மாடுகளில் பரவும் அம்மை நோய்! குர்பானுக்கு என்ன நடக்கும்?

0 312

ஏ.ஆர்.ஏ.பரீல்

முஸ்லிம் சமூகம் கடந்த காலங்­களில் சமயக் கட­மை­களில் தொட­ராக சவால்­களை எதிர்­கொண்டு வரு­கி­றது. கொவிட் 19 தொற்று பர­விய கால­கட்­டத்தில் ஐவேளை தொழுகை மற்றும் ஜும்ஆ தொழு­கை­களை பள்­ளி­வா­சல்­களில் நிறை­வேற்­று­வதில் நாம் பல கட்­டுப்­பா­டு­களை, சிர­மங்­களை எதிர்­கொண்டோம். புனித ஹஜ் கட­மையை நிறை­வேற்­று­வ­தற்கும் பல சுகா­தார விதிமுறைகள் விதிக்­கப்­பட்­டன. ஹஜ் யாத்­தி­ரி­கர்­களின் எண்­ணிக்­கையும் மட்­டுப்­ப­டுத்­தப்­பட்­டன.

இவ்­வா­றான நிலைமை சீர­டைந்­துள்ள நிலையில் முஸ்லிம் சமூகம் மீண்­டுமொரு சவாலை எதிர்­கொண்­டுள்­ளது. முஸ்­லிம்­களின் ஹஜ் பெருநாள் எதிர்­வரும் 29 ஆம் திகதி கொண்­டா­டப்­ப­ட­வுள்­ளது. தியா­கத்தை நினைவு கூறும் இப்­பெ­ருநாள் குர்­பா­னுடன் தொடர்­பு­பட்­ட­தாகும். முஸ்­லிம்கள் குர்­பா­னுக்­காக தயா­ரா­கிக்­கொண்­டி­ருக்கும் நிலையில் நாட­ளா­விய ரீதியில் மாடு­க­ளுக்கு அம்மை நோய் (Lumpy Skin Disease) வேக­மாகப் பர­வி­யுள்­ளது. இந்­நோய் கா­ர­ண­மாக பல மாடுகள் இறந்து போயுள்­ளன.
இந்நோய் தொற்று கார­ண­மாக வடக்கு, கிழக்கு மற்றும் வடமேல் உள்­ளிட்ட பல இடங்­களில் மாடுகள் அறுப்­ப­தற்குத் தடை விதிக்­கப்­பட்­டுள்­ளது. அத்­தோடு நோய்­தொற்­றுக்­குள்­ளான பகு­தி­யி­லி­ருந்து வெளி­யி­டங்­க­ளுக்கு மாடுகள் போக்­கு­வ­ரத்து செய்­வது தடை செய்­யப்­பட்­டுள்­ளது.

துறைசார் மேற்­பார்வை குழு
கூட்­டத்தில் ஹலீம் எம்.பி.
நாட்டின் பல பகு­தி­களில் மாடு­க­ளுக்கு வைரஸ் தொற்று அம்மை நோய் பர­வி­யுள்­ளதால் குர்பான் விட­யத்தில் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளமும், புத்­த­சா­சன மற்றும் மத விவ­கார அமைச்சும் கூடுதல் கரி­சனை செலுத்த வேண்டும். குர்பான் தொடர்பில் தீர்­மா­ன­மொன்று நிறை­வேற்­றப்பட­வேண்டும் என கண்டி மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எம்.எச்.ஏ.ஹலீம் தெரி­வித்­துள்ளார்.

பாரா­ளு­மன்ற கட்­ட­டத்­தொ­கு­தியில் இடம்­பெற்ற மத விவ­கா­ரங்கள் மற்றும் சக­வாழ்வு பற்­றிய துறைசார் மேற்­பார்­வைக்­குழுக் கூட்­டத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரி­விக்­கை­யிலேயே ஹலீம் எம்.பி. இவ்­வாறு வலி­யு­றுத்­தினார்.

