர். எனவே, மக்கள் ஆணையை ஜனா­தி­பதி மதித்து அனைத்து கட்­சி­க­ளிலும் அங்கம் வகிக்கும் முஸ்லிம் பிர­தி­நி­தி­களை உள்­ள­டக்கி சந்­திப்­பு­களை நடத்த வேண்டும்.

மேலும், முஸ்லிம் கட்­சி­களின் உறுப்­பி­னர்கள் பெரு­வா­ரி­யாக வடக்கு கிழக்கு மாகா­ணங்­க­ளையே பிர­தி­நி­தித்­துவப் படுத்­து­கின்­றனர். வடக்கு கிழக்­கிற்கு வெளி­யேதான், மூன்றில் இரண்டு சத­வீத முஸ்லிம் மக்கள் வசிக்­கின்­றனர். அவர்­களின் அபிப்­பி­ராயம் இனப்­பி­ரச்­சினை தீர்வு விட­யத்தில் உள்­ளீர்க்­கப்­ப­டாமல் இருந்தால், அது நியா­ய­மான தீர்­வாக அமை­யாது.

வடக்கு கிழக்­கி­லுள்ள முஸ்லிம் மக்­களை இன வன்­மு­றை­களும், 30 வரு­ட­கால யுத்­தமும் கடு­மை­யாக பாதிப்­ப­டையச் செய்­துள்­ளது. அதே­போன்று, யுத்த காலத்­திலும் சரி, அதற்கு பின்­னரும் வடக்கு கிழக்­கிற்கு வெளி­யி­லுள்ள முஸ்லிம் மக்கள் பேரி­ன­வா­தி­களால் இலக்கு வைக்­கப்­பட்டு நசுக்­கப்­பட்­டுள்­ளனர். அங்­குள்ள பிரச்­சி­னை­களை விட வித்­தி­யா­ச­மான இன ரீதி­யி­லான பிரச்­சி­னை­க­ளுக்கு இங்­குள்ள முஸ்லிம் மக்கள் முகம் கொடுக்­கின்­றனர். அர­சியல் பிர­தி­நி­தித்­து­வத்தை பெறு­வ­திலும் தெற்கு முஸ்­லிம்­க­ளுக்கு பெரும் சவால் இருக்­கின்­றது. எனவே, ஜனா­தி­பதி தெற்­கி­லுள்ள முஸ்லிம்களை விட்டுவிட்டு பேச்சுவார்த்தைகள் நடத்துவதானது பெரும் அநீதியாக அமைந்துவிடும்.
ஆகவே, இந்த விடயத்தை புரிந்துகொண்டு அவர் அனைத்து தரப்பினரையும் ஒன்றிணைத்து பேச்சுவார்த்தைக்கு செல்ல வேண்டும் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஹலீம் தெரிவித்தார்.– Vidivelli

Leave A Reply

Your email address will not be published.