இஸ்லாமியப் பிரசாரப் பணிக்குத் தன்னை முழுமையாக அர்ப்பணித்த மூத்த ஆலிம்

0 196

கவிமணி மெளலவி
எம்.எம்.எம்.புஹாரி (பலாஹீ)

காத்­தான்­குடி ஜாமி­அதுல் பலாஹ் அற­புக்­கல்­லூ­ரியில் சிரேஷ்ட விரி­வு­ரை­யா­ள­ராக நீண்ட காலம் கட­மை­யாற்­றி­யவரும் காத்­தான்­குடி தப்லீக் மர்கஸ் ஸபீலுர் றஷாத் அறபுக் கல்­லூ­ரியின் அதி­ப­ரு­மான பீ.எம்.எம்.ஹனீபா மெள­லவி (ஆதம் லெப்பை ஹஸறத்) கடந்த 23.06.2023 வெள்­ளிக்­கி­ழமை கால­மா­னார்கள். அன்­னாரின் ஜனாஸா 24.06.2023 சனிக்­கி­ழமை காலையில் காத்­தான்­கு­டியில் நல்­ல­டக்கம் செய்­யப்­பட்­டது. ஜனாஸா நல்­ல­டக்­கத்தில் உள்ளூர் வெளி­யூர்­களைச் சேர்ந்த பெருந்­தி­ர­ளானோர் கலந்து கொண்­டனர்.

ஆதம்­லெப்பை ஹஸறத் அவர்கள் ஆரம்­பத்தில் விவ­சா­யத்தில் ஈடு­பட்­டார்கள். பின்னர் சிறிது காலம் வியா­பா­ரத்தை மேற்­கொண்­டார்கள். பின்­னர்தான் ஜாமி­அதுல் பலாஹில் சேர்ந்து புனித மார்க்கக் கல்­வியைக் கற்­றார்கள். கற்­கும்­போது மிகவும் திற­மை­சா­லி­யாக விளங்­கி­னார்கள். கற்­றுக்­கொண்டே கற்­றுக்­கொ­டுக்கும் உஸ்­தா­தாகத் திகழ்ந்­தார்கள். நானும் அவர்­க­ளிடம் கற்கும் பாக்­கியம் பெற்றேன்.

பலாஹின் அதி­ப­ராக இருந்த சங்­கைக்­கு­ரிய ஷைகுல் பலாஹ் அவர்­க­ளுக்கு மிக்க உறு­து­ணை­யாக இருந்து பலாஹைக் கட்­டி­யெ­ழுப்­பு­வதில் தீவி­ர­மாக ஈடு­பட்­டார்கள்.

ஷைகுல் பலாஹ் அவர்கள் தனது உற்றார், உற­வி­னர்­களைத் துறந்து இந்­தி­யாவின் அதிராம் பட்­டி­ணத்­தி­லி­ருந்து வந்து அர்ப்­ப­ணிப்­புடன் பணி புரிந்­த­போது அவர்­களைத் தனது தந்­தை­போன்று அர­வ­ணைத்து பக்­க­ப­ல­மாக இருந்து செயற்­பட்­டார்கள். அவர்களது இன்ப துன்­பங்­களில் பங்­கெ­டுத்துத் துணை நின்­றார்கள். பல தட­வை­களில் அவர்­க­ளது தாய­க­மான அதிராம் பட்­டி­ணத்­துக்குச் சென்று அன்­னாரின் குடும்ப நலன்­களைப் பேணு­வதில் அக்­கறை செலுத்­தி­னார்கள்.

ஷைகுல் பலாஹ் அவர்­களைப் பெரிய ஹஸறத் என்றும், ஆதம் லெப்பை ஹஸரத் அவர்­களை உதவி ஹஸறத் என்றும் மாண­வர்­களும் மற்­ற­வர்­களும் அழைப்­பார்கள்.
ஜாமி­அதுல் பலாஹின் புதிய கட்­டடம் நிர்­மா­ணிக்­கப்­ப­டும்­போது அதில் பெரும் பங்கு வகித்­தார்கள். புதிய கட்­டி­டத்­தி­றப்பு விழா 1971 ஆம் ஆண்டு வெ-கு­வி­ம­ரி­சை­யாக நடை­பெற்­ற­போ­துதான் ஆதம்­லெப்பை ஹஸறத் அவர்­க­ளது பட்­ட­ம­ளிப்பு விழாவும் இடம் பெற்­றது.