அவர் மேலும் தெரி­விக்­கையில், கொவிட் 19 தொற்று காலத்தில் சமய கட­மை­களை நிறை­வேற்­று­வ­தற்கு கட்­டுப்­பா­டுகள் விதிக்­கப்­பட்­டன. இதன் கார­ண­மாக பல்­வேறு ஆபத்­து­களைத் தவிர்க்க முடிந்­தது. இது­போன்று தற்­போது முஸ்­லிம்கள் குர்பான் கட­மையை நிறை­வேற்ற தயா­ரா­கிக்­கொண்­டி­ருக்­கும்­போது புதிய சவா­லொன்று ஏற்­பட்­டுள்­ளது. மாடு­க­ளுக்கு அம்மை நோய் பர­வி­யுள்­ளது. குரு­நா­கலில் இத்­தொற்று நோய் ஆரம்­பித்து வடக்கு, கிழக்கு மத்­திய மாகா­ணங்­க­ளுக்கும் பரவ ஆரம்­பித்­துள்­ளது. அத்­தோடு பல இடங்­களில் அர­சாங்கம் மாடு அறுப்­ப­தற்குத் தடை விதித்­துள்­ளது. இந்­நி­லையில் குர்பான் விட­யத்தில் மாற்று தீர்­மா­னங்­களை எடுக்க வேண்­டி­யுள்­ளது. இதற்­கான வழி­காட்­டல்­களை முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளமும், மத விவ­கார அமைச்சும் வழங்க வேண்டும்.

இஸ்­லா­மிய மார்க்க அறி­ஞர்கள் மார்க்கத் தீர்ப்­பொன்று வழங்க வேண்டும். அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபை, ஏனைய ஏற்­றுக்­கொள்­ளப்­பட்ட இஸ்­லா­மிய அமைப்­புக்­க­ளுடன் கலந்­து­ரை­யாடி குர்பான் தொடர்பில் தீர்­மா­ன­மொன்­றினை நிறை­வேற்­ற­வேண்டும்.

சுகா­தார அமைச்சு மாடு­க­ளுக்கு ஏற்­பட்­டுள்ள நோய் தொடர்பில் விசேட சுற்று நிரு­பங்­களை வெளி­யிட்­டுள்­ளது. நோய்­தொற்­றுக்­குள்­ளான மாடு­க­ளுக்கு சிகிச்­சை­ய­ளிக்­கப்­பட்­டுள்­ளது. ஆனால் குர்பான் தொடர்பில் தெளி­வுகள் இல்லை. எனவே மத­வி­வ­கார அமைச்சும், சுகா­தார அமைச்சும் இணைந்து தெளி­வூட்­டல்­க­ளையும் அறி­வு­றுத்­தல்­க­ளையும் வழங்­க­வேண்டும் என்றார்.

விவ­சாய விஞ்­ஞான துறை உதவி ஆராச்­சி­யாளர் இர்சாத் கமால்
இன்­றைய கால­கட்­டத்தில் நாட்டின் பல பகு­தி­களில் மாடுகள் வைரஸ் தாக்­கத்­துக்­குட்­பட்டு நோய்­வாய்ப்­பட்­டுள்­ளன. இதனால் பாரிய பிரச்­சி­னைகள் ஏற்­பட்­டுள்­ளன. இது தொடர்­பாக துறைசார் பல்­க­லைக்­க­ழக பேரா­சி­ரி­யர்­க­ளுடன் கலந்­து­ரை­யா­டினேன். எனவே குர்பான் காலத்தை நெருங்கியுள்ள எமது சமூ­கத்­துக்கு இது தொடர்பில் தெளி­வு­களை வழங்க வேண்டும் என விவ­சாய விஞ்­ஞான துறைசார் உதவி ஆராய்ச்­சி­யா­ளரும், உதவி விரி­வு­ரை­யா­ள­ரு­மான எம்.இர்சாத் கமால் தெரி­வித்தார்.

