நாடெங்குமுள்ள பள்ளிவாசல்களின் சொத்து விபரங்கள் சேகரிக்கப்படுவது வரவேற்கத்தக்கது

ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்ஸில்

0 347

(ஏ.ஆர்.ஏ.பரீல்)
நாட்­டி­லுள்ள அனைத்துப் பள்­ளி­வா­சல்கள் மற்றும் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் கீழுள்ள நிறு­வ­னங்­களின் சொத்­துக்கள் உள்­ளிட்ட விப­ரங்­களை அர­சாங்கம் சேக­ரிப்­ப­தற்கு மேற்­கொண்­டுள்ள தீர்­மானம் வர­வேற்­கத்­தக்­கது. இம்­மு­யற்­சிக்கு முஸ்லிம் சமூகம் பூரண ஒத்­து­ழைப்பு நல்க வேண்டும் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்ஸில் தெரி­வித்­துள்­ளது.

‘இது நல்­லதோர் முயற்சி. பள்­ளி­வா­சல்கள் மற்றும் அர­புக்­கல்­லூ­ரி­க­ளுக்கு வக்பு செய்­யப்­பட்­டுள்ள ஆயி­ரக்­க­ணக்­கான கோடி ரூபாய் பெறு­மதி வாய்ந்த சொத்­துக்கள் இன்று சவா­லுக்­குட்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. தனி­யா­ரினால் அப­க­ரிக்­கப்­பட்­டுள்­ளன. பல பள்ளிவாசல்­களின் சொத்­துகள் பற்­றிய விப­ரங்கள் நிர்­வா­கி­க­ளுக்கே தெரி­யா­துள்­ளது.’ என ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்­ஸிலின் தலைவர் என்.எம்.அமீன் ‘விடி­வெள்ளி’க்குத் தெரி­வித்தார்.

அவர் தொடர்ந்தும் தெரி­விக்­கையில் ‘எமது முன்­னோர்­களால் பள்­ளி­வா­சல்­களை நிர்­வ­கிப்­ப­தற்­கா­கவே காணி­களும், ஏனைய சொத்­துக்­களும் வக்பு செய்­யப்­பட்­டன. இச்­சொத்­துக்கள் காலக்­கி­ர­மத்தில் ஒழுங்­காக நிர்­வ­கிக்­கப்­ப­டா­மையால் இன்று தனி­யார்­க­ளாலும், பள்­ளி­வா­சல்­களை நிர்­வ­கித்து வந்த நிர்­வா­கி­களின் குடும்­பத்­தா­ரி­னதும் ஆதிக்­கத்­துக்கு உள்­ளா­கி­யுள்­ளன. பள்­ளி­வா­ச­லுக்கு சொந்­த­மான கடைகள், கட்­டி­டங்­க­ளுக்கு உரிய வாடகை கூட செலுத்­தப்­ப­டு­வ­தில்லை.

அர­சாங்கம், இந்­நி­லையில் பள்­ளி­வா­சல்­களின் அசையும் அசையா சொத்­து­களின் விப­ரங்­களைத் திரட்டி அவற்றை சட்­ட­ரீ­தி­யான பொறி­மு­றைக்குள் கொண்­டு­வர முயற்­சிப்­பது எமக்கு நன்மை பயப்­ப­தா­கவே அமையும். எமது பள்­ளி­வாசல் சொத்­துகள் அப­க­ரிப்­பி­லி­ருந்தும் காப்­பாற்­றப்­படும். முஸ்­லிம்கள் இது தொடர்பில் அச்­ச­ம­டை­யத்­தே­வை­யில்லை. அர­சாங்கம் பள்­ளி­வா­சல்­களின் சொத்து விப­ரங்­களை மாத்­திரம் திரட்­ட­வில்லை. அனைத்து மதத்­த­லங்­களின் சொத்து விப­ரங்­க­ளையும் திரட்டி வரு­கி­றது.

எனவே பள்­ளி­வாசல் நிர்­வா­கங்கள் மற்றும் வக்பு சபை என்­பன இது விட­யத்தில் அர­சாங்­கத்­துக்கு பூரண ஒத்துழைப்பினை வழங்க வேண்டும்.
பள்ளிவாசல் சொத்துகளை எவரும் அபகரித்திருந்தால், இன்றேல் சட்டவிரோதமாக கைப்பற்றிக் கொண்டிருப்பதால் உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு இம்முயற்சி உதவியாக இருக்கும் என்றார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.