மெள­லவி பலாஹீ பட்டம் பெற்ற உட­னேயே ஜாமி­அதுல் பலாஹின் விரி­வு­ரை­யா­ள­ராக நிய­மனம் பெற்று சிறப்­பாக பணி­யாற்­றி­னார்கள். இக்­கால கட்­டத்­தில்தான் புனித தப்லீக் ஜமாஅத் பணியின் தீவிர பிரச்­சா­ரகர் பேரா­சி­ரியர் மழ்­ஹ­றுத்தீன் அவர்கள் ஜாமி­அதுல் பலா­ஹுக்கு வருகை தந்து மாண­வர்­க­ளதும், விரி­வு­ரை­யா­ளர்­க­ளதும் மத்­தியில் சிறப்­பான உரை நிகழ்த்­தி­னார்கள். இவர்­க­ளது உரை­யினால் ஈர்க்­கப்­பட்ட ஆதம்­லெப்பை ஹஸறத் புனித தப்லீக் பிரச்­சார பணியில் பங்­கெ­டுத்­தார்கள். அன்று முதல் இறுதி மூச்­சு­வரை தப்லீக் பணியில் ஈடு­பட்­டார்கள். அதன் மூலம் நாட்டின் பல பாகங்­க­ளிலும், வெளி­நா­டுகள் பல­வற்­றிலும் இப்­ப­ணியில் மும்­மு­ர­மாகப் பங்­கு­கொண்­டார்கள். இலங்கை தப்லீக் இயக்­கத்தின் முக்­கி­யஸ்­தர்­களில் ஒரு­வ­ராக விளங்­கி­னார்கள். கொழும்பு தப்லீக் ஜமாஅத் பிர­தான மர்­கஸில் பொறுப்­பு­தா­ரி­களில் ஒரு­வ­ராகச் செயற்­பட்­டார்கள்.

புனித இஸ்­லாத்திற்கு மாற்றமான கொள்கைப் பிரச்­சாரம் தலை­தூக்­கி­ய­போது அதற்கு எதி­ராக முன்­னின்று குரல் கொடுத்­தார்கள். இது தொடர்­பாக சிறை­வாசம் அனு­ப­விக்கும் துர்ப்­பாக்­கிய நிலையும் அவர்­க­ளுக்கு ஏற்­பட்­டது.

காத்­தான்­குடி ஜம் இய்­யத்துல் உல­மா­வுடன் இணைந்து சமய சீர்த்­தி­ருத்தப் பணியில் மும்­மு­ர­மாக ஈடு­பட்­டார்கள். காத்­தான்­குடி பள்­ளி­வா­சல்கள் சம்­மே­னத்தை உரு­வாக்­கு­வதில் அதிக பங்­க­ளிப்புச் செய்­தார்கள். அதன் மூலம் கூட்டு ஸகாத் திட்­டத்தை ஆரம்­பிப்­பதில் பெரும்­பங்கு வகித்­தார்கள். இறு­தி­வரை சம்­மே­ள­னத்தின் செயற்­பா­டு­க­ளுக்கு உறு­து­ணை­யாக நின்­றார்கள்.

தன்­னை­போன்றே தனது மக்­க­ளையும் மார்க்கப் பணி­யா­ள­ராக உருவாக்கினார்கள். அவர்­க­ளது ஆண், பெண் மக்­களிற் பலர் ஆலிம்­க­ளா­கவும், ஹாபிழ்­க­ளா­கவும், மார்க்­கப்­ப­ணி­யா­ளர்­க­ளா­கவும் திகழ்­வதை நாம் பார்க்­கிறோம்.

அவர்கள் தீவிர இஸ்­லா­மியப் பிரச்­சாரப் பணியில் ஈடு­பட்­டதன் கார­ண­மாக ஜாமி­அதுல் பலாஹில் உஸ்­தா­தாகக் கட­மை­யாற்ற முடி­யா­மற்­போ­னது. எனினும் அக்­கல்­லூ­ரியின் பணிப்­பாளர் சபையின் உறுப்­பி­ன­ராக இருந்து அவ்­வப்­போது ஆலோ­ச­னைகள் வழங்கி உத­வி­னார்கள்.

காத்­தான்­குடி தப்லீக் மர்­கஸில் அறபுக் கல்­லூரி ஒன்றை உரு­வாக்­கு­வதில் அதிக கவனம் செலுத்­தி­னார்கள். ‘ஸபீலுர் ரஷாத்’ என்ற பெயரில் இயங்கும் அக்­கல்­லூ­ரியின் அதி­ப­ராக சுக­வீனம் அடை­யும்­வரை கட­மை­யாற்­றி­னார்கள்.

அவர்­க­ளது மரணச் செய்தி அறிந்து இலங்­கையின் எல்லாப் பகு­தி­க­ளி­லு­மி­ருந்தும் உல­மாக்­களும், ஹாபிழ்­களும், அர­புக்­கல்­லூ­ரி­களின் விரி­வு­ரை­யா­ளர்­களும் மாண­வர்­களும் வந்து ஜனாஸாத் தொழு­கை­யிலும், நல்­ல­டக்­கத்­திலும் கலந்து கொண்­டார்கள். இது காத்­தான்­கு­டியின் வர­லாற்றில் குறிப்­பி­டத்­தக்க ஒரு நிகழ்­வாகக் கரு­தப்­ப­டு­கி­றது.
அன்­னா­ருக்கு அல்லாஹ், மறுமைப் பாக்­கி­யங்­களை நிறைவாகக் கொடுக்கப் பிரார்த்திப்போம்!- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.