அவர் தொடர்ந்தும் தெரி­விக்­கையில், இந்த நிலை­மையில் வைரஸ் தாக்கம் மாடு­க­ளுக்கு மாத்­தி­ர­மல்ல, ஏனைய சில கால்­ந­டை­க­ளுக்கும் பர­வி­யுள்­ளது. இது தொடர்பில் சமூ­க­வ­லை­த்த­ளங்­களில் பதி­வுகள் வைர­லா­கி­யுள்­ளன. மாடு­க­ளுக்கு பர­வி­யுள்ள வைரஸ் அம்மை நோய்க்கு மிருக வைத்­தி­யர்கள் சிகிச்­சை­களை வழங்­கு­கின்­றனர். அவ்­வாறு வழங்­கப்­படும் மிரு­கங்­க­ளுக்கு செலுத்­தப்­படும் ஊசி மூல­மான மருந்­துகள் மிரு­கங்­களின் உடம்பில் சில காலம் இருக்கும். மருந்­து­களின் தாக்கம் இருக்கும்.

எனவே இவ்­வா­றான மாடுகள் மற்றும் கால்­ந­டை­களின் மாமி­சத்தை உண­வுக்­காக எடுப்­பது நிச்­ச­ய­மாக பாரிய ஆபத்­தாக அமையும். இது தவிர்த்துக் கொள்­ளப்­ப­ட­வேண்டும். மிருக வைத்­தி­யர்கள் மற்றும் இது தொடர்­பான ஆராய்ச்­சி­யா­ளர்கள் தொடர்ந்து மக்­களை தெளி­வு­ப­டுத்தி வரு­கி­றார்கள். இந்­நி­லை­மையை முஸ்லிம் சமூ­கமே பாரிய அளவில் எதிர்­கொண்­டுள்­ளது. ஏனெனில் குர்­பானின் மாமி­சத்தை நாம் பர­வ­லாக பகிர்ந்­த­ளிப்போம். தற்­போ­தைய கணக்­கெ­டுப்­பின்­படி சுமார் 75 வீத­மான மாடு­க­ளுக்கு இந்நோய் பர­வி­யுள்­ளது.

தற்­போது குர்பான் சீசன் ஆரம்­ப­மா­கி­யுள்­ளது. மாடு விற்­ப­னை­யா­ளர்கள் இந்நோய் பர­வி­யுள்ள பிர­தே­சங்­க­ளி­லி­ருந்து குறைந்த விலைக்கு மாடு­களை கொள்­வ­னவு செய்து நாட்டின் பல பகு­தி­க­ளுக்கு எடுத்துச் சென்­றுள்­ளார்கள்.

குர்­பா­னுக்­காக தாம் கொள்­வ­னவு செய்யும் மாடு­களை தன­வந்­தர்கள் பார்ப்­பது கூட இல்லை. அத்­தோடு கூட்டு குர்­பா­னுக்­காக கொள்­வ­னவு செய்யும் மாடு­க­ளுக்­கான நிலை­மையும் இப்­ப­டியே. இஸ்­லா­மிய சட்­ட­வி­தி­க­ளின்­படி குர்­பா­னுக்­கான மாடுகள் ஆரோக்­கி­ய­மா­ன­தாக இருக்­க­வேண்டும். நோய்­க­ளற்­ற­தாக இருக்க வேண்டும். இதுவே இஸ்­லா­மிய சட்டம். அதனால் வைரஸ் தாக்­கத்­துக்­குள்­ளான மாடுகள் குர்­பா­னி­லி­ருந்தும் தவிர்க்­கப்­பட வேண்டும். இவ்­வா­றான மாடுகள் குர்பான் கொடுக்­கப்­பட்டால் அதன் மாமி­சத்தை உண்­ப­வர்கள் நோய் நி­லை­மைக்கு உள்­ளாக்­கப்­ப­டுவர்.

