ஐ.சி.சி.பி.ஆர். சட்டம் ஞானசார தேரருக்கு எதிராக ஏன் அமுல்படுத்தப்படவில்லை

ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதத்தில் முஸ்லிம் கவுன்ஸில் கேள்வி

0 164

(ஏ.ஆர்.ஏ.பரீல்)
போதகர் ஜெரோம், நகைச்சுவை நடிகை நட்டாஷா எதிரிசூரிய மற்றும் யுடியூப் பதிவர் புருனோ திவாகர ஆகியோர் பெளத்த சமயத்தின் மீது வெறுப்பினைத் தூண்டும் வகையில் செயற்பட்டார்கள் என்பதற்காக ஐசிசிபிஆர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்கள்.

அதே­வேளை எந்­த­வொரு சம­யத்­தையும் அவ­ம­திப்­பதை மன்­னிக்க முடி­யாது. இஸ்­லாத்­தையும் எங்கள் அல்­லாஹ்­வையும் அவ­ம­தித்த ஞான­சார தேர­ருக்கோ அல்­லது முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான தீவி­ர­வா­தி­க­ளுக்கு எதி­ரா­கவோ ஐசி­சிபி ஆர் சட்டம் அமுல்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை. இந்­நாட்டின் சட்ட ஆட்­சிக்கு என்ன நடந்­துள்­ளது. ஐசி­சி­பிஆர் சட்டம் அமுல்­ப­டுத்­தப்­ப­டு­வதில் ஏன் இந்த வேறு­பாடு? பாகு­பாடு? என ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்ஸில் ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­விடம் கேள்­வி­யெ­ழும்­பி­யுள்­ளது. முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக நடாத்­தப்­பட்ட அளுத்­கம வன் செயல்­களின் 9 வருட நிறை­வினை நினை­வு­கூர்ந்து ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்ஸில் ஜனா­தி­ப­திக்கு அனுப்பி வைத்­துள்ள கடி­தத்­திலே இவ்­வாறு தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்­ஸிலின் பதில் தலைவர் ஹில்மி அஹமட் அனுப்­பி­வைத்­துள்ள குறிப்­பிட்ட கடி­தத்தில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது;

2014 ஜூன் மாதம் அளுத்­க­மையில் முஸ்­லிம்­க­ளுக்­கெ­தி­ரான வன்­செ­யல்கள் கட்­ட­விழ்த்து விடப்­பட்டு 9 வரு­டங்கள் பூர்த்­தி­யா­கி­யுள்­ளது. ஞான­சார தேரரின் வெறுப்புப் பேச்­சினால் இந்­தக்­க­ல­வரம் ஏற்­பட்­டது. 2014 ஆம் ஆண்டு ஜூன் 15 ஆம் திகதி களுத்­து­றையில் ஞான­சார தேரர் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக வெறுப்பு உரையை நிகழ்த்­தினார். இவ­ரது உரை­யினால் தூண்­டப்­பட்டு அளுத்­க­மயில் உரு­வான வன்­செ­யல்­க­ளினால் 4 உயிர்கள் காவு கொள்ளப்­பட்­டன. முஸ்­லிம்­களின் பொரு­ளா­தாரம் சிதைக்­கப்­பட்­டது.
முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான வன்­செ­யல்­க­ளினால் அளுத்­கம மற்றும் பேரு­வ­ளையில் மத தலங்களின் சொத்­துக்­களும், முஸ்­லிம்­களின் சொத்­துக்­களும் சிங்­கள பெளத்த கல­கக்­கார கும்­பல்­களால் அழிக்­கப்­பட்­டன. அளுத்­கம, பேரு­வளை, தர்கா டவுண் ஆகிய நக­ரங்­களில் முஸ்­லிம்­களின் சொத்­துக்கள் சூறை­யா­டப்­பட்­டன.

பொது­பல சேனாவின் பேர­ணியைத் தொடர்ந்து வன்­செ­யல்கள் கட்­ட­விழ்த்து விடப்­பட்­டது. வன்­செ­யல்­களை தூண்­டி­ய­தாக பொது­பல சேனா அமைப்­பின்­மீதே குற்றம் சுமத்­தப்­பட்­டது. அர­சாங்­கத்தின் உத்­த­ர­வி­னை­ய­டுத்து பிர­தான ஊட­கங்கள் வன்­செ­யல்கள் தொடர்­பான செய்­தியை தணிக்கை செய்­தது.

2014 ஆம் ஆண்டு ஜூன் 12 ஆம் திகதி பெளத்த குரு அய­கம சமித்த மற்றும் அவ­ரது சாரதி தர்கா நகரில் முஸ்­லிம்­களால் தாக்­கு­த­லுக்கு உள்­ளா­ன­தாக செய்தி பரப்­பப்­பட்­டது. பெளத்த குரு சமித்த தேரரின் பன்­ச­லை­யி­லி­ருந்து வன்­செயல் குழு­வொன்று குரு­வுடன் இணைந்து அளுத்­கம பொலிஸ் நிலையம் மீது தாக்­குதல் மேற்­கொண்டு பெளத்த குரு தாக்­கப்­பட்­டமை தொடர்பில் உட­ன­டி­யாக நட­வ­டிக்கை மேற்­கொள்­ளு­மாறு கோரப்­பட்­டது. இதைத் தொடர்ந்து 2014 ஜூன் 15 ஆம் திகதி பொது­பல சேனா களுத்­து­றையில் பொதுக்­கூட்­ட­மொன்­றினை நடாத்­தி­யது. இக்­கூட்­டமே வன்­செ­யல்­க­ளுக்கு கார­ணமாய் அமைந்­தது.

குறிப்­பிட்ட பெளத்த குரு­மீது தாக்­குதல் நடாத்­தி­ய­தாக குற்றம் சுமத்­தப்­பட்­ட­வர்கள் குற்­ற­வா­ளி­க­ளல்ல எனவும் அவர்கள் மீதான குற்றச் சாட்­டுக்கள் அடிப்­ப­டை­யற்­றவை எனவும் நிரூ­ப­ண­மா­னது.

அளுத்­கம வன்­செ­யல்கள் தொடர்பில் பார­பட்­ச­மற்ற விசா­ர­ணை­யினை நடாத்தி இத­னுடன் தொடர்­பு­டை­ய­வர்­களை சட்­டத்­தின்முன் நிறுத்தி நீதியை நிலை­நாட்­டுங்கள் எனக்கோரப்பட்டுள்ளது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.