நோய்த் ­தாக்­கத்­துக்­குள்­ளான மாடுகள் மருந்து செலுத்­தப்­பட்டு சிகிச்­சை­ய­ளிக்­கப்­பட்­டாலும் மருந்­துகள் குறிப்­பிட்ட ஒரு கால எல்­லைக்குள் மாடு­களின் உடலில் இருக்கும். இம்­ம­ருந்­து­களின் தாக்கம் குறை­வ­டை­வ­தற்கு சில காலம் செல்லும். அதற்குள் அம்­மாட்­டினை அறுத்து அதனை குர்பான் இறைச்­சி­யாக பகிர்ந்­த­ளித்தால் அதனைப் பெற்­றுக்­கொண்டு உண்­ப­வர்­களும் நோய் தாக்­கங்­க­ளுக்கு உட்­ப­டு­வார்கள்.

இவ்­வா­றான சிக்­கல்­மி­குந்த நிலையில் உல­மாக்­களின் தீர்­மா­னமே அவ­சி­ய­மாகும். மக்கள் தெளி­வுப்­ப­டுத்தப்பட வேண்டும். உல­மாக்கள் ஒரு சில பள்­ளி­வாசல் மிம்­பர்­களில் மக்­களைத் தெளி­வு­ப­டுத்­தி­யி­ருக்­கி­றார்கள். அத்­தோடு மாடு­க­ளுக்கு மாற்­றீ­டாக குர்­பா­னுக்கு என்ன வழி என்­ப­தையும் உல­மாக்கள் மக்­க­ளுக்கு அறி­விக்க வேண்டும்.

கொவிட் 19 கால­கட்­டத்தில் அது தொடர்­பான நிபு­ணர்கள், வைத்­தி­யர்கள் மக்­களைத் தெளி­வு­ப­டுத்­தி­னார்கள். கொவிட் 19 வைரஸ் தொற்­று­கா­லத்தில் மக்­களை அதி­லி­ருந்தும் பாது­காப்­ப­தற்­காக மார்க்க கட­மை­களை பள்­ளி­வா­சல்­களில் மேற்­கொள்­ளாது வீடு­களில் மேற்­கொள்­ளு­மாறும் எமது மார்க்க அறி­ஞர்கள் வலி­யு­றுத்­தி­யி­ருந்­தார்கள். சமூ­கத்தை பாது­காத்­தார்கள். இவ்­வா­றான ஒரு கால­கட்­டத்­திலே நாம் இன்று இருக்­கிறோம்.
தற்­போ­தைய மாடுகள் நோய்த்­தாக்கம் கார­ண­மாக குறைந்த விலைக்கே விற்­கப்­ப­டு­கின்­றன.

இவ்­வா­றான நிலையில் பள்­ளி­வாசல் நிர்­வா­கங்கள் சமூக அமைப்­புகள், ஊர்த்­த­லை­வர்கள் குர்பான் தொடர்பில் மக்­களைத் தெளி­வு­ப­டுத்த வேண்டும். மாடு­களை தவிர்த்து குர்­பா­னுக்கு மாற்­று­வழி காணப்­பட வேண்டும். மேலும் தடுப்­பூசி ஏற்­றப்­பட்ட மாடு­களும் குர்­பா­னுக்­காக விற்­பனை செய்­யப்­பட்­டுள்­ளன. மருந்து ஏற்­றப்­பட்ட மாடு­களின் உடலில் அந்த மருந்தின் தாக்கம் குறிப்­பிட்ட காலத்­துக்கு தங்­கி­யி­ருக்கும். எனவே அவ்­வா­றான மாடு­களின் மாமி­சத்தை உண்­பதால் பாரிய நோய்த்­தாக்­கங்­க­ளுக்கு உள்­ளா­கலாம். பல பகு­தி­களில் இவ்­வா­றான மாடுகள் களவில் குர்­பா­னுக்­காக அறுப்­ப­தற்­கான முயற்­சிகள் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ள­தாக அறிய முடி­கி­றது. எனவே மக்கள் குர்­பானில் மிக அவ­தா­ன­மாக இருக்­க­வேண்டும். மாடு இன்றி மாற்­று­வழி காணப்­பட வேண்டும் எனத் தெரி­வித்­துள்ளார்.

வத்­து­காமம் பிர­தே­சத்தில்
நோய் இனங்­காணல்
வத்­து­காமம் மிருக வைத்­தி­ய­சாலை பிரி­வுக்­குட்­பட்ட கல­தெ­னிய பிர­தே­சத்தில் மாடு­க­ளுக்கு வைர­ஸினால் பரவும் அம்மை நோய் (Lumpy Skin Disease) இனங்­கா­ணப்­பட்­டுள்­ள­தாக வத்­து­காமம் அர­சாங்க மிருக வைத்­திய அதி­காரி பாத்­த­தும்­பறை பிர­தேச செய­லா­ள­ருக்கு கடிதம் மூலம் அறி­வித்­துள்ளார்.

2023.06.06 ஆம் திகதி அனுப்பி வைத்­துள்ள கடி­தத்தில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது; குறிப்­பிட்ட நோயினால் பாதிக்­கப்­பட்­டுள்ள மாடு­களின் மூலம் நோய் பரவும் அபாயம் உள்­ளது எனவும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

இக்­க­டிதம் கிடைக்­கப்­பெற்­றதும் பாத்­த­தும்­பறை பிர­தேச செய­லாளர் இது தொடர்பில் அவ­தானம் செலுத்தும் படி சம்­பந்­தப்­பட்ட அதி­கா­ரி­க­ளு-க்கு உத்­த­ர­விட்­டுள்ளார்.
குறிப்­பிட்ட கடிதம் வத்­து­காமம் நக­ர­ச­பையின் செய­லாளர், பாத்­த­தும்­பறை பிர­தேச சபையின் செய­லாளர், வத்­து­காமம் பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி ஆகி­யோ­ருக்கும் அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ளன.

இப்­ப­கு­தியில், வத்­து­காமம் மிருக வைத்­திய பிரி­வுக்­குட்­பட்ட முஸ்லிம் பிர­தே­சங்­களில் இந்­நோய்க்­குள்­ளான மாடுகள் வெளி­யி­லி­ருந்து கொண்­டு­வ­ரப்­பட்டு மறை­வி­டங்­களில் வைக்­கப்­பட்­டுள்­ள­தாக வத்­து­காமம் மிருக வைத்­திய காரி­யா­லயம் தெரி­விக்­கி­றது. இம்­மா­டுகள் குர்பான் கொடுப்­ப­தற்­காக மறைத்து வைக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. பொது­மக்கள் இவ்­வா­றான மாடு­களை குர்­பா­னுக்­காக தேர்ந்­தெ­டுப்­ப­தி­லி­ருந்தும் தவிர்த்து கொள்ள வேண்டும்.

மேல் மாகா­ணத்தில் நோய் பரவல்
மாடு­க­ளுக்கு பர­வி­யுள்ள தோல் மீதான அம்மை நோய் மேல் மாகா­ணத்­திலும் இனங்­கா­ணப்­பட்­டுள்­ள­தா­கவும், இங்கும் பர­வி­யுள்­ள­தா­கவும் அரச மிருக வைத்­தி­யர்கள் சங்கம் தெரி­வித்­துள்­ளது.

மாடு­களின் இந்த நோய் தாக்­கத்தை கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்டு வரு­வ­தற்­காக சம்­பந்­தப்­பட்ட அதி­கா­ரிகள் உட­ன­டி­யாக களத்தில் இறங்க வேண்­டு­மென அரச மிருக வைத்­தி­யர்கள் சங்­கத்தின் தலைவர் டாக்டர் சிசிர பிய­சிறி அறை­கூவல் விடுத்­துள்ளார்.
மாடு­க­ளுக்கு ஏற்­பட்­டி­ருக்கும் அம்­மை ­நோ­யினை கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்­டு­வ­ரும்­வரை பொதுமக்கள் மாட்டிறைச்சி உண்பதிலிருந்தும் தவிர்ந்து இருக்குமாறு சுகாதார பிரிவினர் அறிவுறுத்தியுள்ளனர்.

சுகா­தார பிரிவு இது தொடர்பில் அறிக்­கை­யொன்­றி­னையும் வெளி­யிட்­டுள்­ளது. அவ்­வ­றிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது; தற்­போது இலங்­கையில் மாடு­க­ளுக்கு அம்­மைநோய் வேக­மாகப் பரவி வரு­கி­றது. குறிப்­பாக வடமேல், வட­மத்­திய மாகா­ணங்­களில் இந்நோய் வேக­மா­கப்­ப­ரவி தற்­போது மத்­திய மாகாணம் மற்றும் மேல் மாகா­ணத்­துக்கும் பர­வி­யுள்­ளது. இந்நோய்த் தாக்கம் கார­ண­மாக நாட்டின் பால் உற்­பத்­தியும் பாரிய சவால்­களை எதிர்­கொண்­டுள்­ளது. ‘நோய்த்­தாக்­கத்­துக்­குள்­ளான பசுக்களின் பால் உற்பத்தி பெருமளவில் வீழ்ச்சியடையும்.

நோய்த்­தாக்கம் ஏற்­பட்­டதன் பின் அந்த மாடு­க­ளுக்கு நடப்­ப­தற்கு முடி­யாமல் போகலாம். உணவு உண்­ணு­வது குறை­வ­டையும். குறிப்­பாக சிறிய இளம் மாடுகள் இறந்­து­விடும். இந்நோய் பொருளாதார ரீதியில் பாதிப்புகளை ஏற்படுத்தும் நோயாக மாறியுள்ளது. வைரஸ் நோயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக தடுப்பூசி ஏற்றப்பட வேண்டும். இந்த நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் பால் உற்பத்தி பிரதேசங்களான மத்திய, வடமேல், ஊவா போன்ற மாகாணங்களிலும் மேற்கொள்ளப்படவேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய மாகாணத்தில் மாட்டிறைச்சியை தவிர்த்து கொள்ளுமாறு வேண்டுகோள்
கால்­ந­டை­களைத் தாக்­கி­வரும் வைரஸ் நோய் முழு­மை­யாகக் கட்­டுப்­பாட்­டுக்குள் வரும்­வரை மத்­திய மாகா­ணத்தில் கால்­ந­டை­களை உள்ளே கொண்­டு­ வ­ரு­வ­தற்கும் வெளியே கொண்டு செல்­வ­தற்கும் தடை விதிக்­கப்­பட்­டுள்­ள­துடன், நிலைமை சீராகும் வரை பொது மக்கள் மாட்­டி­றைச்சி உண்­பதை தவிர்ந்து கொள்­ளு­மாறு ஆலோ­சனை வழங்­கப்­பட்­டுள்­ளது.

மத்­திய மாகாண விலங்கு உற்­பத்தி சுகா­தார திணைக்­க­ளத்தின் பணிப்­பாளர் கலா­நிதி ஆர்.எம்.கே.பி. ராஜ­நா­யக்­க­வினால் இத்­தடை விதிக்­கப்­பட்­டுள்­ளது.

நுவ­ரெ­லியா மாவட்­டத்தில் பால் உற்­பத்­தியும் பாதிக்­கப்­பட்­டுள்­ளது. மாத்­தளை மாவட்­டத்தில் தம்­புள்ளை மற்றும் கலே­வெல மிருக வைத்­திய அதி­காரி பிரி­விலும், நுவ­ரெ­லியா மாவட்­டத்தில் ராகல மிருக வைத்­திய அதி­காரி பிரி­விலும், கண்டி மாவட்­டத்தில் ஹாரிஸ்­பத்­துவ, பூஜா­பிட்­டிய, ஹத்­த­ர­லி­யத்த மற்றும் உடு­நு­வர மிருக வைத்­திய அதி­காரி பிரி­விலும் இந்நோய் பர­வி­யுள்­ள­தா­கவும் ஆர்.எம்.கே.பி.ராஜ­நா­யக்க தெரி­வித்தார்.
இது வைரஸ் தொற்­றுநோய் எனவும் கட்­டுப்­ப­டுத்த நட­வ­டிக்கை எடுத்­துள்­ள­தா­கவும் கூறினார்.

இவ்­வா­றான நோய் நிலை­மைகள் நாட்டின் பல மாவட்­டங்­களில் பர­வி­யுள்­ளதால் குர்பான் கடமை சவாலுக்குள்ளாகியுள்ளது. நோய் பாதிப்புக்குள்ளான மிருகத்தை குர்பான் கொடுப்பது இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டுள்ளது. எனவே இது விடயத்தில் உரிய வழிகாட்டலை வழங்க வேண்டியது உலமா சபையின் கடமையாகும்.

மெளனத்தில் உலமா சபை
நாட்டில் பல பகு­தி­களில் மாடுகள் அம்மை நோய் தொற்­றுக்­குள்­ளா­கிய நிலையில் சுகா­தார பிரிவு மாட்­டி­றைச்சி உண்­ப­தி­லி­ருந்தும் தவிர்ந்­தி­ருக்­கும்­படி மக்­களை வலி­யு­றுத்­தி­யுள்­ளது.

முஸ்­லிம்கள் குர்­பா­னுக்­காக காத்­தி­ருக்­கி­றார்கள். இரு­வா­ரங்­களில் குர்பான் கட­மையை நிறை­வேற்­ற­வேண்­டி­யுள்­ளது.

இந்­நி­லையில் முஸ்லிம் சமூகம் இது­வி­ட­யத்தில் அகில இலங்கை ஜம் இயத்துல் உலமா சபையின் பத்வாவை எதிர்­பார்த்­துக்­காத்­தி­ருக்­கி­றார்கள்.
பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எம்.எச்.ஏ. ஹலீம் உலமா சபை உட­ன­டி­யாக மார்க்கத் தீர்ப்­பொன்­றினை அறி­விக்க வேண்டும் என அவ­சர கடி­த­மொன்­றினை அனுப்பி வைத்­துள்ளார்.

ஆனால் உலமா சபை தொடர்ந்தும் மெள­னத்தில் இருப்­ப­தாக தெரி­கி­றது. இவ்­வி­வ­கா­ரத்தில் உலமா சபை கருத்து முரண்­பா­டு­க­ளுக்கு உள்­ளா­கி­யுள்­ள­தாக அறிய முடி­கி­றது.
இவ்­வி­வ­காரம் தொடர்பில் விடி­வெள்ளி அகில இலங்கை ஜம் இய்­யத்துல் உலமா சபையின் தலைவர் மற்றும் செய­லா­ளரை தொடர்பு கொண்­ட­போதும் அவர்கள் மெள­னித்தே இருக்­கி­றார்கள்.

கடந்த இரு தினங்­க­ளாக விடி­வெள்ளி மேற்­கொண்ட முயற்சி பய­னற்­றுப்­போ­னது. பத்வா குழு­வுக்குப் பொறுப்­பா­ன­வர்கள் நேற்­றைய தினம் விடி­வெள்­ளியின் தொலை­பேசி அழைப்­பு­க­ளுக்குப் பதி­ல­ளிப்­ப­தி­லி­ருந்தும் தவிர்ந்­தி­ருந்­தனர்.

உலமா சபையின் உதவிச் செய­லாளர் எ. எம்.எம்.தாஸிம் மெள­ல­வி­யூ­டாக பத்வா குழுவை தொடர்பு கொள்ள முயற்­சித்­த­போதும் அது பய­ன­ளிக்­க­வில்லை.
நோய்­தொற்று அற்ற மிரு­கமே குர்­பா­னுக்­காக பயன்­ப­டுத்­தப்­ப­ட­வேண்டும் என்ற இஸ்­லா­மிய வழி­காட்­டலின் அடிப்­ப­டையைப் பேணு­வதே தீர்வாக அமையும். – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.